எரிமலைகள்


பூமியின் தரைப் பரப்பில் நாம் நிற்கிறோம். நமது காலடிக்குக் கீழே மண், பாறைகள் நிரம்பி இருக்கின்றன. இந்தப் பரப்புக்கு 'புவி ஓடு' என்று பெயர். (எர்த்ஸ் க்ரஸ்ட் - Earth's Crust). இதன் தடிமன் இடத்துக்கு இடம் வேறுபடும். சுமாராக 24கிலோ மீட்டரில் இருந்து 160 கிலோ மீட்டர் வரை இருக்கும். 

புவி ஓட்டிற்குக் கீழே, பாறைகள் உருகிய நிலையில் இருக்கும். இந்த அடுக்கின் பெயர் 'மேன்டில்' (Mantle). பூமியின் மையப்பகுதி 6,000 டிகிரி செல்சியஸ் (Celsius) வெப்ப நிலையில் இருப்பதால், அதற்கு மேலே இருக்கும் மேன்டில் அடுக்கில் பாறைகள் உருகி, குழம்பு மாதிரி ஓடி கொண்டிருக்கிறது. குழம்பு நிலையில் இருக்கும் பாறைக்கு 'மாக்மா' (Magma) என்று பெயர்.
இந்தப் பாறைக் குழம்பு, சாம்பல், புகை ஆகியவற்றுடன் சேர்ந்து, தரைப் பரப்பின் மேல் இருக்கும் ஓட்டை வழியாக வெளியேறும். இந்தக் கலவைக்கு 'லாவா' (Lava) என்று பெயர். காலப்போக்கில் லாவா, மேடாகப் படிந்து மலை போன்ற அமைப்பு உருவாகிறது. இதைத்தான் எரிமலை (வல்கேனோ - Volcano) என்று சொல்கிறோம். 

எரிமலையின் அடிப்பகுதி, மேன்டில் பரப்பைத் தொட்டுக் கொண்டு இருக்கும். காலப்போக்கில் எரிமலையின், நடுவில் 'மாக்மா' வெளியேறுவதற்குக் குழாய் மாதிரியான அமைப்பு (மாக்மா கண்டியூட் - Magma Conduit) உருவாகிவிடும். மேன்டில் அடுக்கில் அழுத்தம் அதிகரிக்கும்போது, சோடா பாட்டிலின் மூடியை, நுரை தள்ளுவது மாதிரி, மாக்மா கண்டியூட் வழியாக, மாக்மா மேல் நோக்கிப் பீறிட்டு வழியும். 

மேன்டிலுக்கு மேலே இருக்கிற புவி ஓடு, பொலபொலவென வலுவில்லாமல் இருந்தால், அந்த இடங்களில் எரிமலைகள் தோன்றும்.

பிற கோள்களிலும் எரிமலைகள் இருக்கின்றன. செவ்வாய் கிரகத்தில் இமயமலையைவிட இரண்டு மடங்கு அதிக உயரமான எரிமலை இருக்கிறது. 'ஒலிம்பஸ் மான்ஸ்' (Olympus Mons) என்பது இதன் பெயர். உயரம் 24கிலோ மீட்டர்.

பூமியின் நிலப்பரப்பிலும் கடலுக்கு அடியிலும் எரிமலைகள் இருக்கின்றன. அட்லான்டிக் பெருங்கடலின் (Atlantic Ocean) மத்தியில் இருக்கும், மலைத்தொடர் 'மிட் அட்லான்டிக் ரிட்ஜ்' (Mid Atlantic Ridge) பெரும்பாலும் எரிமலைகளால் ஆனது. உலகின் மிக நீளமான மலைத்தொடர் இதுதான்.

தென் அமெரிக்காவின் மெக்ஸிகோ நாட்டில் 'பரிக்யுட்டின்' (Paricutin)... அங்கு 'புலிடோ' (Pulido) என்ற விவசாயிக்குச் சொந்தமான வயல் பகுதி ஒன்று, 1943ஆம் ஆண்டு, பிப்ரவரி 20ஆம் தேதி வரை இருந்தது. 

அன்றைய தினம் மதியம் 3 மணி அளவில் புலிடோ, சோளம் விதைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார். திடீர் என இடி விழுந்த மாதிரி நிலத்தில் ஒரு சத்தம் கேட்டது. 

வயலில் இருந்த ஒரு சிறிய குன்றில் பள்ளம் ஏற்பட்டதை புலிடோ பார்த்தார். சற்று நேரத்தில் வெடிச் சத்தத்துடன், மளமள என்று புகையும் சாம்பலும் பள்ளத்தில் இருந்து கிளம்ப ஆரம்பித்தது. 

அது ஒரே நாளில் 50 மீட்டர் உயரத்துக்கு வளர்ந்தது. விட்டுவிட்டு 9 ஆண்டுகள் வெடித்து 500 மீட்டர் உயர எரிமலையாக வளர்ந்தது. பூமியில் கடைசியாக வெடித்து வளர்ந்த எரிமலை இதுதான். 

'இந்த எரிமலை எனக்குச் சொந்தமானது' என்று எழுதி வைத்துவிட்டு புலிடோ வெளியேறினார். 

