மோடி இழப்பீடு வழங்கிய ஏழைகள்..


2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வரை வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி தொழிலதிபர்களின் விவரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் சாகேத் கோகலே கோரியிருந்தார். அதற்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.
மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி.
அதில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, நீக்கப்பட்ட 50 தொழிலதிபர்களின் கடன் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற ரூ.5,492 கோடி கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்களும் நீக்கப்பட்டன.
ஜுன்ஜுன்வாலா சகோதரர்களுக்குச் சொந்தமான ஆா்இஐ அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற ரூ.4,314 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.
விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் பெற்ற ரூ.1,943 கோடி கடன் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளது. தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோடோமேக் குளோபல் நிறுவனத்தின் ரூ.2,850 கோடி கடன் நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆர்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது.
கணக்கியல் ரீதியில் கடன்களை நீக்குவது என்பது ஒட்டுமொத்தமாகக் கடன்களைத் தள்ளுபடி செய்வது அல்ல. வரவு செலவு கணக்குகளைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன. அதே வேளையில் கடன் பெற்றவர்களிடமிருந்து அதைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும்.
ஆர்பிஐ அளித்துள்ள பதில் தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்களின் பெயர்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. தற்போது ஆர்பிஐ அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் பாஜக-வின் நண்பர்களான மெஹுல் சோக்ஸி, நீரவ் மோதி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாகவே , நாடாளுமன்றத்தில் அத்தகவலை வெளியிட மத்திய பாஜக அரசு மறுத்திருந்தது’ என்று தெரிவித்துள்ளார்
------------------------------------
தேவை வெள்ளையன்.. 

டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


உடலை தாக்க வரும் நோய்களிடமிருந்தும், கிருமிகளிடமிருந்தும் காத்துக்கொள்ள நமக்கு தேவை இரத்த வெள்ளை அணுக்களின் பலம்..

நோய்யெதிர்ப்பு சக்தி என்பது போர் படை வீரர்களை போல் செயல்படும் லியுகோசைட்ஸ் ( இரத்த வெள்ளை அணுக்கள்)...

இந்த வெள்ளை அணுக்களின் பிறப்பிடம் எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி ஆகும்.. இவற்றில் ஆயுட்காலம் சராசரியாக மூன்று வாரங்கள்...

வெள்ளை அணுக்களின் சராசரி அளவு 4000 - 11,000 ஆகும்... இந்த அளவிலிருந்து கூடினாலும் ( லுகீமியா ), குறைந்தாலும் (லியூகோபீனியா) நோயாகவே கருதப்படும்..

வெள்ளை அணுக்களை ஐந்து வகைகளாக பிரித்து விளக்கப்படுகிறது..
அவை
நியூட்ரோபில்
ஈசினோபில்
பேசோபில்
லிம்போஸைட்
மோனோஸைட்

இந்த ஐந்து வகை வெள்ளை இரத்த அணுக்களின் அளவுகளும்,  வேலைப்பாடுகளும் மாறுபடுகிறது..

பொதுவாக இவற்றை அடிப்படையாக கொண்டே நோய்களுக்கான மருத்துவம் கொடுக்கப்படுகிறது...

*நியூட்ரோபில்*
சராசரி அளவு எழுபது சதவீதம்... இந்த வகை இரத்தஅணுக்கள் அதிகரிப்பது புற்றுநோய், குடல்வால் நோய் போன்ற அலர்ஜி, மூட்டு சம்மந்தமான நோய்கள், மேலும் சில இரத்தக்கோளாறுகளை குறிக்கிறது...
மருந்துகளின் பக்கவிளைவு, வைட்டமின் பி12 குறைவு, ஒருவகை காசநோய், இரத்தசோகை போன்றவற்றால் இவ்வகை வெள்ளை இரத்த அணுக்கள் குறையும்..

*லிம்போஸைட்*
சராசரி அளவு இருபது சதவீதம்.. குழந்தைகளுக்கு பொதுவாக ஐம்பது சதவீதம் காணப்படும்..காசநோய் போன்ற நாள்பட்ட நோய்கள், அம்மை நோய், ஹோர்மோன் கோளாறுகள் காரணமாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கும்.. எய்ட்ஸ், புரதசத்து குறைவு போன்றவற்றால் இதன் அளவு குறையும்..
மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான அணுக்கள்..

*மோனோஸைட்*
சராசரி அளவு நான்கு சதவீதம்.. டைபாய்டு, மலேரியா, இதய உறை நோய், மூட்டு வாத நோய், காசநோய் போன்றவற்றால் இவற்றின் அளவு அதிகரிக்கிறது.. எலும்பு மஜ்ஜையில் பிரச்சனை என்றால் இதன் அளவு குறைகிறது.. மேலும் உடலில் நுழையும் நோய்க்கிருமிகளை போரிட்டு அழிக்கும் பெருமை இவ்வகை அணுக்களை சேரும்..

*ஈசினோபில்*
சராசரி அளவு நான்கு சதவீதம்.. ஆஸ்துமா, குடல்புழு, சிலவகை புற்றுநோய் இதன் அளவை அதிகரிக்கும்.. குறிப்பாக ஈசினோபிலியா நோய் பாதிப்புடையவர்களுக்கு இதன் மொத்த அளவை பரிசோதிப்பதுண்டு..

*பேசோபில்*
சராசரி அளவு ஒரு சதவீதம் மட்டுமே.. உணவு ஒவ்வாமை, நாள்பட்ட நோய்கள், புற்றுநோய், கதிரியக்க சிகிச்சை போன்றவற்றால் இதன் அளவு அதிகரிக்கிறது.. மன அழுத்தம், தைராய்டு கோளாறு காரணமாக இதன் அளவு குறைகிறது...

இந்த அடிப்படை இரத்த அணுக்களின் அளவை, காரணங்களை, விளைவுகளை அறிந்துவைத்திருப்பது இக்காலத்தில் அவசியமான ஒன்றாகும்...
-------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?