எலியால் உண்டாகும் வலி.

எலி(மவுஸை)யைப் பிடிப்பது எப்படி ?
கணினியைச் சார்ந்த இன்றைய வாழ்க்கைச் சூழலின் காரணமாக முதுகுவலி, கண் பாதிப்புமற்றும் மணிக்கட்டு வலி உள்ளிட்ட உடல் பாதிப்புகள்ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

முதலாவதாக பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகுவலி, இதற்குக் காரணம் சரியான உயரத்தில் நேரான இருக்கை அமைப்பு இல்லாததே.
இருக்கை அமைப்பு சரியாக இருந்தாலும் சாய்ந்தபடியோ சரிந்துஉட்கார்ந்தோ பணிபுரிவதும் முதுகுவலியை ஏற்படுத்தும்.கணினி திரைக்கும் (மானிட்டர்) கண்களுக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.

அதிகமான வெளிச்சம் அல்லது குறைவான ஒளியுடன் திரை இருந்தாலும் நாளடைவில் அது கண் பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிறிய அளவில் உள்ள எழுத்துக்கள் படங்களை பார்க்க உற்றுப் பார்ப்பதும் கண்களை பாதிக்கும்.

 சிறிய எழுத்துக்களை படிக்கும்போதும், படங்களை பார்க்கும்போதும் எழுத்துரு அளவை அதிகமாக்கிக் கொண்டோ அல்லது பக்க அளவை ஜூம் செய்தோ பார்க்கவேண்டும்.

மவுஸ் பயன்படுத்துவதால் சிலருக்கு மணிக்கட்டில்வலி ஏற்படும்.

இதற்கு காரணம் கணினி இருக்கைஅமைப்பு உயரமாக இருந்தாலோ எட்டிப்பிடித்து பணிபுரியும் படியாக மௌஸின் இடம் அமைந்திருந்தாலோ மணிக்கட்டில் வலி ஏற்படும்.

மவுஸைப் பயன்படுத்தாமல் கணினியில் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலையில்தான் பலரும் இருக்கின்றனர்.

நாம் அறியாமலேயே நம் கைகளில்ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளுக்குக் காரணம் பொருத்தமில்லாத மவுஸ்கள்தான் என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள்.
இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர்.

இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன் படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். மவுஸை எப்படிப் பிடித்துப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு சில வழிகாட்டு அறிவுரைகளை மருத்துவர் நிபுணர்கள் வழங்கியுள்ளனர்.

அவை.
1. மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கலாம்.

2. மவுஸ் இயக்கும்போது உங்கள் மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல் பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக்கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.


3. மவுஸ் பிடித்திருக்கும் முறையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்தான்,மவுஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டு, கரங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளவும். மவுஸ் பிடிக்கும் கரத்தை கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள். மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கீ போர்டுக்கு 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழே சரிவாக இருக்கும்படியாகவும் அமைக்கலாம்.

5. நம்முடைய மணிக்கட்டு அமைப்பைச் சற்று உற்று நோக்கினால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் இருக்கும். இப்பகுதியில் எந்த அழுத்தமும் இருக்கக் கூடாது என்பதற்குத்தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்துவதற்காக மணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்துவது தவறாகும்.

6. மணிக்கட்டின் உட்புற மேற்பகுதியில்தான் முக்கியமான ரத்த நாளங்கள் செல்கின்றன. அதனால்தான் அந்த இடத்தில் நாடித் துடிப்பினை பார்க்கிறோம். அப்படிப்பட்ட இடத்தில் அழுத்தம் ஏற்படும் வகையில் மவுஸ் அல்லது கீபோர்டைப் பயன்படுத்துவது தவறாகும். இதனால் ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். சில சமயங்களில் காயம்கூட ஏற்படலாம்.

