நிரந்தர முதல்வரும்



நிரந்தர  மின்வெட்டும்?


தமிழக ஆளுனர்"அடுத்த இரண்டாண்டுகளில் 4 ஆயிரத்து 704 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய, புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என்றுதனது உரையில் கூறியுள்ளார். இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்தத்திட்டங்கள் துவங்கப்படுமா என்பது சந்தேகம்தான்.ஜெயாஅரசு கூறியுள்ளபடி, 4 ஆயிரத்து 704 மெகா வாட் மின்சாரம் புதிய திட்டங்கள் மூலம் உரு வாக்கப்பட்டாலும், தமிழகத்தினுடைய தற் போதைய மின்வெட்டைச் சரி செய்யப் போதுமானதாக அது இருக்காது என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும்.

மின்வெட்டு இல்லாத தமிழகம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வாக் குறுதி கொடுத்தது. முந்தைய திமுக ஆட்சி இழப்பிற்கு மின்வெட்டு முக்கிய காரணமாக  அமைந்தது.அதிமுக ஆட்சிக்கு மக்கள் பெரும்திரளாக வாக்களித்ததில் மின்வெட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு.


அதிமுக அரசு பொறுப்பேற்ற உடனேயே மின் வெட்டுக்குத் தீர்வுகாணப்பட்டுவிடும் என்று  எதிர்பார்க்கவில்லை. ஆனால் மின் வெட்டு நேரம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். 
ஆனால்ஜெயா அரசில் நடப்பதோ நேர்மாறாக உள்ளது. இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு மாறி தற்போது 5 மணி நேரம், 6 மணி நேரம் தற்போது அனல் மின்நிலையம் உள்ள தூத்துக்குடியிலேயே7மணிஎன்ற அளவுக்கு மின் வெட்டு நீண்டுவிட்டது. அடுத்து 12 மணி நேரம் என்ற அளவை நோக்கி அதிமுக அரசு சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஜெயலலிதா இதைப்பற்றி கண்டு கொள்வது போல் தெரியவில்லை.மக்கள் கவனத்தை திசை திருப்ப சசிகலா நீக்கம்.முன்னாள் அமைச்சர்கள் கைது,நடிகர் விஜய்காந்துடன் சண்டை என்று வேடிக்கை காட்டுகிறார்.

முந்தைய திமுக ஆட்சியில் இரண்டு மணி நேர மின்வெட்டையே மிகக் கொடுமையானதாக எழுதித்தீர்த்து மக்கள் கோபத்தை அரசுக்கு எதிராக திருப்பிய ஊடகங்கள் தற்போது 6 மணி நேரத்தை கண்டு கொள்ளவே இல்லை.
மக்களிடமும் முணுமுணுப்பைக்காணோம்.ஜெயா அரசு மின் வெட்டு என்றால் சரிதான் என்ற எண்ணமோ அல்லது பழகி விட்டார்களோ அல்லது தலைவிதி என்று இருக்கிறார்களோ தெரியவில்லை.
கிடைக்க இருந்த கூடங்குளம் அணு மின் நிலைய மின்சாரமும் தற்போது கிடைப்பதாக தெரிய வில்லை.
அதிலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல் பட்டு அரசியல் செய்து அத்திட்டத்தையே தனது சோனியா காங்கிரசு எதிரான நடவடிக்கையால் கேள்விக்குறியாக்கிவிட்டார்.
உண்மையில் அணுமின்சக்திக்கு எதிரானவர் அல்ல ஜெயா அரசு.ஆனால் காங்கிரசை தனது பிடிக்கு கொண்டுவரவே இந்த உதயகுமாருக்கு ஆதரவான நாடகம்.

ஆனால் அவரின் நாடகத்தால் தமிழக மின் தேவையே பூதாகரமாக மாகிவிட்டதே?
கூடங்குளத்தை விடுவொம்.வேறு எந்த மாற்று வழியும் இதுவரை காகித அளவில் கூட மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யவில்லை.தி.மு.க.அரசு கூட பரவாயில்லை.அவ்வப்போது அறிக்கை மூலமாகவாவது மின்சாரத்தை தயாரித்தார்கள்.இவர் அதுகூட இல்லை என்ற நிலையாகிவிட்டது.
மக்கள் இன்று மின் வெட்டை கண்டுகொள்ளவில்லை.10மணி நேரம் என்றால் கூட தாங்கும் வலிமையை தமிழக மக்கள் பெற்று விட்டார்கள்.
இந்த நிலையில் தமிழக ஜெயா அரசுக்கு மக்கள் சார்பில் இந்த வேண்டுகோளை வைக்கிறோம்.
"மின் வெட்டு நேரங்களில் தாக்கு பிடிக்க ரீசார்ஜ் விளக்குகள்,கன்வெர்ட்டர்களை சார்ஜ் செய்து கொள்ளவாவது அவ்வப்போது மின்சாரத்தை கொடுங்கள்."
அம்புட்டுதான்.
வாழ்க ஜனநாயகம்!
வாழ்க மின்சார [வெட்டு] ம்!
__________________________________________________________


Q மருத்துவ கொள்[ளை]கை.

