ஒரு வீடு,இரு மாவட்டம்

தமிழகத்தின் 34வது புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு உதயமான நிலையில், அந்த மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராமத்தின் ஒரு பகுதி தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும், கிராமத்தின் மற்றொரு பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருவதால் கிராம மக்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கருவேப்பிலை பாளையம் கிராமம் திருநாவலூர் ஒன்றியம் மற்றும் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் என இரு ஒன்றியத்தில் பிரிந்து இருக்கிறது. மேலும், இந்த இரண்டு ஒன்றியத்திற்கும் உட்பட்ட மடப்பட்டு, சிறுத்தனூர், சிருளாப்பட்டு, காந்தலவாடி நான்கு ஊராட்சிகளும் கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் பகுதிகளாக வருகின்றன. இந்த கிராமத்தில் சுமார் 6000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நான்கு ஊராட்சிகள், இரண்டு தாலுக்கா அலுவலகங்கள் மற்றும் இரண்டு காவல் நிலையங்கள் உள்ளதால் இந்த கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கும், அரசின் திட்டங்களை பெறுவதிலும் ஒரே இடத்தை நாடி செல்ல முடியாமல் சுற்றி அலைய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இதனால், இப்பகுதி மக்கள், தங்கள் கிராமத்தை ஒரே ஊராட்சியில் கொண்டுவர வேண்டுமென பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து நான்கு ஊராட்சிகளில் பிரிந்து தனித் தனியே இருக்கும் கருவேப்பிலை பாளையம் கிராமம் தற்போது ஒரு பகுதி கிராமம் விழுப்புரம் மாவட்டத்திலும், மற்றொரு பகுதி கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருவதால் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அப்பகுதி கிராமவாசிகள். இரு மாவட்டமாக பிரிந்திருக்கும் இந்த கிராமத்தின் சில தெருக்களில் உள்ள வீடுகள் சிலவற்றில் முன்பாதி விழுப்புரத்திலும், பின்பாதி வீடுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருகின்றன.மேலும், இந்த கிராமத்தில் தந்தை மகன் ஒன்றாக வசிக்கும் வீடு ஒன்றில் மகன் இருக்கும் முன் வாசல் விழுப்புரம் மாவட்டத்திலும், தந்தை இருக்கும் பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த வீட்டில் வசிக்கும் மகன் ரஞ்சித்குமார், "இரண்டு மாவட்டமாக பிரித்ததால் எனது வீட்டின் முன் வாசல் விழுப்புரம் மாவட்டத்திலும், எனது தந்தை வசிக்கும் பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருக்கிறது.






ஒரே வீடு இரண்டு மாவட்டமாக பிரிந்த கதை - வீட்டின் முன்வாசல் விழுப்புரம், பின்வாசல் கள்ளக்குறிச்சிமேலும், இந்த கிராமத்தில் தந்தை மகன் ஒன்றாக வசிக்கும் வீடு ஒன்றில் மகன் இருக்கும் முன் வாசல் விழுப்புரம் மாவட்டத்திலும், தந்தை இருக்கும் பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த வீட்டில் வசிக்கும் மகன் ரஞ்சித்குமார், "இரண்டு மாவட்டமாக பிரித்ததால் எனது வீட்டின் முன் வாசல் விழுப்புரம் மாவட்டத்திலும், எனது தந்தை வசிக்கும் பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருக்கிறது.
சொந்த வீட்டிலேயே எங்களை பிரிந்துவிட்டனர். அவசர தேவைகளுக்கு மருத்துவமனைகளுக்கோ, அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போது எந்த மாவட்டம் என்று குறிப்பிடுவதில் சிக்கல் நீடிக்கிறது ஒன்றுமே புரியவில்லை. மேலும், அரசு அலுவலகங்களுக்கு சொந்த தேவைக்கு செல்லும் போது கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு அதிகாரிகள் இது விழுப்புரம் மாவட்டத்தில் வருகிறது என்கிறார்கள். விழுப்புரம் மாவட்ட அரசு அதிகாரிகளிடம் சென்று கேட்கும்போது இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிறது என்கிறார்கள். இதனால் எங்கு சொல்வதென்றே தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது," என்கிறார்

கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் வசிக்கும் அசோக் குமார் இதுகுறித்து, "இங்கே அருகே உள்ள விழுப்புரம் செல்வதற்கு 16 கி.மீ.,தான் ஆகிறது. ஆனால், கள்ளக்குறிச்சி செல்வதற்கு 100 கி.மீ., வரை செல்ல வேண்டியதிருக்கிறது. இங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் விவசாயத்தை தொழிலாக கொண்டு இருக்கின்றனர். அவர்களின் தேவைகளுக்கு வெளிய பயணம் செல்ல நேரிடும் போது அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம்தான் அவர்களின் அன்றாடம் சென்று வருவதற்கு சுலபமாக இருக்கிறது.
