2ஜி ஊழலை அடுத்து கே-ஜி ஊழல்,,

 
-கே-[கிருஷ்ணா]ஜி[கோதாவரி] படுகை பெட்ரொலிய முறைகேடு
Dump-petrol-on-V-Day-070211.jpg
       $    2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழ லை அடுத்து மற்றுமொரு மாபெரும் ஊழல் வெளிவரக் காத்துக் கொண்டிருக் கிறது. மத்திய தணிக்கைத் துறைத் தலை வர் (சிஏஜி), வெளியிட்டுள்ள 2011 ஜூன் 7 தேதியிட்ட ஒரு 200 பக்க அறிக்கை யில், பெட்ரோலியத் துறையில், குறிப்பாக எரிவாயு வெளிக்கொணர் ஆய்வில்  மிகப் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கண்டு பிடித்திருக்கிறார். இந்த அறிக்கையின் விவரங்கள் சில ஊடகங்களில் வெளி யாகி இருக்கின்றன. மத்தியத் தணிக் கைத் துறைத் தலைவர் அனுப்பியிருப் பது ஒரு வரைவு அறிக்கைதான். அமைச் சகத்தின் கருத்துக்களைக் கோரி அது அனுப்பப்பட்டிருக்கிறது. அமைச்சகத் திலிருந்து கிடைக்கப்பெறும் பதிலின் அடிப்படையில் இறுதி அறிக்கை நாடா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதே போன்றுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான அறிக்கை, டெலிகாம் அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2006லேயே கேள்வி கேட்ட மார்க்சிஸ்ட்

ஊடகங்களில் வெளியாகியுள்ள விவ ரங்கள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி நாடாளுமன்ற உறுப் பினர்கள் எழுப்பிய ஐயங்களை எல்லாம் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தி ருக்கின்றன. 2006 டிசம்பர் 12 அன்று நாடா ளுமன்ற மாநிலங்களவையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்க ளான மறைந்த தோழர் சித்தபிரத மஜூம் தாரும் தபன் குமார் சென்னும் எழுப்பி யிருந்த கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தபோது, அன்றைய பெட்ரோலி யம் மற்றும் இயற்கை வாயுத்துறை இணை அமைச்சர், அரசாங்கம் மிகப் பெரிய அளவில் வருவாயை இழக்க இருப் பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அமைச் சரின் இந்தப் பதிலின் அடிப்படையில் தபன் சென், 2006 டிசம்பர் 21 அன்று அன்றைய கேபினட் அமைச்சருக்கு, அரசாங்கம் எப்படி மிகப்பெரிய அளவில் வருவாய்களை இழக்கவிருக்கிறது என் பதை விளக்கிக் கடிதம் எழுதினார்.

அதில் அவர், ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமும், நிக்கோ நிறுவனமும் தாக்கல் செய்திருக்கும் வளர்ச்சித் திட்டங்களில் மூலதனச் செலவினை 2.47 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 8.84 பில்லியன் அமெ ரிக்க டாலர்களாக மிகைப்படுத்திக் காட் டியிருக்கின்றனர் என்பதை விளக்கி யிருந்தார்.

பொருளாதார  புலிகளின் பொருளாதர அறிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக் கின்றன. இவ்வாறு இந்நிறுவனங்கள் மூலதனச் செலவினத்தை அதிகரித்துக் காட்டியிருப்பதால், அரசாங்கத்திற்கு வர வேண்டிய லாப விகிதம் கணிசமான அளவிற்குக் குறைவதற்கு வழிவகுத் திடும். எனவேதான், இந்நிறுவனங்கள் அளித்துள்ள மூலதன முதலீட்டை உட னடியாக மறுஆய்வு செய்திட வேண்டியது அவசியம் என்று தபன்சென் குறிப்பிட்டி ருந்தார்.

‘‘நாட்டின் இயற்கை வளங்கள் நாட்டு மக்களுக்கே சொந்தம். இதனைத் தனி யார் கொள்ளையடித்திட அனுமதிக்கக் கூடாது என்பதால்தான் செலவினம் தொடர்பாக வெளிப்படையான மதிப்பீட் டிற்கு உத்தரவிட வேண்டும் என்று நான் கோருகிறேன்” என்று அவர் கேட்டி ருந்தார்.

