திரைமறைவுப் பேச்சுவார்த்தை

ரபேல் ஊழல்!--பிரதமர் அலுவலகத்தின் திரைமறைவு பேரமே...!


ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான பேரத்தில், பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பிரெஞ்சு வர்த்தகர்கள் செலுத்த மறுத்து விட்டவங்கி உத்தரவாதங்களை இந்தியத் தரப்பே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைஏற்பட்டது. இதற்கு ஆகும் செலவுகள் 574 மில்லியன் யூரோ அளவில் இருந்ததாக, 2016 ஜூலை 21 அன்று பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஏழு உறுப்பினர்கள் கொண்ட ‘இந்தியபேச்சுவார்த்தைக் குழு’ (INT - Indian Negotiating Team சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இதைக் கொண்டு பார்க்கும் போது, 2016 செப்டம்பர் 23 அன்று பாஜக கூட்டணிஅரசாங்கம் போட்ட ஒப்பந்தத்தில், போர் விமானம் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய36 ரபேல் விமானங்களை வாங்குவதற்காக 7.87 பில்லியன் யூரோ என்ற அளவில்குறிப்பிடப்பட்ட தொகையானது, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ரபேல் விமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை விட 246.1 மில்லியன் யூரோ அதிகமானதாக இருக்கிறது.
விரிவான ஆவணம்
“இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்வதுகுறித்த இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் அறிக்கை” என்ற அந்த விரிவான ஆவணம் இந்து நாளேட்டிற்கு கிடைத்தது. 7878.98 மில்லியன் யூரோ (கூடுதல் ஆயுததளவாடங்களை கட்டாயமாகத் தருவதற்கான 10.55 மில்லியன் யூரோ இல்லாமல்) என்பதாக இறுதி விலை இருந்தது.
அறிக்கையின் பாரா 23இல் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிஉத்தரவாதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், இந்த விலையானது, பல்நோக்கு நடுத்தர போர் விமானத்திற்கான விலையான 8205.87 மில்லியன் யூரோவைவிட 327.89 மில்லியன் யூரோ குறைவாகவே இருக்கிறது என்று அந்த அறிக்கையின்பாரா 69இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை எவ்வாறு மதிப்பிடப்பட்டது?
வங்கி உத்தரவாதத்திற்கான தொகையாக 574 மில்லியன் யூரோ என்ற தொகைஎவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் பேச்சுவார்த்தைக் குழுவின்அறிக்கையில் உள்ள 21, 22, 23 பாராக்களில் விளக்கப்பட்டுள்ளன.
2016 மார்ச் 02அன்று பாரத ஸ்டேட் வங்கியால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி இந்தியவங்கிகளால் பெறப்படும் உறுதிப்படுத்தல் கட்டணம் உட்பட, 2ரூ வருடாந்திர வங்கிகமிஷன் ஆகியவற்றிலிருந்து வங்கி உத்தரவாதங்களுக்கான தொகையானது, ஒப்பந்தத்தொகை மதிப்பில் 7.28ரூ என்பதாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த வங்கி உத்தரவாதமானது விமானத்தின் விலை மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் சேர்த்து கணக்கிடப்பட்ட ஒருங்கிணைந்த விலையானது, இறுதியாகப் பேசிமுடிக்கப்பட்ட விலையை விட குறைவாக இருப்பதாக அட்டவணை 1 காட்டுகிறது.
பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்த நிபுணர்கள் தங்களுடைய அதிருப்தியைப் பதிவு செய்தகுறிப்புகளில் இந்த அட்டவணை இருந்தது.

அட்டவணை 1
பொருள் வங்கி உத்தரவாதம் இல்லாமல் வங்கி உத்தரவாதம் இல்லாமல் ஒருங்கிணைந்த விலை பிரான்ஸ் தரப்பில் இருந்து இறுதியாக (மில்லியன் யூரோவில்) சொல்லப்பட்ட விலை (கோடி யூரோவில்)
விமானம் 7341.58* 7169.00
ஆயுதங்கள் 718.29 710.45#
மொத்தம் 8059.87 7879.45
வங்கி உத்தரவாதம்
மூலம் ஏற்படும் நிதி தாக்கம் 574.00
மொத்தம் 7485.87 7879.45
*உதிரிப் பாகங்களுக்காக பிரான்ஸ் இந்திய விமானப் படைக்குத் தேவையான தரப்பில் இருந்து தரப்பட்ட சலுகை பயிற்சி மற்றும் இயக்குவதற்கு கூடுதலாகத் காரணமாக மாற்றியமைக்கப்பட்ட தேவைப்படுகின்ற எம்பிடிஏவால் விலை பரிந்துரைக்கப்படுகின்ற ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்கள் தவிர்த்து
ஆதாரம்: இந்திய பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்த மூன்று வல்லுநர்கள் தங்களுடைய அதிருப்தியைப் பதிவு செய்து அளித்த கருத்துக்களில் பக்கம் 4இல் இந்த அட்டவணை உள்ளது.

இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்தவர்கள், வங்கி உத்தரவாதத்தைத் தருமாறு பிரான்ஸ் தரப்பில் இருந்து பேசியவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதை பேச்சுவார்த்தைக் குழுவின் இறுதி அறிக்கை தெரிவிக்கிறது. “இந்த ஒப்பந்தத்தின் மூலம், மிகப் பெருமளவிலான பணம் இந்த கொள்முதலுக்காக கொடுக்கப்படுவதாக இருப்பதால், விமானங்களும் மற்ற சேவைகளும் வழங்கப்படுவதற்கு முன்னதாக, முன்கூட்டியே பணம் செலுத்தப்படுவதாக இருப்பதால், பிரான்ஸ் தரப்பில் இருந்து அரசாங்கத்தின் சட்டப்பூர்வ பாதுகாப்பு அல்லது போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட வேண்டும்” என்று 2015 டிசம்பரில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அறிவுரை வழங்கியிருந்தது.
பேச்சுவார்த்தைகளின் போது வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை பிரான்ஸ் தரப்பில் இருந்துபேசியவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து, நிராகரித்து விட்டனர்.
 வங்கி உத்தரவாதங்களைப் பெறுவதற்கு, இந்திய தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியவர்கள்சிறப்பாகச் செயல்பட்டனர். நடுத்தர போர் விமானங்களைத் தருவதற்காக, டஸ்ஸால்ட்ஏவியேஷன் நிறுவனத்தால் தரப்பட்டிருந்த  முன்மொழிவிலும் அவ்வாறானநிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது.
 
ஒரு பயனுமில்லை
“சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் கொண்டிருந்த கவலைகள், வங்கி உத்தரவாதங்கள் போன்ற பிரச்சனைகளில் இருதரப்பிற்கும் இருந்த கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டுமென்றால், வங்கி உத்தரவாதங்கள், ஒப்பந்தத்தை உறுதிசெய்வதற்கான கட்டணம் ஆகியவற்றை இந்தியா ஏற்றுக் கொள்வதே சிறந்த வழி” என்றுஒரு கட்டத்தில் இந்திய பேச்சுவார்த்தைக் குழு தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொள்ளக்கூட முன்வந்தது.
 இது எந்தப் பயனுமற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. புதிய ஒப்பந்தத்தின் பேரில் ஏற்படுகின்ற செலவினங்களையும், நடுத்தர போர்விமானங்களுக்கென ஏற்கனவே இருந்த முன்மொழிவுகளையும் ஒப்பிட்ட வேளையில், அந்தக் குழுவின் இறுதி அறிக்கை வங்கி உத்தரவாதங்களை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் வணிகரீதியிலான தாக்கம் குறித்து எதுவும் கூறாமலே அமைதி காத்தது.
ஒருங்கிணைக்கப்பட்ட விலை குறித்த ஒப்பீட்டில் அந்த முக்கியமான காரணி விடுபட்டுப்போகுமாறு செய்யப்பட்ட அதே தவறு, 2019 பிப்ரவரி 13 அன்று நாடாளுமன்றத்தில் ரபேல்ஒப்பந்தம் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையிலும் இருந்தது.
திரைமறைவுப் பேச்சுவார்த்தை
வங்கி உத்தரவாதங்களின் வணிகரீதியான தாக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதில் இந்த இரண்டு அறிக்கைகளும் காட்டிய மோசமான மௌனத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான செயல் அல்ல;
பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே, 2015ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைக் கொண்டு திரைமறைவுப் பேச்சுவார்த்தை ஒன்றுநடத்தப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சகம், பேச்சுவார்த்தைக் குழு ஆகியவற்றிற்குத் தெரியாமலேயே பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த “திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளுக்கு” எதிராக 2015 நவம்பர் 24 அன்று பாதுகாப்பு அமைச்சகம் எழுதிய குறிப்பை இப்போது கவனத்திற்கு கொண்டு வரலாம்:“இத்தகைய திரைமறைவுப் பேச்சுவார்த்தையானது, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு ஆகியவற்றின் பேரம் பேசுகின்ற திறனைப் பலவீனப்படுத்தியது” என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதைய பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார், தன்கைப்பட, “பாதுகாப்புத் துறை அமைச்சர் தயவு செய்து இதைக் கவனிக்க வேண்டும்.பிரதமர் அலுவலகத்தால் நடத்தப்படும் இது போன்ற பேச்சுவார்த்தைகள் தவிர்க்கப்படவேண்டும், ஏனெனில் இது நாம் நடத்துகின்ற பேச்சுவார்த்தையை குறைத்து மதிப்பிடச்செய்வதாக இருக்கிறது” என்று எழுதி, அந்த எதிர்ப்பிற்கான தன்னுடைய ஒப்புதலைப்பதிவு செய்திருந்தார்.
ஆனால், 2016ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்த இந்த திரைமறைவு பேச்சுவார்த்தை, இரு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரையிலும் தொடர்ந்ததன் விளைவாக, இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் நிலைமை பலவீனமானது.