அசோக் குமார்
Image captionஅசோக் குமார்
மேலும், தினமும் 100, 200 ரூபாய்களுக்கு வருமானம் ஈட்டும் இவர்களுக்கு வெகு தொலைவு சென்று அங்கே தங்களின் தேவைகளுக்கு அலைவது என்பது அவர்களால் முடியாத ஒன்று. ஆகவே நான்கு ஊராட்சிகளில் பிரிந்து இருக்கும் இந்த கருவேப்பிலை பாளையம் கிராமத்தை ஒரே ஊராட்சியாக அறிவித்து இதை ஒரே மாவட்டமாக விழுப்புரத்தில் இணைக்க வேண்டும்," என்கிறார்.
அக்கிராமத்தில் வசிக்கும் அன்பரசன் கூறும்போது, "நான்கு ஊராட்சியில் இருக்கிற இந்த கிராமத்தை இப்போது இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டதால் மக்கள் அதிக குழப்பத்திற்கு ஆளாகிவிட்டனர். இதற்கு முன்பு நான்கு ஊராட்சிகளாக இருக்கும்போதே எங்களுக்கான அடிப்படை தேவைகள் சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டோம். அதற்காக எங்களை ஒரே வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி விழுப்புரம் மாவட்டம் ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், இப்போது இரு மாவட்டங்களாக பிரித்திருப்பதால் மேலும் கிராம மக்களின் மனதில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது," என்கிறார்.
ஒரே வீடு இரண்டு மாவட்டமாக பிரிந்த கதை - வீட்டின் முன்வாசல் விழுப்புரம், பின்வாசல் கள்ளக்குறிச்சி
கருவேப்பிலை பாளையம் கிராமம் இரண்டு மாவட்டங்களில் தனித் தனியே பிரிந்து இருப்பதனால் எவ்வாறு மக்களுக்கான தேவைகளை சரி செய்து வருகிறீர்கள் என்று அரசு வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டது பிபிசி தமிழ், "எங்கள் ஊராட்சி சார்ந்த கிராமப் பகுதியில் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். மேலும், தற்போது மாவட்டங்களை பிரித்ததில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து ஆராய்வதில் குழப்பான சூழலே நிலவுகிறது," என்றார்.
மேலும், "இந்த கிராமம் இரு மாவட்டங்களிலும் வருவது குறித்து மாவட்ட நிர்வாகம்தான் கூற முடியும்" என்றார்.
_---------------------++-----------------------------------------------------------
எதிர்பார்த்ததுதான்
கடந்த ஒன்றரை ஆண்டுகளில், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சி பாதையை விட்டு விலகி சென்று இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டின் ஜனவரி- மார்ச் காலாண்டில் இருந்த 8.1 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, பிறகு ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ச்சியாக குறையத் தொடங்கின.சமீபத்தில் வெளியிட்ட  2019ம் ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவீதமாக  மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த பொருளாதார வளர்ச்சியின் சரிவு, இந்தியாவில் உள்ள  கார்ப்பரேட் கம்பெனிகள் போட்டு வைத்த திட்டங்களை சீர்குலைத்துள்ளது. டிராக்டர் தயாரிப்பவர்கள் முதல் டூத் பேஸ்ட் துறைகளில் வரை உள்ள அத்துனை நிறுவனங்களும், கடந்த இரண்டு தசாப்தங்களாக 8 சதவீத வளர்ச்சி என்பதை மனதில் வைத்தே தங்கள் திட்டங்களை தீட்டிவந்தனர். வளர்ச்சி விகிதம்  தற்போது பாதியான பிறகு கார்பரேட் கம்பெனிககள் செய்த முதலீடு, எடுக்கப்பட்ட கடன், கட்டமைக்கப்பட்ட தொழில் திறன் எல்லாம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 2018ம் ஆண்டு (கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு  முன்பாக)  ஐ.எல் அண்ட் எஃப்எஸ் (IL&FS)  நிறுவனம் சரிந்ததிலிருந்து தான் இந்தியா பொருளாதாரத்தின் அசாத்திய சூழலுக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.  அதன்பின் தொடர்ச்சியான நிகழ்வுகளால் இந்தியாவின் கிரெடிட் மார்க்கெட் சுருங்க ஆரம்பித்தது. இந்தியாவின் பினான்சியல் செக்டார் தனது விலும்பை  நோக்கி நகர்ந்தது. சந்தையில் பணம் எளிதில் கிடைக்கவில்லை, கிடைத்தாலும் அதை பெறுவதற்கான அதிகப்படியான விலை, போன்ற இரண்டு பிரச்சனைகளை இந்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் நிவர்த்தி செய்ய முடியாமல் திகைத்தனர்.