ஆயினும், அரசுத் தரப்பில் வழக்கம் போல் எவ்விதப் பதிலும் தரப்படவில் லை. இவை தொடர்பாக அரசுத்தரப்பில் எவ்வித விசாரணையும் நடத்தப்படவும் இல்லை.
10 முறை கடிதம்

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் சார்பில் மொத்தம் ஏழு கடிதங் கள் பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் வள அமைச்சருக்கும், மூன்று கடிதங்கள் பிரதமருக்கும் எழுதப்பட்டன. இக்கடிதங் களில் நாட்டு மக்கள் எப்படி மோசடியாக ஏமாற்றப்படுகிறார்கள் என்று தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டிருந்தன. தற்போது தன்னுடைய பூர்வாங்க ஆய்வுகளின் மூலம் மத்தியத் தணிக்கைத்துறைத் தலைவரும் இம்மோசடிகளை உறுதிப் படுத்தி இருக்கிறார்.

இவ்வாறு அரசாங்கத்தின் செல வினத்தில் தனியார் கம்பெனிகள் கொள் ளை லாபம் ஈட்ட வழிவகைகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. மத்தியத் தணிக் கைத் துறைத் தலைவர் (சிஏஜி), இது தொடர்பாக அரசுத்தரப்பில் நடைபெற் றுள்ள அனைத்து அம்சங்களையும் மற் றும் அவை தொடர்பாக ஹைட்ரோ கார்பன்கள் டைரக்டர் ஜெனரல் (னுசைநஉவடிச ழுநநேசயட டிக ழலனசடிஉயசbடிளே) பங்கினையும் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறார். நடை பெற்றுள்ள அம்சங்களை ஆராயும்போது இது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்று ‘சலுகைசார் முதலாளித்துவத்தின்’ (‘உசடிலே உயயீவையடளைஅ’) மற்றுமொரு வெளிப் பாடேயன்றி வேறல்ல.
ஊழலுக்கு ஆதரவான செயல்பாடுகள்..

நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் சலுகைசார் முதலாளித் துவத்தைத் தழைத்தோங்கச் செய்வதன் மூலமாக ஊழல்கள் செய்திட இதற்கு முன் அறியப்படாத பல்வேறு வாயில் களைத் திறந்து விட்டிருக்கின்றன. நமது நாடு, நம் மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை அளிக்கக்கூடிய விதத்தில் அனைத்து வளங்களையும் நிரம்பவே பெற்றிருக் கிறது. ஆயினும் பல்வேறு வகையான ஊழல்கள் வாயிலாக இவ்வளங்கள் கொள்ளை யடிக்கப்படுவதன் மூலம் சாமானிய மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கை அளிக்கப்படாமல் அவர்களி டமிருந்து பறிக்கப்படுகின்றன. ஒட்டு மொத்தத்தில் இத்தகைய ஊழல்கள் நாட்டின் அபரிமிதமான வளங்களை நாட்டு மக்கள் பயன்படுத்தப்பட முடியாத வகையில் செய்துவிடுகின்றன.
கொள்ளைக்கு ஆதரவான கொள்கைகள்,,,,,

