அவர்கள் தொழிலே

 அதுதான்!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், ஹூக்ளி நதியின் கிழக்கு மற்றும் மேற்கு கரையை இணைக்கும் வகையில் நீருக்கு அடியில் மெட்ரோ கட்டுமான பணி நடைபெற்றது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம், நீருக்கு அடியில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக அமைந்தது.

பின்னர், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீருக்கு அடியில் ஹவுரா மெய்டன் மற்றும் எஸ்பிளனேட் இடையிலான ரயல்வழித்தடமும் திட்டமிட்டப்படி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கிறது. 


நீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 அடி ஆழத்தில் மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்பட்டுள்ளது.


நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயிலில் நாள்தோறும் சுமார் 7 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று மெட்ரோ நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

-------------------------------------------

"போதைப் பொருள் நடமாட்டம் ,வரத்து குஜராத்தில்தான் அதிகம்.அதை தடுப்பது ஒன்றிய அரசின் கையில்தான் உள்ளது": சட்ட அமைச்சர் ரகுபதி குற்றசாட்டு.


சென்னை புளியந்தோப்பு பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை. 1700 மாத்திரைகள் பறிமுதல். அம்பத்தூரைச் சேர்ந்த பார்த்திபன், புளியந்தோப்பைச் சேர்ந்த சஞ்சய், தமிழ்மணி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எரேமியா ஆகிய 4 பேர் கைது.

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலம்.

சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ்க்கு பயந்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர். சிறுமி உயிரிழப்பு தொடர்பாக கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து புதுச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“வடநாட்டிலிருந்து மதப்புயல் அல்ல; மடப் புயல் வந்து கொண்டிருக்கிறது” - சத்யராஜ் .


ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை: கர்நாடக உயர்நீதிமன்றம்.


மல்லையா, நிரவ் மோடி, பிரிஜ் பூஷன் ஆகியோ.ர் மோடி குடும்பத்தில் உள்ளனரா?.. காங்கிரஸ் கேள்வி.

நாகரகோவிலில் கோயில் படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலந்து அருள் எனபவரை கொலை செய்த வழக்கில் பூசாரி சதீஷ் கைது.

குற்றவாளிகளுக்கு

சிகப்பு கம்பளம்

விரித்து சேர்க்கும் கட்சி பா.ஜ.க,

செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அமைச்­சர் எஸ்.இர­கு­பதி அளித்த பேட்டி :-

போதைப்­பொ­ருட்­க­ளைத் தடுப்­ப­தற்­காக முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­மை­யில் 10.08.2022 அன்று மாநில அள­வி­லான காவல்­துறை அதி­கா­ரி­கள், மாவட்ட அதி­கா­ரி­கள் கூட்­டத்­தைக்கூட்டி போதைப்­பொ­ருளே தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை எடுத்­தார். கஞ்சா பயி­ரி­டப்­ப­டாத பூமி­யாக உள்­ளது தமிழ்­நாடு.

பள்ளி, கல்­லூ­ரி­க­ளில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுப் போதைப்­பொ­ருள் தடுப்பு உறு­தி­மொழி எடுக்­கப்­பட்­டது. போதைப்­பொ­ருள் நட­மாட்­டம் இருந்­தால் உட­ன­டி­யா­கத் தடுக்­கப்­பட்டு, கார­ண­மா­ன­வர்­கள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­பட்டு தண்­டனை பெற்­றுத் தரப்­பட்­டுள்­ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்­சிக்­கா­லத்­தில் அமைச்­சரே குட்கா வியா­பா­ரத்­தில் உடந்­தை­யாக இருந்­தார் எனக் குற்­றம்­சாட்­டப்­பட்­டது. அமைச்­ச­ராக இருந்­த­வர் மீது வழக்கு தொடர ஆளு­நர் அனு­மதி தந்­துள்­ளார். அப்­ப­டிப்­பட்ட ஆட்சி அப்­போது நடை­பெற்­றது.