அது பிரான்ஸ் தரப்பில் இருந்து பேசியவர்களுக்கே பயனளிப்பதாக இருந்தது என்று யார் மீதும் குற்றம் சுமத்தாமல் அந்த இறுதி அறிக்கை கூறுகிறது. பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் நடத்திய திரைமறைவுப் பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டவற்றையோ அல்லது இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்திற்கான முன்வரைவில் குறிப்பிடப்பட்டவற்றையோ அல்லது 2017 ஜனவரி 25 அன்றுகையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையையோதான், இந்த ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முடிவாக பிரான்ஸ் தரப்பில் இருந்து பேசியவர்கள் நம்பி யிருந்திருக்க வேண்டும்.
உதாரணமாக, 2016 மார்ச் 31 அன்று, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசனையை மேற்கோள் காட்டி, வங்கி உத்தரவாதங்களைக் கொண்டுவருவதற்கான அழுத்தத்தைஇந்தியபேச்சுவார்த்தைக் குழுவில் இருந்தவர்கள் கொடுத்தனர். அப்போது “வங்கி உத்தரவாதங்கள் குறித்து ஏற்கனவே பலமுறை விளக்கப்பட்டு விட்டது.
அது இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்கு இணக்கமானதாக இருக்கவில்லை. வங்கி உத்தரவாதங்கள் எங்களால் ஏற்கத்தக்கவை அல்ல”என்று பிரான்ஸ் தரப்பில் இருந்து பேசியவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

புதிய ரபேல் ஒப்பந்தம் சொல்வது என்ன?
விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ​​வங்கி உத்தரவாதங்களை ஏற்றுக் கொள்வது குறித்து ஏன் அமைதி காக்கப்பட்டது என்பதற்கு 2015 ஏப்ரல் 10 அன்று வெளியிடப்பட்ட இந்திய-பிரெஞ்சு கூட்டு அறிக்கை மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. “பல்நோக்கு விமானங்களுக்கான அவசியத் தேவை இந்திய விமானப்படைக்கு இருப்பதைக் கருத்தில் கொண்டு, பறப்பதற்குத் தயாரான நிலையில் இருக்கின்ற 36 ரபேல் போர் விமானங்களை உடனடியாகப் பெற்றுக் கொள்ள இந்திய அரசாங்கம் விரும்புவதாக பிரான்ஸ் அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் தெரிவித்தது.
 தனிப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்ட வழிமுறையின் ஒரு பகுதியாக டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் கூறியதற்கு மேலானதாக போர் விமானங்களைத் தருகின்ற வகையில், இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தை நிறைவு செய்ய இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
 இந்திய விமானப் படையால்சோதிக்கப்பட்டு, ஒப்புக் கொள்ளப்படுகின்ற வகையில், நீண்ட காலத்திற்கான பராமரிப்புப் பொறுப்பையும் பிரான்ஸ் எடுத்துக் கொண்டு இந்திய விமானப் படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கேற்ப இருக்கின்ற காலக்கெடுவிற்குள், போர் விமானம், அதனுடன் இணைந்த அமைப்புகள் மற்றும் ஆயுதங்களை வழங்கிட வேண்டும்” என்று இருந்த அந்த கூட்டு அறிக்கை புதிய ரபேல் ஒப்பந்தம் எவ்வாறுஉருவாகப் போகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அந்த விலை ஒப்பீடுகளில் வங்கி உத்தரவாதங்களையும் சேர்க்கும் போது,பல்நோக்கு நடுத்தர போர் விமானங்களை வாங்குவதற்கான பழைய முன்மொழிவில் இருந்த விலையைவிட சிறந்ததாக புதிய ஒப்பந்தம் இருக்கிறது என்கிற முடிவு, ஏற்கனவே சிறந்த விதிமுறைகளை நிர்ணயிப்பதற்கான வழிகாட்டியாக இருக்கிறதுஎன்று இந்திய பேச்சுவார்த்தைக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய-பிரெஞ்சுகூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதியோடு நேரடியாக முரண்படுகிறது.
இருப்பினும் 2019 பிப்ரவரி 13 அன்று இந்து பத்திரிகையில் நான் கூறியிருந்ததைப் போல், குழுவின் இறுதி அறிக்கையில், இந்த ஒப்பந்தம் பற்றி தங்களுக்கிருக்கும் அதிருப்தி குறித்து இந்திய பேச்சுவர்த்தைக் குழுவில் இருந்த மூன்று வல்லுநர்கள் எழுதிய எட்டு பக்க குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
“பிரான்ஸ் அரசாங்கத்தால் சொல்லப்படுகின்ற இறுதி விலை, பல்நோக்கு நடுத்தர போர் விமானங்களை வாங்குவதற்கான பழைய முன்மொழிவில் இருந்த விலையை விட ‘சிறந்ததாக’ இருப்பதாகக் கருத முடியாது என்பதால், கூட்டு அறிக்கைக்கான தேவை ஏற்படவில்லை” என்றமுடிவிற்கு வருவதற்கு அந்த வல்லுநர்களிடம் எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை
எது குறைவான விலை?
பல்நோக்கு நடுத்தர போர் விமானங்களை வாங்குவதற்கான பழைய முன்மொழிவில் இருந்த விலையைவிட, நல்ல விலையில் (அதாவது குறைவான விலையில்) போர்விமானங்களைப் பெறுவதற்கான ரபேல் ஒப்பந்தத்தை தாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம் என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தின் முன்பாக மத்திய அரசு வைத்தது. இதேபோன்ற கூற்று ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கையின் இரண்டாம் தொகுதியிலும் இருக்கிறது.
பிரான்ஸிடமிருந்து போர் விமானங்களை வாங்குவதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் போட்டிருந்த ஒப்பந்தத்தை விட 2.86ரூ குறைவான தொகையில் புதிய ஒப்பந்தத்தை மோடி அரசாங்கம்போட்டிருப்பதாக, வங்கி உத்தரவாதங்களுக்கான தொகையைக் கணக்கிட்டு, அதனை அந்த அட்டவணையில் சேர்க்காமல் தனியாக வைத்து விட்டு, சிஏஜி தன்னுடைய தணிக்கை அறிக்கையில் தெரிவித்திருந்தது.
 இறுதி அறிக்கையில் இருந்த கணக்கீடுகள்
இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் இறுதி அறிக்கையின்படி, பாஜக கூட்டணி அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை மூலம் ஏற்பட்ட புதிய உடன்படிக்கையால், பிரான்ஸ்பக்கம் இருந்து தரப்படாத வங்கி உத்தரவாதங்களுக்கான தொகை 574 மில்லியன்யூரோ என்ற அளவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
 இந்த வங்கி உத்தரவாதங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பாஜக கூட்டணி அரசாங்கத்தின் ஒப்பந்தம் 327.89 மில்லியன் யூரோ குறைவாக இருந்ததாக அந்த அறிக்கையின் பாரா 69இல் குறிப்பிடப்பட்டுள்ளது.“வங்கி உத்தரவாதத்தின் தாக்கம்” என்று தலைப்பிடப்பட்ட ஒரு பிரிவில், ‘முன்பணம் வழங்குவது’, ‘செயல்திறன் பத்திரம்’, ‘உத்தரவாதம் மற்றும் எம்டிபிஎஃப் தொடர்பிலான பத்திரம்’ ஆகியவற்றிற்கான வங்கி உத்தரவாதங்களின் வணிகரீதியிலான தாக்கத்தை இந்திய பேச்சுவார்த்தைக் குழு கணக்கிட்டிருந்தது.
 2016 மார்ச் 02 அன்று பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, இந்தியவங்கிகளால் பெறப்படுகின்ற உறுதிப்படுத்தல் கட்டணம் உட்பட, 2ரூ வருடாந்திரவங்கி கமிஷன் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்பட்டு, வங்கி உத்தரவாதங்களுக்கான கட்டணம் என்பது ஒப்பந்தத்தொகை மதிப்பில் 7.28ரூ என்பதாக இருப்பதாகக்கணக்கிடப்பட்டது. அதன் மூலம் விற்பனைத் தொகையான 789 கோடி யூரோவிற்கு,வங்கி உத்தரவாதக் கட்டணம் 57.4 கோடி யூரோ என்பதாகவும் கணக்கிடப்பட்டது.

