கலால் வரியில் இழந்ததை

  சந்தை ஆதாய வரியில் ஈடுகட்டும் பா.ஜ.க ஒன்றியஅரசு

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியைக் குறைத்ததன் மூலமாக இழந்த வருவாயை, உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி, எரிபொருள் ஏற்றுமதி ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள சந்தை ஆதாய வரியின் மூலமாக மத்திய அரசு பெறவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. 

அதனால், கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன. 

அதே வேளையில், ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால், அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெயைக் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசலாக வெளிநாடுகளுக்கு இந்தியத் தனியாா் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன.

 அதன் மூலமாக அந்நிறுவனங்கள் அதிக வருவாய் ஈட்டின.

ஆனால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரஷ்யாவில் இருந்து இறக்குமதிக்கு கட்டுப்பாடு உள்ளது.

வெளிநாட்டு சந்தைகளுக்கு அந்நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்ததால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

இந்தப் பிரச்னையைப் போக்க, உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி மீது சந்தை ஆதாய வரியை மத்திய அரசு கடந்த 1-ஆம் தேதி முதல் விதித்தது. அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு ரூ.23,250 வரியாக விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரு லிட்டா் பெட்ரோல், விமான எரிபொருளுக்கு 6 ரூபாயும், ஒரு லிட்டா் டீசலுக்கு 13 ரூபாயும் வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனங்கள் 2.97 கோடி டன் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்திருந்தன. நடப்பாண்டிலும் அதே அளவில் உற்பத்தி இருந்தால், சந்தை ஆதாய வரி மூலமாக அந்நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு 9 மாதங்களில் சுமாா் ரூ.52,000 கோடி வருவாய் கிடைக்கும் எனப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 25 லட்சம் டன் பெட்ரோலையும், 57 லட்சம் டன் டீசலையும், 7,97,000 டன் விமான எரிபொருளையும் இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. 

தற்போது விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி வரி காரணமாக அவற்றின் ஏற்றுமதி மூன்று மடங்கு குறைந்தாலும்கூட, 9 மாதங்களில் அரசுக்கு சுமாா் ரூ.20,000 கோடி வருவாய் கிடைக்கும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அவற்றின் மீதான கலால் வரியை லிட்டருக்கு முறையே 8 ரூபாயையும், 6 ரூபாயையும் மத்திய அரசு கடந்த மே மாதம் குறைத்திருந்தது.

. கலால் வரி குறைப்பு காரணமாக நடப்பு நிதியாண்டில் சுமாா் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், தற்போது சந்தை ஆதாய வரி, ஏற்றுமதி வரி ஆகியவற்றின் மூலமாக அரசுக்கு நடப்பு நிதியாண்டில் சுமாா் ரூ.72,000 கோடி வருவாய் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவை தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஏற்றுமதி வரியும், சந்தை ஆதாய வரியும் விதிக்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு ஏதும் விதிக்காமல் தனக்கு வருவாயை மட்டும் அதிகரித்துள்ளது.இந்தியாவில் தட்டுப்பாடு தொடர்கிறது.

பா.ஜ.க. அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் கார்பரேட் நிறுவனமாகவே செயல்படுகிறது.

பூமி குளிரப் போகிறதா?




-----------------------------------------------------------------------------

குட் இயர்ஈ

நாம் பயன்படுத்தும் ரப்பர் குழாய், ஷூ சோல், டயர், பென்சில் அழிக்கும் ரப்பர், பந்து, பொம்மை போன்ற ரப்பர் பொருட்களுக்குக் காரணம், ரப்பரை வல்கனைசேஷன் செய்ததுதான். 
இயற்கையான ரப்பரைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதுதான் வல்கனைசேஷன். வல்கனைசேஷன் கண்டுபிடிப்புக்கு முன்பும் ரப்பர் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், அந்த ரப்பர் காலணிகளும் ரெயின் கோட்களும் வெயில் காலத்தில் உருகின. மழைக் காலத்தில் ஒட்டிக்கொண்டன.
அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் குட்இயர் என்பவருக்கு ரப்பர் மீது தீராத ஆர்வம் இருந்தது. அதுவரை பயன்பாட்டில் இருந்த ரப்பரை, இன்னும் மென்மையாகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். 
அதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கினார். ஒவ்வொரு முறையும் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருப்பார்.

அந்த முயற்சி தோல்வி அடைந்தால், சிறிதும் மனம் தளராமல் அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவார். 
சில ரசாயனங்கள் ரப்பரை மென்மையாக்குவதுபோல் தோற்றத்தைத் தரும். வெயில் காலத்துக்கும் மழைக் காலத்துக்கும் காத்திருப்பார்.
 வெயில் காலத்தில் உருக ஆரம்பித்துவிடும். மழைக் காலத்தில் விரிசல் அடைந்துவிடும். அதைத் தூக்கிப் போட்டுவிட்டு, அடுத்த ரசாயனத்தைக் கலந்து வைப்பார்.
வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ்வேறு ரசாயனங்களைக் கலந்து ஆராய்ச்சிகளைச் செய்து பார்த்தார். 
ரப்பரை மென்மையாக மாற்றுவதற்கு, அதனுடன் கலக்கப்படும் டர்பைனே காரணம் என்பதைக் கண்டறிந்தார். ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை அடைந்தது. தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டார்.
ஒரு நாள் நைட்ரிக் அமிலத்தைக் கலந்தார். வெற்றி கிடைத்தது. 
மகிழ்ச்சியோடு அதற்கான காப்புரிமையும் பெற்றார். 
அமெரிக்கத் தபால் துறை, ரப்பர் பைகளுக்கான ஆர்டரை வழங்கியது. ஆர்வத்துடன் தயாரித்துக் கொடுத்தார். ஆனால், சில மாதங்களில், அந்தப் பைகள் ஒட்டிக்கொண்டன. 
மிகவும் ஏமாற்றம் அடைந்தார் சார்லஸ்.


சில நாட்களுக்குப் பிறகு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கந்தகமும் வெள்ளைக் காரீயமும் தவறுதலாக விழுந்துவிட்டன. சார்லஸ் இதைக் கவனிக்கவில்லை.
 மறுநாள் எடுத்துப் பார்த்தபோது ரப்பர், தோல்போல மென்மையாக இருந்தது. நன்றாக வளைந்தது. ஒட்டவும் இல்லை.

இந்த விபத்து சார்லஸின் ஆராய்ச்சியைச் சரியான திசையில் திருப்பியது. வெப்பமும் வேதிப் பொருட்களும் சேர்ந்துதான் ரப்பரைப் பயன்படுத்தக் கூடியதாக மாற்றும் என்பதை அறிந்துகொண்டார்.
 1844-ல் வல்கனைஷேசனுக்குக் காப்புரிமையும் பெற்றார்.

பல ஆண்டுகள் சார்லஸ் செய்த தொடர் முயற்சியின் காரணமாக, இன்று உலகமே ரப்பர் பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது
-----------------------------------------------------------------------------









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?