தெளிவான நிர்வாக நடவடிக்கை!

 தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

கொலை உள்பட 50 வழக்குகளில் தொடர்புடையவர் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சி விற்ற அதிமுக பிரமுகர் கல்லாந்த்தம் சுரேஷ் கைது: 20 ஏக்கர் நிலம் வாங்கிய திடுக் தகவல் அம்பலம்.
ரஷ்யாவில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு.
120 டிகிரி வெயில் கொளுத்துகிறது .ஹஜ் யாத்திரையில் 1301 பேர் பலி.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையில் இருந்து சென்ற 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.




தெளிவான நிர்வாக

நடவடிக்கை!

மெத்­த­னா­லைக் கலக்கி குடித்து ஐம்­ப­துக்­கும் மேற்­பட்­டோர் இறந்த

சம்­ப­வம், மிக­மிக வருத்­தத்­துக்­கு­ரி­யது. இந்த நேரத்­தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு முழுப்­பா­து­காப்­பு­டன் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் செயல்­பட்டு வரு­கி­றார். இறந்­த­வர்­கள் குடும்­பத்­துக்கு பத்து லட்­சம் ரூபாய் வழங்­கி­னார் முத­ல­மைச்­சர் அவர்­கள். அன்­றைய தினமே அதனை வழங்­கி­னார்

முத­ல­மைச்­சர் அவர்­கள். மருத்­து­வ­ம­னை­யில் இருப்­போர் குடும்­பத்­துக்­கும் உட­ன­டி­யாக ஐம்­ப­தா­யி­ரம் ரூபாய் வழங்­கப்­பட்­டது.

அந்­தப் பகு­தி­யில் மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­க­ளது ஆய்­வுப் பணி­யா­னது தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது. மருத்­துவமனை­யில் சிகிச்சை பெற்று வீடு திரும்­பி­ய­வர்­க­ளை­யும் அரசு பாது­காத்து வரு­கி­றது. மருத்­துவ

ஆலோ­சனை கொடுத்து வரு­கி­றது அரசு. இறந்து போன­வர் குடும்­பத்­துக்கு இழப்­பீ­டுத் தொகை கொடுத்­த­தோடு தனது கடமை முடிந்­து­விட்­ட­தாக அரசோ, முத­ல­மைச்­சரோ நினைக்­க­வில்லை.

மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் கனி­வான இன்­னொரு நட­வ­டிக்­கையை சமூக ஊட­கங்­க­ளில் பாராட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ‘குடித்து விட்டு செத்­த­வர்­க­ளுக்கு பணம் கொடுக்க வேண்­டுமா?’ என்று கோப­மா­கக் கேட்­ப­வர்­கள் கூட, இறந்­தோர் குடும்­பத்­துப் பிள்­ளை­க­ளின் படிப்­புக்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் உதவி செய்­வதை ஆத­ரித்து பதி­வு­க­ளைப் போட்டு வரு­கி­றார்­கள்.

“இந்த அர­சா­னது கள்­ளச்­சா­ரா­யத்தை அறவே ஒழிப்­ப­தற்கு மிகக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரும் நிலை­யி­லீப், இது­போன்ற சில விரும்­பத்­த­காத நிகழ்­வு­கள் ஏற்­ப­டு­வது மிக­வும் வேத­னைக்­கு­ரி­யது. இந்­தச் சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அனைத்து உத­வி­க­ளை­யும் இந்த அரசு செய்­யும். அத­ன­டிப்­ப­டை­யில், இந்­தச் சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு

மறு­வாழ்வு அளிக்­க­வும், அவர்­க­ளின் எதிர்­கால நலனை கருத்­திற்­கொண்­டும், ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்டு 10 இலட்­சம் ரூபாய் நிவா­ரண நிதி­யு­டன் பின்­வ­ரும் நிவா­ர­ணங்­கள் கூடு­த­லாக வழங்­கப்­ப­டும்” என்று சொல்லி முத­ல­மைச்­சர் அவர்­கள் மிக­மிக முக்­கி­ய­மான அறி­விப்­பைச் செய்­தார்­கள்.

* பெற்­றோர் இரு­வ­ரையோ அல்­லது ஒரு­வ­ரையோ இழந்து வாடும்

குழந்­தை­க­ளின் பட்­டப்­ப­டிப்பு வரை­யி­லான கல்­விக் கட்­ட­ணம் மற்­றும் விடு­திக் கட்­ட­ணம் உள்­ளிட்ட அனைத்து செல­வி­னங்­க­ளை­யும் தமிழ்­நாடு அரசே

ஏற்­றுக்­கொள்­ளும்.

* பெற்­றோர் இரு­வ­ரை­யும் இழந்து ஆத­ர­வின்றி தவிக்­கும் ஒவ்­வொரு குழந்­தை­யும் பாது­கா­வ­லர் பரா­ம­ரிப்­பில் வளர, அவர்­கள் 18 வயது நிறை­வ­டை­யும் வரை மாத பரா­ம­ரிப்­புத் தொகை­யாக தலா ஐந்­தா­யி­ரம் ரூபாய் வழங்­கப்­ப­டும்.

* பெற்­றோர் இரு­வ­ரை­யும் இழந்த குழந்­தை­க­ளுக்கு உட­னடி நிவா­ர­ணத் தொகை­யாக அவர்­க­ளின் பெய­ரில் தலா ஐந்து லட்­சம் ரூபாய் முத­ல­மைச்­ச­ரின் பொது நிவா­ரண நிதி­யில் இருந்து நிலை­யான வைப்­புத் தொகை­யில் வைக்­கப்­ப­டும். அவர்­கள் 18 வயது பூர்த்தி அடைந்­த­வு­டன் அந்­தத் தொகை வட்­டி­யு­டன் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும்.

