அணை வலுவானதுதான் .

முல்லைப்பெரியாறு அணை வலுவாகவே இருக்கிறது. அங்கு புதிய அணை ஒன்றையும் அமைக்க வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.
அந்த அணை வலுவாக உள்ளதா, அப்பகுதியில் புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டுமா என்று இந்திய உச்சநீதிமன்றம் இரு கேள்விகளை எழுப்பி அது தொடர்பில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒரு வல்லுநர் குழுவை அமைத்து கருத்துக் கேட்டது.

அந்த வல்லுநர் குழுவில் தமிழகத்தின் சார்பில் நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணனும், கேரளா சார்பில் நீதிபதி கே டி தாமஸும் உறுப்பினர்களாக இருந்தனர்.
உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அந்தக் குழு பல ஆய்வுகளை மேற்கொண்டு தமது அறிக்கையை முத்திரையிட்டஉறையில் 25.4.12அன்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை தற்போது கூற முடியாது என்று அக்குழுவில் தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும்தற்போதைய அணை வலுவாக இருக்கிறது, அங்கு புதிய அணை தேவையில்லை என்பதிலும் கருத்தொற்றுமை நிபுணர்களிடையே உள்ளதாகவும், வேறு சிலவற்றில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பிலான வழக்கு வரும் மே மாதம் நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை இரு மாநிலங்களுக்கும் வழங்கப்படும்.அதன் அடிப்படியிலேயே வழ்க்கும்-தீர்ப்பும் அமையும்.ஆனால் சாண்டி யின் கேரள அரசு தீர்ப்பை மதித்து செயல்படுத்த மத்திய அரசுதான் இரு மாநிலங்களையும் கட்டாயப்படுத்தவேண்டியதிருக்கும்.
_________________________________________________________________________________
சுரன்
ஊழல் நடந்து 25 ஆண்டுகளாக குறைட்டை விட்டு விட்டு இப்போது போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ் காந்தி பணம் பெற்ற தற்கான சரியான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கருத்துக்களை வெளியிட்டு ஊழல் குற்ற சாட்டில் இருந்து ராஜீவையும்.இத்தாலி ஆயுத முகவர் குவாத்ராச்சி விடுவிக்க முயற்சி நடக்கிறது.ஆதாரம் கிடைத்தால் மட்டும் செத்துப்போனவர் மீது நடவடிக்கை எடுத்துவிடாவா போகிறார்கள்.

போபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் 64 கோடி ரூபாய் [இலஞ்சம் ] கொடுக்கப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் நட்க்கவே இல்லை.
சுரன்

அது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த "இந்து" இதழிச்சேர்ந்த பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டுவர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உ தவியாக இருந்தவர்தான் ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துபேட்டிகொடுத்துள்ளார்.
", இந்த ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு நேரடி தொடர்பு இருந்ததற்கான சரியான ஆதாரம் இதுவரைகிடைக்க வில்லை.ஆனால் ஊழல்வாதி குவாத்ராச்சிய காப்பாற்ற ராஜீவ் காந்தி இந்தியாவிலும்,ஸ்வீடன்,சுவிட்சர்லாந்த் போன்ற நாடுகளிலும் கடுமையாக செயல்பட்டார்.அதன் காரணம் புரியவில்லை" என்று பேட்டியில்கூறியுள்ளார். 
லின்ட்ஸ்ட்ராமின் இத்தனை ஆண்டுகள்கழித்துராஜிவ் காந்திக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது சரிதான்.
னால் ராஜீவுக்கும்,குவாத்ராச்சிக்கும்லஞ்சம் வாங்கியதில் தொடர்பில்லை என்று கூறவியலாது. இந்திய இராணுவத்துக்கு தனது பீரங்கிகளை விற்க போபர்ஸ் நிறுவனம் ஏன் 64 கோடி ரூபாவை இலஞ்சமாக தர வேண்டிய நிலை ஏற்பட்டது?அது யாரால் கேட்கப்பட்டது.யாருக்கு எகொடுக்கப்பட்டது.என்பதை கவனிக்க வேண்டும்.லொட்டஸ் என்ற பெயரில் பணம் கணக்கில் வழங்கப்பட்டதே அது யார் கண்க்கு?