பேச்சுவார்த்தைகளின் போது, ​​“இந்திய வங்கிகளால் உறுதிப்படுத்தப்படாத 0.5ரூ வருடாந்திர கமிஷன் எனும் விகிதத்தில், வங்கி உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்வதற்கான தொகை 14.3 கோடி யூரோ என்பதாக தங்களுடைய கணக்கீடுகளை பிரான்சின் தரப்பில் இருந்து பேசியவர்கள் தெரிவித்தனர்” என்று இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் அறிக்கை கூறுகிறது.
அதன் பிறகு“வங்கி உத்தரவாதக் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதால், வங்கி உத்தர வாதங்களுக்கான கட்டணங்களை பிரான்ஸ் பக்கம் இருந்தும், உறுதிப்படுத்துதல் கட்டணத்தை இந்திய பக்கத்தில் இருந்தும் வழங்க லாம்” என்ற ஆலோசனை இந்திய பேச்சுவார்த்தைக் குழுவால் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆலோசனையும் பிரான்ஸ் பக்கம் இருந்து பேசியவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. பிரான்ஸ் பக்கம் இருந்து வங்கி உத்தரவாதக் கட்டணத்தையும், இந்திய பக்கம்இருந்து உறுதிப்படுத்துதல் கட்டணத்தையும் வழங்கலாம் என்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகமும் பரிந்துரைத்தது.
விலை நிர்ணயத்தில் வங்கி உத்தரவாதங்களுக்கு இருக்கின்ற முக்கியத்துவம்
சட்டப்பூர்வ பாதுகாப்பையோ அல்லது உத்தரவாதங்களையோ வழங்குவதற்கு பிரான்ஸ் தரப்பு மறுத்து விட்ட நிலையில், பிரான்ஸ் வர்த்தகர்களிடமிருந்து வங்கிஉத்தரவாதங்களைக் கோர வேண்டியதில்லை என்றும், அதற்குப் பதிலாக பிரான்ஸ் பிரதமரிடம் இருந்து சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படாத “ஆறுதல் கடிதம்”ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் குழு தாராளம்காட்டியது. இதற்கு முற்றிலும் மாறாக, பல்நோக்கு நடுத்தர போர்விமானங்களுக்காக ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்திடம் ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிக்கப்பட்ட போது, டஸ்ஸால்ட் ஏவியேஷன் உட்பட அனைத்து நிறுவனங்களும் சர்வதேச பிரசித்தி பெற்ற முதல் வகுப்பு வங்கிகளிடமிருந்து வங்கி உத்தரவாதங்களைப் பெற்றே சமர்ப்பித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
2019 பிப்ரவரி 13 அன்று இந்து நாளேட்டில் வெளியானவாறு, சட்டப்பூர்வ பாதுகாப்புஅல்லது வங்கி உத்தரவாதம் இல்லாத நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தைத் தொடர்புபடுத்தி பணத்தைத் தருவதே மிகவும் பாதுகாப்பான செயலாக இருக்கும் என்று பாதுகாப்பு சேவைகளுக்கான நிதி ஆலோசகரான சுதான்சு மொகந்தி பரிந்துரைத்திருந்தார்.

இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படுகின்ற ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் செயல்படுவதாக இருக்கும் வகையில், பிரான்ஸ் அரசாங்கத்தின் பொறுப்பிலிருக்கும் எஸ்க்ரோ கணக்கில் இந்திய அரசாங்கம் பணத்தைச் செலுத்தலாம் என்ற மொகந்தியின் பரிந்துரையும் புறக்கணிக்கப்பட்டது. டஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் எம்பிடிஏ பிரான்ஸ் எனும் இரு தனியார் நிறுவனங்களுக்கும் நேரடியாக பிரான்ஸ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கைஸ் டி டெபோ கன்சைனேஷன்ஸ் (CDC) என்ற வங்கியில்உள்ள அந்த நிறுவனங்களின் நேரடிக் கணக்கில் இந்தியா பணத்தைச் செலுத்தும்என்று இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள 46ஆவது பாராவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஆயுத வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே 60 சதவிகிதம் பணத்தை இந்தியஅரசாங்கம் செலுத்த வேண்டும் என்பதால், வங்கி உத்தரவாதங்கள் பற்றிய கேள்விகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. 36 மாதங்களுக்குப் பிறகு அதாவது2019 செப்டம்பர் மாதத்தில், முதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிற்கு வந்துசேரும் என்றாலும், ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 18 மாதங்களுக்குள், அதாவது2018 மார்ச் மாதத்திற்குள்ளாக இந்தப் பணம் செலுத்தப்பட வேண்டும் என்றிருந்தது.
திரைமறைவுப் பேச்சு குறித்துசமாளிப்பு .
“திரைமறைவு பேச்சுவார்த்தைகளுக்கு” எழுந்த எதிர்ப்பு பற்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் 2015 நவம்பர் 24 அன்றைய குறிப்பு தொடர்பான எனது புலனாய்வுக் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, “விலை குறித்ததாக அந்த குறிப்பு இருக்கவில்லை.
அது அரசின் உத்தரவாதங்கள் மற்றும் பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றியதாகவே இருந்தது” என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மோகன் குமார் கூறியிருந்தார். மேலும் “அது திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் என்பதாக இல்லாமல், இணையான கண்ணோட்டங்கள் என்பதாகவேஇருந்தது. இத்தகைய விவாதங்களுக்கான அவசியமில்லை என்று நாங்கள் அவர்களிடம் சொன்னோம். அந்த குறிப்பிட்ட பொருளிலேயே நான் அந்த குறிப்பை எழுதினேன். அது குறித்து மிகவும் தீவிரமாகப் பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை.பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டபோதுதான் அவ்வாறு இருந்தது.
அதற்குப்​​பின்னர் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விட்டன. இறுதி பேச்சுவார்த்தைகளின் போது பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த விதத்திலும் தொடர்போ அல்லது குறுக்கீடுகளோ இருக்கவில்லை’’ என்றும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.
‘’இந்த ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என்று இந்தியா கருதிய உத்தரவாதங்கள் குறித்தே அந்த இணை கண்ணோட்டங்கள் இருந்தன. அந்த விவாதத்தைப் பற்றி வேறுவகையான எங்களுடைய கருத்துக்களை நாங்கள் தெரிவித்திருந்தோம். அத்துடன் அதுமுடிந்து விட்டது’’ என்று அவர் மேலும் விளக்கினார்.
ஆனால், அந்த இறுதி அறிக்கையிலிருந்த கருத்து வேறுபாடு கொண்ட மூன்றுவல்லுநர்கள் அளித்த அதிருப்தி குறிப்புகள், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டஆலோசனை மற்றும் சிஏஜி அறிக்கை ஆகியவை, மோகன் குமார் கூறுவதில் உண்மைஇல்லை என்பதையே நமக்கு காட்டுகின்றன.
 முதலாவதாக, பேச்சுவார்த்தைகளில் வங்கி உத்தரவாதங்கள் பற்றி தொடர்ந்து பலமுறை பேசப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்திய பேச்சுவார்த்தைகளின் பலத்தைக் குறைக்கும் வகையில் இருந்த “இணை பேச்சுவார்த்தைகளுக்கு” எதிராக அதிருப்தி இருந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இரண்டாவதாக, பல்நோக்கு நடுத்தர போர் விமானங்களுக்கான முன்மொழிவின் ஒருங்கிணைந்தபகுதியாக, 2007ஆம் ஆண்டு டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் வங்கி உத்தரவாதங்களுக்காக அளித்திருந்த ஒப்புதலை, இப்போது பிரான்ஸ் தரப்பில் இருந்தவர்கள் ஏற்க மறுத்து விட்டது என்பதே, புதிய ரபேல் ஒப்பந்தத்தில் போர் விமானங்களின் விலை கணிசமாக உயர்வதற்கு காரணமாக இருந்தது.

