டெங்கு காய்ச்சல் புரியும்.அதை கவனி அரசே..

கமல்ஹாசன் அமைச்சர்களையும்,ஊழலையும் கலாய்த்துக்கொண்டிருக்கையில் திடீரென டெங்கு காய்ச்சலை பற்றியும் அதை அரசு ஒழிக்க வேண்டும் அல்லது நகர்ந்து தொலைக்க வேண்டும் என்றது, சம்பந்தமில்லா டுவிட்டாக அப்போது தெரிந்தது.

ஆனால் கமல் எதையும் மிகவும் யோசித்தே சொல்பவர்.

சுனாமியை பற்றியும் கூட நாம்  சுனாமியை சந்திக்கும் முன்னரே அன்பே சிவத்தில் விவரித்தவர்.அவர்.
எனவே தமிழகத்தில் டெங்கு என்று நாம் ஆய்ந்த பொது கிடைத்தவை பகீர் .
டெங்கு பற்றிய கமல்ஹாசன் எச்சரிக்கை அரசு தவிர்க்க முடியாதது.மக்கள் உயிர் சார்ந்தது.ஊழல் ஆதாரம் கமலிடம் கேட்டு பொழுதைப்போக்குவது போல் எளிதில் பாஜக ,மத்திய அரசு உதவியுடன் கடந்து விட  முடியாதது.

தமிழகத்தில், 'டெங்கு' பாதிப்பு வேகமாக பரவி வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய மிக அவசியம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் அத்துறை அமைச்சரோ டெங்கு தீவிரம் தெரியாமல் அதை மறைக்க "டெங்கு இல்லை மர்ம காய்ச்சல்" என்று அறிவித்துக்கொண்டு தனது வருமான வரை வழக்கத்தில் இருந்து தப்பிப்பதில் தான் முழுக்கவனம் செலுத்துகிறார்.டெங்கு தடுப்பில் அல்ல.

அரசின் இதே அலட்சியம் தொடர்ந்தால்  உயிர் பலிகள் அதிகரிக்கும் நிலையில் தமிழகம் டெங்கு கொசு பிடியில் சிக்கியுள்ளது.மரண எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கும்  அபாயம் உள்ளது.


தமிழகம் மட்டுமல்ல நாடு முழுக்கவே மூன்று மாதங்களாக, டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. 
ஆனால் தமிழ் நாடுதான் டெங்கு பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம்.பாதிப்பில் இரண்டாம் இடம்.
மத்திய அரசு அறிவிப்பின்படி கேரளாவில், 11 ஆயிரத்து, 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 
20 பேர் இறந்துள்ளனர். 
அதற்கு அடுத்ததாக, தமிழகத்தில், 4,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒருவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது டெங்குவை மறைக்கும் அமைசசர் கணக்கு ,  இறப்பு எண்ணிக்கை 100 த்தாண்டும்.மேலும் நாளுக்கு,நாள் டெங்கு  பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, கேரளாவை ஒட்டியுள்ள, நெல்லை, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும், டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது; ஆங்காங்கே, இறப்புகளும் நடந்துள்ளன.
'டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுவின் ஆயுட்காலம், 20 நாட்களில் இருந்து, 40 நாட்களாக உயர்ந்துள்ளது' என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
பள்ளிப் படிப்பை முடிக்காதவன் " நீட்" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்
கொசு ஒழிப்பில் தமிழ் நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தாததால் தான், டெங்கு காய்ச்சல் அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.

 கொசுக்களின் ஆயுள் காலம் கூடியுள்ளதால், இனி, எப்போதுமே டெங்குவைஒழிப்பது மிகக்கடினம் ,சாத்தியமில்லை. 
ஆனால், டெங்கு பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 
தமிழகத்தில், 2012ல் இருந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. 
நோய் பரவும் சமயங்களில் மட்டும் போர்க்கால நடவடிக்கை இல்லாமல், யானைக்கால், மலேரியா போன்ற நோய்களைகட்டுப்படுத்த நிரந்தர அமைப்புகள் இருப்பது போல், டெங்குவிற்கும் ஏற்படுத்த வேண்டும். 
ஆனால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரோ தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என்று உண்மையை மூடி மறைக்கத்தான் முயல்கிறார்.இதன் மூலம் அரசை காப்பாற்ற என்னும் அவர் மக்களை சாக விடுகிறார்.
குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வரும் போது, தானாக சரியாகி விடும். ஆனால் சரியான மருத்துவம் செய்யாவிட்டால் ,கவனிக்காமல் விட்டால், வாந்தி, தோல் உலர்வது, ரத்த கசிவு, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அப்போது, இளநீர், பால், பழச்சாறுபோன்றவை குடிக்க வேண்டும்.

'கொசு ஒழிப்பில்கவனம் செலுத்துகிறோம்' என, ஒப்புக்கு கூறாமல், சுகாதாரத் துறை, உள்ளாட்சிகள், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளையும் ஒருங்கிணைத்து, தமிழக அரசு, கொசு ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். 

