உடற்பயிற்சிக்கான அறிவுரைகள்!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இப்போது எல்லோரும் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, மெது ஓட்டம், வேக ஓட்டம், பளுதூக்குதல் உள்பட பல விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவை அனைத்தையும் பலர் மிக மிதமாகவும் ஒரு சிலர் சற்று சிரமத்துடனும் மிகச் சிலர் மிகக் கடினமாகவும் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. 

உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் கைட்லைன்ஸ் உங்களுக்காக..

1.     40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 30 நிமிடங்கள் அவர்களுக்கான உடற்பயிற்சிகளை, மிதமான வேகத்தில், வாரம் 4 முதல் 5 நாட்கள் செய்தாலே போதுமானது.


2.    25 வயதுக்கு குறைந்தவர்கள், 25 முதல் 40 வயது வரையிலான வயதுடையோர் 60 நிமிடங்கள் தினமும்  அவர்களின் வயதுக்குப் பொருத்தமாக உடற்பயிற்சிகளை செய்யலாம்.

3.    முதியவர்களுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, தசைகளை நீட்டிச்சுருக்குதல் மற்றும் சிறியதாக பளு தூக்குவது சாலச்சிறந்தவை.

4.     விளையாட்டு வீரர்கள் பல மணி நேரம் விளையாடுகிறார்கள். மேலும் பலதரப்பட்ட ஓட்டங்கள், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், பளு தூக்குதல் எனச் செய்து, அத்துடன் அவர்களது உடலுக்கும் விளையாட்டுக்கும் தேவையான உணவு வகைகளை உண்பதால் உடலின் வலிமை மேலும் அதிகரிக்கிறது.


    சராசரி மனிதர்கள் தங்களின் வேலைப்பளுவை மனதில் வைத்து தினசரி உடற்பயிற்சிகளை அமைத்துக் கொள்ளலாம். 

மெதுவான, மிதமான நடைப்பயிற்சி, வேகமான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, செல்ல நாய்க்குட்டியோடு ஒரு பயிற்சி நடை, வீட்டு முற்றத்தில் குடும்பத்தினரோடு ஒரு சிறிய கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து என பல பயிற்சிகளை செய்யலாம். 

5.    ஏரோபிக்ஸ், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், பளு தூக்குதல் என மேலே கூறியவற்றை தினம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை - உங்கள் தினசரி வேலைப் பளுவை மனதில் கொண்டு செய்து, உடற்பயிற்சிக்கும் வேலைப்பளுவுக்கும் ஏற்றவாறு, சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.


                                                                                            தினகரனில்  - ஸ்டாலின் நாகராஜன்

=======================================================================================
உ.பி.முதல்வர் ஒரு மதவாத குற்றவாளி


பாஜக சார்பாக மக்களவை எம்.பி.யாக தற்போதுள்ள யோகி ஆதித்யநாத்தை, உத்தரபிரதேச முதலமைச்சராக பாஜக தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. 
அவரை பற்றிய சில விபரங்கள்.அவர் நாட்டுக்கு,மக்களுக்கு ஆற்றிய சேவைகள் பற்றி:-

1972ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் பான்சூர் பகுதியில் பிறந்த அவர், கோரக்நாத் மடத்தில் சேர்ந்து, தனது ஆன்மீக பணியை மேற்கொண்டு வந்தார். 
அறிவியலில் பட்டப்படிப்பு முடித்த அவர், 1998ம் ஆண்டு தனது 26வது வயதில் நாடாளுமன்ற தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் நின்று முதல்முறையாக வெற்றி பெற்றார். 
இதன்பின் தொடர்ச்சியாக1999, 2004, 2009, 2014,2017 என  5முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்ற அவர், பாஜகவின் முக்கிய தலையாக  உத்தரபிரதேசத்தில் தலையெடுக்க ஆரம்பித்தார்.

அரசியலில் முழுமையாக பணியாற்றினாலும், கோரக்நாத் கோயிலின் மடாதிபதியாக அவர் கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டார். 

நடிகர்கள் ஷாரூக்கான், அனுப்பம் கர் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்ததன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யோகி ஆதித்தயநாத், சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று  பல ஆண்டுகாலமாக  தொடர்சியாக ஆவேசமாக  பேசி வருகிறார்.

அவரின் சர்ச்சைக்குரிய பல பேச்சுகள் நாடு முழுவதும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியதுண்டு.

பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும், சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்களை கடலில் மூழ்கடித்து கொல்ல வேண்டும் உள்ளிட்ட இவரது பேச்சுகள் மதவெறியை,கலவரத்தை  தூண்டிவிடுபவை. மாட்டுக்கறி வைத்திருந்ததாக நடந்த பல கொலைகள்,தாக்குதல்களில் இவரின் வெறித்தனமான பேச்சுகளுக்கு பங்குண்டு.


பல குற்ற வழக்குகளில் முக்கிய  குற்றவாளியாக யோகி ஆதித்யநாத்தின் பெயர் சேர்க்கப்பட்டு காவல் நிலையங்களில் வழக்குகள் நடந்து கருகிறது.
அப்படி பட்ட ஒரு மதவாத குற்றவாளிதான் உ.பி,முதல்வர்.

========================================================================================
ன்று,
மார்ச்-19.
  • நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது(1861)
  • புளூட்டோ வின் ஒளிப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது(1915)
  • சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது(1932)
  • இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1972)
  • அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது(2002)
 நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய குடும்பத்தைச் சேர்ந்த புளூட்டோவை ஆய்வு செய்வதற்காக 2006-ம் ஆண்டில் நியூ ஹாரிசன் விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலம் 9 ஆண்டுகளுக்கு மேலாக விண் வெளியில் பயணம் செய்து கடந்த ஜூலை 14-ம் தேதி புளூட்டோவை மிக நெருக்கமாக கடந்து சென்றது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாசா விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. நியூ ஹாரிசன் சிக்னல் வடிவில் அனுப்பும் ஒரு தகவல், பூமியை வந்தடைய சுமார் நாலரை மணி நேரமாகிறது. அந்த வகையில் இதுவரை 5 சதவீத தகவல்கள் மட்டுமே நாசாவுக்கு கிடைத்துள்ளன. அனைத்து தகவல்களும் வந்துசேர சுமார் 16 மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.
நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 14-ம் தேதி முதல்முறையாக புளூட்டோவின் உண்மையான புகைப்படங்களை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 
அதன்மூலம் மேலும் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
புளூட்டோவில் நைட்ரஜன் பனிச்சிகரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. 
பூமியில் பனிச் சிகரங்கள் உருகி ஓடுவதுபோல புளூட்டோவிலும் நைட்ரஜன் பனிச்சிகரங்கள் உருகி ஓடியிருப்பது தெரியவந்துள்ளது.
புளூட்டோவின் வெப்பநிலை மைனஸ் 229 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த குளிர்நிலையில் பனி உருக வாய்ப்பில்லை. 
ஆனால் புளூட்டோவில் காணப்படும் நைட்ரஜன் பனிச்சிகரங்கள் மிகவும் மென்மைத்தன்மையுடன் இருப்பதால் உருகி ஓடும் தன்மை கொண்டுள்ளன என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பூமி, செவ்வாய்க் கிரகங்களில் இருப்பது போன்ற மேற்பகுதி புளூட்டோவின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. புளூட்டோவில் மலைச்சிகரங்களும் காணப்படுகின்றன. 
அவற்றுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முறை யாக ஏறிய எட்மண்ட் ஹிலாரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நியூ ஹாரிசன் எடுத்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் பூமியை வந்துசேரும்போது மேலும் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக் கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
=========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?