சானிட்டரி நாப்கினும் மோடியின் நாற்றமும்!

பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு பயன்படுத்தும் நாப்கின்களை ஆடம்பரப் பொருளாக வகைப்படுத்தி வரி விதிக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது.

அது குருதி கசியும் அந்த நாட்களில் நம் தேசத்தில் 12 சதவீதம் பெண்களே நாப்கினை உபயோகிக்க முடிகிறது. 

மீதமுள்ள 88 சதவீதம் பெண்கள் இன்றுவரை தங்களின் அந்த ரத்தப் போக்கை மறைக்க கந்தல் துணி, சாம்பல், உமிதூள் ஆகியவற்றோடு சமாளிக்கிறார்கள். எனவே சுகாதாரம், கல்வி, பேச்சு மற்றும் மத சுதந்திரம் எப்படி ஆடம்பரமாக எல்லோருக்கும் கிட்டாத ஒன்றாகிவிட்டதோ, அதே போல் இந்த நாப்கின்கள் ஆடம்பரமாகிப் போயின.

இந்தியாவில் இளம் பெண்களில் 30 சத வீதம் பேர் பூப்பெய்தியவுடன் கல்விக்கூடம் செல்வதை நிறுத்தி விடுகிறார்கள். அவர் களில் 83 சதவீதம் பேர், மாதவிடாயை எதிர்கொள்ளபள்ளிகளில் போதுமான வசதிகள் இல்லாததுதான் காரணம் என்பதைக் குறிப்பிடு கிறார்கள்.

மாதவிடாய் தேர்வு அல்ல, வலி மிகுந்தது
ஆண் உடலில் உள்ள ஹார்மோன் வேதி வினை புரிவதால் எப்படி தாடி வளர்கிறதோ, அதே போல் கரு ஊட்டப்படாத சினை முட்டைகளை புழையின் வழியாக ஒரு பெண் இரத்தமாக கொட்ட வேண்டியுள்ளது. ஈஸ்ட்ரோஜன், பிராஸ்ட்ரோஜன் மற்றும் ஹார்மோனை தூண்டும் ஊக்கிகள் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி சம்பந்தமான ஹார்மோன் ஆகியவையே இரத்தம் வெளியேறும் நிகழ்வுக்கு காரணமாகின்றன. 
இந்த நடைமுறை இலகுவான தோ, மென்மையானதோ அல்ல.

பெரும்பான்மையான பெண்கள் இச்சம யத்தில் கடும் தசைப் பிடிப்பின் துயரத்திற்கு ஆளாகிறார்கள். 

இவ்வலி மாரடைப்பு வலியை விட மோசமானது என்றும் ஆனால், அதை வெறும் வலிநிவாரணியை கொடுத்து, சாதாரண ஒன்றாகமருத்துவ உலகம் பார்ப்பதாகவும் இத்துறை யின் நிபுணரும், லண்டன் பல்கலைக்கழக பேராசிரியருமான ஜான் கில்லிபாட் கூறுகிறார்.

இத்துறையில் ஆய்வு செய்யும் ஆய்வாளர் கள், ஆண்களுக்கு இத்துயரம் இல்லாததால் பெண்களின் இத்துயர் குறித்து போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கருதுகிறார்கள்.

மருந்தியல் துறையில் கூட ஏற்கெனவே இருக்கின்ற ஸ்டீராய்டு மருந்துகள் தவிர வேறு மருந்துகளை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டவில்லை.இரத்தம் வெளிப்படுத்தும் பெண்கள் தூய்மையானவர்களே. அதை வெளிப்படுத் தாத ஆண்களும் அப்படியே. மாதவிடாய் இரத்தம் மற்றும் அதன் புனிதமின்மை பற்றி பேசும் முன் புனிதம், சுற்றுச் சூழல் சம்பந்தமான உங்கள் கருத்து உரு வாக்கத்தை உங்கள் மூளையில் இருந்து கழற்றிவிடுங்கள்.

இதைப் படிப்பதற்கு முன் உங்கள் சாதிச் சாயம் படிந்த மூளையைத் தூர வையுங்கள். கோவிலுக்குள் நுழையக்கூடாது.

உணவைத் தொடக்கூடாது போன்ற பல விலக்குகள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. ஆனால், அப்பெண்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விதிகள் என்று முட்டாள் தனமான தர்க்கத்தை வைக்காதீர்கள்.ஆயிரக்கணக்கான பிற வீட்டுப் பணி களை நீங்கள் ஏவும்போது அவர்களுக்கு அப்போது ஓய்வு தேவை என்று எப்போதும் நீங்கள் உணர்வதில்லை. 

சில பெண்கள் கூட,உன் அப்பாவிற்கு அருகில் போகாதே, வெளியே விளையாடப் போகாதே, நீ கரைபட்டிருக்கிறாய் என சொல்வதெல்லாம் என்ன?

இவையெல்லாம் ஏன்?

