இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நேர்மையின் விலை

படம்
 சிறுமையாதல்?  ====================================================== இந்தியாவில் மட்டும்தான் நேர்மையாக செயல் பட்டால் அந்த அதிகாரியை தூக்கிப் பந்தாடல்,அப்படியும் அடங்காவிட்டால் ஒரு காசு பெறாத மேசையடி வேலை கொடுத்தல் அப்படியும் அடாங்கா விட்டால் அவரைப்பற்றி அவதூறு பரப்பல்,முடிவில் அவரின் உயிரைப்பறித்தல் என்று ஆட்சியாளர்கள் பரிசுகளை அள்ளித்தருகிறார்கள். இதற்கு சில நாக்குத்தள்ளிய அவதார அதிகாரிகளும் வாலை  ஆட்டிக்கொண்டு உடந்தையாக இருக்கிறார்கள். இதோ நேர்மையாகப் போராடிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி யின் மரணத்துக்காக கர்நாடக மாநிலமே பற்றி எரிகிறது.  எந்த அமைப்பும் போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. ஆனால் அவர் முன்பு பணிபுரிந்த கோலார் மாவட்டமே ஸ்தம்பித்துவிட்டது. டி.கே.ரவி அங்கு பணிபுரிந்தது சில மாதங்கள்தான். ஆனால் அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவரை மக்கள் நேசித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் ஹீரோ.  காரணம், அவரது நேர்மை. தமிழ் நாட்டில் எத்தனையோ மாவட்ட மக்களுக்கு தங்கள் மாவட்ட கலெக்டரின் பெயர் தெரியாது.  தமிழ்நாட்டில்

எது பொய், பிரதமர் "கோயபல்ஸ் மோடி"...?

படம்
நாஜி கொள்கைப் பரப்பு அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ், ஹிட்லரின் பாசிஸ்ட் பாணி பிரச்சாரத்தைக் கட்ட விழ்த்து விட்ட அமைச்சராவார்.  “நீங்கள் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருங்கள், அது உண்மையாகிவிடும்,’’ என்பதே அவரது பாணி. இத்தகைய கோயபல்ஸ் பிரச்சார உத்தியைத்தான் இப்போது மீண்டும் பிரதமர் மோடி, கோயபல்சையே விஞ்சக் கூடிய அளவிற்குத் தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஜோசப் கோயபல்ஸ் மத்திய அரசுக்குச் சொந்தமான அகில இந்திய வானொலியின் அனைத்து நிலையங்களாலும், மார்ச் 22 அன்று ஒலிபரப்பப்பட்ட, “மனதின் குரல்’’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நிலம் கையகப்படுத்தல் மசோதா மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, எழுப்பிய ஆட்சேபணைகள் அனைத்தும் “பொய்களின்’’ மூட்டை என்றும்,  விவசாயிகளின் நலன்களை வேரறுப்பதற்கான “சதி’’யின் ஒரு பகுதி என்றும் அளந்துவிட்டுள்ளார். “அரசாங் கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவிற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத உரை’’ பிரதமரின் வானொலி உரை என்று, தேசிய நாளேடுகள் பலவும் தலையங்கங்கள் தீட்டியிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

வெயில் காலம்.

படம்
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்ட தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல்,  அரிப்பு, வியர்வை, சோர்வு, என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி?  மனித உடலின்  இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வ சாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியை தொடுகிறது. அப்போது உடலை  குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலை சுத்தமாக பராமரிக்கவிட்டால் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு அடைத்துக்கொள்ளும். இதனால் வியர்க்குரு வரும். இதை தவிர்க்க தினமும் இரு வேளை குளித்தால் நல்லது. தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை  சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகும். உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும்.  குறிப்பாக வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய  படை, தேமல் தோன்றும். படையை குணப்படுத்தும் களி

கார்ப்பரேட் ஏழைகளும் + 0,00,00,00,00,000!

படம்
[பன்னிரண்டு பூஜ்யங்களும்] தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் ( இவையெல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்திடும் பொருட்களா என்ன? ) போன்றவை இறக்குமதி செய்யப்படும்போது அவற்றின் மீது விதிக்கப்படும் சுங்க வரியில் 75,592 கோடி ரூபாய் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தொகையானது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டத்திற்கு `முன்னெப்போதும் இருந்திராத அளவு’ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் கூடுதலான ஒன்றாகும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் என்பது பல நூறு கோடி மனித உழைப்பு நாட்களை பல லட்சக்கணக்கான கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் அளித்தது என பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிடுகிறார். ஏழை மக்களுக்கு பயனளித்திடும் இத்தகையதொரு திட்டத்திற்கு வெறும் 34,699 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் அளவு என்பது மொத்தமாக சுங்க வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட தொகையில் நான்கி

ஆகா ,,,,, வந்திருச்சு....,,,,!