இதைவிட பல மடங்கு பயங்கரமான தம்போவா என்ற எரிமலை கடந்த 1815ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சம்பவா தீவில் வெடித்தது. 
அந்த எரிமலை கக்கிய புகை மண்டலம் எங்கும் பரவி பூமியில் சூரிய ஒளி விழுவதை தடுக்கத் தொடங்கியது. 1,630 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட பயங்கர எரிமலை வெடிப்பாக இது கருதப்பட்டது. 

1812ல் கரீபியன் தீவுகளில் உள்ள லா சோபிராரி எரிமலை, அதே ஆண்டில் இந்தோனேஷியாவின் ஷாங்கி தீவில் உள்ள அவு எரிமலை, 1813ல் ஜப்பானில் உள்ள சுவனோசெஜிமா எரிமலை, 1814ல் பிலிப்பைன்ஸில் உள்ள மேயன் எரிமலை ஆகியவையும் சீற்றத்துடன் வெடித்து நெருப்புக் குழம்பை கக்கின. 

ஏற்கனவே இந்த எரிமலைகள் வளிமண்டலத்தில் புகை மண்டலத்தை ஏற்படுத்திய நிலையில், தம்போவா வெடித்ததில் உலகின் தட்பவெப்ப சுழற்சியே நிலைகுலைந்து போனது. எரிமலை புகையில் இருக்கும் கந்தக அமில துளிகள் (நீர்த்துளியைவிட நுண்ணியவை) சூரிய ஒளியை தடுத்தன. 

சூரிய வெப்பம் குறைந்ததால் பூமியில் குளிர் அதிகரித்தது. காற்று மண்டலத்தின் மேல்பகுதியில் உருவான சல்பர் கூட்டுப்பொருட்களான ஏரோசால் போன்றவை 4 ஆண்டுகள் வரை நிலைத்திருந்து தனது பயங்கர விளைவை பூமியில் காட்டின. சூரிய ஒளியின்றி பயிர்கள் கருகின. உணவின்றி உயிரினங்கள் மடிந்தன. பஞ்சம், பட்டினி போல கொள்ளை நோய்களும் வேகமாக பரவின. 

தட்பவெப்பத்தில் ஏற்பட்ட கோளாறு வடகிழக்கு அமெரிக்கா, கனடா, வடக்கு ஐரோப்பா, இத்தாலி, சீனா, ஜப்பான் என உலகின் பல பகுதிகளையும் பாதித்தது. பகல், இரவு என இரு வேளையும் சராசரியாக 20 & 25 டிகிரி செல்சியஸ் வெப்பமே இருந்தது. 

பல இடங்களில் கோடையிலும் பனி கொட்டிய அதிசயம் நடந்தது. வளிமண்டலத்தில் இருந்த எரிமலை புகை மேகத்தில் கரைந்து இத்தாலியில் ரத்தச் சிகப்பு நிறத்தில் உறைபனி பொழிந்தது. 

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கோடை காலமே வரவில்லை. வெயிலே அடிக்காமல் காலம்மாறி பெய்த மழை இந்தியாவின் கங்கை கரை பகுதிகளில் காலரா போன்ற கொள்ளை நோய்களை ஏற்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களை பறித்தது. 

அதற்குப் பிறகு, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில எரிமலைகள் சீறினாலும் 19ம் நூற்றாண்டு போல பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
 ========================================================================================
ன்று,
செப்டம்பர்-22.
  • ஆட்டோமொபைல் இல்லா தினம்
  • மாலி விடுதலை தினம்(1960)
  • இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது(1965)
  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது(1893)

=========================================================================================
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி  கடைசியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் தனது  60 ஆண்டு காலை இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். 
1957ம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு படம் மூலம் பாடகியானவர் எஸ். ஜானகி. 
 இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள
 ஜானகிக்கு தற்போது78  வயதாகிறது.
ஆனால் அவரது குரல் இன்னும் துள்ளும் இளமையாகவே  உள்ளது. 
அவரது தாலாட்டுப் பாடல்களை கேட்டால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு கூட தூக்கம் வரும். அப்படிப்பட்ட தேன் குரல் அவருடையது.
சுமார் 60 ஆண்டுகளாக பாடி வரும் அவர் 10 கல்பனகல் என்ற மலையாளப் படத்திற்காக ஒரு தாலாட்டுப் பாடலை பாடியுள்ளார்.
"நிறைவு மலையாள தாலாட்டுப் பாடல் தான் நான் பாடிய கடைசி பாட்டு. 
இதன் பிறகு நான் படங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ பாட மாட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. பல மொழிகளில் பாடிவிட்டேன். இனி பாடுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன்" என்று ஜானகி அறிவித்துள்ளார். 
அது ஏன் கடைசியாக மலையாள பாடல் என்று கேட்டதற்கு, நானாக தேர்வு செய்யவில்லை. அதுவாக நடந்துள்ளது. இசை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த வேளையில் என் மனதுக்கு நெருக்கமான தாலாட்டு பாடலே என்னை தேடி வந்துள்ளது என்கிறார் ஜானகி.
திருநாள் ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் படத்தில் வந்த தந்தையும் யாரோ என்ற பாடல் தான் ஜானகி கடைசியாக பாடிய தமிழில் பாடிய  பாடல் . ஜானகி எஸ்.பி.பி. ஜோடிக் குரல் பிடிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. 
உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து பாடிய பாடல்கள் "சுந்தரி நீயும்,சுந்தரன் நானும்"மற்றும் "இஞ்சி இடுப்பழகி "பாடலை  மறக்க முடியுமா.?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?