கையா­லா­காத

 பழ­னி­சாமி

“ஆடத் தெரி­யா­த­வள், தெரு கோணல் என்­றா­ளாம்” என்று ஒரு

பழ­மொழி உண்டு. அது இன்­றைய சூழ­லில் அ.தி.மு.க. பழ­னி­சா­மிக்­குத்­தான் பொருந்­தும்.


எடப்­பாடி பழ­னி­சாமி வசம் அ.தி.மு.க. வந்­தது முதல் அவர் எதிர்­கொண்ட தேர்­தல்­கள் அனைத்­தி­லும் தோல்வி. தோல்­வி­யைத் தவிர வேறு இல்லை.

அப்­படி ஒரு அர­சி­யல் வர­லாறு அவ­ருக்கு இருக்­கி­றது.

2019 - – நாடா­ளு­மன்­றத் தேர்­தல்

2019 - – சட்­ட­மன்ற இடைத் தேர்­தல்

2019- – 9 மாவட்ட ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல்

2021 - – ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல்

2021 - – தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­தல்

2022 - – நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல்

2023 - – ஈரோடு இடைத்­தேர்­தல்

2024 - – நாடா­ளு­மன்­றத் தேர்­தல் .

 ஆகிய 8 தேர்­தல்­க­ளி­லும் தோற்­ற­வர்­தான் பழ­னி­சாமி. விக்­கி­ர­வாண்டி இடைத் தேர்­த­லி­லும் நின்­றால் தோற்­கத்­தான் போகி­றார்.

 அத­னால்­தான், ‘தேர்­தல் நேர்­மை­யாக நடக்­காது’ என்று சொல்லி தேர்­த­லைப் புறக்­க­ணித்­தி­ருக்­கி­றார் பழ­னி­சாமி.

இவ­ரது தேர்­தல் புறக்­க­ணிப்­புக்­குப் பின்­னால் இரண்டு தந்­தி­ரங்­கள்இருக்­கின்­றன.

ஒன்று, அ.தி.மு.க. போட்­டி­யிட்­டால் நிச்­ச­யம் தோற்­றுப் போகும். எனவே அந்தத் தோல்வி முகத்தை மறைக்­க­லாம் என்­பது!

இரண்டு, தனது எஜ­மா­னன் பா.ஜ.க.வின் வேட்­பா­ள­ருக்கு மறை­மு­க­மாக ஆத­ரவு தெரி­வித்து தனது அடிமை விசு­வா­சத்­தைக் காட்­டிக் கொள்­ள­லாம்என்­பது.

கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தனித்து நின்று பா.ஜ.க.வுக்கு எதி­ரான வாக்­கு­கள் முழு­மை­யாக தி.மு.க. கூட்­ட­ணிக்கு போக­வி­டா­மல் தடுக்க பழ­னி

­சா­மியை பயன்­ப­டுத்­தி­யது பா.ஜ.க. அதி­லும் வெற்றி பெற முடி­யா­மல் மண்டை உடைந்­த­து­ தான் மிச்­சம்.

அதே­தான் விக்­கி­ர­வாண்டி இடைத் தேர்­த­லி­லும் நடக்­கப் போகி­றது. 2019 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும், 2021 சட்­ட­ச­பைத் தேர்­த­லி­லும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்­டணி அமைத்­துத்­தான் போட்­டி­யிட்­டன.

 கூட்­ட­ணி­யா­கத்­தான் தோற்­றன. எனவே, இவர்­கள் சேர்ந்து வந்­தா­லும், பிரிந்து நின்­றா­லும் தோல்வி தான்.

பா.ஜ.க.வுக்கு மட்­டு­மல்ல, பா.ஜ.க.வுக்கு பல்­லக்­குத் தூக்­கி­க­ளாக யார் இருந்­தா­லும் அவர்­க­ளைத் தமிழ்­நாட்டு மக்­கள் தோல்வி அடை­யச் செய்­வார்­கள். 

இதனை மறந்து விட்டு பா.ஜ.க.  பா.ம.க. – அ.தி.மு.க. ஆகிய கட்­சி­கள் பகல்­வே­ஷம் கட்டி ஆடும் பம்­மாத்து அர­சி­யலை இனி­யா­வது நிறுத்­திக் கொள்ள வேண்­டும்.

பா.ஜ.க.வின் பத்­தாண்­டு­கால அழிவு நட­வ­டிக்­கை­கள் அனைத்­துக்­கும் துணை போன கட்­சி­கள்­தான் அ.தி.மு.க.வும் பா.ம.க.வும். குடி­யு­ரி­மைச் சட்­டத்­துக்கு ஆத­ர­வாக அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் மாநி­லங்­க­ள­வை­யில் வாக்­க­ளிக்­கா­மல் இருந்­தி­ருந்­தால் அந்­தச் சட்­டமே நிறை­வேறி இருக்­காது. 

சிறு­பான்மை இசு­லா­மிய இன மக்­க­ளுக்­கும், ஈழத் தமிழ் மக்­க­ளுக்­கும் பச்­சைத் துரோ­கம் இழைத்­த­வர்­கள்­தான் அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் என்­பதை தமிழ்­நாட்டு மக்­கள் மறந்­து­விடவில்லை.

கடைசி வரை­யில் பா.ஜ.க.வின் அனைத்து மக்­கள் விரோ­தச் சட்­டங்­க­ளுக்­கும் ஆத­ர­வாக இருந்­த­தால்­தான் ஒடிசா­வில் நவீன் பட்­நா­யக்­கும், ஆந்­தி­ரா­வில் ஜெகன் மோக­னும் தோற்­க­டிக்­கப்­பட்­டார்­கள் என்­பதை அ.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்­சி­கள் மறந்து விடக் கூடாது. 

