கரைந்து போகும் மின்சாரம்

நாடு முழுவதும், 21 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் நிலையை மத்திய அரசு உண்டாக்கியுள்ளது.
நிலக்கரித்துறையை கையில் வைத்துள்ள தமிழக காங்கிரசை சேர்ந்த பெண் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அமைச்சக செயல்பாடுகள்தான் இந்நிலைக்கு காரணம்.அது மட்டுமல்ல பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவை ஒழிக்க வேண்டும் நிலக்கரித்துறையை முற்றிலும் தனியார்[அம்பானி]வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரசு செயல்படுவதின் விளைவை நம் மக்கள்தான் இருட்டில் காண[?]வேண்டியுள்ளது.

நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில், 25 மின் நிலையங்களில் இன்னும் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளது. அதேபோல், மற்ற 30 மின் நிலையங்களில் ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டும் உள்ளது. டில்லி ராஜ்காட் மின் நிலையம், அரியானா மகாத்மா காந்தி மின் நிலையம், உத்திர பிரதேசம் தாத்ரி மின் நிலையம், மகாராஷ்டிராவின் பார்லி மின்நிலையம் போன்றவற்றில், இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் நிலக்கரி இருப்புஉள்ளதாக, மத்திய மின் ஆணையம் தெரிவித்துள்ளது.


மின்துறையின் முன்னாள் செயலர் அனில் ரஸ்தான் ""இரண்டு நாட்களுக்கு மட்டுமே, நிலக்கரி கையிருப்பு என்பது, மோசமான ஒன்று. குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை மின் நிலையங்கள் கொண்டிருக்க வேண்டும். நாட்டில் உள்ள, 80 சதவீத அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்யும் கோல் இந்தியா நிறுவனத்திடமே, 142 மில்லியன் டன் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. நிலக்கரியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதி இல்லாததே அதற்கு காரணம். '' என்றார்.

ஆனாலும், இந்த முயற்சி எந்த அளவுக்கு பலன் தரும் என, தெரியவில்லை. மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை இல்லையெனில், மின்சார உற்பத்தி குறைந்து, மக்கள் அதிக மின்வெட்டால் அவதிப்பட நேரிடும் என்பதில், எந்த விதமான சந்தேகமும் இல்லை. மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குனர் அசோக் குரானா "28 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின் நிறுவனங்கள் எல்லாம் தற்போது பாதிஅளவு மட்டுமே மின்  உற்பத்தி செய்கின்றன. மின் உற்பத்தி நிலையங்களில், மின்சார உற்பத்தி, நிலக்கரி சப்ளை மற்றும் மின்சார வினியோகம் போன்றவற்றில் ஒழுங்கற்றநிலை காணப்படுகிறது. பற்றாக்குறையை சரிக்கட்ட நிலக்கரியை உடனடியாக இறக்குமதி செய்வது என்பதும், நடக்கிற காரியம் அல்லது அதற்கு மிக அதிகமாக செலவாகும். உள்நாட்டில் வாங்கப்படும் நிலக்கரியை விட, நான்கு மடங்கு விலை அதிகமாக வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும்,'' என்றார்.

இருக்கிற வளமான நிலக்கரி படுகைகளை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு மன்மோகன் தாரை வார்த்துக்கொடுத்து விட்டார்.நிலக்கரி சுரங்க முறைகேட்டில் அரசுக்கு 10.67 லட்சம் கோடி இழப்பை ஏற்கனவே "சுரனி"ல் படித்திருப்பீர்கள். [படிக்க வில்லை என்றால் சுரனை அழுத்தி படியுங்கள்.]
இனி நிலக்கரிக்கு அம்பானி வைத்ததுதான் விலை.அவரிடம் அதிக விலைக்கு அதுவும் நாம் கொடுத்த சுரங்கத்தில் இருந்தே வாங்க வேண்டிய கட்டாயம்.அல்லது அதிக செலவில் வெளி நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும்.

.
_________________________________________________

கரையாத பனி 

புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகும் என்று கூறிவருவதற்கு மாறாக ஆசியாவில் உள்ள காரகோரம் மலையில் பனி இறுகி, திண்மமாகிவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இமயமலை பகுதியில் மேற்கே உள்ள காரகோரம் மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை செய்மதி[செயற்கை கோள்] தகவல்கள் மூலமாக பிரஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
புவி வெப்பமடையும் போக்குக்கு ஏற்ப, இமாலயத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகிவரும் நிலையில், இந்த மலைப்பகுதியில் மட்டும் பனிதிண்மமாகி வருவதன் காரணம் தெரியவில்லை.

இப்பகுதியில் உள்ள பனிமலைகள் 100 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் மூலமாக இருக்கின்ற போதிலும், அவை குறித்த ஆய்வுகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை.
இமயம் பகுதியில் உள்ள மொத்த பனியும் 2035 ஆம் ஆண்டளவில் உருகிப் போய்விடும் என்று 2007 ஆம் ஆண்டு வெளியான ''காலநிலை மாற்றத்துக்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கை'' கூறியதை அடுத்து, இமயமலைப் பகுதி பனி மலைகளின் நிலை ஒரு முக்கிய அம்சமாக உலகில் பலராலும் பேசப்படுகிறதலாய்வு செய்யப்படுகிறது.
இமயமலைத்தொடரின் ஒரு பகுதியாக இருந்தாலும், காரகோரம் மலை ஒரு மாறுபட்ட தன்மை கொண்டதொடராகவே காணப்படுகிறது.
இந்த மலைச்சிகரங்கள் சென்றுவருவதற்கு மிகவும் கடினமான பகுதியாகவே இருக்கிறது. இருந்த போதிலும் அங்கு ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் ஆய்வாளர்கள் இடையே தற்போதுஅதிகமாகியுள்ளது.
_________________________________________________________________________
கை வைத்தால் போதும் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் AT M கள் வந்துவிட்டன.ஜப்பானில் இப்போது சில வங்கிகள் வைத்துள்ளன.

இதற்கு அடையாள அட்டை எல்லாம் தேவை இல்லை.உங்கள் கையை வைத்து பதிவு செய்யப்பட்ட உயிரி அடையாளம்தான்.கையை வைத்து விட்டு உங்களுக்கு தேவையான பணத்தை[கணக்கில் இருந்தால்]எடுத்துக்கொள்ளலாம்.
_________________________________________________________________________________
6-12-2011 காபூல் ஷியா முஸ்லீம் மத சடங்கில்  மற்றொரு முஸ்லீம் பிரிவினரால் நடத்தப்பட்ட தாக்குதல் படம்.
புலிட்சர் படம்.
_________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?