தெய்வத்தாலாகாது...எனினும் முயற்சி தன் மெய்வருத்தற் கூலி தரும்." "

ஞாயிறு, 19 மே, 2013

மே -2012 நிகழ்வுகள் சில ,

இப்போது மே மாதத்தின் நடுவில் இருக்கிறோம் .

சென்ற ஆண்டில் நடந்த சில நிகழ்வுகளை பார்ப்போம்.
மே -2012 நிகழ்வுகள் சில .
-------------------------------------
உலகம்-
------------
மே 14: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 இந்தியர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி.

மே 22: 2010 பிப்., 8ல், கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் ராணுவ தளபதியாக சரத் பொன்சேகா, பொது மன்னிப்பில்  விடுதலை செய்யப்பட்டார்.

மே 25: ஜப்பானைச் சேர்ந்த தமே வட்டானபி என்ற 73 வயது பெண், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கின்னஸ் சாதனை.

இந்தியா-
--------------
மே 3: 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை பட ஹீரோ அப்புகுட்டிக்கு வழங்கப்பட்டது.

மே 4: மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் விளம்பர தூதராக, "தேசிய விருது' பெற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன் நியமனம்.

மே 5: டில்லியில் நடந்த, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநாட்டில், ஜெ. உட்பட 10 முதல்வர்கள் எதிர்ப்பால் ஒருமித்த கருத்து இல்லை.

மே 8: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, கோல்கட்டா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், முதல்வர் மம்தாவை சந்தித்தார்.

மே 8: "ஹஜ்' பயணிகளுக்கான மானியங்களை குறைக்க, சுப்ரீம்கோர்ட் உத்தரவு.

மே 9: பதவி உயர்வு, போயிங் 787 டிரீம்லைனர் விமான பயிற்சி திட்டத்தை மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம். 58 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்தது.

மே 13: சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட "உலகின் சக்தி வாய்ந்த அன்னை யர்கள்' பட்டியலில் காங், தலைவர் சோனியா 6வது இடத்தை பெற்றார்.

மே 14: உலகின் மிகப்பெரிய இந்து கோவில், பீகாரில் அமைய உள்ளது. இது 50 ஏக்கர் பரப்பளவில், 300 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.

மே 21:  கங்கையை தூய்மைப்படுத்த 7 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
மே 22: பத்ரிநாத்திலிருந்து, ரிஷிகேஷ் செல்வதற்காக, 45 பக்தர்கள் பயணம் செய்த பஸ், கங்கை ஆற்றில் விபத்துக்குள்ளானதில், 22 பக்தர்கள் பலி.

மே 24 : ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது.

மே 31: நாட்டில் காடுகள் அதிகம் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் (11.24 சதவீதம்) பெற்றது.

தமிழ்நாடு.
-----------------------

மே 1: மதுரையில் நடந்த பாஜ., மாநாட்டுக்கு அத்வானி வருகை தர இருந்த நிலையில் சைக்கிள் டைம்பாம் வெடித்தது .

மே 10: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 180 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் தீயில் எரிந்தது. சீரமைக்கப்பட்டு மே 29ல் மீண்டும் உற்பத்தி.


மே 23: நேர்மையான, கண்டிப்பான அதிகாரி, என பெயர் எடுத்த மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றம். அன்சுல் மிஸ்ரா புதிய கலெக்டரானார்.

மே 30: பெட்ரோல் விலை உயர்வுக்கு (ரூ. 7.50) எதிர்ப்புத் தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் "பந்த்'.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகின் முதல் பணக்காரர்



சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தை  மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் மீண்டும் பிடித்துள்ளார்.
பில்கேட்ஸ்[வயது -57] கடந்த 2007-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து உலகின் முதல் பணக்காரராக இருந்து வந்தார். 
அதன்பின், அவரது இடத்தை மெக்சிகோவைச் சேர்ந்த முதலீடு மற்றும் தொலைபேசி நிறுவன அதிபர் கார்லஸ் ஸ்லிம் [வயது-73]பிடித்தார்.இவரின் தொலைபேசி நிறுவன ஆதிக்கத்தைக் கண்டும் அதன் மூலம் கணக்கின்றி பணம் குவித்துக்கொண்டிருப்பதை தடுக்கும் வண்ணம்  மெக்சிகோ நாடாளுமன்றத்தில்  சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனால கார்லஸ்  நிறுவனத்தின் பங்கு 14 சதவீதம் சரிந்தது .மொத்த சொத்து மதிப்பில்  16,200 கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதற்கு பதில்  பில்கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவன பங்கு மதிப்பு கடந்த ஆண்டில் 16 சதவீதம் அதிகரித்தது. அவரது சொத்து மதிப்பு 3,99,000 கோடியாக உயர்ந்துள்ளது.
இ தனால்,கார்லஸ் ஸ்லிம்மின் சொத்து மதிப்பை பின்தள்ளி, பில் கேட்ஸ், உலகின் முதல் பணக்காரர் என்ற விட்ட இடத்தை  பிடித்து விட்டார்.

இவை பிரபல பொருளாதார செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தற்போது வெளியிட்ட உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் தெரிய வந்துள்ளது.

உலகின் முதல் பணக்காரராக மீண்டும் உயர்ந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர், பில் கேட்ஸ்-ன் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 3,99,000 கோடி ரூபாய். 
அவரை அடுத்து, 3,96,000 கோடி ரூபாய் சொத்துடன் கார்லஸ் ஸ்லிம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
3-ஆவது இடத்தில் உள்ள சர்வதேச முதலீட்டாளரான பஃப்பெட், 3,28,000 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார்.

இந்த100 பேர்கள்  பட்டியலில் 3 இந்தியர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர்.

 25-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு 1,32,000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.
இங்கிலந்தில் வசிக்கும் இந்தியரான லட்சுமி மிட்டல் 83,600 கோடி ரூபாய் சொத்துடன் பட்டியலில் 54-வது இடம் வகிக்கிறார். 
விப்ரோ நிறுவனத் தலைவர் ஆசிம் பிரேம்ஜி   62,700 கோடிகளுடன்  93-வது இடம் பிடித்துள்ளார்.என ப்ளூம்பெர்க் வெளியிட்ட பட்டியல்  தெரிவிக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------