உயிர் கொல்லியா,காப்பாற்றியா?

உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவில் இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் வல்லரசு அமெரிக்காவிடம் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும், மருந்துகள் இல்லாமலும் அந்நாட்டு மருத்துவத்துறை மிகுந்த சிரமங்களை சந்தித்தது. இதனையடுத்து சீனா, இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு மருத்துவ உதவிகளை வழங்கி வந்தன.
இந்தியாவில் இருந்து பெருமளவு மருந்துகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரையை உலக நாடுகளுக்கு பரிந்துரை செய்ததே அமெரிக்காதான்.





சுமார் 30 மில்லியன் டோஸ்கள் ஹைட்ராக்ஸி க்ளோரோகுயினை இருப்பு வைத்துள்ளது அமெரிக்கா. அப்படி இருக்கையில், அமெரிக்காவில் உயிர் பலி அதிகரிப்பதை உணர்ந்து ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வந்தனர்.
இந்நிலையில் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தால் எந்தப் பயனும் இல்லையென்றும் அதனைப் பயன்படுத்தியதால் மரணம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய சொந்த நலன்களுக்காக அதிபர் ட்ரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரை செய்ததாக அமெரிக்க மருத்துவ வல்லுநர்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அந்த மருந்தினால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் எந்தப் பயனும் உண்டாகவில்லை என்றும் நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின் எம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் என்னும் அமைப்பால், நிதி அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மூலம்தான் மரண விகிதம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது.





இதுதொடர்பாக, என்.ஐ.எச் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா சிகிச்சைக்கான மாதிரிகள் தற்போது ஆய்வுகளில் உள்ளன. ஹைட்ராக்சிக்ளோரோகுயினை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது பற்றி மருத்துவ புள்ளி விவரங்கள் இல்லை. மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து மோசமான பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
மேலும், குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்சிக்ளோரோகுயின் அளிக்கப்படும் நோயாளிகளை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து மோசமான விளைவுகள் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் ஆகியவற்றை சேர்த்து கொடுப்பதால் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம் என என்.ஐ.எச் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தியால் உலக நாடுகள் கதிகலங்கி இருக்கும் நேரத்தில், அமெரிக்கா இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழக ஆணையர் ஸ்டீபன் எம்.ஹான் தெரிவித்துள்ளார்.





இதனிடையே இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது பற்றி எனக்கும் ஒன்றும் தெரியவில்லை. மருந்து தொடர்பாக சில சில நல்ல ரிப்போர்ட்களும் உள்ளன; ஆனால் இது நல்ல ரிப்போர்ட் அல்ல. இது தொடர்பாக நாம் ஒருகட்டத்தில் முடிவெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த பேச்சு அ அமெரிக்க மக்களிடையே மட்டுமின்றி உலகம் முழுக்க மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாத்திரையைத்தான் உடனே அனுப்பாவிடில் பதிலடி தரப்படும் என்று இந்தியாவை மிட்டினார்



-------------------------------------------------------------
துக்ளக் தனம்.

தமிழகத்தில் சென்னை,கோவை,மதுரை ஆகிய நகரங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு என்பதால் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
முழு ஊரடங்கை காரணமாக கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மக்கள் பலர் நெடுந்தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கிச் செல்வதை பல இடங்களில் பார்க்கமுடிகிறது.
சென்னை நகரத்தில் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்துள்ளதால், இன்று (ஏப்ரல் 25) ஒரு நாள் மட்டும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மதியம் மூன்று மணிவரை இயங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புர

மருந்து கடைகள் தவிர பிற கடைகள் இயங்காது என்பதால், மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளில் பொருட்களை வாங்கிச்செல்வதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை திருவான்மியூர் காய்கறி மார்க்கெட்டில் பைகளுடன் பல மணி நேரம் மக்கள் நீண்ட வரிசையில் நின்றும், கூட்டமாக மார்க்கெட் உள்பகுதியில் நின்றும் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
பல கடைகளில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொண்டுவந்த முழுசரக்கும் காலியாகிவிட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர். திருவான்மியூர் சந்தையில் மக்கள் குவிந்து நிற்பதை பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கவந்த தனியார் நிறுவன ஊழியர் கண்ணன் பேசும்போது, ''தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இதுபோன்ற மக்கள் திரளை பார்த்துள்ளேன். ஆனால் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த கடைகளும் இருக்காது என்பதால் விலையும் மிகவும் அதிகம். ஒரு கிலோ தக்காளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ரூ.20 என விற்கப்படுகிறது. சாலையில் உள்ள கடைகளில் ரூ.30 என விற்கப்படுகிறது. மளிகை பொருட்களை சில்லறை கடைகளுக்கு விற்பதற்கு மட்டும்தான் வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். பொது மக்களுக்கு வழங்க நெடுநேரம் காத்திருக்க வைக்கிறார்கள் என்பதால் நான் மூன்று மணி நேரம் செலவிட நேர்ந்தது,''என்கிகால்.
நான்கு நாட்களுக்கு எந்த கடையும் இருக்காது என முடிவுசெய்தால், அரசாங்கம் எங்கள் பகுதிகளுக்கு வந்து பொருட்களை விற்கவேண்டும். புதுப் புது விதிகளை கொண்டுவரும் நேரத்தில் எங்களிடம் பணமும் இல்லை என்பதை அரசியல்வாதிகள் உணரவில்லை,'' என கொதித்தெழுகிறார் வடசென்னைவாசி சம்பத்.
தி.நகர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்றனர்.

படத்தின் காப்புரி

விலைவாசி உயர்வு குறித்த புகார்களை அளிக்கலாம் என அரசாங்கம் தெரிவிப்பது ஒரு சடங்காக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள் விற்பனை செய்யும் கடைகளும் அதிக விலை அச்சத்தை ஊட்டுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரண மக்களும் வாங்கும் பழமாக வாழைப்பழங்கள் இருக்கும். ஆனால் அதுவே தற்போது எட்டாக்கனியாகிவிட்டது என்கிறார் சுலோச்சனா. 'பூவன் பழம், கற்பூரவள்ளி என எல்லா பழமும் கிலோ ரூ.70 என விற்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக நான் வேலைக்கு போகவில்லை. இதுநாள்வரை இருந்த சேமிப்பு முழுமையாக கரைகிறது,''என வருத்தத்தோடு பேசினார் சுலோச்சனா.
தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலைசெய்யும் சுலோச்சனா அதிக சிரமத்தோடு இந்த ஊரடங்கு நாட்களை கடந்துவருவதாக தெரிவித்தார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?