தமிழ்­நாட்­டில் கஞ்சாகடத்­தல், போதைப்­பொ­ருள் கடத்­தல் உள்­ளிட்ட தொழில்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­கள் 14பேருக்­குச் சிவப்­புக்கம்­ப­ளம்விரித்­துத் தங்­கள் கட்­சி­யில்சேர்த்­துள்­ளது பா.ஜ.க. அகில இந்­தி­ய­ள­வி­லேயேபா.ஜ.க.வில்­தான் இது­போன்ற தொழில்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­கள் உறுப்­பி­னர்­­களாக அதி­கம் இருக்­கி­றார்­கள்.

பிர­த­மர் மோடி­யின் சொந்த மாநி­லம் குஜ­ராத். இன்­றைக்கு போதைப்­பொ­ருள் நட­மாட்­டம் என்­பது அதி­க­மாக இருப்­பது அவ­ரது குஜ­ராத்­தில்­தான். இப்­படி எல்­லா­வற்­றிற்­கும் உடந்­தை­யாக இருந்­து­விட்டு, மற்­ற­வர்­கள்­மீது பழி­போ­டு­வ­தற்­குப் பெயர்­தான் மோடி பார்­மு­லாவா? என கேட்க விரும்­பு­கி­றோம்.

ஆந்­திரா, தெலங்­கானா, ஒடிசா, வட கிழக்கு மாநி­லங்­க­ளில் போதைப்­பொ­ருள் பயி­ரி­டப்­ப­டு­வ­தா­கத் தக­வல் உள்­ளது. தமிழ்­நாட்டு மக்­கள் ஏமா­ளி­கள் அல்ல, தமிழ்­நாட்டு மக்­கள் மீது தேர்­த­லுக்­கா­கப் பழி போடு­வதை பொறுத்­துக் கொள்­ள­மாட்­டார்­கள்.

விமான நிலை­யம், துறை­மு­கங்­க­ளை­யெல்­லாம் தனி­யா­ருக்­குத் தாரை­வார்த்து விட்­டது ஒன்­றிய பா.ஜ.க அரசு. தனி­யா­ருக்­குத் தாரை­வார்த்­தால் கட்­டுப்­பாடு தனி­யா­ரி­டத்­தில்­தான் இருக்­கும், அதற்­குத்­தான் தனி­யார்­ம­யத்தை எதிர்க்­கி­றோம். தனி­யா­ரி­ட­மி­ருந்து வாங்­கி­யது அன்­றைய ஒன்­றிய அரசு, தனி­யா­ருக்கு இன்­றைய ஒன்­றிய அரசு கொடுப்­ப­தற்­குப் பெயர் மோடி பார்­மு­லாவா? மோடி­யி­சமா?

2019–இல் 11,418 கிலோ, 2020–இல் 15,144 கிலோ, 2021–இல் 20,431 கிலோ, 2022–இல் 28,381 கிலோ, 2023–இல் 23,364 கிலோ கஞ்சா பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. 2022–இல் 2,016 வழக்­கு­கள் போடப்­பட்­ட­தில் 1,916 வழக்­கு­கள் அதா­வது 80% வழக்­கு­க­ளில் தண்­டனை பெற்­றுள்­ள­னர். 418 வழக்­கு­க­ளில் விடு­த­லை­யா­கி­யுள்­ள­னர். 2023–இல் 3,567 வழக்­கு­கள் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­ட­தில் 2,988 வழக்­கு­க­ளில் தண்­டனை பெற்­றுத்­த­ரப்­பட்­டுள்­ளது, 579 வழக்­கு­க­ளில் விடு­த­லை­யா­கி­யுள்­ள­னர்.

தமிழ்­நாட்டு அர­சாங்­கத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் தண்­டனை பெற்­றுத்­த­ரு­வ­தில் தயக்­கம் காட்­டு­வது கிடை­யாது. வருங்­கால சந்­த­தி­யி­ன­ரைப் பாழாக்­கி­வி­டும் என்­ப­தால் போதைப்­பொ­ருட்­க­ளைத் தடுப்­ப­தற்குமுழுக் கவ­னம், முழு சக்­தி­யை­யும் செலுத்தி செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர்.

போதைப் பொருள் வழக்­கில் பா.ஜ.க.வினர்!

பா.ஜ.க.வைச் சேர்ந்த 14 பேர் மீது போதைப்­பொ­ருள் தொடர்­பாக 23 வழக்­கு­கள் உள்­ளது. அவர்­கள் குறித்த பட்­டி­யல்

1. சர­வ­ணன், உறுப்­பி­னர்

2. ⁠ராஜேஷ், சென்னை 109–ஆவது வட்ட தலை­வர்.

