புதிய இந்தியா?


பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் 152 நாடுகளின் பட்டியலில் இந்தியா 132-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, சமூகப் பாதுகாப்பு மற்றும்சமூக நலத்திற்கான செலவுகளை மேற்கொள்வதில் இந்தியாவால், கடைசி இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. 

பெண்கள் பாதுகாப்பிலும் இந்தியாவில் மோசமாக இருப்பது தெரிய வந்துள்ளது.உலக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகள் மற்றும்அதைஅந்நாடுகள் சரி செய்ய முடியாத நிலை குறித்து ‘நியூ ஆக்ஸ்பாம்’என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

அதில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.ஏற்றத் தாழ்வை குறைப்பதற்காக, ஒவ்வொரு நாடும் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து, சமூகச் செலவு, வரி மற்றும்தொழிலாளர் உரிமைகள் என்ற மூன்று அம்சங்களை முதன்மையாக வைத்து,கல்வி, சுகாதாரம் என 21 தலைப்புகளில் ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.


சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் பங்கு, வரி விலக்குகளின் பங்கு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் மகப்பேறு நன்மைகள் குறித்தும் கணக்கிடப்பட்டு உள்ளது. 

அதன் முடிவில் 152 நாடுகளை உள்ளடக்கிய தரப்பட்டியல் ஒன்றும்ஆக்ஸ்பாம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. 

இதில், ஸ்வீடன், பெல்ஜியம், டென்மார்க், நார்வே மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்றத்தாழ்வை களைவதில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில்,இந்தியா 132-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல் வரிசையில் உள்ள சில நாடுகள்பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்இடையிலான இடைவெளியைக் குறைப்பதில், வலுவான முன்னேற்றத்தைஅடைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த வகையில், சமூக செலவினங்களில் இந்தியா கடைசி இடத்தையே (152) பெற்றுள்ளது. 

முற்போக்கு வரி விதிப்பில் 91-ஆவது இடத்திலும், தொழிலாளர்கள் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் 86-ஆவது இடத்திலும் உள்ள இந்தியா,சுகாதார செலவினம், கல்வி மற்றும் சமூகபாதுகாப்பு விஷயங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 

தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு மதிப்பளிப்பது ஆகிய விஷயங்களில் இந்தியா படுமோசமாக உள்ளது.இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது; 

அதைக் குறைக்கும் ஆட்சியாளர்களின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டும் என்றால், நமது பார்வை முன்னோக்கியவாறு இருக்க வேண்டும். பின்னோக்கியவாறு இருக்கக் கூடாது. 

மேலும் பொதுவாக ஏற்பட்டு வரும் அளவு மாறுபாடுகள் துரிதமாக, திடீரெனக் குணமாறுதல்களாகப் பரிணமிப்பது வளர்ச்சியின் ஒரு விதி என்று ஏற்பட்டால் - அப்பொழுது ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் உண்டாக்குகிற புரட்சிகள் என்பவை இயற்கையான, தவிர்க்க முடியாத தோற்றமே என்பது தெளிவு.

ஆகவே, முதலாளித்துவ அமைப்பிலிருந்து சோசலிச அமைப்புக்கு மாறிச் செல்வதும், முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலையடைவதும், மெதுவாக ஏற்படும் மாறுதல்கள் மூலம் - சீர்திருத்தங்கள் மூலமாக - சாத்தியமில்லை. 

அதற்கு மாறாக, முதலாளித்துவ முறையில் குணாம்ச ரீதியான மாறுதலை உண்டாக்குவதின் வழியாகத்தான், புரட்சியின் வழியாகத்தான், அவை சாத்தியமாகும்.

ஆகவே, கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டும் என்றால், நாம் புரட்சியாளனாக இருந்து தீர வேண்டும். சீர்திருத்தவாதியாக அல்ல.
                                                                                                                                              - ஸ்டாலின்
======================================================================================
ன்று,
ஜூலை-19.
  • பிரான்ஸ்,புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)
  • இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)
  • நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா அமைக்கப்பட்டது(1976)
  • நிக்கரகுவா தேசிய விடுதலை தினம்(1979)
=======================================================================================


கமல்ஹாசன் மக்கள் சேவை செய்யவில்லையா?பிறகு என்ன ===க்கு உங்க தல மோடி தூய்மை இந்தியாக்கு பிரதிநிதியாக நியமித்தார்.?நீயும் பக்கத்தில் பல்லைக்காட்டிக்கொண்டு படம் பிடித்தே?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?