முருங்கை கீரை தரும் பயன்கள் உங்களுக்கு தெரியுமா?

நோயின் தாக்கத்தை தாங்கி கொள்ளும் வகையில் கீரை, பழங்கள் போன்றவற்றை அதிகளவில்  உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை ஆகும். 
அந்த வகையில் முருங்கை கீரையை சாப்பிடலாம். 
தண்ணீர் இருந்தால் போதும் முருங்கை மரம்  செயற்கை  உரம் ஏதும்   இன்றி வீடுகளில்  வளர்ந்து நமக்கு பயன் தரக்கூடியதாகும். 
இதன் பயன்கள் அளவிட முடியாத வகையில்  உள்ளது.
முருங்கை கீரை, காய், பூ என அனைத்தும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடியவை. 
அதிக சத்து நிறைந்தவை. 
திருமண விருந்தை மணமாக்க  கூடியவை முருங்கைக்காய். சாம்பாரில் முருங்கைக்காய் போட்டாலே தனி மணமும்,சுவையும்  உண்டாகும்.

 முருங்கை கீரை, பூ, காய், விதை, வேர், பட்டை என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை ஆகும். இவற்றில்  கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைய உள்ளன.

100 கிராம் முருங்கை இலை,
. ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது . 
காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது 
பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது 
பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது 
வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது 
கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது 

இனி மருத்துவத்தில் முருங்கை தரும் பலன்களை பார்ப்போம்.

இருமல்-தொண்டைக் கம்மல்


இருமல், தொண்டைக் கம்மல் ஏற்பட்டால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 
இவற்றை போக்க முருங்கை இலையை சாறு பிழிந்து எடுத்து அதில்  சிறிது சுண்ணாம்பு, தேன் ஆகியவற்றை நன்றாக குழைத்து தொண்டைக் குழியின் மேல் தடவினால் இருமல், தொண்டைக்கம்மல் நீங்கும்.

கெட்டநீர் வெளியேற 


முருங்கை இலையின் காம்புகளை எடுத்து அதனை நன்றாக இடித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு கால்  லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த கஷாயத்தை காலை மாலை என 2 வேளையும் 3 அவுன்ஸ் குடித்து வந்தால்  உடலில் சேர்ந்துள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் நலமாகும்.

வாயு தொல்லை நீங்க 


உடம்பில் வாயுத்தொல்லை அதிகமாகிவிட்டால் தொந்தரவுகள் உண்டாகும். முருங்கை பிஞ்சை கறியாக சமைத்து உட்கொண்டால் வாயு தொல்லை  அகலும். 
வாயுவினால் பிடிப்பு ஏற்பட்டிருந்தாலும் அகன்று விடும். மனிதர்களுக்கு மிக எளிதாகும் நோய்களில் தலைவலி முதலிடத்தில் உள்ளது.  வெயில், டென்சன் போன்றவற்றால் தலைவலி ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாத்திரைகள் சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற கவலையும்  உள்ளது. 
இந்த தலைவலி தீர, முருங்கைப்பட்டையை இடித்து சாறு எடுத்து சாறின் அளவுக்கு பசும்பால் சேர்த்து நெற்றியில் பற்று போட வேண்டும்.  
இவ்வாறு செய்தால் தலை வலி விரைவில் குணமாகும்.
வயிற்று வலி தீர 

முருங்கை காம்பு, கருவேப்பிலை காம்பு ஆகிய இரண்டையும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிக்கட்டி குடிநீரில் விட்டு குடித்து வரவும். 
இவ்வாறு  தொடர்ந்து செய் தால்  வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி விடும்.வயிற்று வலியும் விடைபெற்றுவிடும்.

குழந்தைகளுக்கு டானிக் 


வளரும் குழந்தைகளுக்கு முருங்கை டானிக்காக இருந்து சிறந்த பலனை கொடுக்கும். முருங்கை கீரையை சுத்தமாக கழுவி சாறு பிழிந்து  எடுத்துக்கொள்ள வேண்டும். 
அதை பாலுடன் கலந்து பிறந்த குழந்தைகளுக்கும்-வளரும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்து  வந்தால் இதிலுள்ள இரும்பு, சுண்ணாம்பு சத்து குழந்தையை திடமாக வளர உதவும்.

நாய்கடிக்கு 


நாய்க்கடியின் விஷத்தை முறிப்பதில் முருங்கை இலை சிறந்ததாக கருதப்படுகிறது. 
முருங்கை இலையோடு பூண்டு பல் இரண்டும், ஒரு துண்டு  மஞ்சள்(விரல் மஞ்சள்), சிறிதளவு மிளகு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து சிறிதளவு உட்கொள்ள வேண்டும். 
இதனையே நாய்  கடித்த இடத்தில் பூச வேண்டும். 
இவ்வாறு செய்தால் நாய் கடியால் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். 
புண்ணும் விரைவில் ஆறிவிடும்.

