கண்­டு­ணர்ந்த இந்­தியா

 பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு வேலையில்லை.நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை மக்கள் புறிக்கணித்துள்ளனர்.சுப்பிரமணியசாமி

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவி ஏற்ற பிறகு 9-வது முறையாக தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் உட்பட 9 தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.





*அனைத்து தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது*

இந்திய கூட்டணி வெற்றி:234

காங்கிரஸ்: 99

சமாஜ்வாதி:37

திரிணாமுல் காங்:29

திமுக:22

ராஷ்ட்ரிய ஜனதா தளம்:3

---------------------------------------------------------

பாஜக கூட்டணி : 292

பாஜக:240

தெலுங்கு தேசம்:16

ஐக்கிய ஜனதா தளம்:12

சிவசேனா (ஷிண்டே):7

லோக் ஜன சக்தி:5

கண்­டு­ணர்ந்த 

இந்­தியா

இந்­தியா எத்­த­னையோ முறை வீழ்த்­தப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு முறை­யும் எழுந்­துள்­ளது. எழுச்சி பெற்­றுள்­ளது! கார­ணம், மக்­க­ளால்!

“மாற்­றங்­க­ளும் கொடுங்­கோ­லாட்­சி­யும் நடை­பெற்று வந்த காலக்­கட்­டத்­தில் இந்­திய நாட்­டின் பெரும்­பா­லான மக்­கள் இந்த அள­வுக்கு நற்­பண்­பு­க­ளு­ட­னும் சிறந்த தரத்­து­ட­னும் இருந்­த­தைப் போன்ற உதா­ர­ணத்தை வேறு எந்த

நாட்­டி­லும் நான் கண்­ட­தில்லை” என்று 200 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் ஜான் மால்­கம் என்ற ஆங்­கில அதி­காரி எழு­தி­னார். ஒரு­வி­த­மான பொது­மைப் பண்­பு­தான் இத்­த­னை­யாண்­டு­கள் இந்­தி­யா­வைக் கட்­டி­ய­மைத்து வந்­துள்­ளது.

‘வேற்­று­மை­யில் ஒற்­றுமை’ என்­பது தேசி­ய­வா­தத்­தின் இலக்­க­ண­மாக இருந்து வழி­ந­டத்­தி­யது.

எத்­தனை அன்­னி­யப் படை­யெ­டுப்­பு­கள் நடந்­துள்­ளன? அத்­தனை

படை­யெ­டுப்­பு­க­ளை­யும் தாங்­கிக் கொண்டு எதிர்­நின்று தாக்­கித் தகர்த்­துள்­ளது இந்­தியா. சிப்­பாய்க் கல­கம் என்று கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்ட முத­லா­வது இந்­திய சுதந்­தி­ரப் போருக்கு முன்பே தொடங்­கிய தேசிய விடு­தலை எழுச்­சி­யா­னது 500 ஆண்­டு­கா­லத் தியாக வாழ்க்­கைக்­குப் பிற­கு­தான் இந்­திய நாட்­டின்அர­சி­யல் விடி­ய­லாக மூவர்­ணக் கொடியை வானு­ய­ரப் பறக்க வைத்­தது.

இந்­தி­யாவை வெளிப்­புற சக்­தி­கள் மட்­டுமா அழிக்க நினைத்­தது? ஆரி­யப் பண்­பாட்­டுப் படை­யெ­டுப்­பு­கள் வரி­சை­யாக நடந்­துள்­ளன? அந்த பண்­பாட்டு படை­யெ­டுப்­பு­க­ளை­யும் கலாச்­சார கால்­வா­ரல்­க­ளை­யும் கண்­டு­ணர்ந்து இந்­தியா போரா­டி­யது. இன்­ன­மும் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றது. ஜாதி­யின் பேரால், மதத்­தின் பேரால், மூட­நம்­பிக்­கை­யின் பேரால் நடத்­தப்­பட்ட இந்த கற்­ப­னா­வாத பய­மு­றுத்­தல்­க­ளுக்கு எதி­ராக இந்­தியா தனது சளைக்­காத போராட்­டத்தை நடத்­திக் கொண்டே தான் இருக்­கி­றது.

