வேடிக்கை ,வேதனை!
கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு.போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தேர்தல் ஆணையர்களை 2 மணி நேரத்தில் தேர்வு செய்தது எப்படி? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.
குடும்பம், டப்பு மணி... மணி... அன்புமணியை விளாசிய சி.வி.சண்முகம்.
சென்னையை சேர்ந்தவருக்கு நெல்லையில் போட்டியிட சீட்: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்; இன்று அதிமுக வேட்பாளர்; கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் சிம்லா முத்துச்சோழனுக்கு ‘ஜாக்பாட்’; அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு.
கொ.ம.தே.க வேட்பாளர் மாற்றம் - புதிய வேட்பாளராக மாதேஸ்வரன் நிறுத்தம்.
பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்வது குறித்து ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கெடு. சட்டம் தெரியாதா? அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதா? உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.
ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீச்சு .
இந்தியா கூட்டனியில் உள்ள ஒரு முதல்வர் சிறையில் இருக்கிறார் இப்போது மற்றொரு முதல்வரையும் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்திய சுதந்திர வரலாற்றில் இது போன்ற வெட்கக்கேடான காட்சிகளை யாரும் பார்த்ததில்லை- பிரியங்கா காந்தி.
தேர்தல் முடிஞ்சதும் நிச்சயமாக பிரியாணி போடலாம்னு சொன்னேன்....
இப்போதான் நியூஸ் வந்துச்சு....
மட்டன் பிரியாணியாமே....🍲
சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாக இருக்கு...
மகத்தான வெற்றி இந்த கோவைக்கு காத்திருக்கிறது...!
- அண்ணாமலையை அலறவிட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
தேர்தலுக்குப் பிறகு அவர் ஊர் ஊராகப் போய் கதாகாலட்சேபம் நடத்தலாம்.
பெண் சக்தியை இவர் போற்றுகிறாராம். பாரதியார் சக்தியின் வடிவில் இந்திய அன்னையைப் பாடினாராம். உருக்கமாகப் பேசி இருக்கிறார் பிரதமர்.
அவருக்கு இதை எல்லாம் பேசுவதற்கான உரிமை இருக்கிறதா? பெண் சக்தியை அவர் தனது ஆட்சிக் காலத்தில் என்ன மாதிரி போற்றினார்?
மணிப்பூர் நினைவுக்கு வருகிறது? பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் பெண் சக்தி கதறிய கதறல் நரேந்திரமோடிக்கு கேட்டதா?
போனாரா பிரதமர்?
குக்கி இனப் பெண்களை ஆடை களைந்து ஒரு கும்பல் இழுத்து வரும் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவிய பிறகு, ‘இது போல நிறைய நடந்துள்ளதே’ என்று சொன்னவர்தான் பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங்.
‘இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய பிறகுதான் இந்த சம்பவத்தின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. வீடியோ வந்த பிறகுதான் 6 பேரை கைது செய்தோம்’ என்று சொன்னார் பா.ஜ.க. முதலமைச்சர்.
அதாவது 2023 மே மாதம் 4 ஆம் தேதி நடந்த கொடூரத்துக்கு காரணமானவர்களை சூலை மாதம் 18 ஆம் தேதிக்கு மேல் தான் கைது செய்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர். அதன்பிறகுதான் பிரதமர் கண்டிக்கிறார்.
இந்தக் கொடூரம் நடந்ததுமே மாநில பா.ஜ.க. அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் அது தெரிந்திருக்கும்.
‘நாங்கள் இழுத்துச் செல்லப்பட்ட போது போலீஸ் வேடிக்கை பார்த்தது’ என்று அந்தப் பெண்கள் பேட்டி அளித்துள்ளார்கள். “எங்களை வன்முறை கும்பல் புதருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்கள்.
அப்போது போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. அதில் நான்கு போலீஸ்காரர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். வன்முறை கும்பல் எங்களை இழுத்துச் செல்வதை அந்த நான்கு போலீஸ்காரர்களும் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவவில்லை” என்று ஒரு பெண் பேட்டி அளித்துள்ளார்.
இதுதான் பெண்கள் பாதுகாப்பில் பா.ஜ.க.வுக்கு உள்ள அருகதை ஆகும்.
கைகட்டி வேடிக்கை பார்த்தது பா.ஜ.க. மாநில அரசு. அந்த மாநில அரசை இன்று வரை காப்பாற்றி வருபவர்தான் பெண் சக்தியைப் பற்றிப் பேசுகிறார்.வேடிக்கையாக இருக்கிறது.
மல்யுத்த வீராங்கனைகள் போராடியது நினைவில் இருக்கிறதா பிரதமரே?
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பா.ஜ.க. எம்.பி.மீது வழக்குப் பதியவே மல்யுத்தம் நடத்தவேண்டி இருந்தது.
பா.ஜ.க. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
பிரிஜ் பூஷண் சிங்கும், பயிற்சியாளரும், தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக வினேஷ் போகட் அழுதுகொண்டே கூறினார்.
இந்த விவகாரம் பெரிதாக ஆனதும் உடனடியாக அவர் மீது வழக்குப் பதிந்திருக்க வேண்டும். அதனைச் செய்ய வில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ஏப்ரல் 21 ஆம் தேதி, பிரிஜ்பூஷண் சிங்குக்கு எதிராக கனாட் பிளேஸ் காவல் நிலையத்திற்கு புகார் செய்ய மல்யுத்த வீராங்கனைகள் சென்றார்கள். ஆனால் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை.
ஏன் வழக்குப் பதியவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். போக்சோ சட்டத்தில் பதியப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வைத்ததன் பின்னணி அனைவர்க்கும் தெரியும். பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யாமலேயே வழக்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கு பெண்களைப் பற்றிப் பேச அருகதையோ, யோக்கியதையோ துளியும் உண்டா?
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்ததாக மார் தட்டிக் கொள்கிறார் பிரதமர். உண்மையில், 33விழுக்காடு பெண்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடு தான் – பா.ஜ.க. கொண்டு வந்துள்ளது.
‘இனி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற --– சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு’ என்று இந்தச் சட்டம் சொல்லவில்லை. பிரதமர் மோடி அவர்கள், தடையே இல்லாமல் நிறைவேற்றும் வகையில் இந்த சட்டத்தை கொண்டு வரவில்லை.
•மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு
•அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு - – என்ற இரண்டு மாபெரும் தடுப்புச் சுவர்களை எழுப்பி இருக்கிறார்.
இதுதான் பெண்களுக்கு எதிரான சதிச் செயல் ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பும் -– தொகுதி வரையறையும் முடிந்த பிறகு என்றால் 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும். 2029 ஆம் ஆண்டு ,அதாவது இன்னும் 6 ஆண்டுகள் கழித்து நிறைவேறப்போற சட்டத்தை - – இன்று நிறைவேற்றி விட்டதாக கணக்குக் காட்டி -– கண்கட்டி வித்தை காட்டுகிறார் பிரதமர்.
மணிப்பூரிலும் மல்யுத்த களத்திலும் பெண் சக்தி நசுக்கப்பட்டபோது கண்ணீர் விடாத பிரதமர்தான் இப்போது பெண் சக்தியைப் பற்றி பேசுகிறார்.
வேடிக்கையாக மட்டுமல்ல; வேதனையாகவும் இருக்கிறது.