மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுசன் .

"நிலவேம்பு விடயத்தில் கமல்ஹாசன் எடுத்தது மோடியின் ரூபாய் மதிப்பிழப்பு ஆதரவு போன்ற மற்றோரு அவசர கோலம்தான்.
நிலவேம்பு என்று சிலர் போலியாக விற்கிறார்கள் என்பதுதான் செய்தி.ஆங்கில மருத்துவர்கள் எல்லா நாட்டு மருந்தையும் கேவலமாகத்தான் பேசுவார்கள்.காரணம் பொழைப்பு.
இதே ஆங்கில மருத்துவர்கள்தான் மஞ்சள் காமாலைக்கு , வாதத்திற்கு தமிழ் மருத்துவத்தை நம்புகிறார்கள்.

கேரளாவை பார்க்க கமல் சொன்னது இதற்காகத்தான் 

இதில் மற்றோரு பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் சாதியம் உள்ளது கமல்ஹாசன் போன்ற பலதையும் படிக்கும் அறிவுஜீவி க்கு தெரியாமல் இராது.




நோய்க்கான கிருமிகளை பரப்பி விட்டு அதற்கான மாற்றை அதிக விலையில் மக்களிடம் விற்று கொள்ளையடிக்கும் மருத்துவ அரசியல் பற்றி தசாவதாரம் எடுத்த கமலுக்கு தெரியாமல் இராது.





பல கோடிடெங்கு மருந்தது சந்தைக்கு தமிழ் நாட்டு நிலவேம்புகசப்பை தராமல் இருக்குமா என்ன?அதை ஒழிப்பதுதானே ஆங்கில மருத்துவர்களின் சேவையாக இருக்கும்.