இதில் இயற்கைக்கு மாறாக என்ன இருக்கிறது ? 

என் தந்தை, அவருடைய மனைவிமாதவிடாயின்போது இரத்தம் கசிவதை அறியமாட்டாரா? 
ஏன் என் சகோதரன் அவனுடைய சிறு தங்கை இந்த வலியால் துன்புறு கிறாள் என்பதை அறிய மாட்டானா? 

ஏன் இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வை மர்மமானதாக மாற்றி தேவையற்ற கட்டுப்பாடு களை என் உடலின் மீது உருவாக்கி என் சொந்த உடலையே நான் வெறுக்கும் நிலைக்கு என்னை கொண்டு செல்கிறீர்கள்? 

ஆனாலும், நீங்கள் பொது இடங்களில் கழிக்கும் சிறுநீர் பரப்பும் நோய்க் கிருமிகளை விட, என்னுடைய மாதாந்திர இரத்தக் கசிவு அவ்வளவு மோசமானதல்ல.நாப்கின் என்பது மந்திரத் துணி அல்ல; வெறும் பருத்தி துணியேநம் சிறுவயதில் நம் அன்னை ஒரு கருப்பு நெகிழிப்பைக்குள் ஏதோ வைத்திருக்கிறாரோ என்கின்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கும்.
எனக்கு நினைவில் இருந்து அப்படி ஒரு நாப்கினை கிழித்து பார்த்ததில் அப்படி ஒன்றும் அதில் பிரத்யேகமாக காணப்படவில்லை. 
திப்ஷிதா தர்

எனவே, அன்புக்குரிய ஆண்களே, தந்தை வழி சமூகம் நூற்றாண்டுகளாக ஏற்படுத்திய சமூக கட்டுமானமே அந்த கருப்பு நெகிழிக்குள் இருக்கும் நாப்கின் துணியை இளம் பெண்கள் பொது வெளியில் கேட்டு வாங்குவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தவிர வேறல்ல.
மாதவிடாய்க்கு முந்திய அடையாளநிகழ்வுகள் உண்மையே!

மாதவிடாய்க்கு முந்திய அடையாளக் குறியீடுகள் மாத சுழற்சிக்கு உள்ளே நடைபெறும் நிகழ்வுகளின் வெளிப்பாடுகளே.இச்சுழற்சியின் போது உங்களின் ஈஸ்ட்ரோஜன், பிராஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்கள் சமச்சீரற்று இருக்கும். இது மூளையில் பல இரசாயன மாற்றங்களை உண்டாக்கலாம். 
மூளையில் உங்களை மகிழ்வாக வைத்திருக்கும் செரடோனின் அள விலும் பெரிய தாக்கத்தை உண்டு செய்யும். இந்நேரம் தான் அப்பெண் அதி முக்கியமாக புரிந்து கொள்ளப்படவும், பேணப்படவும் வேண்டியவள் ஆகிறாள். 

நட்போடு இயைந்த அன்பனாக அல்லது குடும்பமாக நீங்கள் அப்பெண்ணைப் பேண வேண்டும்.இடுப்பு எலும்பின் கீழே ஒரு வலி மிகுந்த தசைபிடிப்பிற்கு ஆளான பெண்ணிற்கு ஏற்படும் உயிரியல் ரீதியான பாடத்தை நீங்கள் புரிந்த கொள்ளல் வேண்டும்.

வலுமிக்க குழந்தை பிறப்பிற்குமாதவிடாயே அடிப்படை உயிரியல் அம்சம்
ம்சம்நான் அறிந்தவரை இந்து பெண்களை குழந்தை பெறும் இயந்திரங்களாக கருதும் சாதுக்களும், யோகிகளும் இது பெண் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மகிழ்ந்திருப்பார்கள். 

ஆனால் எதார்த்தம் என்னவென்றால், இச்சுழற்சியை சுகாதாரமற்ற முறையில் கையா ண்டால் அது குழந்தை கரு உண்டாக்கும் பாதையிலேயே தொற்று ஏற்படுத்தும். அத்த கைய தொற்று கடுமையான பாதிப்பை உண்டாக்கும். இது கரு உருவாவதற்கு முந்தைய சூல்கொள்ளுதல், அதில் ஒவ்வாமை ஏற்படுத்து தல், பிரசவத்திற்கு முந்தைய இறப்பு, கர்ப்ப வாய் புற்றுநோய், தீராத வலி மற்றும் ஆழ் மன நெருக்கடி ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இந்தியாவில் 50 சதவீதம் பெண்கள் இத்த கைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் 65 சதவீதம் 25 வயது முதல் 35 வயதினர்.

இவர்களுக்கு சானிட்டரி நாப்கின்என்பவை இந்தியாவில் விலக்கப்பட்டவை யாகவே உள்ளன. நம் நாட்டின் தொலைதூர கிராமங்களில் நாப்கின்கள் கிடைக்கும் கடைகளை நீங்கள் பார்க்கவே முடியாது.