இந்­திய சீர்­தி­ருத்த இயக்­க­மா­னது ஜோதி­ராவ் பூலே, கோபால் ஹரி தேஷ்­முக், நீதி­பதி ரானடே, பி.எம்.மல­பாரி, டி.கே.கார்வே, வீரே­ச­லிங்­கம்,

நாரா­ய­ண­குரு, வள்­ள­லார், தந்தை பெரி­யார், அண்­ணல் அம்­பேத்­கர் என அனைத்து மாநி­லத்­த­வ­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக இருந்­தது. பெரி­யார் அதனை போராட்ட இயக்­க­மாக மாற்­றி­னார். இவர்­கள்­தான் இன்­றும் அணை­யா­மல் நெருப்பை மூட்­டிக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள்.

பட்­டி­ய­லின -–- பழங்­கு­டி­யின –- மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளின் சமூ­க­

நீ­திப் போராட்­டங்­க­ளும், விவ­சா­யத் தொழி­லா­ளர்­க­ளின் வீறு­மிக்க நில

உரி­மைப் போராட்­டங்­க­ளும் இன்­றைய இந்­தி­யா­வில் அதி­கம் நடை­பெ­று­

கி­றது. இவை­யும் சுதந்­தி­ரப் போராட்­டங்­க­ளின் தொடர்ச்­சியே.

அச்­சத்­தால் அர­சி­யல் அதி­கா­ரம் பறிக்­கப்­பட்­டது. மதத்­தால், சமூக அடி­மைத்­த­னம் திணிக்­கப்­பட்­டது. இரண்­டும் இன்­மை­யால் பொரு­ளா­தா­ரம் கையில் இருந்து பறிக்­கப்­பட்­டது. பொரு­ளா­தா­ர­மின்­மைக்கு ‘தலை­யெ­ழுத்து’ கார­ணம் ஆக்­கப்­பட்­டது. இது உல­கில் வேறு எந்த நாட்­டி­லும் இல்­லாத கற்­ப­னா­வாத

முத­லா­ளித்­து­வம் ஆகும்.

பிற­நாட்­டில் கால் விலங்கு, கைவி­லங்கு மட்­டும் தான். இந்­தி­யா­வில்­தான் மூளை­யி­லும் விலங்கு போடப்­பட்­டது. மற்ற நாடு­க­ளுக்­கெல்­லாம் அர­சி­யல் சுதந்­திர தினத்­தோடு, அனைத்து சுதந்­தி­ர­மும் கிடைத்து விடும். இந்­தி­யா­வுக்கு அர­சி­யல் சுதந்­தி­ரத்­தோடு -– சமூ­கச் சுதந்­தி­ர­மும் –- பொரு­ளா­தா­ரச் சுதந்­தி­ர­மும் –- பண்­பாட்­டுச் சுதந்­தி­ர­மும் முக்­கி­ய­மான தேவை­யா­கும். இங்கே அடி­மைத் தனத்­துக்­குக் கூட தத்­து­வார்த்த முலாம் பூசப்­பட்டு இருந்­தது. போர் என்­பது

இந்­தி­யா­வைப் பொறுத்­த­வரை கலாச்­சா­ரப் போரா­கவே வர­லாறு முழு­வ­தும் நடந்து வந்­துள்­ளது.

இந்­தி­யர்­கள் ஒன்­று­பட்­டுப் போராட மாட்­டார்­கள் என்று பிரிட்­டி­ஷார் நினைத்­தார்­கள். ஒற்­றைப் பசையை அண்­ணல் காந்­தி­ய­டி­கள் உரு­வாக்­கி­னார். ஒற்­று­மை­ யாக ஆகி­விட மாட்­டார்­கள் என்­ப­து­தான் எப்­போ­தும் ஆதிக்க எதேச்­ச­தி­கார

வர்க்­கத்­தின் நப்­பா­சை­யாக அன்­றும் இருந்­தது. இன்­றும் இருக்­கி­றது. இந்து -– முஸ்­லீம் என மதத்­த­வ­ரை­யும் வடக்கு தெற்கு என இனத்­த­வ­ரை­யும் இணைத்­த­தில்தான் காந்­தி­யத்­தின் வெற்றி அமைந்­தது. அத்­த­கைய அர­சி­யல் ஒற்­று­மை­யைத்­தான் அகில இந்­தியா முழு­மைக்­கும் ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யும் உரு­வாக்­கி­யது. அன்­றைய எதி­ரி­க­ளும் அதை எதிர்­பார்க்­க­வில்லை. இன்­றைய எதி­ரி­க­ளும் எதிர்­பார்க்­க­வில்லை.