 “ரபேல் இல்லாததை இந்தியா இப்போது உணர்கிறது. நாடு முழுக்க ஒருமித்த குரலில், ரபேல் இருந்திருந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று சொல்கிறது” என்று தன்னுடைய சமீபத்திய உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
எதிர்க்கட்சியில் இருப்பவர்களோ அல்லது செய்தி ஊடகத்தில் இருப்பவர்களோ ரபேல் போர் விமானங்களின் தரம் குறித்தோ, தேவை குறித்தோ எந்தவொரு கேள்வியையும் இதுவரையிலும் எழுப்பியதில்லை.
முக்கியமான முடிவுகளை எடுப்பதில் இருந்த செயல்பாடுகள் குறித்த புலனாய்வுகள் அனைத்தும், ராணுவ கொள்முதலுக்கென்று நடைமுறையில் உள்ள இருக்கின்ற மிகச் சிறந்த நடைமுறைகளிலிருந்து அரசு விலகிச் சென்றிருக்கிறது என்பதையும், போர் விமானங்களின் விலை, ஒப்பந்தத்தில் இருக்கின்ற நிபந்தனைகள் போன்ற அனைத்தும் இங்கே கேள்விக்குரியவையாக இருக்கின்றன என்பதையுமே உறுதிப்படுத்துகின்றன.

                                                                                                                                     -என்.ராம்
தி இந்து (ஆங்கிலம்), 06.03.2019
தமிழில் : பேரா.தா.சந்திரகுரு

ஊடகங்கள் மீது வழக்கு போட்டால் பாஜக-வுக்கு பேரழிவுதான்
ரபேல் விமானக் கொள்முதல் முறை கேடு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. இவ்வழக்கில், வியாழனன்று ஆஜரான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால்,
 “ரபேல் ஆவணங்கள் திருடுபோய்விட்டதாகவும், பத்திரிகையாளர் என். ராம், கட்டுரையில் வெளியான ரபேல் ஆவணங்களை திருட்டு ஆவணங்களாக கருதி, அவர் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும்” என்றும் கூறினார்.
அதனை நீதிமன்றம் ஏற்கா வில்லை.
" ரபேல் விவகாரத்தில் ‘தி இந்து’ உட்பட எந்தவொரு ஊடகத்திற்கு எதிராகவும், அரசாங்க ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் சூழ்நிலையில், அது பாஜக-வுக்கு பேரழிவை ஏற்படுத்தும் "
என்று, பாஜகவை அதேக் கட்சியைச்  சேர்ந்த  சுப்பிரமணியசாமி எச்சரித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஜக ஆதரவு சேனல்களை பார்க்க மாட்டோம்!
பாஜக மற்றும் சங்-பரிவார் அமைப்புக் களுக்கு ஆதரவான தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்க மாட்டோம் என்று அங்கன்வாடி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மஜ்தூர் பிகுல் என்ற அங்கன்வாடி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், அண்மையில், தில்லியில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

 அப்போதுதான், ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி ஆகியவை பாஜக-வுக்கு ஆதரவாக பொய்ச்செய்திகளை ஒளிபரப்புவதாகவும், எனவே இந்த செய்தித் தொலைக்காட்சி சேனல்களை பார்க்கமாட்டோம் என்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

மேலும் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஷிவானி பேசுகையில், “போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், போலி வீடியோக்களை இந்த சேனல்கள் வெளியிட்டு வருகின்றன.

அவர்கள் நடத்தும் விவாதமும், உரக்க அவர்கள் கத்துவதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழல்களாக இந்த தொலைக்காட்சிகள் இருந்து வருகின்றன; எனவே, அவற்றை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

====================================================
ன்று,
மார்ச்-09.