* பெற்­றோர் இரு­வ­ரில் ஒரு­வரை இழந்து வாடும் குழந்­தை­க­ளுக்கு தலா மூன்று இலட்­சம் ரூபாய் முத­ல­மைச்­ச­ரின் பொது நிவா­ரண நிதி­யில் இருந்து வழங்­கப்­ப­டும்.

* பெற்­றோர் இரு­வ­ரையோ அல்­லது ஒரு­வ­ரையோ இழந்து வாடும்

குழந்­தை­க­ளுக்கு, அர­சின் அனைத்து நலத்­திட்ட உத­வி­க­ளி­லும் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும்.

* பெற்­றோரை இழந்த குழந்­தை­கள், அவர்­க­ளது விருப்­பத்­தின் பேரில், அரசு மற்­றும் அரசு நிதி­யு­தவி பெறும் இல்­லங்­கள் மற்­றும் விடு­தி­க­ளில் சேர்க்­கப்­ப­டு­வர். –- ஆகிய அறி­விப்­பு­கள் பல­ரா­லும் ஆத­ரித்து வர­வேற்­கப்­ப­டு­ கின்­றன. ‘இப்­படி ஒரு முத­ல­மைச்­சர் சிந்­திக்க முடி­யுமா என்ற அள­வுக்கு

சிந்­திக்­கி­றார் முத­ல­மைச்­சர்’ என்று சொல்லி இருக்­கி­றார்­கள் பல­ரும்.

சில நாட்­க­ளுக்கு முன் பள்­ளிக் கல்­வித் துறை­யின் ஐம்­பெ­ரும் விழா­வில் பேசிய முத­ல­மைச்­சர் அவர்­கள், “மாண­வச் செல்­வங்­கள், படிப்­ப­தற்கு

சமூ­கமோ, பொரு­ளா­தா­ரமோ, அர­சி­யல் சூழ்­நி­லையோ எது­வும் தடை­யாக இருக்­கக் கூடாது என்­பதே திரா­விட மாடல் ஆட்­சி­யின் கொள்கை ஆகும்” என்று சொன்­னார்­கள். சொன்­னது ஏதோ வாய்­வார்த்­தைக்­குச் சொன்­னது அல்ல, அலங்­கா­ரச் சொல் அல்ல என்­பதை கள்­ளக்­கு­றிச்சி சம்­ப­வத்­தி­லேயே முத­ல­மைச்­சர் அவர்­கள் மெய்ப்­பித்­து­விட்­டார்­கள்.

“நடை­பெற்ற சம்­ப­வத்­துக்கு முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்க வேண்­டும்” என்று இங்கு பேசி­னார்­கள். உள்­து­றை­யைக் கவ­னிப்­ப­வன் என்ற முறை­யில் மட்­டு­மல்ல; தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் என்ற முறை­யில் எந்­தப்

பிரச்­சி­னை­யில் இருந்­தும் ஓடி ஒளி­ப­வ­னல்ல நான். பொறுப்பை உணர்ந்­த­தால்­தான் பொறுப்­பு­டன் பதில் அளித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். எடுத்த நட­வ­டிக்­கை­க­ளை­யும் பட்­டி­ய­லிட்­டி­ருக்­கி­றேன். குற்­ற­வா­ளி­க­ளைக் கைது செய்து விட்­டுத்­தான் உங்­க­ளுக்கு பதில் அளித்­தி­ருக்­கி­றேன். திறந்த மனத்­தோடு இரும்­புக் கரம் கொண்டு குற்­றம் புரிந்­த­வர்­களை அடக்கி வரு­கி­றேன்” என்று சொன்­னார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள்.

முத­ல­மைச்­ச­ரின் பொறுப்பு என்­பது அர­சி­யல் பொறுப்பு மட்­டு­மல்ல; அனைத்து மக்­க­ளின் வாழ்க்­கைப் பொறுப்­பை­யும் உணர்ந்­த­வ­ராக முத­ல­மைச்­சர் அவர்­கள் செயல்­ப­டு­வதை இதன் மூலம் அறி­ய­லாம்.

அந்­தப் பிஞ்­சுக் குழந்­தை­க­ளின் எதிர்­கா­லம் நம் கண்­ணுக்கு முன்னே சிதைந்து விடக் கூடாது என்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள்

முடி­வெ­டுத்த சிந்­த­னை­யில் தான் அவ­ரது கனி­வான சிந்­த­னை­யும், அவ­ரது

ஆட்­சிக் கொள்­கை­யின் இத­ய­மும் அமைந்­தி­ருக்­கி­றது. அரசு என்­பது நிர்­வாக இயந்­தி­ரம் அல்ல, நிர்­வாக இத­யம் என்­ப­தைக் காட்­டி­விட்­டார் மாண்­பு­மிகுமுத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.
21 பேர்கள் மீது நடவடிக்கை!

தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகள் எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதேசமயம், தமிழக அரசின் உத்தரவின் பேரில், இந்த வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டு, தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்த அருணா ஜெகதீசன் ஆணையம், சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. 

அப்போது, தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு  எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


அப்போது நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் இவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தனித்தனியாக விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-க்கு ஒத்திவைத்தனர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக