நாட்டில் அதிகரித்து வரும்

ஆரோக்கியமான எண்ணெய்களைத் தேர்ந்தெடுப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.

நாட்டில் அதிகரித்து வரும் உடல் பருமன் விகிதங்கள் ஒரு பெரிய சுகாதார சவாலாகும்

சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் அளவைக் குறைப்பதன் மூலம் உடல் பருமன் பிரச்சினையைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழி .

ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் மத்தியில் நிலைமை இன்னும் கவலைக்குரியதாகவும் இருப்பதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.  உடல் பருமன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.


 அதிக எடை பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதனால் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது அவசியம். உணவில் எண்ணெய் பயன்பாட்டை குறைந்தது 10% குறைப்பது எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு கணிசமாக பங்களிக்கும் 

 ஆரோக்கியமற்ற எண்ணெய்களை அதிகமாக உட்கொள்வது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.


அதிக எண்ணெய் உட்கொள்வது உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், அசாதாரண கொழுப்பின் அளவு, இதய நோய், பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று இருதயநோய் நிபுணர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரோக்கியமற்ற எண்ணெய் நுகர்வு நீண்டகால விளைவுகள் ஒட்டுமொத்த நல்வாழ்வை கணிசமாக பாதிக்கும், 

இது சிறந்த உணவு முறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. 2024 லான்செட் ஆய்வின்படி, இந்தியாவில் உடல் பருமன் விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.


பெண்களில் 1.2% இலிருந்து 9.8% ஆகவும், ஆண்களில் 0.5% இலிருந்து 5.4% ஆகவும் அதிகரித்துள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இன் தரவுகளும் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் உடல் பருமன் அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றன. இந்த புள்ளிவிவரங்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக் காட்டுகின்றது.


 எண்ணெயைக் குறைப்பது அவசியம் என்றாலும், சரியான வகை எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது சமமாக முக்கியம். அனைத்து சமையல் எண்ணெய்களும் நன்மையை கொடுப்பவை அல்ல.


ஆரோக்கியமான மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். அவகேடோ எண்ணெய், பாதாம் விதை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்ற எண்ணெய்கள் நல்ல விருப்பங்களாகக் கருதப்படுகின்றன.

 ஏனெனில் அவற்றில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் ஒலிக் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை எடை இழப்புக்கு உதவுகின்றன மற்றும் பிற சுகாதார நன்மைகளை வழங்குகின்றன.


 இருப்பினும், பாதகமான விளைவுகளைத் தடுக்க ஆரோக்கியமான எண்ணெய்கள் கூட மிதமாக உட்கொள்ளப்பட வேண்டும்.

சங்கிகளின் தேசியம்.

ராஜ் நாத்சிங்கின் மகன்* இங்கிலாந்தின் "லீட்ஸ்" பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

நிர்மலா சீதாராமன் மகள்* "வாங்மயிபரகலா" அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

வெளி விவகார *அமைச்சர் ஜெய்சங்கரின் மகன்* "துருவ்" ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் "மேதா"

டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறார்கள்.

அமைச்சர் ப்யுஸ்கோயல் மகள்* "ராசிகா" மகன் "துருவ் "ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.

அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள்* "அபூர்வா" பாஸ்ட்டன்  பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகள்* "ஆதித்யா "

அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்..

அமைச்சர் சுஜேந்திர சிங் செகாவத் மகள்* "சுபாஷினி" ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

அமைச்சர் ஜிஜேந்திரசிங்கின் மகள்* "அருனேதய் " ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்.

அமைச்சர் சஞ்சய் தோத்ரா மகன்* "நகுல் "கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள்* "திபோத்தமா " வார்விச் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

இந்த தேசபக்தர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பது தான் "மேக் இன் இந்தியாவா?*

அங்கெல்லாம் ஆங்கிலம் மட்டும்தான். மும்மொழி,இந்தி நஹி.
வஞ்சிக்கும் பா.ஜ.க.?

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தற்போதுள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும்போது, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கான எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், மார்ச் 5ஆம் நாளன்று தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகள் குறைப்பதை அண்டை மாநிலங்களும் எதிர்க்கின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையாது, மாறாக எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவித்தார். 