இதே ஆங்கில மருத்துவர்கள் விறகு அடுப்பில் சமைக்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள்.மரங்களின் மீதுள்ள பாசமா என்றால் , இல்லை.
ஆஸ்துமா வரும் என்று அறிவிக்கிறார்கள்.
20 ஆண்டுகளுக்கு முன் நாம் சமையல் எரிவாயுவிலா சமைத்தோம் ?விறகுதானே.
இன்றுள்ளதை விட அன்று இளைப்பாளர்கள் மிகக் குறைவுதான்.
குறிப்பாக தூத்துக்குடியில் 10ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இன்று ஆஸ்துமா நோயாளர்கள் 20 மடங்கு அதிகம்.புற்று நோய் பாதிப்பு 10மடங்கு அதிகம் .
காரணம் ஸ்டெர்லைட் என்ற நாசகார ஆலை.
இதை ஆங்கிலமருத்துவர்கள் அறிந்தாலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.அரசியல் வாதிகளுக்கும்,ஆங்கில மருத்துவர்களுக்கும் அது பொழைப்பைத்தருகிறது .
நிலவேம்பு அவர்கள் பொழைப்பை கெடுக்கிறது.
நிலவேம்பு போல் கமல் சறுக்கிய மற்றோரு இடம் மோடி செய்த பணமதிப்பிழப்பில்  .
பணமதிப்பிழப்பை மோடி அறிவிக்கையில் அவரது ஜலராக்கள் அடித்த வரவேற்பு செண்டை சத்தத்தில் ரஜினியை போல் கமல்ஹாசனும் மயங்கி வரவேற்றிருக்கலாம்.
இது போன்ற முக்கிய திட்டங்களை அறிவிக்கும் பிரதமர் அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்திருந்தால் நிச்சயம் இது வெற்றியை தந்திருக்கலாம்.
ஆனால் கறுப்புப்பணம் ஒழியும்,வேலை வாய்ப்பு பெருகும் என்ற கதையெல்லாம் நடக்காது.
இதுவரை இரு முறை பணமதிப்பிழப்பு நடந்தும் இந்தியாவில் கறுப்புப் பணம் ஒழிந்ததாக வரலாறு இல்லை.
மோடி தன்னை மாமனிதனாக எண்ணிக்கொண்டு தேவையான புதிய பணத்தை அச்சிட்டு வைத்திருக்காமல்,பணமெடுப்பு எந்திரங்களை புதிய பணமடுக்க வசதிகள் செய்யாமல் அவசரகதியில் அறிவித்ததே 120 உயிர்கள் இந்த விடயத்தில் பலியாக காரணம்.
மோடி தன்னை பாகுபலி அளவுக்கு மாமனிதனாக  கற்பனை செய்து கொண்டு செய்த தவறுகள் வைகள் ..
1.நிதியமைச்சகத்துடன் குறிப்பாக அருண் ஜெட்லீ என்ற நிதியமைச்சருக்கு கூட முழு விபரம் தெரியாமல் அமித் ஷாவுடன் மட்டும் இணைந்து  திட்டம் தீட்டியது.
2.தனது திட்டத்துக்கு ஒத்து வர மாட்டார்,எதிர் கருத்துக்களை கூறுகிறார் என்பதாலேயே ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பில் இருந்து சுப்பிரமணியசாமி மூலம் குடைச்சல் கொடுத்து வெளியேற்றி அம்பானி நிறுவனத்தில் பணியாற்றியவரை புதிய ஆளுனராக நியமித்து பொம்மையாக்கி  வைத்துக்கொண்டது.
3.புதிய பணத்தாட்களை முறையற்ற அளவில் அச்சிட்டு பணமெடுக்கும் எந்திரத்தில் அடுக்கி விநியோகிக்க முடியாமல் செய்தது.
4.பணமதிப்பிழப்பை கூறாமல் புதிய பணத்தாட்கள் வெளியிடப்போவதாக கூறி தேவையான பணத்தை முன்பே அச்சிடாதது.
5.அரசு வங்கிகள்,கூட்டுறவு வங்கிகள் கருவூலங்கள் மூலம் புதிய பணத்தை வழங்க ஏற்பாடு செய்யாமல் தனியார் வங்கிகள்,அம்பானியின் பிக் பஜார்,அதானியின் நிறுவனங்கள் மூலம் மட்டுமே பணத்தை மாற்ற அனுமதித்தது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விநியோகித்திருந்தால் கிராமப்புற மக்களுக்கு பணமாற்றம் நடந்திருக்கும்.
6.தினந்தோறும் ஒரு அறிவிப்பு மூலம் ரிசர்வ் வங்கி மக்களை பணமாற்றம் செய்ய அலைக்கழித்ததால் 120 பேர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
இவற்றை  நிதியமைச்சகம்,பிரதமர் அலுவலகம்,ரிசர்வ் வங்கி ஆகியோர் கலந்து ஆலோசித்து பணமதிப்பிழப்பை செய்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.
மோடி தன்னை மோடி மஸ்தான் அளவுக்கு மந்திர மனிதனாக காட்ட செய்த வேலையால்தான் இத்தனை இன்னல்கள்.
சரியான திட்டமிடல் இல்லாமை, தனிமனித செயலாலேதான் இந்த சீரழிவு.
கருப்புப்பணமும் போகவில்லை,வேலைவாய்ப்பும் கிட்டவில்லை.இந்தியா பொருளாதார வல்லரசாகவும் இல்லை.புதிய இந்தியாவும் பிறக்கவில்லை.
15 நாட்களில் புதுமை பிறக்காவிட்டால் தன்னை பொது இடத்தில் தூக்கில் போட கூறிய மோடியின் வார்த்தைகளை இப்போது ஒருவரும் கண்டு கொள்ளவே இல்லை.காரணம் அவர் கூறுவது அனைத்துமே வெத்து வேட்டு என்பதை சாமானியன் கூட உணர்ந்து கொண்டதுதான்.
இவரின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சி முதல் பலர் விமரிசித்த  போது அதை கமல்ஹாசன் கவனத்தில் கொள்ளாமல் வரவேற்றதுதான் அவர் செய்த தவறு.
ரஜினி வரவேற்றால் தானும் அதை வரவேற்க வேண்டும் என்ற கட்டாயம் கமலுக்கு இல்லையே.பண மதிப்பிழப்பை பலர் விமரிசிக்கையில் ,பல உயிர்கள் பலியாகையில் கமல் கருத்தை கூறாமல் பொறுமையாக இருந்திருக்கலாம்.
பொருளாதார அடிப்படையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து இந்நிகழ்வில் முக்கியம்.தன்னைஅரசியல் மாணாக்கன் எனக் கூறிக்கொள்ளும் கமல் ஹாசன் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை எதிர் கொள்ளும் பணமதிப்பிழம்பில் கருத்து கூற பொறுமை காத்திருக்கலாம்.பல்வேறு நூல்களை படிக்கும் அவரின் அவசரம் தேவையற்றது என்பதை இப்போது உணர்ந்திருப்பார்.அதனால்தான் மன்னிப்பு.
பகுத்தறிவு,இடதுசாரி எண்ணங்கள் கொண்டவர் எனக் கருதப்படும் கமல்ஹாசனிடமிருந்து இனி ஆழ் யோசனை இல்லாமல் அவசர டுவிட்டுகள் வராமல் இருக்கும் என்றே எதிர்பார்க்கிறோம்.  
எந்த செய்தியைக்கேட்டாலும் உடனே டுவிட்டும் அரசியலில் இருந்து கமல்ஹாசன் வெளிவர வேண்டும்.அவர் கூறியதைப் போல் அரசியல் மாணவர் எந்த பிரச்னையில் உடனே கருத்தை ட்டுவிட்டாமல் ஆராய்ந்து அறிவித்தால் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை வரா .
அரசியலில் காலடிவைக்கையிலேயே ஒவ்வொரு கருத்துக்கும் தெளிவான முடிவில்லாமல் மன்னிப்பு கேட்டு மாற்றுவது மக்கள் நம்பிக்கையை காலாவதியாக்கி விடும்.
மன்னிக்கிறவன் மனுசன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுசன்கிறது திரையில் கேட்க நல்லாயிருக்கலாம்.தலைவனுக்கு அது சரியாக பொருந்தாது.
ஆக கமல்ஹாசன் மோடியின் பணமதிப்பிழப்பு விடயத்தில் மட்டுமல்ல , நிலவேம்பிலும் தவறாகவே முடிவுகளை எடுத்துள்ளார்.காரணம் அவசரம்.
விவேகம் இல்லா வேகம் ஆபத்து.

==================================================================================================
ன்று,
அக்டொபர் -20.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)

  • கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)

  • சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)

  • இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)
  • அச்சுதானந்தன்
  • அச்சுதானந்தன், கேரள மாநிலம், ஆலப்புழையில், சங்கரன் - அக்கம்மா தம்பதிக்கு மகனாக1923 அக்., 20ல் பிறந்தார். 
1938ல், மாநில காங்கிரசில் சேர்ந்த இவர், கட்சியில் நிலவிய கருத்து வேறுபாட்டால், 1940ல் வெளியேறினார். 
பொதுவுடமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தீவிர உறுப்பினர் ஆனார்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். 1964ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகினார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற கட்சியை நிறுவிய, 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
கேரள மாநில முதல்வராக, 2006 முதல் 2011 வரை இருந்தார். 
==================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?