ஆணையமே சர்ச்சைக்குரியது

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.5 லட்சம் பறிமுதல்

 சுத்தமான உளுந்துல செஞ்ச வடைக்கு நான் உத்திரவாதம்.மோடியை விடாமல் துரத்தும் வடை பிரசாரம்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை புதிய வழக்குப்பதிவு!

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மறுக்கப்படும் ஜனநாயக உரிமை. பல ஆண்டுகளாக நடத்தப்படாத சட்டமன்றத் தேர்தல்.


தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம் சிறையில் அடைப்பு.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன: தலைமை செயலகத்தில் அரசு விளம்பர படங்கள் அகற்றம்.



தேர்தல் ஆணையமே சர்ச்சைக்குரியது

தேர்­தல்­தான் சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக இருக்­கும் என்­றால் பா.ஜ.க.வின் காலத்­தில் தேர்­தல் ‘ஆணை­யமே’ சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக ஆகி­விட்­டது!

இந்­திய நாடா­ளு­மன்­றத்­துக்கு தேர்­தல் தேதியை எப்­போது அறி­விப்­பார்­கள், தேர்­தல் எப்­போது நடக்­கப் போகி­றது என்ற எதிர்­பார்ப்பு கோடிக்­க­ணக்­கான மக்­க­ளி­டம் எழுந்து நின்ற நிலை­யில் –- இந்­தத் தேர்­தல்­களை எல்­லாம் நடத்த வேண்­டிய தேர்­தல் ஆணை­யர் அருண் கோயல் திடீ­ரென்று பதவி வில­கி­னார். 

2022ஆம் ஆண்டு நவம்­பர் மாதத்­தில் தேர்­தல் ஆணை­ய­ரா­கப் பொறுப்­பேற்­றுக் கொண்ட அருண் கோய­லுக்கு, 2027ஆம் ஆண்டு டிசம்­பர் வரைக்­கும் பத­விக்­கா­லம் இருக்­கி­றது. இன்­னும் மூன்­றரை ஆண்டு காலம் அவ­ருக்கு பத­விக் காலம் இருக்­கும் நிலை­யில் அவர் தனது பத­வியை விட்டு விலகி இருக்­கி­றார். 

ஒன்­றிய அர­சாங்­கத்­தில் குழப்­பம் இருக்­கி­றது என்­ப­தற்கு எடுத்­துக்­காட்­டு­தான் அருண்­கோ­ய­லின் பதவி வில­கல்.

தலைமை தேர்­தல் ஆணை­யர் ராஜீவ்­கு­மார், தேர்­தல் ஆணை­யர்­கள் அனுப் பாண்டே, அருண்­கோ­யல் ஆகிய மூவ­ரைக் கொண்­ட­து­தான் இந்­திய நாட்­டின் தேர்­தல் ஆணை­யம் ஆகும்.

 ஏப்­ரல் -– மே மாதங்­க­ளில் நடக்க இருக்­கும் இந்­திய நாட்­டின் மிகப் பெரிய தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் கடந்த ஓராண்டு கால­மா­கச் செய்து வந்­த­வர்­கள் இவர்­கள் மூவ­ரும்­தான். 

இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் 324 ஆவது பிரிவு இந்த நாட்­டின் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அதி­கா­ரத்தை தேர்­தல் ஆணை­யத்­துக்கு வழங்­கு­கி­றது.

இத்­த­கைய அதி­கா­ரம் பொருந்­திய அமைப்­பில் இடம்­பெற்­றி­ருந்த தேர்­தல் ஆணை­யர் அனுப் பாண்டே, கடந்த மாதம் பணி ஓய்வு பெற்­று­விட்டு போய்­விட்­டார்.

இத்­த­கைய அதி­கா­ரம் பொருந்­திய அமைப்­பில் இடம்­பெற்­றி­ருந்த தேர்­தல் ஆணை­யர் அருண் கோயல், கடந்த 9 ஆம் தேதி பத­வியை விட்டு வில­கி­விட்­டார்.