கட்டுரையாளர்: திப்ஷிதா தர்
(ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவி
இந்திய மாணவர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் .)
தமிழில் : அகிலா
நன்றி: இளைஞர் முழக்கம், ஜுன் 2017
அடிப்படை பலம் இல்லாத, அதீத நம்பிக்கை ஆபத்தானது.
கேரளாவில் கொச்சி மெட்ரோ ரெயிலை துவக்கிவைக்க மோடி வருகிறார். இதற்காக கேரளா அரசு கொடுத்த அழைப்பிதழ் மாதிரியில் கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவையும், இந்த திட்டத்தை செய்து முடித்த இதன் முதன்மை செயலாளர் ஈ.ஶ்ரீதரன்,மற்றும் லோக்கல் MLA மூவரையும் விடுத்து, பிரதமர் அலுவலகம் VIP பட்டியலை தயார் செய்தது.

உடனே கேரளா முதல்வர் தோழர். பிரனாயி விஜயன் -"இது தவறு இவர்களை விழாவுக்கு அழைப்பது மட்டுமல்ல,மேடையில் அமர்வதற்கும் அனுமதி வேண்டும் "என்று மத்திய அரசிடம் கூறியதோடு கண்டனம் தெரிவித்தார்..

பிரதமருக்கு ஒரு ஸ்ட்ராங் கடிதம்.

இப்போது பிரதமர் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ்காரர். ஶ்ரீதரன் இந்தியாவின் “மெட்ரோ மேன்’என அழைக்கப்படும் அதிகாரி.
இதுதான் கம்யூனிஸ்ட்கள் உருவாக்கும் அரசியல்  நாகரீகம்.
ஆனால் தமிழ் நாட்டிலோ மருத்துவக்கல்லூரி திறப்பு விழா வுக்கு அழைப்பிதழில் பெயரை போட்டதால் வந்த  மூன்று திமுக ச.ம.உறுப்பினர்களை கைது செய்கிறது.பாஜக பினாமி எடப்பாடி அரசு.
===========================================================================================================================================
ன்று,
ஜூன்-16.

  • ஹவாய் குடியரசை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது(1897)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் இறந்த தினம்(1925)
  • உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரரான வலன்டீனா டெரெஷ்கோவா,( ரஷ்யா)  வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்(1963)
=========================================================================================
சித்தரஞ்சன் தாஸ்

வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந் தவர். மாணவப் பருவத் திலேயே விடுதலை இயக் கங்களில் கலந்துகொண்டார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். 1894-ல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

 தீவிர அரசியலில் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். ‘தேசபந்து’ (தேசத்தின் நண்பன்) என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவரை தன் அரசியல் குருவாகப் போற்றினார் சுபாஷ் சந்திரபோஸ்.

 அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளி யேற்ற விவகாரம், ரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆகிய போராட்டங்களில் பங்கேற்றார். திலகருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர். 1910-ல் இருந்து 1932 வரை ‘கேசரி’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 1920-ல் இவரது மாத வருமானம் ரூ.50 ஆயிரம். பின்னாளில் ஒரு வழக்கு நடத்த ரூ.1 லட்சம் வரை கட்டணம் வாங்கியவர். வழக்கறிஞர் தொழில், வருமானம், வசதியான வாழ்க்கையைத் தியாகம் செய்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். வேல்ஸ் இளவரசர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இவரது ஒட்டுமொத்த குடும்பமும் கைது செய்யப்பட்டது.

 ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்து, 1922-ல் சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார். இதன் கொள்கைகளைப் பரப்ப ‘ஃபார்வர்டு’, ‘பங்களாசுதா’ ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கினார்.
 அரவிந்தரும் இவரும் சுதந்திரப் போராட்ட புரட்சி இயக்கமான அனுஷீலன் சமிதி இயக்கத்தின் துணைத் தலைவர்கள்.1909-ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் வாதாடி அரவிந்தருக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.
 1923-ல் நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினரானார். 1924-ல் நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்றது. சித்தரஞ்சன் தாஸ் மேயரானார். கிராமப் பஞ்சாயத்து, கிராம சுயாட்சி ஆகியவற்றை அப்போதே தனது ஐந்து அம்ச திட்டத்தில் கொண்டுவந்தவர்.
 பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். 

ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் விதவை மறுமண இயக்கத்துக்கு உதவினார். தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முழங்கியவர்.

 இலக்கியத்திலும் ஆர்வம் உடையவர். பிரம்மசமாஜ நூல்கள், ராமகிருஷ்ணர் உபதேசங்கள், பக்கிம் சந்திரர், டி.எல்.ராய், கிரீஷ் கோஷ், தாகூர் ஆகியோரது புத்தகங்களை ஆழ்ந்து படித்தார். சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள், திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார்.

 தன் ஈகை குணத்தால் ஏழையான இந்த வள்ளல், தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதிவைத்தார். 55-வது வயதில் காலமானார்.
=============================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?