3. ⁠விஜய நாரா­ய­ணன், மத்­திய சென்னை மேற்கு மாவட்ட செயற்­குழு உறுப்­பி­னர்

4. ⁠விஜ­ய­லட்­சுமி, செங்­கல்­பட்டு வடக்கு மாவட்­டத் தலை­வர்

5. மணி­கண்­டன், தாழ்த்­தப்­பட்­டோர் பிரிவு மண்­டல தலை­வர்

6. ⁠ஆனந்த ராஜேஷ், திரு­வள்­ளூர் மேற்கு மாவட்ட எஸ்.சி./ எஸ்.டி. மாவட்ட துணைத் தலை­வர்

7. ⁠ராஜா, காஞ்­சி­பு­ரம் மாவட்ட இளை­ஞர் நலன் அபி­வி­ருத்தி பிரிவு செய­லா­ளர்

8. குமார் எ குண­சீ­லன், உறுப்­பி­னர்

9. ⁠மணி­கண்­டன், உறுப்­பி­னர்

10. ⁠லிவிங்கோ அடைக்­க­ல­ராஜ், பெரம்­ப­லூர் மாவட்ட முன்­னாள் செய­லா­ளர்

11. ⁠சிதம்­ப­ரம் எ குட்டி, தஞ்­சா­வூர் வடக்கு மாவட்ட துணைத்­த­லை­வர்

12. ⁠ராஜா,விவ­சாய பிரிவு மாநி­லச்­செ­ய­லா­ளர்

13. ⁠சத்யா எ சத்­ய­ராஜ், உறுப்­பி­னர்

14. ⁠காசி­ரா­ஜன், மதுரை நகர இளை­ஞர் பிரிவு செய­லா­ளர்

அண்­ணா­மலை பா.ஜ.க.வில் உள்ள நபர்­க­ளி­டம் போதைப்­பொ­ருள் நட­மாட்­டத்தை முத­லில் தடுக்­கட்­டும். அதே போல் குஜ­ராத்­தி­லும் தடுக்­கட்­டும். பா.ஜ.க. ஆளும் பிற மாநி­லங்­க­ளி­லும் போதைப்­பொ­ருள் நட­மாட்­டத்­தைத் தடுக்­கட்­டும். அதன் பிறகு அவர் தமிழ்­நாட்­டில் போதைப்­பொ­ருள் தடுப்­பதை மக்­கள் இயக்­க­மாக மாற்­று­வ­தைப் பார்க்­கட்­டும்.

போதைப்­பொ­ருள் கடத்­து­வது குறித்து தி.மு.க.விற்­குத் தெரிந்­தி­ருக்க வாய்ப்பே கிடை­யாது. எங்­க­ளு­டைய நோக்­கம் அதைத் தடுக்­க­வேண்­டும் என்­ப­து­தான். போதைப்­பொ­ருள் நட­மாட்­டம் குறித்து அண்­ணா­ம­லைக்கு வேண்­டு­மா­னால் தக­வல் தெரிந்­தி­ருக்­கும். அதை அவர் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்­டும்.

தி.மு.க.வில் இருக்­கும் உறுப்­பி­னர் மீது ஒரு குற்­றச்­சாட்டு வந்­தால் உட­ன­டி­யாக அவர்­க­ளைக் கட்­சி­யில் இருந்து நீக்­கி­வி­டு­கி­றோம். குற்­றப் பின்­னணி உடை­ய­வர்­க­ளைக் கட்­சி­யில் வைத்து அர­சி­யல் செய்ய வேண்­டும் என்ற அவ­சி­யம் தி.மு.க.விற்கு என்­றும் கிடை­யாது.

இல்­லம் தேடிக் கல்வி என்ற திட்­டத்தை கொச்­சைப்­ப­டுத்­தும் வகை­யில் முன்­னாள் அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர், இல்­லம் தேடி குட்கா என பேசி­யுள்­ளார். ஆனால் அவர் மீதே வழக்கு உள்­ளது என்­பதை மறந்­து­விட்­டுப் பேசி­யுள்­ளார்.

இவ்­வாறு அமைச்­சர் எஸ்.ரகு­பதி கூறியுள்­ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?