கலகம் பிறந்தால்

"நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை"; -முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளில் (ஜூன் 10) பாடப்புத்தகம் தரப்படும்: பள்ளி கல்வித்துறை .

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 2.50 லட்சம் பேர் விண்ணப்பம்.
கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் .

"எஸ்.பி.வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல தமிழகத்தில் பாஜ தோற்றுக்கொண்டே இருக்கும்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

கலகம்  பிறந்தால்

பாஜக,அதிமுக படுதோல்விக்கு கூட்டணியில் இருந்து வெளியேறியதுதான் காரணம் என்று தமிழிசை கூறிய கருத்தைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு கட்சிக்குள் எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 


மேலும் ஒரு தலைவர் எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.


பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் மெகா வெற்றியை பதிவு செய்தன.


அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு பின்னடைவு பெற்றுள்ளது. 


குறிப்பாக, அதிமுக தமிழ்நாட்டில் போட்டியிட்ட 32 தொகுதிகளில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.


டெபாசிட் இழப்பது பாஜ,நாம்தமிழர கட்சிகளுக்கு வழமையானதுதான்.ஆனால் 20 ஆண்டுகள் ஆண்ட கட்சி,2கோடி தொண்டர்கள் இருப்பதாகக் கூறும் அதிமுக?


 அதே போல், இந்த முறை தமிழகத்தில் பாஜ நிச்சயம் அதிக எம்பி சீட்டுகளை வெல்லும் என பிரசாரம் செய்து வந்த அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை கண்டது. பாஜ மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 21 இடங்களில் டெபாசிட்டை பறி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பாஜ தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலை மட்டுமே காரணம், அண்ணாமலை தமிழக பாஜவை தவறாக வழிநடத்துகிறார் என விமர்சனம் எழுந்து வருகிறது. 


குறிப்பாக, சொந்த கட்சியினரான தமிழிசை மற்றும் எஸ்.வி.சேகர் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர். அதிலும், பாஜவின் கோட்டை என எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதியில் தான் அண்ணாமலை, கோட்டை விட்டுள்ளார்.


கடந்த 10 ஆண்டுகளின் புள்ளி விவரத்தின் படி, 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இல்லாமல் தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை பாஜ அமைத்தது. 


அந்தத் தேர்தலில் பாஜ சார்பில் கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், 3,89,701 வாக்குகளைப் பெற்றார். அடுத்த 10 ஆண்டுகளில் சி.பி,ராதாகிருஷ்ணனைக் காட்டிலும் அதிகமாக அண்ணாமலை மொத்தம் 4,50,132 வாக்குகளைப் பெற்றுள்ளார்.


வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அண்ணாமலை பாஜகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது போல் தெரிகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் கோவை தொகுதியில் அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 


எனவே, வாக்கு சதவீதத்தை கணக்கிட்டு பார்த்தால் தற்போது அண்ணாமலை மொத்தம் பதிவான வாக்குகளில் 32.79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஆனால், 2014ஆம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணனோ கோவை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 33.6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அண்ணாமலையை விட சி.பி.ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகளை பெற்றிருப்பதாகத்தான் கருத முடியும்.


 மேலும் சி.பி.ராதாகிருஷ்ணன் 46 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 


ஆனால் அண்ணாமலை 1.60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

இது ஒரு புறம் என்றால், மறுபுறம் பாஜவின் வாக்கு வங்கியே மொத்தமாக தமிழகத்தில் சரிந்துள்ளது. 2014 தேர்தலை விட இப்போது வாக்கு சதவிதம் குறைந்துள்ளது. 


அதுவும் 18.8% லிருந்து தற்போது 18.2% குறைந்துள்ளது. கடந்த 2014ல் 9 இடங்களில் போட்டியிட்ட தமிழக பாஜ வெறும் 5.56% பெற்றது. தற்போது 23 தொகுதிகளில் போட்டியிட்டு 11.24% வாக்கு பெற்றுள்ளனர். இதை வைத்து மட்டும் பார்த்தால் பாஜ தமிழகத்தில் வளர்ந்துள்ளது என்பதை எடுத்துக் கொள்ளகூடாது.