லிபனான் ஆசிரியர் தினம்

எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது (1919)

பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது(1959)

சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது(2006)
====================================================

 "உலகிலேயே அலைபேசி இணையக் கட்டணம்  இந்தியாவில்தான் குறைவு"
உலக அளவில் மக்கள் செல்பேசி டேட்டாவுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்த ஓர் ஆய்வில் ஐரோப்பாவில்தான் மக்கள் டேட்டாவுக்கு அதிகம் செலவு செய்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
Cable.co.uk எனும் இணையத்தளத்தில் ஒரு கிகா பைட் அளவிலான டேட்டாவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு செலவாகிறது எனது குறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவில் மிகக்குறைவான விலையில் டேட்டா கிடைப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டா $0.26 கட்டணத்திற்கு கிடைக்கிறது. அதுவே பிரிட்டனில் $6.66 என்ற கட்டணத்திற்கு கிடைக்கிறது.
அமெரிக்காவில் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் மிக அதிகம். அங்கே சராசரியாக ஒரு ஜிபிக்கு $12.37 செலவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த முடிவுகள் ஏமாற்றத்தை தருவதாக கேபிள் டெலிகாமின் பகுப்பாய்வாளர் டான் ஹௌடல் தெரிவிக்கிறார்.
''பிரிட்டன் போன்ற நாடுகளில் ஆரோக்கியமான சந்தை இருக்கிறது. இருப்பினும் ஐரோப்பாவில் உள்ள ஃபின்லாந்து, போலந்து, டென்மார்க், இத்தாலி, ஆஸ்திரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனில் ஒரு ஜிபிக்கு ஆகும் கட்டணத்தைவிட குறைவான விலையை கொண்டிருக்கின்றன. பிரெக்சிட்டுக்கு பிறகு பிரிட்டனில் ஒரு ஜிபி என்ன கட்டணமாகும் என்பது தெரியவில்லை. அதுவொரு சுவாரஸ்யமான விஷயமாக இருக்கக்கூடும்'' என்கிறார் டான் ஹௌடல். .

உலகில் 230 நாடுகளில் செல்பேசி டேட்டாவுக்கு எவ்வளவு கட்டணம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து கூறுகிறது இந்த ஆய்வு.
 இதில் பிரிட்டன் 136-வது இடத்தில் உள்ளது. ஒரு ஜிபி உலக அளவில் சராசரியாக $8.53க்கு விற்கப்படுகிறது .
கிழக்கு ஐரோப்பாவில் ஃபின்லாந்தில்தான் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் மலிவாக கிடைக்கிறது. அங்கே ஒரு ஜிபி டேட்டாவை 1.16 டாலருக்கு பெற்றுவிடலாம். இத்தாலி, டென்மார்க், மொனாகோ போன்றவற்றில் இரண்டு டாலருக்கும் குறைவான விலையில் ஒரு ஜிபி கிடைக்கும்.
மேற்கு ஐரோப்பாவில் போலந்தில் ஒரு ஜிபியின் கட்டணம் 1.32 டாலர்கள். ருமேனியாவில் 1.89 டாலர்கள்.

முதலிட நாடுகள்.
இந்தியா - 0.26 டாலர்
கிர்கிஸ்தான் - 0.27 டாலர்
கஜகஸ்தான் -0.49 டாலர்
உக்ரேன் - 0.51 டாலர்
ருவாண்டா -0.56 டாலர்

கடைசி இட நாடுகள்
ஜிம்பாபேவே - 75.20 டாலர்
ஈகுவடோரியல் கினி - 65.83 டாலர்
செயின்ட் ஹெலெனா - 55.47 டாலர்
பாஃல்க்லாண்ட் தீவு - 47.39 டாலர்
ட்ஜிபூட்டி - 37.92 டாலர்கள்


செல்பேசி டேட்டாவின் விலை இருப்பதிலேயே மிக அதிகமாக விற்கப்படும் நாடு ஜிம்பாப்வே. அங்கு ஒரு ஜிபி டேடாவின் கட்டணம் சுமார் 75.20 டாலர் ஆகும்.
ஆப்பிரிக்காவை பொருத்தவரை சில நாடுகளில் அதிகமாகவும், சில நாடுகளில் விலை குறைவாகவும் இருக்கிறது. ருவாண்டா, சூடான், மற்றும் காங்கோ போன்ற நாடுகளில் டேட்டாவின் கட்டணம் ஒரு டாலருக்கும் குறைவாக இருக்கிறது.
ஆனால், ஈக்வடோரியல் கினி, கயனா மற்றும் செயின்ட் ஹெலினா போன்ற நாடுகளில் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் 50 டாலருக்கும் அதிகமாக இருக்கிறது.
டேட்டாவின் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ஆசிய நாடுகளாகும். தைவான், சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில், உலகளாவிய சராசரியை விட சற்று அதிக கட்டணம் உள்ளன.
உலகில் இவ்வாறு டேட்டாவின் கட்டணத்தில் பெரும் வேறுபாடுகள் இருப்பதற்கான காரணங்களை கூறுவது சிக்கலானது என்கிறார் ஹௌடல்.
"சில நாடுகளில் மிகச் சிறந்த செல்பேசி மற்றும் அகன்ற அலைவரிசை (ப்ராட்பாண்ட்) உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதனால் டேட்டா சேவை வழங்குபவர்களால் பெரும் அளவிலான டேட்டா வழங்கப்படுவது, ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் குறைக்கிறது. மற்ற நாடுகளில் மேம்பட்ட அகன்ற அலைவரிசை (ப்ராட்பாண்ட்) சேவைகள் இல்லாததால், செல்பேசி டேட்டாவை சார்ந்தே இருக்கின்றன. மக்கள் அதனை பயன்படுத்த வேண்டுமானால், கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகிறது" என்று அவர் தெரிவித்தார்.
"உள்கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், குறைந்த அளவிலான மக்களே டேட்டாவை பயன்படுத்தும் நாடுகளில் அதன் விலை மிக அதிகமாக இருக்கிறது. மக்கள் சில மெகாபைட்டுகள் அளவிற்கு மட்டுமே டேட்டாவை வாங்குவதால், கிகா பைட்டுகளின் விலை மிக அதிகமாகிறது."
சிம் மட்டுமே சார்ந்து சேவை வழங்குபவர்களின் கட்டணத்தை வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
                                                                                                                                      -பிபிசி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