நாடா­ளு­மன்­றத் தேர்­தலை எதிர்­கொள்­ளும் எந்­த­வொரு ஜன­நா­யக நாட்­டி­லும் இத்­த­கைய ஒரு செயல் நடக்­காது.

 அப்­படி நடந்­தால் அந்த நாட்­டில் ஜன­நா­யக நெறி­மு­றை­கள் சிக்­க­லுக்கு உள்­ளாகி இருக்­கி­றது என்று பொருள்.

சுதந்­தி­ர­மாக -– தனித்­துச் செயல்­பட வேண்­டிய தேர்­தல் ஆணை­யத்தை தன் வசப்­ப­டுத்­தும் செயலை ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­தது. இதைப் போன்ற ஜன­நா­யக அற­மற்ற செயல் இருக்க முடி­யாது.

தன்­னிச்­சை­யாக இயங்க வேண்­டிய அனைத்து அமைப்­பு­க­ளை­யும் தன்­வ­சப்­ப­டுத்­தும் வகை­யில் சட்­டம் கொண்டு வரு­வ­து­தான் பா.ஜ.க.வின் பாணி­யா­கும். 

அது­தான் தேர்­தல் ஆணை­யர்­கள் நிய­ம­னச் சட்­டத்­தி­லும் நடந்­தி­ருக்­கி­றது.

சுதந்­தி­ர­மா­கச் செயல்­ப­ட­வேண்­டிய தேர்­தல் ஆணை­யம்­பற்றி –- உச்­ச­ நீ­தி­மன்­றத் தீர்ப்­பை­யும் மீறி, தன் வச­திக்­கேற்ப சட்ட திருத்­தம் கொண்டு வந்­துள்­ளது ஒன்­றிய பா.ஜ.க. அரசு. 

தேர்­தல் ஆணை­யம் என்­பது ஜன­ நா­ய­கத்­தின் முக­மாக இருக்க வேண்­டி­யது ஆகும். அந்த தேர்­தல் ஆணை­யத்தை தனது வச­திக்கு ஏற்ப வளைத்து விட்­டது பா.ஜ.க. அரசு.

இந்த அருண் கோயல் நிய­ம­னமே சர்ச்­சைக்­கு­ரி­ய­தா­கத்­தான் தொடக்­கத்­தில் அமைந்­தி­ருந்­தது. 

பஞ்­சாப் மாநில அதி­கா­ரி­யான அருண் கோயல், 2022 ஆம் ஆண்டு நவம்­பர் 18 ஆம் நாள் திடீ­ரென பதவி வில­கி­னார்.

 மறு­நாளே இவர் தேர்­தல் ஆணை­ய­ராக நிய­மிக்­கப்­பட்­டார். அதா­வது தேர்­தல் ஆணை­ய­ராக இவரை நிய­மிப்­ப­தற்­கா­கவே பதவி விலக வைத்­துள்­ளார்­கள். 

அருண் கோயல் நிய­ம­னத்­துக்கு எதி­ராக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் பல்­வேறு தரப்­பி­ன­ரும் வழக்கு தாக்­கல் செய்­தார்­கள். இது போன்ற முக்­கி­ய­மான பணி­யி­டத்­துக்­கான தேர்வை ‘கொலி­ஜி­யம்’ போன்ற அமைப்­பு­தான் நடத்த வேண்­டும் என்று அவர்­கள் கோரிக்கை வைத்­தார்­கள். 

இந்த வழக்­கில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அர­சி­யல் சாசன அமர்வு தனது வர­லாற்­றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்­கி­யது. நீதி­ய­ர­சர் கே.எம். ஜோசப் தலை­மை­யி­லான ஐந்து நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு இத்­தீர்ப்பை அளித்­தது.