மாறாக கடந்த 10 ஆண்டுகளின் விகித அடிப்படையில் 2014ம் ஆண்டு செயல்திறனை சமன் செய்ய பாஜ சுமார் 14.25% வாக்கு பெற்றிருக்க வேண்டும். இப்படி தமிழகத்தில் லேசாக தாமரை முளைக்க கூட விடாமல் அண்ணாமலை தடுத்து விட்டார் என்று பாஜ மூத்த தலைவர் கல்யாணராமன் டிவிட்டர் பதிவில் குற்றம்சாட்டியுள்ளார். 


மேலும் தமிழிசைக்கு ஆதரவாக மேலும் பல தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இதனால் அண்ணாமலைக்கு எதிராக தமிழக பாஜவில் கலகம் உருவாகியுள்ளது.


2014இல் ஆட்சியை பிடித்த பா.ஜ.க,

காலத்திற்கேற்பதன்னைமாற்றிக்கொள்ளுவதுபோல்நடித்துக்கொண்டும் வருகிறது.

அவ்வகையில், 2014ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க ஒரு நடிப்பும், 2019ல் ஒரு நடிப்பும், 2024-ல் ஒரு நடிப்பும் அரங்கேறி, மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

ஆனால், பா.ஜ.க 2014, 2019 தேர்தல்களில் அரங்கேற்றிய நடிப்பின் மூலம் பெற்ற ஆதரவை, 2024-ல் பெறவில்லை.

அதற்கு, சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடியதும், சிறுபான்மையினர் உரிமை பறிப்புகள் அளவுகடந்து அமல்படுத்தப்பட்டதும், ஒரே நாடு - ஒரே தேர்தல் முறையையும், ஒரே தலைவர் முறையையும் அமல்படுத்த திட்டமிட்டதும் தான் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

இதனால், 2024 தேர்தல் பிரச்சாரங்களில், பா.ஜ.க.வினரால் முன்னெடுக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசியக் குடியுரிமைப் பதிவேடு (NRC), அரசியலமைப்பில் திருத்தம் என்ற பெயரில் அரசியலமைப்பையே அழிப்பது, இஸ்லாமியர்களை வந்தேரிகளாக்கியது ஆகிய வேற்றுமை பேச்சுகள் எல்லாம்,

தற்போது, தேர்தல் முடிவுக்கு பின் முற்றிலுமாக மாற்றம் கண்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு நாள் அன்று, மதிப்பளிக்கப்படாத இந்திய அரசியலமைப்பு, எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் தற்போது மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது.

மோடி அரசு இனி NDA அரசு! :  அதிகாரத்தின் முதுகெலும்பை முறித்த இந்தியா கூட்டணி!

அதுவும், குறிப்பாக அரசியலமைப்பை மாற்றுவேன் என உறுதிபூண்டவர் கையாலேயே மதிப்பளிக்க வைத்தது தான் இந்தியா கூட்டணியின் சிறப்பும் கூட.

இதனால், சற்று வயிறு எரிச்சலுக்கு ஆளாகியுள்ள மோடி, குறிப்பிடத்தக்க வெற்றி பெறாவிடினும், எதிர்க்கட்சிகள் ஏன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என புரியவில்லை என்று NDA கூட்டணி கூட்டத்தில் பேசியுள்ளார்.

கொண்டாட்டத்திற்கு காரணம், பா.ஜ.க - தனது ஒற்றைப் பெரும்பான்மையை இழந்ததன் வழி, கூட்டணி தத்துவத்திற்கு தலை பணிந்துள்ளதும், இதனால், சீர்கேடுகள் பல அரங்கேறினால், ஆட்சி கவிழும் என்ற அச்சம் உண்டாகும் என்பதும் தான்.

இந்த காரணத்தால், பா.ஜ.க கூட்டணி என்ற அடையாளப்படுத்தமும், தற்போது NDA கூட்டணி என்று அடையாளப்படும் அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது.

தற்போதைய இந்திய அரசியலில், மோடியை விட, முக்கியமானவர்களாக NDA கூட்டணியில் இருக்கும், சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் அடையாளப்படுத்தப் படுகின்றனர்.

இவை தான், இந்தியா கூட்டணியின் வெற்றியும் கூட. இதனை மோடி புரிந்துக்கொண்டாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாததால், சோகத்துடன் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறார் மோடி.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?