#GoBackModi சங்கிகள் ,பார்ப்பனர்களின் புளுகுமூட்டை அவிழ்ந்து சிதறுகிறது...
----
.

மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் #GoBackModi என்கிற tagல் பாரதப் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது. பதிலுக்கு ட்விட்டர்வாழ் பார்ப்பனர்கள் ‘வெல்கம் மோடி’ என்றெல்லாம் வைரல் செய்யப்பார்த்து படுதோல்வி அடைந்தார்கள். பாரதிய ஜனதா கட்சியின் ஐடி விங் இந்தியா முழுக்க இருந்து வெல்கம் மோடி என்று வரவேற்றும், அவை இந்திய அளவில்கூட டிரெண்டிங்குக்கு வரமுடியவில்லை.

இத்தகைய நிலையில் கடந்தவாரம் ட்விட்டரில் பார்ப்பனரான ரங்கநாதன் என்பவர், ஒரு புளுகுமூட்டையை அவிழ்த்துவிட்டார். அதாவது பார்ப்பன வழக்கப்படி #GoBackModi என்பது இஸ்லாமிய சதி. இந்த tagல் பதியப்படும் ட்விட்டுகள் 58 சதவிகிதம் பாகிஸ்தானில் இருந்துதான் பதியப்படுகின்றன என்று பொய்யாக போட்டோஷாப் செய்து அவிழ்த்து விட்டார்.

பார்ப்பன தேசியப் பத்திரிகையான ‘துக்ளக்’ அதை வழிமொழிந்து அதெல்லாம் ஒரு செய்தி ஹைகோர்ட்டு என்று வெளியிட்டது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் இதை பெரிய கண்டுப்பிடிப்பு மாதிரி தன்னுடைய ட்விட்டர் டைம்லைனில் விவாதித்திருந்தார். தந்தி தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே அவர்களது புண்ணியத்தில் அதே செய்தி, தந்தி நாளிதழிலும் சிறியளவில் வெளியிடப்பட்டது. அதையே ரங்கராஜ் பாண்டேவும் ‘இப்போ எல்லாரும் சொல்லுறாங்க’ என்று அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்திருக்கிறார்.

பொய் என்கிற பெரிய பலூனை உடைக்க உண்மை என்கிற சிறிய ஊசி போதும்.

டிவிட்டர் டிரெண்டுகளை யார் வேண்டுமானாலும் https://www.trendsmap.com இணையத்தளத்தில் போய் பரிசோதிக்க முடியும். சற்று நேரத்திற்கு முன்பு அதில் பதிவாகியிருக்கும் தகவல்களின்படி

87,300 ட்விட்டுகள் #GoBackModi என்கிற tagல் பதிவாகியிருக்கிறது (இன்று மாலைக்குள் பல லட்சம் ட்விட்டுகள் பதிவாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது)

அவற்றில் 86% ட்விட்டுகள் இந்தியாவிலிருந்துதான் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. அதிலும் 33% சென்னையிலிருந்து மட்டுமே. ஒட்டுமொத்தமாக தமிழில் மட்டுமே 50% ட்விட்டுகள்.

பார்ப்பனப்புளுகு பத்து நிமிஷம் கூட தாங்காது. நம் தாத்தாக்களிடம் இதை மாதிரி அவர்கள் கதைவிடும்போது, தாத்தாக்கள் பாமரர்களாக இருந்தார்கள்.

தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்கள் புண்ணியத்தில் நாம் எழுதப் படிக்கத் தெரிந்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும், ‘பழைய நெனைப்புடா பேராண்டி’ கணக்காக பொய்மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள்.

#GoBackModi என்கிற கோஷம், இந்தியாவின் கோஷம். தமிழகம் அதை சற்றுக் கூடுதலாக ஓங்கி ஒலிக்கிறது என்பதே உண்மை.
எங்கெங்கிருந்து டுவிட் செய்யபப்ட்டது . டுவிட்டர் ஆதாரம்.:
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?