இல்லாவிட்டால், உயிர் பலிகள் அதிகரிப்பது தவிர்க்கமுடியாததாகி விடும்.
டெங்குஏடிஸ் ஒரு எச்சரிக்கை .
* 'ஏடிஸ்' எனும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால், டெங்கு பாதிப்பு வருகிறது. அதை தடுக்க, பகல் நேரத்தில் முழுக்கை சட்டை மற்றும் உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான உடைகளை அணியலாம்.

*அடர் வண்ண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்

*வீடுகளில் நீர்தேங்காதவாறு பாதுகாக்க வேண்டும்; நீரை மூடி வைத்து, காய்ச்சிய பின் குடிக்க வேண்டும்

* மனிதனின் உடலில் சுரக்கும் வியர்வையின் நாற்றம், கொசுக்களை ஈர்க்கும். இதைத் தடுக்க, தினமும் இரண்டு முறை குளிப்பது, வியர்வை நாற்றம் மறைக்க வாசனை திரவியங்களை தடவிக் கொள்வது நல்லது.

* வீட்டின் உள் பகுதியிலும், சுற்றுப்புற பகுதிகளிலும், நாட்கணக்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


* மேல்நிலை தொட்டி, கீழ்நிலைத் தொட்டிகள், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை, வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்,

* வீட்டைச் சுற்றி தேவையின்றி கிடக்கும், பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டை போன்ற பொருட்களை அகற்றி, அழிக்க வேண்டும்.

* நோய் பாதிப்பு தோன்றினால், எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு போன்ற கஷாயம் குடிக்கலாம்.

*காய்ச்சல் தொடர்பான தகவல்களை பெறவும், அளிக்கவும், 044 - 2435 0496; 044 - 2433 4811; 94443 40496 என்ற எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்தில், திருப்பூர் - டாம்கால், சென்னை, திருநெல்வேலி - பாளையங்கோட்டையில் உள்ள, சித்தா மருத்துவமனைகளில், நாள் ஒன்றுக்கு, 1,250 கிலோ நிலவேம்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 
அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும், 1,000 கிலோ நிலவேம்பு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மாநகராட்சி மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, தொடர்ந்து நிலவேம்பு வழங்கப்பட்டு வருகிறது. 
அவற்றை வாங்கி நலமுடன் இருப்போபவர்களும்  அருந்தி வரவேண்டும்.இதன் மூலம் டெங்கு  வரும் முன் காக்கலாம்.
                                            சுகாதார துறை அமைச்சர் நிலை.?
======================================================================================
ன்று,
ஜூலை-26.


  • கார்கில் நினைவு தினம் (1999 )
  • நியூயார்க், அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது(1788)
  • உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது(1803)
  • உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்(1856)
  • மாலத்தீவு விடுதலை தினம்(1965)


கார்கில் போர் 

இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படரும் மிக உயர்ந்த இமயமலை பிரதேசம். 

அழகுக்கு அழகு சேர்க்கும் அழகிய நகரம். திரும்பும் திசையெல்லாம் உயர்ந்து நிற்கும் மலை முகடுகள்.. 
அதை சுற்றி போர்த்தப்பட்டிருக்கும் பனித் திரைகள். பார்க்க பார்க்க பரவசப்படுத்தும் இந்த நகரம் ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மட்டும்தான் கார்கில் வழியாக செல்கிறது. 

கரடு முரடான மலை பிரதேசத்தில் இது ஒன்றுதான் போக்கு வரத்துக்கான ஒரே வழி. தரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்த கோட்டின் இருபகுதியிலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. இரு நாட்டு ராணுவமும் அந்த பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக எல்லையை கண்காணித்து வருகின்றன. துப்பாக்கி குண்டுகளுக்கு கூட அஞ்சாத ராணுவ வீரர்களை குளிர்காலத்தில் பனிக் கீற்றுகள் துளைத்து நடுங்க வைத்து விடும். வெப்பம் (-48) டிகிரிக்கு மாறி விடும்.
குளிரில் பனிக்கட்டிகள் அந்த பகுதியையே சூழ்ந்து விடும். எனவே அந்த குளிர்காலத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் தங்கள் பாசறைகளை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள். குளிர்காலம் முடிந்ததும் மீண்டும் ராணுவம் தங்கள் நிலைகளுக்கு திரும்பும். அதை தொடர்ந்து ராணுவத்தின் ரோந்தும் தீவிரமாகும். இதுதான் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வழக்கம்.

காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடும் பாகிஸ்தானுக்கு எவ்வளவு பட்டாலும் புத்திவராது. கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால் அங்கிருந்து இந்தியாவை எளிதில் தாக்கலாம். இதன் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று பாகிஸ்தான் கனவு கண்டது.  
இந்த ஊடுருவல் முயற்சிக்கு பல முறை திட்டம் வகுத்தார்கள். ஆனால் ஜியா உல் ஹக், பெனாசிர் பூட்டோ ஆகியோர் அதிபர்களாக இருந்தபோது அந்த திட்டத்தை நிராகரித்து விட்டனர். 