ரெப்போ விகுதியை குறைக்க முனைப்போடு இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி, பொருளாதார வளர்ச்சி என்ற  கருத்தோடு தனது யோசனைகளை சாய்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், அரசியல் கட்டாயத்துடன் தன்னை இணைத்தும் கொண்டது. இந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக ரெப்போ விகிதத்தைக் குறைத்தாலும், ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் லெண்டிங் ரேட்டைக் குறைக்கவைக்கும் நடவடிகைகளில் ஆர்பிஐ செயலற்றவைகளாக இருக்கின்றது . இருந்தாலும், வரும் டிசம்பர் 5 ஐ ஆர்பிஐ மானிட்டரி குழு சந்திக்கும் போது மீண்டும் ரெப்போ விகிதத்தை மீண்டும் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
கடந்த ஒன்பது மாதங்களில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தில் 135 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளன. ஆனால், வங்கிகள் தங்கள் லெண்டிங் ரேட்டை அதற்கேற்றார் போல் குறைக்கவில்லை. இதனால், 29 அடிப்படை புள்ளிகள் மட்டும் தான் (ஐந்தில் ஒரு பங்கு) வாடிக்கையாளர்களுக்கு  பயனுள்ளதாக மாற்றப்பட்டிருக்கிறது.
அதிக தொகை கொடுத்து  கடன் வாங்க நிறுவனங்கள்  தயாராக இருக்கின்றனர். ஆனால், கடன் கிடைக்கும் சூழ்நிலை அவர்களுக்கு இல்லை. இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக, சில ஆண்டுகளாகவே பெரிய நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். மேலும்  2016ம் ஆண்டு பணமதிப்பீடு இழப்பு  செயல்பாட்டுக்கு பிறகு, தொழில் நிறுவனங்கள் தங்கள் கடனுக்காக வங்கி சாரா நிதி நிறுவனங்களைத் (என்.பி.எஃப்.சி) தேட ஆரம்பித்தனர். இந்த வங்கி சாரா நிதி நிறுவனம் தனிநபர்களுக்கும், மற்ற சிறு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதற்காக வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியது.   ஆனால் ஐ.எல் அண்ட் எஃப்.எஸ் நிறுவனம் சரிந்ததில் இருந்து ஒட்டுமொத்த என்.பி.எஃப்.சி-ன்  செயல்பாடும்  நொறுங்கியது. உதாரணமாக, 2017-18ம் ஆண்டில் என்.பி.எஃப்.சிக்கள்  வங்கிகளிடம் இருந்து பெற்ற பணத்தின் அளவு 30% என்ற  உச்சத்தில் இருந்து தற்போது ஒற்றை இலக்கங்களைக் குறைத்தது. இன்னும் சுருங்கச் சொன்னால் வங்கி சாரா நிதி நிறுவனம் சந்தைகளுக்கு பணம் கொடுப்பதையே நிறுத்திவிட்டனர்.
கார்ப்பரேட் இந்தியாவை இந்த பொருளாதார வீழ்ச்சி மூச்சுத் திணறடிக்கவில்லை, அரசாங்கத்தின் நிதிகளையும்  குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி, நேரடி வரி வசூல் வளர்ச்சி விகுதத்தை 2019-20ம் ஆண்டிற்கு விரிவுபடுத்தி கணக்கீடு செய்யப்பட்டால், மத்திய அரசு 2.7 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறையை பார்த்திருக்கிறது. மாநிலங்களைப் பொறுத்தவரை, வரி பற்றாக்குறை ஒட்டுமொத்தமாக ரூ .1.7 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று கணக்கீடு செய்யப்படுகிறது.  இதற்கிடையில், இந்த ஆண்டிற்கு திட்டமிட்ட நிதி பற்றாக்குறை விகிதம், கடந்த அக்டோபர் மாத  இறுதியிலே 100 சதவீதத்தை மீறியிருக்கிறது.
பொருளாதார நிபுணர் ஒருவர் கூறுகையில், “செலவு செய்வதை அதிகரிப்பதினால் மட்டுமே இந்திய பொருளாதரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர முடியும்,ஏனெனில் முக்கிய பணவீக்கம் இன்னும் 2 சதவிகிதம் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றது,” என்றார்.
தற்போது, வந்த இந்த  ஜூலை-செப்டம்பர் காலாண்டு ஜிடிபி 4.5% வளர்ச்சிக்கு கூட, அரசு செலவீனங்களை அதிகமாய் செய்தது மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.     மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.3 சதவீத நிதி பற்றாக்குறை இலக்கை அடைய  அரசாங்கம் நினைத்தால், அது செலவினங்களைக் குறைக்க வேண்டும், இது வளர்ச்சியை மேலும் பாதிக்க உதவும் என்று சிலர் வாதிடுகின்றனர்.  எனவே, பொருளாதார வளர்ச்சியை செலவீனங்ககள் மூலமாக வேகப்படுத்த நினைப்பது  எளிதான காரியமாக இருக்காது.
 -------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?