இத்தாலியைச் சேர்ந்த ஒட்டாவியா குவாத்ராச்சிக்கு எதற்காக போபர்ஸ் பணம் கொடுத்தது?அவருக்கஊழலில் தொடர்பில்லை என்றால் பணம் வழங்கத்தேவை என்ன வந்தது.
இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விசாரணையில் சோனியா காந்தியையும் சேர்த்திருக்க வேண்டும். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடததப்படவில்லை.நடந்திருந்தால் இந்த இலஞ்சம் தொடர்பான்உண்மைகள் வெளியாகியிருக்கும்.
ஆனால் போபர்ஸ் ஊழலை மறைக்க இந்தியா, ஸ்வீடன் , சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் பல்வேறு மட்டங்களில் முயற்சிகள் நடந்தன. வெகு சாமார்த்தியமாக இந்திய ஆட்சியாளர்களால் குவாத்ராச்லித்தாலிக்கு தப்பி தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.அவரை இந்திய அரசு சரியான முறையில் விசாரிக்கவே இல்லை.அவரை காப்பாற்றிடவே காங்கிரசு ஆட்சியினர் நடவடிக்கைகளை அமைத்திருந்தனர்.
சுரன்

லஞ்சம் தரப்பட்டதற்கான பின்னணியில் சோனியா இருக்கிறார்.இத்தாலி ஆயுத முகவரை ராஜீவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் சோனியாதான். என்ற கருத்தை இந்த ஊழலை வெளிக்கொணர்ந்த பத்திரிக்கையாளர்சித்ரா சுப்பிரமணியதெரிவித்துள்ளார்.
இந்த ஊழலை 25 ஆண்டுகளாக ஆறவைத்து சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் தப்பிக்க வைத்து விட்டு இப்போது ஆதாரங்களை தேடினால் எங்கிருந்து கிடைக்கும்?அதை இன்னுமா விட்டு வைத்திருப்பார்கள்?
சுப்ரமணியசாமி இந்த நிலை பற்றிகூறியிருப்பதாவது:போபர்ஸ் விவகாரம் தொடர்பாக குட்ரோச்சிக்கும், சோனியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், அது குறித்து சோனியாவை விசாரிக்க அனுமதிக்க கோரி, சுவீடன் போலீஸ் துறைத் தலைவராக இருந்த ஸ்டென் லின்ட்ஸ்ட்ரோம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் மத்திய அரசு அனுமதி தரமறுத்தது.லின்ட்ஸ்ரோம் எழுதிய கடிதம் மற்றும் 150 பக்க ஆவணங்களையும் நான்சி.பி.ஐ.,க்கு அனுப்பினேன். 
சிபிஐ யோபோபர்ஸ் ஊழல் குறித்து விசாரணை நடத்தி குட்ரோச்சியிடம் விசாரணை நடத்த எவ்வளவோ முயன்றோம்; ஆனால் முடியவில்லை. எனவே, வழக்கை முடித்துக் கொள்வதாகக் கூறி வழக்கை மூடி வைத்துவிட்டது.ஆனால் லின்ட்ஸ்ரோம் கூறிய உண்மையை ஆதாரமாக வைத்து, நான் மீண்டும் நீதிமன்றத்தில் வழ்க்கு தொடரப்போகிறேன்.என்று கூறியுள்ளார்.
_________________________________________________________________________________
சுரன்
54 வயதான,வியட்நாம் போர் வீரரான தனக்கு வேலை வாய்ப்பு கேட்கும் அமெரிக்கர்.
சுரன்
செர்னோபிள் அணு உலை விபத்தின்26 ஆன்டு நினைவு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?