ஆனால், அவருடைய கருத்து முழுமையானதாகவோ, தெளிவானதாகவோ இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு மிகவும் நெருக்கடி தரும் சவாலாக இருந்தது மக்கள்தொகை. அதனைக் கட்டுப்படுத்துவதற்கானத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் அதனை சரியாகக் கடைப்பிடித்ததால் மக்கள்தொகைக் கட்டுப்படுத்தப்பட்டது.

 வடமாநிலங்கள் இதில் போதிய அக்கறை செலுத்தவில்லை. அங்கே மக்கள்தொகை உயர்ந்தது. தற்போது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்றால் மத்திய அரசின் திட்டத்தை சரியாகப் பின்பற்றிய மாநிலங்களுக்குத் தண்டனையாக தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். இது ஜனநாயகமல்ல, அநீதி என்பதை தென்மாநிலங்கள் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது 39 தொகுதிகள் உள்ளன. மறுவரையறை செய்யப்பட்டால் 31 தொகுதிகளாகக் குறைந்துவிடும். தென்மாநிலங்கள் அனைத்தும் தனது எண்ணிக்கையை இழக்கும். வடமாநிலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் அங்கே செல்வாக்காக உள்ள பா.ஜ.க., தென்மாநிலங்களின் வெற்றி தேவையின்றி, ஆட்சியை அமைத்துவிட முடியும்.

 இந்த சதியைத்தான் தென்மாநிலங்கள் அம்பலப்படுத்துகின்றன. உள்துறை அமித்ஷா அதை மறுத்து, தமிழ்நாட்டில் தொகுதிகள் குறையாது என்றும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா எம்.பி., “தமிழ்நாட்டின் எண்ணிக்கை மாற்றப்படாமல் பாதுகாக்கின்ற அதே நேரத்தில், வடமாநில தொகுதிகளின் எண்ணிக்கையையும் உயர்த்தக் கூடாது” என்ற உத்தரவாதத்தைக் கோரினார்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “இந்தியா பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அனைத்து மாநிலங்களுக்குமான மக்களவைப் பிரதிநிதித்துவம் ஒரே வகையிலான விகிதத்தில் அமைய வேண்டும். எந்த ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளின் விகிதாச்சாரமும் மாற்றப்படக் கூடாது.

 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்வது சரியானது அல்ல; அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது” என்ற தெரிவித்துள்ளார்.

 தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் விகிதாச்சாரம் 7.20% ஆகும். மறுவரையறை செய்யும்போது கிடைக்கும் எண்ணிக்கை இந்த விகிதாச்சாராத்திற்கு குறையக்கூடாது என்பதுதான் அவரின் அழுத்தமான கருத்தாக உள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதுள்ள அளவில் தொடர்ந்தால் தமிழ்நாட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆக தொடர வேண்டும். மூன்றில் ஒரு பங்கு என மொத்த எண்ணிக்கை 721 ஆக உயர்த்தப்பட்டால் தமிழ்நாட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

 புதிய நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளின் அடிப்படையில் 888 ஆக உயர்த்தப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதே விகிதத்தில் 64 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

இந்த அடிப்படையிலான எண்ணிக்கைகள் ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என்பதை பிரதமரும் அமித்ஷாவும் உத்தரவாதமாக அளிக்காமல், மேலோட்டமாக வாக்குறுதி அளிப்பது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் மட்டுமின்றி, தென்மாநில அரசியல் தலைவர்கள் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வினர் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையும் இதில் பறிபோகும் சூழல் உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படும் அபாயத்தை உணர்ந்துதான், முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டியுள்ளது தமிழ்நாடு அரசு. 

இதில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க பங்கேற்கபதாகத் தெரிவித்துள்ளது. தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளுடன், பா.ம.க. போன்ற கூட்டணிக்கு அப்பாற்பட்ட கட்சிகளும் பங்கேற்பது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும். உரிய தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும்.

பா.ஜ.க. இதனை எப்படி அணுகப் போகிறது என்பதைப் பொறுத்து தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் அதன் போக்கை தெரிந்துகொள்ளலாம்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?