வரப்போகும் வாழ்க்கை சரித்திரம்.


பிரதிபா பாட்டீலின் குடியரசு தலைவர் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதிஅன்றுடன் முற்றுப்பெருகிறது. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது 50 வருட பொது வாழ்க்கை குறித்து அவர் சுயசரிதை எழுதப் போவதாக இந்திய மக்களை மிரட்டியுள்ளார்.
அதற்கு முன்னர் சிறிய அவரின் வாழ்வுக்குறிப்பு இதோ': 
1962-ல் சாலிஸ்கோனில் நடைபெற்ற 'சத்ரிய மகா சபையின்' மாநாட்டில் பிரதீபாவின் சொற்பொழிவை கேட்ட அன்றைய மராட்டிய முதல்வர் யஷ்வந்த்ரோ சவான், பிரதிபாவைமராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். முதன் முறையாகத்தேர்தலில் போட்டியிட்ட பிரதீபா பாட்டீல் ஜல்கோன் சிட்டி தொகுதியிலிருந்து ச.ம.உ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
பின்னர் 1985-ம் ஆண்டு வரை தொடர்ந்து நான்கு முறை எட்லபாட் தொகுதியிலிருந்தே பிரதீபா ச.ம.உ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 முதல் 1990 வரை அவர் மாநிலங்களவையி பதவி வகித்தார். 1991-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதீபா அமராவதி தொகுதியில் போட்டியிட்டு, முதன்முறையாக மக்களவை எம்.பி ஆனார்.
சுரன்
அரசியலில் ஈடு பட்டதில் இருந்து தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் பிரதீபா பாட்டீல் போட்டியிட்ட தோல்வி அடைந்ததேயில்லை என்பது செங்கோட்டையிலோ,குடியரசுத்தலைவர் மாளிகை சுவரிலோ பொன்னெழுத்துக்களால் பொறித்து வைக்கப்பட வேண்டியது.
கல்லூரியில் படித்தபோது மேசை பந்தாட்டத்தில் போட்டியில் பங்குகொண்டு, நிறைய பதக்கங்களையும் பிரதீபா வென்றுள்ளார். ச.ம.உ.ஆன பின்பும் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் தனது படிப்பை பிரதீபா படித்து வந்துள்ளதாகத்தெரிகிறது.தேர்வைப்பற்றி விபரம் தெரிய வில்லை.ஏற்கனவே பணம் படைத்த வசதியான வீடுகள்,நில-புளன் கள் கொண்டவர்தான் பிரதீபாபாட்டில் 
ஆனால் லட்சாதிபதியான பிரதீபா ஓய்வுக்கு பிறகு புதிய வீடு கட்ட மத்திய அரசிடம் ரூ.85 லட்சம் பணம் கேட்டது ஆச்சரியமானது.
இதுவரை எந்த குடியரசு தலைவரும் இப்படி தங்க இடம் கோடியை எட்டும் பணம் கேட்டது கிடையாது.
ஆனால் இதுவரை பதவியில் இருந்த எந்தகுடியரசுத்தலைவரும் இவரைப்போல் மக்கள் அதுதான் அரசு பணத்தை தண்ணீராக செலவழித்தது கிடையாது.இவரின் பயணச்செலவு பற்றி பல தடவை விவாதங்கள் எழுந்துள்ளது. இவரது வெளிநாட்டு பயணங்களுக்காக மட்டும் இதுவரை இந்தியஅரசு ரூ.180 கோடிக்கு மேல் செலவழித்துள்ளது.
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?