7. ஒரு தளத்தின் மீது மவுஸ் சாதனத்தை நகர்த்திப் பயன்படுத்துவது நமது வழக்கமாகும். மவுஸ் நகர்த்தல் முழுமையும் முழங்கை இயக்கத்தை மையமாக வைத்தே இயக்க வேண்டும்.மணிக்கட்டுப் பகுதியை மையமாகக் கொண்டு இயக்குவது கை வலியை உருவாக்கும்.

8. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதி மெத்தென்று இருக்கவேண்டும் என்று எண்ணி மிருதுவான சிறிய துணி அல்லது கைக்குட்டையை மடித்து மெத்தை போல் வைத்துப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்வதும் தவறாகும்.

9. இரு புறமும் இணையாகச் சீரான அமைப்புள்ள மவுஸ்தான் சரியானது. இவ்வடிவத்திலேயே பெரும்பாலான நிறுவனங்கள் மவுசைத் தயாரிக்கின்றன. மவுசின் பட்டன்கள் மிருதுவாக இருக்கவேண்டும். அழுத்தம் அதிகமாக கொடுத்து கிளிக் செய்யும் வகையில் உள்ள மவுஸைப் பயன்படுத்தாதீர்கள்.

10. விதவிதமான வடிவங்களில், அழகான தோற்றத்தில் கிடைக்கும் மவுஸ்கள் கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, அதன் வடிவமைப்பு மற்றும் அளவை ஆராய்ந்துதான் வாங்க வேண்டும்.
 

கற்றல் குறைபாட்டு பிரச்சனை உள்ளவர் யார்?

குழந்தைகள் எதிர்கொள்ளும் கற்றல் குறைபாட்டு பிரச்சனையை(டிஸ்லெக்சியா) நகைப்புக்கு உரியதாக மாற்றி ராகுலை கிண்டலடித்தவர்  மோடி.
 கற்றல் குறைபாட்டு பிரச்சனை குழந்தைகள் சாதாரணமானவர்கள்தான் .சில வார்த்தைகளை முன்பின்னாக,தவறுதலாக எழுதி,சொல்லி விடுவார்கள்.
இதற்காக கடந்த 2 நாட்களாக உலகமெங்கும் அவர் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், கொச்சி என்று கூறுவதற்கு பதிலாக கராச்சி என்று, பாகிஸ்தான் நகரத்தின் பெயரை கூறி, மோடி மாட்டிக் கொண்டுள்ளார்.


இதைக்கேட்டு கட்சியினர் சிரிக்கவும், “என் சிந்தனை எல்லாம் தற்போது அண்டை நாடு குறித்த விஷயத்தில் தான் உள்ளது.
அதனால்தான் கராச்சிஎன கூறிவிட்டேன்” என்று, சமாளித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கற்றல் குறைபாடுகள் ஏற்கெனவே உலகப் பிரசித்தமானவை.

குப்த வம்சம் என்றாலே சந்திரகுப்தர்தான் நினைவுக்கு வருவார் என்று மோடி ஒருமுறை கூறினார்.
சந்திரகுப்தர், குப்த வம்சமில்லை.
அவர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் திருத்தினார்கள்.மற்றொரு முறை, மாவீரன் அலெக்சாண்டரின் படைகளை, பீகாரிகள் தட்சசீலத்தில் புறமுதுகிட்டு ஓடச் செய்தார்கள் என்று மோடி கூறியபோது, வரலாற்று ஆசிரியர்கள் அதிர்ந்தே போனார்கள்.
எனினும் பொறுமையாக, அலெக்சாண்டர் கங்கைக் கரையைக் கடந்து வரவே இல்லை. அவர் பீகாரிகளால் தோற்கடிக்கப்படவும் இல்லை. அத்துடன் சண்டை நடந்ததாக கூறப்படும் தக்சசீலமும் பீகாரில் இல்லை.
அது பாகிஸ்தான்உள்ளது என்று மீண்டும் விளக்கினார் கள்.