•பிர­த­மர்

•மக்­க­ளவை எதிர்க்­கட்­சித் தலை­வர்

•உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி ஆகிய மூவர் அடங்­கிய குழு­தான் தலைமை தேர்­தல் ஆணை­ய­ரை­யும், தேர்­தல் ஆணை­யர்­க­ளை­யும் தேர்வு செய்ய வேண்­டும் என்று தீர்ப்பு அளித்­தது.

உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் மீது மரி­யாதை இல்­லாத பா.ஜ.க. அரசு 2023 டிசம்­பர் 21ஆம் தேதி அன்று ஒரு சட்­டத்­தைக் கொண்டு வந்­தது. அதன்­படி உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி என்­ப­தற்­குப் பதி­லாக ஒன்­றிய அமைச்­சர் ஒரு­வர் என்று மாற்றி விட்­டார்­கள். இதன்­படி பார்த்­தால் தேர்­தல் ஆணை­ய­ரைத் தேர்வு செய்­யும் மூவர் குழு­வில் இரு­வர், ஆளும் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ராக இருக்­கு­மாறு பார்த்­துக் கொண்­டார்­கள். 

அதா­வது தங்­கள் வச­திக்கு ஏற்ப சட்­டத்தை வளைத்­துக் கொண்­டார்­கள். இப்­படி உரு­வாக்­கப்­பட்ட எதேச்­சா­தி­கார சட்­டப்­படி புதிய தேர்­தல் ஆணை­யர்­கள் இரு­வரை தேர்ந்­தெ­டுத்து அறி­வித்­து­விட்­டார்­கள்.

முன்­னாள் ஐ.ஏ.எஸ். அதி­கா­ரி­க­ளான சுக்­பீர் சிங் சாந்து, ஞானேஷ் குமார் ஆகிய இரு­வ­ரும் புதிய தேர்­தல் ஆணை­யர்­க­ளாக நேற்­றைய தினம் தேர்ந்­தெ­டுக்­கப் பட்­டுள்­ளார்­கள். 

பிர­த­மர் மோடி, உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, மக்­க­ளவை எதிர்க்­கட்­சித் தலை­வர் அதீர் ரஞ்­சன் செளத்ரி ஆகிய மூவர் கொண்ட கூட்­டத்­தில் இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

புதிய தேர்­தல் ஆணை­ய­ரா­கப் பொறுப்­பேற்­றுள்ள ஞானேஸ்­கு­மார், அமித்­ஷா­வின் உள்­து­றை­யில் அவ­ருக்­குக் கீழ் பணி­யாற்­றிய தகு­திக்­குரியவர்!

இந்த நாட­கத்தை அதீர் ரஞ்­சன் வெளிப்­ப­டுத்­தி­விட்­டார். 212 பேர் விண்­ணப்­பித்­துள்­ளார்­கள்.

 அவர்­கள் யார் யார் என்ற பட்­டி­யலை அதீர் ரஞ்­ச­னுக்­குத் தர­வில்லை.

 212 பேரில் 6 பேர் பெயரை தனி­யா­கப் பிரித்து - – இவர்­களில் 2 பேரை தேர்வு செய்ய வேண்­டும் என்று சொல்லி இருக்­கி­றார்­கள். 

இந்த 6 பேரின் தகு­தியை அவர் கேட்­டுள்­ளார். 

அதை­யும் தர­வில்லை. சும்மா பெயரை மட்­டும் கொடுத்­துள்­ளார்­கள். 6 பேரில் இருந்து தேர்வு செய்­யப்­ப­டும் 2 பேர் பெயரை 10 நிமி­டத்­துக்கு முன்­பு­தான் அவ­ரி­டம் கொடுத்­துள்­ளார்­கள்.

உல­கத்­தில் இந்த மாதிரி செல­க்ஷன் எந்த நாட்­டி­லும் நடந்­தி­ருக்­காது! 

பா.ஜ.க. மாடல்  என்று இதற்­குப் பெயர் வைக்கலாம்..



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?