படம்
இப்போதெல்லாம் கோடைக்காலம் என்றால் தமிழ் நாட்டு மக்கள் பயப்படுவதெல்லாம் கோடை வெப்பத்  தாக்குதலை / கடுமையாகத்தாக்கும் மின்தடையை எதிர்பார்த்துதான். கோடை வெப்பத்தை ஒரளவுக்கு தாங்க  தரும்,மின்விசிறி,ஏ.சி, குளிர்சாதன பெட்டிகளை இயக்க மின்சாரம் இல்லாமல் கோடையை மேலும் தாங்கக் முடியாததாக்கி விடும் என்ற பயம் தமிழகத்தில் உள்ள சிறு குழந்தைகள் வரை வந்துள்ளது. வழக்கமாக கோடைக்காலம் வந்து விட்டாலே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு தலைதூக்கும். மின்வாரியத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் கடந்த 2008ம் ஆண்டு முதல் மின்தடை அமல்படுத்தப்பட்டது. குடியிருப்பு பகுதிக்கு சுழற்சி முறையில் மின்விநியோகம் செய்யப்பட்டது. அதாவது சென்னையில் இரண்டு மணி நேரமும் இதர மாவட்டங்களில் நான்கு மணி நேரம் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மின் வெட்டை தவிர்க்க பல மின் திட்டங்களும் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2011 ல் மூன்று மாதங்களில் மின் வெட்டை காணாமல் போக்குவதாக கூறி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்படாமல் பல மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது. தொழிற்

ஆண்டராய்ட் அலை பேசி. அனுபவியுங்கள்.!.

படம்
நீங்கள் இப்போது வாங்கிப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் வசதியுள்ள ஸ்மார்ட் போனை எப்படி பயன்  வேண்டும் என்ற அடிப்படை தகவல்களை நாம் பார்க்கலாம். உங்கள் அலை பேசியை தயாரித்துள்ள நிறுவனங்கள்  அடிப்படையில் சில மேம்போக்கான வேறுபாடுகள் இருக்கலாம். இவை பெரும்பாலும், தொடக்க திரை தரும் மெனுக்களில் மட்டுமே இருக்கும். மற்ற இயக்க பயன்கள் பொதுவானதாகவே இருக்கும். எச்.டி.சி. மற்றும் சாம்சங் போன்களில் அனைத்துமே ஒரே மாதிரியாகத் தரப்பட்டிருக்கும். ஆனால், இந்த வேறுபாடுகள் குறித்து யாரும் கவலைப்பட்த் தேவை இல்லை.  உங்களுடைய பழைய மாடல் போனில், அழைப்புகளை ஏற்படுத்தலாம், பெறலாம், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம். படங்களை எடுக்கலாம், பார்க்கலாம். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போனிலும் இவற்றை மிக நன்றாகவும், திறன் கூடியதாகவும் மேற்கொள்ளலாம்.  இருப்பினும் ஒரு வேறுபாடு உள்ளது.  ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இயக்கத்தின் அடிப்படை அவற்றின் அப்ளிகேஷன்களே. இவற்றை Apps என அழைக்கின்றனர் . நாம் ஆண்ட்ராய்ட் போனில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளும், இந்த ஆப்ஸ் என்ற அப்ளிகேஷன்கள் வழிதான் மேற்கொள்ளப்படுகின்றன.

பழமா?-சாறா? எது நல்லது ?

படம்
பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சுப் பழச்சாறு இளமையுடன் வாழ உதவுகிறது. இதயத்திற்கு இதமான பொருட்களில் ஒன்றாக திராட்சை பழச்சாறு நிலவுகிறது. இவை எல்லாம் நம்மிடம் பொதுவாக நிலவி வருகின்ற நம்பிக்கைகள். பழச்சாற்றில் அதிக சத்துக்கள் உள்ளதில் எள்ளளவும் ஐயமில்லை தான். ஆனால், பழமாக உண்பது  ?  பழச்சாறாக உண்பது?  எது அதிக பலன் தரும்?என்பதில் தான் குழப்பமே. இதில் எது சிறந்தது என்று பல ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழச்சாறாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு மோசமானதாக அமையும் என்று பிரிட்டனின் கிளாஸ்கோவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  பழச்சாற்றில் அதிக சர்க்கரை இருப்பதால், மேசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். கிளாஸ்கொவ் பல்கலைக்கழக இரத்த குழாய் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசியரியர் நவீத் சாத்தார், மருத்துவர் ஜாசன் கில் ஆகியோர் லான்செட் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியல் இதழில் இந்த புதிய ஆய்வுப் பற்றிய கட்டுரையை எழுதியுள்ளனர்.  பழச்சாறுகளிலுள்ள ஊட்டசத்து்ககளை தெளிவாக