 தமிழகத்தில் பேசும்போது, வேதாரண்யத்தில் வ.உ.சிதம்பரனார் உப்புக்காய்ச்சியதாக வ.உ.சி.க்கே தெரியாத தகவலை கூறினார்.
ஆனால், விவரம் அறிந்தவர்கள் அவர் வ.உ.சி. அல்லராஜாஜி என்றார்கள்.
 மிஸஸ் (ஆசள)மைத்ரிபால சிறிசேனா என்று வாசிப்பதற்குப் பதில், எம்.ஆர்.எஸ். மைத்ரிபாலா என்று வாசித்தபோதும், விவரம் அறிந்தவர்கள் அதை சகித்துக் கொண்டார்கள். 
அந்த வகையில் பார்த்தால், மோடிதற்போது கொச்சியை, கராச்சி என் றது பெரிய விஷயமே இல்லை.

 கற்றல் குறைபாட்டு பிரச்சனை(டிஸ்லெக்சியா)உள்ளவர் ராகுல் அல்ல மோடிதான் என்று தற்போது கிண்டலடிக்கப்படுகிறார் மோடி.
====================================================

ன்று,
மார்ச்-06.

 உமர் கயாம், ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்(1079)

செர்பியன் ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டது(1882)

கானா விடுதலை தினம்(1957)

ஈரானும் ஈராக்கும் எல்லை தொடர்பான உடன்பாட்டிற்கு வந்தன(1975)
====================================================
இது உண்மையா?
Prakash JP
உரையாடலைத் தொடங்குபவர்3 மார்ச், பிற்பகல் 9:43
அபினந்தன் தன்னிலை விளக்கம்.
அன்று காலை பாகிஸ்தான் F16 விமானங்கள் இந்திய எல்லைக்குள் வருவதாகத் தெரிந்தது.. அவற்றை விரட்டி அடிக்க, நாங்கள் மிக், சுகாயில் கிளம்பினோம்.. ஒரு f16 ஐ நான் சுட்டு வீழ்த்த துரத்திக்கொண்டே பாகிஸ்தான் ஆகிக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்றுவிட்டேன்....

நான் அதை வீழ்த்தியவுடன், மற்ற விமானங்கள் என்னை சுற்றி வளைத்து வீழ்த்தின..
 நான் பாகிஸ்தான் மண்ணில் விழுந்தேன்.. காலையிலேயே என் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, தொடர்பு இல்லாமல் போனது இந்தியாவுக்குத் தெரியும்..
 ஆனால் வெளியில் எந்தத் தகவலையும் வெளியிட வில்லை.. எனக்கு என்ன ஆனது என்பதை உறுதுதிப் படுத்தாமல் செய்தி வெளியிடாமல் இருந்திருக்கலாம்..
ஆனால் நன் பகலுக்கு முன்னாலேயே இரண்டு விமானிகளை பிடித்து வைத்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது.. என்னை விசாரிக்கும் வீடியோவும் என் பெயருடன் வெளியானது..
ஆனாலும் இந்திய அரசாங்கம் ஒரு செய்தியும் வெளியிடவில்லை..


அடுத்து என்னைப் பிடித்தபோது பாகிஸ்தானியர்கள் அடித்த வீடியோவும் வெளியானது..
வேறு வழி இல்லாமல் 3.30 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் " ஒரு விமானியை இழந்துள்ளோம், அவர் பாகிஸ்தான் பிடியில் இருக்கிறாரா என்று ஆராய்ந்து வருகிறோம்" என்பதை மட்டும் தெரிவித்தது..

பிரதமர் மோடியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாவோ மக்களை சந்திக்கவோ ஒரு அறிக்கை விடவோ கூட இல்லை.. அட்லீஸ்ட், அவரை பத்திரமாக மீட்போம் என்று கூட எவரும் சொல்லவில்லை.
. இந்திய ஊடகங்கள் அதைவிடக் கேவலம், என்னைப்பற்றி பேசாமல் " பொய் சொன்ன பாகிஸ்தான், இரண்டு விமானியை பிடித்ததாக சொன்னார்கள்.. ஒருவரைத் தான் பிடித்திருக்கிறார்கள் " என்று அந்த நிலையிலும் வடை சுட்டுக்கொண்டு இருந்தார்கள்.