இந்­தக் கட்­சி­யின் தலை­மை­களை விட மக்­கள் விழிப்­பா­ன­வர்­கள், விப­ரம் ஆன­வர்­கள். அவர்­க­ளுக்கு கட்­சி­கள்

எடுக்­கும் நிலைப்­பா­டு­கள் யாரைக் காப்­பாற்ற என்­பது நிச்­ச­ய­மா­கத் தெரி­யும்.

தேர்­தல் தேதி அறி­வித்­த­தும் தி.மு.க. கூட்­டணி வேட்­பா­ள­ராக அன்­னி­யூர் சிவா என்ற சிவ­சண்­மு­கத்தை அறி­விக்­கி­றார் தி.மு.க. தலை­வர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள். 

அ.தி.மு.க. கூட்­ட­ணி­யும் பா.ஜ.க. கூட்­ட­ணி­யும் அதன்­பி­ற­கும் வேட்­பா­ளரை அறி­விக்க முடி­யா­மல் திண­று­கி­றது.

 பா.ம.க. தலை­யில் கட்­டித் தப்­பித்­துக் கொண்­டது பா.ஜ.க.. தோல்வி நிச்­ச­யம் என்று பா.ஜ.க.வுக்­குத் தெரி­யும். அத­னால் பா.ம.க.வை பலி­யா­டாக பயன்­ப­டுத்­திக் கொண்­டது பா.ஜ.க..

அ.தி.மு.க.வுக்கு அப்­படி எந்­தப் பலி­யா­டும் அந்­தக் கூட்­ட­ணியில் இல்லை. உடனே, ‘தேர்­தல் நேர்­மை­யாக நடக்­காது’ என்று சொல்லி தேர்­த­லைப்

புறக்­க­ணித்­து­ விட்­டார்­கள். தேர்­த­லில் நின்­றால் தானே ஒன்­ப­தா­வது தோல்வி என்­பார்­கள், தேர்­த­லி­லேயே நிற்­க­வில்லை என்­றால் சொல்ல முடி­யாது

அல்­லவா என்று புத்­தி­சா­லித்­த­ன­மாக முடி­வெ­டுத்து விட்­ட­தா­கக் காட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார் பழ­னி­சாமி.

‘நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பல்­வேறு அரா­ஜ­கங்­க­ளை­யும் தில்­லு­முல்­லு­க­ளை­யும் செய்து தி.மு.க.வினர் வெற்றி பெற்­ற­னர்’ என்று பழ­னி­சாமி சொல்லி இருக்­கி­றார். 

என்ன தில்­லு­முல்லு செய்­தார்­கள்? 

எங்கே அரா­ஜ­கங்­கள் நடந்­தன என்­ப­தைப் பழ­னி­சாமி சொல்ல வேண்­டாமா? நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­தலை நடத்­தி­யது தி.மு.க. அரசு அல்ல. மத்­திய தேர்­தல் ஆணை­யம் நடத்­தி­யது. 

அதில் உட்­கார்ந்து இருப்­ப­வர்­கள் அனை­வ­ரும் நரேந்­தி­ர­ மோ­டி­யால் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­கள். நரேந்­திர மோடிக்கு எதி­ராக, தி.மு.க.வை தேர்­தல் ஆணை­யர்­கள் தில்­லு­முல்லு செய்து வெற்றி பெற வைத்து விடு­வார்­களா?

 வெற்றி பெற வைத்­தால் அவர்­க­ளால் அந்­தப் பத­வி­யில் இருக்க முடி­யுமா?

 தேர்­தல் ஆணை­யர்­கள் மோடி­யின் ஆட்­கள் என்­பது சாதா­ர­ணக் குழந்­தைக்­குக் கூடத் தெரி­யுமே? இந்த மாநி­லத்தை ஆண்ட பழ­னி­சா­மிக்கு இது கூடத் தெரி­யாதா?

தமிழ்­நாட்­டில் எந்­தத் தொகு­தி­யி­லா­வது, எந்த ஊரி­லா­வது சிறு வன்­முறை நிகழ்ந்­ததா?

 பூத் கைப்­பற்­றப்­பட்­டதா? 

கள்ள வாக்கு செலுத்­தி­ய­தாக யாரா­வது கைது செய்யப்­பட்­டார்­களா? 

பா.ஜ.க. ஆளும் மாநி­லத்­தில்­தான் அது அதி­கம் நடந்­தது. அப்­படி ஏதும் நடக்­காத நிலை­யில் இட்­டுக் கட்டி, பொய்­மூட்­டை­களை அவிழ்க்­கி­றார் பழ­னி­சாமி.

தேர்­த­லைப் புறக்­க­ணிப்­ப­தாக இருந்­தால் நேர்­மை­யான கார­ணத்தை பழ­னி­சாமி சொல்­லட்­டும், அதை­விட்டு விட்டு தி.மு.க. மீது அவ­தூ­று­களை எதற்­காக அள்­ளி ­வீசவேண்­டும்?

தேர்­தல் அர­சி­யல் களத்­தில் இல்­லா­மல் தன்­னைத்­தானே தோல்வி அடைய வைத்­துக் கொண்­டுள்­ளார் பழ­னி­சாமி. மக்­கள் தான் அந்­தக் காரி­யத்­தைச் செய்ய வேண்­டுமா?

 இதோ, பழ­னி­சா­மியே தனக்­கான தோல்­வி­யைத் தழு­விக் கொள்­கி­றார். 

இது பாதம் தாங்­கி­யின் அடுத்த பாணி­யாக பதிவு செய்­வோம்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?