முதலாளித்துவத்தின் நோக்கம் கொள்ளை லாபம் ஈட்டுவதுதான். இத னை எய்திட அது எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும், எல்லா சட்டங்களையும் மீறும், அனைத்து ஒழுங்கு முறைகளையும்உடைத்தெறியும், தங்களுக்கு உதவ முன் வராத அமைப்பு முறையை அழித்திடும். முதலாளித்துவத் தின் இத்தகைய கொள்ளை லாப மனப் பாங்கினை கட்டுப்படுத்தி கடிவாளமிடு வதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் சலுகைசார் முதலாளித்துவத்தினை ஊக்குவிக்கும் தங்களுடைய கொள்கை களின் மூலமாக அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள். நவீன தாராளமயம் சலுகைசார் முதலாளித் துவத்துடன் கைகோர்த்துக் கொண்டு ஊழல்களுக்குப் பல்வேறு வழிவகை களைத் திறந்துவிட்டிருப்பதன் வாயிலாக நம் நாட்டிற்கே பேரழிவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சலுகைசார் முதலாளித்துவத்தின் அனைத்து வகையான வெளிப்பாடு களும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண் டும் என்று பலமுறை கூறி வந்திருக் கிறோம். நடைபெற்றுள்ள அடுக்கடுக் கான ஊழல்கள் நாட்டின் வளங்களை அபரிமிதமாகக் கொள்ளையடித்துள்ளன. இவ்வாறு ஊழல் நடைபெறாமல் தடுத்து நிறுத்தி இவ்வளங்கள் மக்கள் நலன் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டி ருக்குமானால், நிச்சயமாக நமது நாடு உலக அரங்கில் உன்னத இடத்தைப் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயத் திற்கும் இடமில்லை. ஊழலுக்கு எதி ராகத் தற்போது நடைபெற்றுவரும் போர், சிறந்ததோர் இந்தியாவை உருவாக் குவதற்கு இன்றியமையாததாகும்.
தமிழில்:ச.வீரமணி,
=========================================================================
  ரத்த அழுத்தம் ;  கட்டுப்படுத்துங்க,,,,,.
             Barack Obama eats a 'medianoche' sandwich in San Juan, Puerto Rico
சாதாரண மாகத் தோன்றினாலும்  கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகளைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் 40 வயதுக்கு மேல் தான் வரும் என்று நினைப்பது தவறு. 25 வயதிலேயேமாரடைப்பு வரத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை.
ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும் போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது.
மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னை தான்.
வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.
குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹோர்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது.
சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன.
ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
முதலில் உங்கள் உடல் எடை உயரத்துக்கு ஏற்றது தானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும்.
சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும்.
இதேபோல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும்.
பாஸ்ட் புட் எனும் விரைவு உணவுகளிலும்,பீசா,பர்கர் போன்ற மேலைய உணவு வகைகளிலும் காணப்படும் தீய கொழுப்பு வகைகளும் நம் உடலில் தேவையற்ற கொழுப்பைச் சேர்த்துவிடுகின்றன.
 தமிழக பாரம்பரிய கம்மங்கூழ்,கேழ்வரகு கூழ் போன்றவையே நம்நாட்டு பருவநிலைக்கு ஏற்ற உணவுவகைகளாகு.அவையே நமக்கு சத்தானவையாகும்.
 இதைக் கூட மேல்நாட்டினர் சொன்ன பிறகுதான் உண்பேன் என்பவர்களை என்ன செய்ய,,
 ========================================================================
   $ சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமாக கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 லட்சம் கோடி கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக் கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
                     




  • இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பிரபல கிரிமினல் வக்கீல் ராம் ஜெத்மலானி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்,"வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?" என்பது பற்றி கடுமையான கேள்விகளை எழுப்பியது.
    இதைத் தொடர்ந்து கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் சுவிட்சர்லாந்து, ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு இந்திய அரசு கடிதம் எழுதியது. இதன் விளைவாக ஜேர்மன் நாட்டின் "லிட்சய்ஸ்டைன்" வங்கியில் டெபாசிட் செய்துள்ள 14 இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கி இந்தியாவிடம் ஒப்படைத்தது.
    வரிவிதிப்பு பிரச்னை முடிந்தவுடன் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சுவிஸ் நாட்டின் வங்கி தொடர்பான சட்ட திட்டங்கள் கருப்பு பணம் பதுக்கியவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.
    இதனால் அந்நாட்டு வங்கிகளிடமிருந்து கருப்பு பணம் பதுக்கியவர்களின் தகவல்களை பெறுவதில் சிரமம் இருப்பதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
    இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா, ஜேர்மனி, கனடா, ஜப்பான், ஹாலந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    சுவிஸ் நாடு மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரி ஒப்பந்தத்தில் வங்கி டெபாசிட்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களின் விவரங்களை மற்ற நாடுகளால் பெறமுடியாத நிலை இருந்தது.
    தற்போது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பதன் வாயிலாக இந்த விவரங்களை பாதிக்கப்பட்ட நாடுகள் பெற முடியும்.
     ========================================================================
     அடுத்த வாரிசு,,,

      # 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய பிரதமர் அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் அவர் ராஜிநாமா செய்வார் என தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 2-ஜி விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட பழைய சர்ச்சை இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.ஏர்செல் விவகாரம் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி விட்டது. இது தொடர்பாக பிரதமருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தயாநிதி மாறனை விசாரிக்க, பிரதமரின் அனுமதி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சி.பி.ஐ. ஏற்கெனவே மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில், தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்வது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்துவதற்கு பிரதமர் அலுவலகம் சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் தலைமையும் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்நிலையில் தயாநிதி மாறன் தானாகவே பதவியிலிருந்து விலக வேண்டும், அவ்வாறு விலக முன்வராவிட்டால், பிரதமர் அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். பிரதமர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை முடக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் மிரட்டி வருகின்ற நிலையில், தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. நடவடிக்கை எடுப்பது உறுதி என்று தலைநகரில் அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
     கலைஞர் குடும்பத்தில் அடுத்து திகார் சிறை நோக்கிய பயணி எதிர்பார்த்தபடி 
     தயாநிதிதானா?

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    விகடானந்தா நிலவரம்

    பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

    கட்டுமானம் ஆரம்பம்?