மீடியா கிறுக்கன்கள் ஒரு பக்கம் என்றால், மாலன், மாரிதாஸ் போன்ற லூசுக் கம்மனாட்டிகள் வேற ஒரு பக்கம் என்னை பலி கொடுத்தால் என்ன தவறு என்று கேட்கத் தொடங்கினர்..

இந்திய அரசாங்கத்தின் சார்பில், என்னை விடுவிக்க சொல்லி ஒரு அறிக்கை கூட வெளியிட வில்லை.. அவர்களுக்கு நான் ஒரு கருப்புப் புள்ளி..
நான் இறந்திருந்தாலோ, அல்லது பாகிஸ்தான் என்னை ரகசியமாக சிறை பிடித்திருந்தாலோ, என்னைப்பற்றி எந்த செய்தியும் வெளியே வராமல் செய்திருப்பார்கள்.. தேர்தல் நேரத்தில் நான் பாகிஸ்தானிடம் மாட்டியது அவர்களுக்கு நெருடலைக் கொடுத்திருக்கும்.. நல்லவேளை நான் பிடிபட்ட வீடியோ வெளியே வந்தது..

மறுநாளும் சவுதி, அமெரிக்கா எல்லாம் தலையிட்டு என்னை விடுவிக்க கேட்டுக்கொண்ட போதும், இந்தியா சார்பில் ஒரு வேண்டுகோள் இல்லை..

மோடி அந்த நேரத்தில் தனது கட்சி பூத் ஏஜெண்டுகளை சந்தித்தது தேர்தல் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.. நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்ளை சந்திக்க தைரியம் இல்லாமல், படைத்தளபதிகளை பேசவிட்டார்..
ஒரு வழியாக பாகிஸ்தான், நல்லெண்ண அடிப்படையில் என்னை விடுவிப்பதாக சொன்னபோதும், இந்தியாவின் சார்பில் ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை..

 மாறாக மீடியா நாய்கள் " பாகிஸ்தான் பயந்துவிட்டது" என்று செய்தி வெளியிட்டன..
 அடுத்த நாள் கூட மோடி என்னைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேச வில்லை.. சரி அவரை விடுங்கள், ஏதோ எலெக்ஷன் வேளையில் பிசியாக இருக்கிறார்.. ஆனால் இந்த நிர்மலா அப்பொழுதும் கூட வாயை திறக்கவில்லை..
"அபினந்தன் தமிழன் என்பது பெருமை" என்று ஓட்டுக்காக இங்கு பேசும்போது கூட, என்னை மீட்பேன் என்றோ எனக்கு துணை நிற்பேன் என்றோ மோடி கூறவில்லை..
 என்னை விடுதலை செய்தபோது கூட, மோடி மௌனமாகவே இருந்தார்... நிர்மலா என் பெயரைக் கூட உச்சரிக்காமல் வெறும் ஜெய்ஹிந்த் மட்டும் சொல்கிறார்..
யோசித்துப்பாருங்கள்.. நாட்டுக்காக நான் உயிரையே வீடத் தீர்மானித்தேன்..

உங்கள் வீட்டில் ஒருவர் இப்படி மாட்டி இருக்கும்போது, மொத்த அரசாங்கமும் ஒரு வார்த்தை கூட அவர்களைப் பற்றி பேசாமல் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்.
அவர்களுக்கு நானோ நீங்களோ முக்கியம் இல்லை.. தேர்தலும் ஓட்டும், அதிகாரமுமே முக்கியம்.. அதற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்க தயங்க மாட்டார்கள்..

ஜெய்ஹிந்த்

வாட்சாபில் வந்தது...
நீங்கள், Anand Raj, Gokul Dha மற்றும் 30 பேர்
1 கருத்து16 பகிர்வுகள்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?