சிறுநீரகக்  கோளாறு 


ஒரு கரண்டி முருங்கை இலையின் சாறை எடுத்து அதில் கேரட் (அல்லது) வெள்ளரி சாற்றை ஒரு டம்ளர் சேர்த்து கலந்து குடித்து வரவும். 
இவ்வாறு  தினமும் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் துவாரத்தில் எரிச்சல் ஆகிய தொந்தரவுகள் நீங்கி விடும்.

ஜன்னி ஏற்பட்டால் 
முருங்கை பட்டையை எடுத்து அதன் எடை அளவுக்கு கடுகு எடுத்துக் கொள்ளவும். 
இவை இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 
 இதனை ஜன்னி கண்டவரின் இரு உள்ளங்காலிலும் கனமான பற்று போட்டு துணியினால் கட்டி விட வேண்டும். 
சிறிது நேரத்தில் ஜன்னி நின்று  விடும். பின்னர் கட்டை அவிழ்த்து விடவும்.

கரப்பான், சொறி, சிரங்கு 

 
முருங்கை பட்டையின் சாற்றையும் குப்பைமேனி சாற்றையும் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து காய்ச்சவும். 
நன்கு காய்ச்சியதும் கீழே இறக்கி  ஆறவிட்டு பாட்டிலில் பத்திரபடுத்திக் கொள்ளவும். 
இந்த எண்ணெய் கரப்பான், சொறி, சிரங்கு போன்றவை கடித்த இடத்தில் பூசி வந்தால் விரைவில்  குணமாகி விடும்.

முகப்பரு - கரும்புள்ளிகள் மறைய 

முகத்ததில் முகப்பரு கரும்புள்ளிகள் வந்துவிட்டால் முகத்தின் அழகை கெடுத்து விடும். ஆனால் இதற்காக கவலைப்பட வேண்டாம். 
கீழ்க்காணும்  முறையைக் கையாளுங்கள். 
புத்துணர்வோடு இருக்கலாம். 
முருங்கை கீரையின் சாற்றை எடுத்து அதனுடன் சம அளவு எலுமிச்சம் பழத்தின் சாற்றை  விட்டு நன்கு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு- கரும்புள்ளிகள் அகன்று முகம் பொலிவு பெறும்.

முருங்கை கீரையின் சாறை இரண்டொரு துளி கண்களில் விட்டால் கண் நோய்கள் குணமாகும். முருங்கை கீரையை எள் சேர்த்து சமைத்து சாப்பிட்டு  வந்தால் நீரிழப்பு நோய் கட்டுப்படும். 
முருங்கை கீரையை நன்கு அரைத்து வீக்கம் உள்ள இடங்களில் பூசி வர வீக்கம் குறையும். 
உரம் இன்றி  இயற்கையாக வளர்ந்து பலன் தரக்கூடிய முருங்கை மரத்தின் பயன்களை பயன்படுத்திக்கொள்வோம்!
==================================================================================================
இன்று,
ஜனவரி-03.

  • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது(1958)
  • ஆப்பிள் கணினி நிறுவனம் அமைக்கப்பட்டது(1977)
  • ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான கட்டபொம்மன் பிறந்த தினம்(1740)
  • முதல் எலக்ட்ரானிக் கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பெனி அறிமுகப்படுத்தியது(1957)
  • அலாஸ்கா, அமெரிக்காவின் 49வது மாநிலமானது(1959)
ஏ .பி.பரதன் 

வங்க தேசத்தை பூர்வீகமாகக் கொண்ட மிகப் பெரிய செல்வாக்குப் பெற்ற குடும்பத்தில் பிறந்த ஏ .பி.பரதன் அவர்கள், 1957ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றுக்குரியவர்.
பொதுவுடைமைச் சித்தாந்தங்களில் கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டால், இளம் வயதிலேயே தம்மை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர்!

சுதந்திரப் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம், மக்கள் பிரச்சினைக்கான போராட்டம் என சாதாரண சாமான்ய மக்களுக்கான பாட்டாளித் தோழர்களுக்கான போராட்டங்களில் தம்மை ஒரு போராளியாக முன்னிறுத்திப் போராடியவர், தமது தன்னலம் கருதாத உழைப்பினால் கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் ஒரு மூத்த தலைவராக உயர்ந்தவர் பரதன் அவர்கள்!

கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
புதுடில்லியில் காலமான அவருக்கு வயது 92.
இந்தியாவின் இடதுசாரி அரசியல் மற்றும் தொழிற்சங்கத் துறையின் முக்கியமான ஒரு ஆளுமையாக அவர் திகழ்ந்தார்.
பின்னர் அரசியலில் படிப்படியாக உயர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகவும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டு செயலாற்றினார்.
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் தலைநகர் டில்லிக்கு தனது அரசியல் தளத்தை மாற்றிக்கொண்ட பரதன், கட்சியின் துணைப் பொதுச்செயலராகி பின்னர் இந்தர்ஜித் குப்தாவிற்கு பிறகு பொதுச்செயலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
================================================================================================















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?