                                                                                         -கே.சி.கோபிகுமார்
சமீபத்தில் உச்சநீதிமன்றம், மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய மருந்துகள் மத்திய அரசின் விலைக் கட்டுப் பாட்டுக்குள் இருக்கின்றனவா என்றும் ஏழை, எளிய மக்கள் வாங்கி பயன்படுத்தும் வகையில் உள்ளனவா என்றும் மத்திய அரசை வினவியுள்ளது. இதுநாள் வரையில் மத்திய அரசும், பெட்ரோலியத்துறை அமைச்சகமும் இதன்மேல் மௌனம் சாதித்து வரு கின்றன. அப்படியென்றால் மருந்துகளின் விலைகள், நிர்ணய விலைக் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் அதை கட்டுப்படுத்திட மத்திய அரசு எவ்வித முயற்சியும் எடுத்திட வில்லை என்று தான் அர்த்தமாகும்.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட் களின் விலையேற்றம் வானளாவிய உயரத்தில் உயர்ந்துகொண்டிருக்கும் வேளை யில் மருந்துகளின் விலைகள் என்பது விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு இந்தியன் வருமானத்தில் மருந்து களின் செலவு என்பது மாதாமாதம் உயர்ந்து கொண்டி ருக்கிறது. இந்திய அரசின் சூயவiடியேட ளுயஅயீடந ளுரசஎநல டீசபயnளையவiடிn-ன் 2004-05 அறிக்கை யின்படி தனி மனித செலவீனத்தில் மருத்துவத்திற்காக கிராமங்களில் 7 சத வீதமும் நகரங்களில் 5 சதவீதமும் செல விடப்படுகிறது. 2010-11ல் இதில் குறைந்த பட்சம் 150-200 சதவீதம் வரை உயர்ந் திருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.



ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடிக்கும் தாராளமயக் கொள்கையின் விளைவாக, மருந்துத் துறையில் 100சதவீதம் அந்நிய மூலதனம் அனுமதித்ததன் காரணமாக பல பன்னாட்டு மருந்து நிறு வனங்கள் இந்திய நிறுவனங்களை கபளீகரம் செய்து வருகின்றன. இதனால் இந்திய மருந்துத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகி, இந்திய மக்களை, தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றது. இதை தடுத்திட வேண்டுமென்று இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மருந்து சந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு, விலைகள் குறைய வேண்டு மென்றால் சாத்தியமே இல்லை.

348 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. ஆனால் 37 மருந்துகள் மட்டும்தான் விலைக் கட்டுப்பாட்டு பட்டி யலில் உள்ளன. மற்ற 311 மருந்துகளும் மருந்து நிறுவனங்களின் லாபவெறிக்கு விட்டு விட்டது. இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தத்திற்கான மருந்து மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.



மேலும் கே.ஸ்ரீநாத் தலைமையிலான திட்டக் குழுவின் மக்கள் நலன் உபகுழு தனது அறிக்கையில், “மருந்துகளின் விலை நிர்ணயத்தில் இந்திய அரசின் மெத்தனப் போக்கை பன்னாட்டு நிறுவனங்கள் தனதாக்கிக் கொண்டு மருந்துகளை அதிக பட்சமாக விலை உயர்த்தி தனது லாபத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வுக்கு காரணம்தான் என்ன? 1. மருந்து நிறுவனங்களின் லாப வெறிதான் காரணம். தயாரிப்பு விலைகளி லிருந்து பல நூறு மடங்கு வரை அதிகபட்ச விலை (ஆசுஞ) வைத்து நோயாளி தலையில் கட்டுகிறது. நோயாளியும் தன் உயிர் பாது காப்பிற்காகவும், நலனிற்காகவும் தன் உடமைகளையெல்லாம் விற்று அதில் குறிக்கப்பட்டுள்ள விலைக்கு வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது. வேறு வழியில்லை! 2. மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பரிந்துரை செய்திட மருத்துவர்களுக்கு அன்பளிப்பு, உபசரிப்பு என்கின்ற தரக் குறைவான யுக்திகளை கையாளுகின்றது. உதாரணம்: குடல் புண்ணிற்கான ராணிடின் மருந்து தயா ரிக்கும் மருந்து நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் 2.33 கோடி ரூபாய் செலவு செய்து 466 மருத்துவர்களை துபாய்க்கு உல்லாச பயணம் ஏற்பாடு செய்திருக் கின்றது. அதேபோன்று னுசுநுழுடீ எனும், அல்சர் மாத்திரையை பரிந்துரைத்திட மருத்துவர் களுக்கு சராசரியாக ரூ. 1.50 லட்சம் செலவு செய்துள்ளது. அது மட்டுமல்ல, தங்க நாணயங்கள், வெள்ளிக் காசுகள், தொலை காட்சிப் பெட்டிகள், விலை உயர்ந்த ப்ளாக் பெர்ரி செல்போன்கள் என அள்ளிவீசியுள்ளது.

