ஆசை அதிகரிக்க

இந்தியர்கள் ஆண்டாண்டாக பயன்படுத்தும்  மசாலா வகை நறுமண மற்றும் உணவுப்பொருட்கள் பலவும் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் , ஆசையை அதிகரிக்க உதவுகின்றன. 

இதுதான் இந்தியர்களின் உலகளாவிய மக்கள் தொகை பெருக்கத்துக்கு காரணம்.

நாம் உணவின் சுவைக்காக,மணத்துக்காக சேர்க்கும் மசாலா நறுமணப் பொருட்கள் நம்மை அறியாமலேயே நம் பாலியல் உணர்வுகளை,ஆசையை தூண்டிவருகின்றன.

இவை போன்ற மளிகை பொருட்களே நமது இனஉறவு க்கு போதுமானது.

மேலை நாட்டவர் போல் ஆசையை அதிகரிக்கும்,உணர்வை நீண்ட நேரம் தூக்கிப்பிடிக்கும் குழம்பிகள்,மருந்து வில்லைகள் தேவை இல்லை.

மேலும் அவைகளை உபயோகிக்க ஆரம்பித்தால் பின் அவை இல்லாமல் நாம் செயல்பட முடிய நிலைதான் உண்டாகும்.
சரி.நம் பயன் படுத்தும் மசாலா நறுமணப் பொருட்கள் சிலவற்றின் பாலியல் தூண்டல் விபரங்களைப்பற்றி அறிவோமா?

இதோ இதுபற்றி சுருக்கமுறை விளக்கம்:-.

வெந்தயம்: இது டெஸ்டோஸ்டீரான் சுரப்பை அதிகரித்து, ஆண்களின்  பாலுறவு வேட்கையை பன்மடங்கு உயர்த்துகிறது.

ஏலக்காய்: உடலில் அதிக சக்தியை ஏற்படுத்தி, உங்களுக்கு நீடித்த புத்துணர்வை கொடுக்கும் என்பதால், செக்ஸ் விளையாட்டில் நீண்ட நேரம் ஈடுபட முடியும்.
லவங்கம்
லவங்கம்: உடலில் சூட்டை கிளப்பி, உங்களை படுக்கையில் துள்ளியெழச் செய்யும் பட்டையை கிளப்பும் பட்டை  இதுவாகும்.

பெருஞ்சீரகம்: ஈஸ்ட்ரோஜன் நிறைந்த இதனை பெண்கள், ஒரு கைப்பிடி உட்கொண்டால் போதும். இரவு முழுவதும்  ஆசை அடங்காது.

ஜின்செங்இது சீன நட்டு மூலிகை .இது சேர்ந்த பொருட்கள் மருந்துக்கள் சந்தையில் உலகமெங்கும் கிடைக்கிறது.இது ஒரு வகை வேர்க்கிழங்கு. ஆண்களின் எழுச்சி குறைபாட்டை போக்கி, நீண்ட விரைப்புத்தன்மை அளிக்கிறது.

நம்நாட்டின் அமுக்கரா கிழங்கு எனப்படும் அஸ்வகந்தா ஜின்செங் கிழங்குக்கு நிகரானது.
அமுக்கரா கிழங்கு
குங்குமப்பூ: புதியதாக திருமணமான தம்பதியினர், அதிகம் பயன்படுத்த வேண்டிய நறுமணப் பொருள். பாலில் குங்குமப்பூ கலந்து குடித்தால், கிடைக்கும் பாலுறவு  பலன்கள் ஏராளம்.

ஜாதிக்காய்: வயாகராவைவிட பன்மடங்கு  பாலுறவுவேட்கை தரும் உணவுப்பொருள் இதுவாகும்..

கிராம்பு: இதன் வாசனையை முகர்ந்தாலே போதும். உடலில் புதிய கிளர்ச்சி ஏற்படும். அந்தளவுக்கு நறுமணப் பயன் கொண்டதாகும்.

பூண்டு: பச்சை மிளகாய் உடன் இதனைச் சேர்த்து அப்படியே சாப்பிடலாம் அல்லது வறுத்தும் கூட சாப்பிடலாம். நீண்ட நேரம் பாலுறவில்  ஈடுபட இது பயன்படுகிறது.

இஞ்சி: வேகமாக , அதேசமயம் திருப்திகரமான உறவு  மேற்கொள்ள இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வது மிக நல்லது.

========================================================================================
ன்று,
ஜனவரி-17.
  • மக்கள் திலகம்  எம்.ஜி.ஆர்., பிறந்த தினம்(1917)
  • ஐ.நா., சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது(1946)
  • வளைகுடாப் போர் துவங்கியது(1991)
  • ==========================================================================================






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?