ஒற்­றைச் சமூக -– மத -– இன மக்­கள் வாழும் நாடாக இந்­தியா இல்லை. அத­னால் ஒற்­றைச் சமூக –- மத –- இன – அர­சி­யல் தலை­மை­கள் ஆளும் நாடா­க­வும் இந்­தியா இருக்க முடி­யாது. இருந்­த­தும் இல்லை. அனை­வ­ரும் வாழும் நாட்டை, அனை­வ­ரும் சேர்ந்து ஆளும் நாடாக மாற்­றி­ய­தில்­தான் இந்­திய மக்­க­ளாட்­சி­யின் மகத்­து­வ­மும் அடங்கி இருக்­கி­றது. இந்­திய நாடு மர­ணித்­து­வி­டா­மல் நின்று நிலை­பெ­று­வ­தற்­கும் இந்த மக்­க­ளாட்சி –- கூட்­டாட்­சித் தன்­மையே கார­ணம்.

“அர­சி­னு­டைய இறைமை என்­ப­தற்கு நாம் மேற்­கொள்­ளும் பொருள் என்ன? அர­சி­யல் இறை­மை­யா­னது பொது­மக்­க­ளி­டம் நிலைத்­துள்­ளது என அர­சி­ய­

ல­மைப்­பின் முக­வுரை கூறு­கி­றது. சட்­டம் சார்ந்த இறை­மை­யா­னது, கூட்­டாட்சி ஒன்­றி­யத்­துக்­கும் (மத்­திய அரசு), அதன் அங்­கங்­க­ளுக்­கும் இடையே

(மாநி­லங்­கள்) பிரித்­துத் தரப்­பட்­டுள்­ளது” என்று பேசி­னார் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள். அத்­த­கைய இறை­மை­யில்­தான் இந்­தியா இருக்­கி­றது. கூட்­டாட்சி இந்­தி­யாவை நாம் வேண்டி நிற்­கி­றோம்.

அனை­வ­ரும் இணைந்து எத்­த­னையோ தடை­களை வீழ்த்தி, இந்­தி­யா­வைக் கண்­டு­ணர்ந்­த­தைப் போல –- இடைக்­கா­லச் சறுக்­கல்­க­ளை­யும் சரி செய்து புதிய இந்­தி­யா­வைக் கண்­டு­ணர்­வோம்.

தாகூர் எழு­தி­னார்...

எங்கே மனம் அச்­ச­மற்று இருக்­கி­றதோ

எங்கே தலை நிமிர்ந்து நிற்­கி­றதோ

எங்கே அறிவு சுதந்­தி­ர­மாய் இருக்­கி­றதோ

எங்கே உல­கம் குறு­கிய தேசிய எல்­லை­க­ளால்

துண்­டா­டப்­ப­டா­மல் இருக்­கி­றதோ

எங்கே வார்த்­தை­கள் உண்­மை­யின்

ஆழத்­தி­லி­ருந்து வெளிப்­ப­டு­கி­றதோ

எங்கே சோர்­வுற்ற கரங்­கள்

முழு­மையை நோக்கி விரி­கி­றதோ

எங்கே அறிவு என்­னும் நீரோடை மூடப் பழக்க வழக்­கங்­கள்

எனும் பாலைப் பெரு­ம­ண­லில்

பாதை இழந்து போகா­மல் இருக்­கி­றதோ

எங்கே மனம் எப்­போ­தும் விரிந்து பரந்­தி­டும்

சிந்­த­னைச் செயல்­க­ளில் உன்­னால்

எடுத்­துச் செல்­லப்­ப­டு­கி­றதோ

அங்கே அந்­தச் சுதந்­தி­ரச் சொர்க்க பூமி­யில்

எந்­தையே என் நாடு விழித்­தெ­ழட்­டும்.....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?