மருத்துவர்களுக்கு மருந்து நிறு வனங்கள் கொடுக்கும் பணம் அனைத்தும் இறுதியாக நோயாளிகளின் தலையில் தான் விழு கின்றது. குறிப்பாக உயிர்காக் கும் மருந்தான மெரோபனம் எனும் மருந்தின் அதிகபட்ச விலை ரூ. 2300. இது மருத்துவர்களுக்கு அல்லது மருந்துக் கடைக்கு ரூ.470க்கு கொடுக்கப்படுகின்றது. ஆக மருத்துவர் களுக்கு ரூ. 1830 லாபமாக கிடைத்துள்ளது. இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளை யடித்துக் கொண்டிருக்கின்றன.


இது ஒரு பக்கம் இருக்க, புதிய மருந் துகள் அறிமுகம் என்கின்ற பெயரால் பன் னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டையும் இந்திய மக்களையும் சோதனைக் களமாக மாற்றி, கடந்த 2008-10 வரை 1660 அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளது. இதில் பெரும் பாலானோர் மலை வாழ் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் முறையற்ற சோதனையில் ஈடுபட்ட மருத்து வர்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதித் துள்ளது. அதாவது தடாலில் எனும் மருந்து ஆண்களுக்கு அவர்களின் புணர்ச்சியை ஊக்குவிக்கும் மருந்தாகும். இதை ஒரு மருந்து நிறுவனம் இரத்த அழுத்த நோய்க்காக அப்பாவி மக்களிடம் அவர்களுக்கே தெரியாமல் சோதனை செய்தது. இதில் பலர் மடிந்துள்ளனர். இந்த கோர நிகழ்ச்சிக்கு காரணமான மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. இது தொடர்கதையாக இருக்கிறது. இந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிருந்தா காரத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டி ருக்க, மறுபுறம் அதே நிறுவனங்கள் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்திய நாட்டு சட்டத்தில் உள்ள உரிமைகள், சலுகைகள், சமூக பாதுகாப்பு போன்றவைகளை அளிப் பதே இல்லை.

     Digital medical illustration

குறிப்பாக “பிகாசில்ஸ்” எனும் சத்து மாத்திரை தயாரிக்கும் பைசா எனும் அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் தனது நிறுவனத்தில் தொழிலாளர்களும், மருந்து விற்பனை பிரதி நிதிகளும் இல்லை என்று தொழிலாளர் ஆணையரிடம் தெரிவித் துள்ளது. ஆனால் தொழிலாளர் அலுவலர் அவர்கள், தனது விசாரணை அறிக்கை யில் 1985 தொழிலா ளர்கள் மற்றும் பிரதி நிதிகள் பணிபுரிகின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஆக, இந்த நிறுவனம் தொழி லாளர்களுக்கான சலுகைகள், சட்ட உரிமைகளை மறுத்து, இதுநாள்வரை இந்தியாவில் வியாபாரம் செய்து பல ஆயிரக் கணக்கான கோடிகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்படி ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மருந்து நிறுவனங்கள் இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் இந்தியாவில் இருக்கின்றன. இதற்கு முடிவு கட்டிடவும், மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகள் கிடைத் திடவும், விலை நிர்ணயப் பட்டியலில் அனைத்து மருந்துகளும் கொண்டுவர வேண்டுமெனில், மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திடவேண்டும்.

மருந்து நிறுவனங்களின் வானளாவிய லாபத்தை குறைத்திட சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு மருந்துகளின் அதிகபட்ச விலைகளை நிர்ணயிக்க அவசரச் சட்டம் இயற்றிட வேண்டும். அந்த சட்டங் களை அமல் படுத்திடாத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மருந்து தயாரிப்பு, விநியோகத்தை ஊக்கப்படுத்திட வேண்டும். இதற்கான போராட்டங்கள் இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவைத்தரவேண்டும்.


அப்படியாவது மத்திய அரசு மருந்து துறையை மக்களுக்கு நலம் தரும் துறையாக மாற்றுமா?
இரண்டு பைசா மட்டுமே தயாரிப்பு செலவாகும் மாத்திரைகள் மக்களை சென்றடையும் போது 20/- ரூபாய் ஆகும்.கொள்ளை விலை நிலைகள் மாறுமா?
___________________________________________________________________________________________






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?