பல லடசம் டாலர் கள் லாட்டரி


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அந்த  சின்ன கிராமத்தில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே மக்கள் தொகை. 
அங்கு ஒரே ஒரு செல்போன் கோபுரம் மட்டும்தான் உள்ளது. 
ஆனால் அங்கிருந்து தினமும் மும்பைக்கு மட்டும் மூன்றாயிரம் மோசடி வங்கி அழைப்புகள் செல்வதாகச் சொல்லப்படுகிறது. 

இங்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல இடங்களிலிருந்தும்,வெளிநாடுகளிலிருந்தும் கூட  மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் எனஇது போன்ற  மோசடி செய்திகள்,அழைப்புகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. 
இதைத் தடுத்து நிறுத்துவது என்பது உண்மையில் முடியாத காரியம். 
ஏனெனில், இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் மறு  பக்கம்.
இந்த டிஜிட்டல் மயமான பணப்பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் உலகில் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.உங்களுக்கு தெரியாமலே உங்கள் பணத்தை பிடுங்கலாம். 
இதையே இப்போது முழு நேர  தொழிலாக பலரும் செய்கிறார்கள். சமீபத்தில் டெல்லியில் இதற்கென 400 பேர்கள் பணிபுரிந்த கால் சென்டர் மாட்டிக்கொடுத்தும் அதன் மூலம் 400 கோடிகளுக்கு மேல் பணம் மோசடி செய்யப்பட்டதும் செய்தியாக வந்தது அறிந்து இருப்பீர்கள்தானே.
நாம்தான் நமது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பண பரிவர்த்தனைகளில் மிக  கவனத்துடன் இருக்க வேண்டும். 
வெளிநாட்டிலிருந்து பல லடசம் டாலர் கள் லாட்டரிப் பரிசு விழுந்ததாகவோ அல்லது மிகப்பபெரிய மில்லினரா தனது சொத்துக்களை அலைபேசி எண்கள் குலுக்களில் தேர்தெடுத்து பணம்,சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு மாண்டுவிட்டார்.
அதில் உங்கள் அலைபேசி என்னும் உள்ளது. ஆடிட்,வாங்கி பரிவர்த்தனை வகைக்கு இவ்வளவு ரூபாயை உங்கள் வாங்கி கணக்கு விபரங்களுடன் அனுப்பி தொலையுங்கள்  என்ற முறையில் உறுதியளிக்கும் போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் குறித்து கொஞ்சம் அல்ல நிறையவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவற்றை எந்தக் காலத்திலும் நம்பாதீர்கள். 
உங்களின் மொபைல் நம்பருக்கு வரும் OTP எண், உங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டு அட்டையின் பின் பகுதியில் இருக்கும் மூன்றெழுத்து CVV எண், உங்கள் ஏடிஎம் PIN நம்பரை யாருக்கும், எப்போதும் சொல்லாதீர்கள். 
இந்த எண்ணை ரகசியமாக வைத்திருங்கள். 
இதைப்போல உங்களுடைய இணையதள வங்கிச் சேவையின் User ID, Password விவரங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். இவற்றைக் கேட்பவர், தான் ஒரு வங்கி அல்லது கடன் அட்டை கம்பெனி அதிகாரி எனக் கூறிக்கொண்டாலும் இந்தத் தகவல்களை எவருக்கும் தெரிவிக்க வேண்டாம். 
நாம் வாங்காத லாட்டரியில் நமக்கு எப்படி பணம் கிடைக்கும்?
அமெரிக்காவில் உள்ள பில்லியனர் இறப்பு சொத்து பங்கு வைப்பில் இந்தியாவில் உள்ள உங்கள் அலைபேசி எண் எப்படி கலந்து கொள்ளும் என்று சிந்தியுங்கள்.
உங்களுக்கு யாரும் இலவசமாகப் பணம் கொடுப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
மோடி தான் பிரதமரானால் நமக்கு தருவதாக சொன்ன 15 லட்சமே இன்னமும் நமது கணக்கில் வரவு வைக்கப்படாத போது ...இதெல்லாம் நாம அரசியல்வாதிகள் தரும் வாக்குறுதிகள் போல அவர்கள் காரியமான நம் வாங்கி விபரம் தெரிந்த பின்னர் நம்மை கண்டுகொள்ளவே மாட்டார்கள். தகவல் வந்த எண்ணும் காணாமல் போய்விடும்.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA)-ன் கீழ் தடைசெய்யப்பட்ட விஷயங்களுக்காகப் போலியாக வரும் அழைப்புகளை ஏற்று எந்த வகையிலும் பணம் அனுப்பாதீர்கள். 
இந்திய ரிசர்வ் வங்கி, தனிநபர் வங்கிக்கணக்குகளைப் பராமரிப்பதில்லை. அது வங்கிக்கணக்கு விவரங்களை யாரிடமும் கேட்பதுமில்லை. 
தனிப்பட்டவர்களுக்கு லாட்டரிப் பரிசு விழுந்ததாகவோ, வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததாகவோ, உங்களுக்கு ரிசர்வ் வங்கி தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்புவதில்லை. 
இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள்போல போலியாகக் கொடுக்கப்படும் பெயர்களை நம்பாதீர்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் ரிசர்வ் வங்கி முத்திரையுடன் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வமான மற்றும் உண்மையான இணையதளம் என்பது www.rbi.org.in மட்டுமே.
போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மட்டுமல்லை, நம்முடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு காந்தப்பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களைச் சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்துகொள்ளும் மோசடி செயல்கள் உள்பட பல மோசடி செயல்கள்நடைபெறுகின்றன. 
இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள், வேறு ஒரு கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கோ பயன்படுத்தப்படுகின்றன. 
இந்த வகையான மோசடிகள் நேற்று, இன்று என்றில்லை... 
பல ஆண்டுகளாக நீடித்துவருகின்றன. நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமே உங்களை,உங்கள் பணத்தை பாதுகாக்கும்.இது போன்ற குறுந்தகவல் வந்ததும் அதை நீக்கி விடுங்கள்.அலைபேசி அழைப்பு வந்தால் மறுபேச்சு இல்லாமல் துண்டித்து விடுங்கள்.வங்கியாக இருக்கலாமோ என சந்தேகம் வந்தால் வங்கியை நேரில் அணுகி விபரம் கேளுங்கள்.சமர்த்தாக  இருங்கள். 
===========================================================================================
ன்று,
ஜூன்-18.


  • உலக தந்தையர் தினம்
  • கக்கன் பிறந்த தினம் (1908 ) 
  • உலகப்புகழ் எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி இறப்பு (1936)

  • எகிப்து குடியரசானது (1953)

  • சலி ரைட், விண்வெளி  சென்ற முதல்  பெண் (1983)

  • இந்திய ரூபாய், அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்டது(1869)





===========================================================================================
கக்கன் என்ற  அரிதான தலைவர்! 

தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி. 

அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது..

பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய்உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். 

பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 
1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.

வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். 

ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். 
வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.

1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள். 

நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர் காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா ? 
அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி, உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன !

அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். 

மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன் வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். 
அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள்..இப்படி ஒரு இடம் தேவையா ?" எனக்கேட்டார்.

விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் ! இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார். 

இவர் அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு அணைகள் கட்டப்பட்டன. 
மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். 
தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். 
அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்புதுறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே !

கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார். அமைச்சராக இருந்த கக்கன் அரசு விடுதியில் தங்கப்போனார் அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். 

அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார். தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். 
அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார்.

சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார். 

விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். 
அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். 
அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். 

யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?