ஏற்கனவே 1971–ல் நடந்த போரில் பட்ட சூடும், அவ்வப்போது இந்திய ராணுவத்தின் அதிர வைக்கும் பதிலடிகளும் போரை நினைத்தாலே அவர்களை அஞ்சி நடுங்க செய்தது. ஆனால் 1990–களில் பாகிஸ்தான் தூண்டுதலோடு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிராத தாக்குதல்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவுக்கு வேட்டு வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவானது. இந்த பதட்டத்தை தவிர்க்கவும் காஷ்மீர் பிரச்சினையை அமைதியாக தீர்த்து கொள்ளும் வகையிலும் 1999 பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு பஸ் பயணத்தை தொடங்கி வைத்து லாகூருக்கு பஸ்சில் சென்று வந்தார். 
இந்தியா அன்புடன் நேசக்கரம் நீட்டியது. ஆனால் பாகிஸ்தான் வம்பு செய்தது. 
ஒரு புறம் நட்பு பாராட்டி கொண்டே திரைமறைவில் ஊடுருவல் வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிருந்தது. 1999–ம் ஆண்டு குளிர்காலத்தில் படைகள் கீழே இறங்குவதற்கு பதில் அங்கேயே முகாமிட்டு இருந்தன. ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தனர். 

படைகள் கீழே இறங்கி விட்டதால் காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது. கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர். 130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர். முஷ்கோ பள்ளத்தாக்கு, டிராஸ் அருகில் உள்ள மார்போலா மலை முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதியின் கிழக்கு பகுதியில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி, சியாசின் பனி மலைக்கு தெற்கே அமைந்துள்ள துர்தோக் ஆகிய பகுதிகளை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்தி விட்டன.  

இந்திய ராணுவ நிலைகளை கைப்பற்றியதோடு புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்து விட்டனர். வல்லவர்களாக இருந்தாலும் நம்மவர்கள் கோட்டை விடுவதிலும் கெட்டிக்காரர்களல்லவா? 
கார்கில் விசயத்திலும் அப்படித்தான்!
பாகிஸ்தான் ஊடுருவலை கண்டு பிடிப்பதில் கோட்டை விட்டு விட்டனர். மாடு மேய்ப்பவர்கள்தான் முதலில் இந்த ஊடுருவலை இந்திய ராணுவத்தின் பார்வைக்கு கொண்டு வந்தனர். மலை முகடுகளில் மாடு மேய்க்க சென்றவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாடு மேய்ப்பவர்கள் சொல்லிய தகவலை கேட்டதும் உஷார் அடைந்த ராணுவத்தினர் கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் படாலிக் பகுதிக்கு ரோந்து சென்றனர். அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர். 

அப்போதும் இது தீவிரவாதிகள் செயலாகத்தான் இருக்கும் என்று தான் நமது ராணுவம் நினைத்தது. 
ஆனால் அடுத்த சில நாட்களில் அங்கிருந்து கார்கில் ராணுவ கிடங்கை குறி வைத்து குண்டு வீசப்பட்டதில் ராணுவ கிடங்கு சேதமடைந்தது. அதன் பிறகுதான் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருக்கிறது என்பதை உறுதி செய்தனர். முதுகில் குத்திய பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட பிரதமர் வாஜ்பாய் போர் பிரகடனப்படுத்தினார். தாய் மண்ணை காக்க கார்கில் போருக்கு நமது வீரர்கள் தயாரானார்கள்.  

ஒரு ஆண்டுக்கு முன்புதான் (1998–ல்) 2–வது முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகிற்கே சவால் விடுத்த நமக்கே பாகிஸ்தான் சவால் விடுவதா? என்ற ஆவேசம்.... தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. ஆனால் கார்கில் கரடு முரடான மலை பகுதி! போக்கு வரத்துக்கு ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலை மட்டும்தான் உண்டு. 
ஒரே வழியில் லட்சக்கணக்கில் வீரர்கள் செல்வது... ஆயுதங்கள் கொண்டு செல்வது.... பீரங்கிகள் அணிவகுப்பது... அவ்வளவு எளிதானதல்ல. தாய் நாட்டை காக்க உயிரை துச்சமென மதித்து இளம் இந்திய சிங்க குட்டிகள் மலை முகடுகளில் துள்ளி குதித்தன. மிக உயர்ந்த மலை சிகரத்தில் கடுமையான சவால்களை சந்தித்து நமது ராணுவ வீரர்கள் நடந்து முன்னேறினார்கள்.  
முதலில் ஸ்ரீநகர் – லடாக் தேசிய நெடுஞ்சாலையை மீட்க போராடினார்கள். இந்த போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மலை முகடுகளின் உச்சியில் இருந்து பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழையையும், துப்பாக்கி குண்டுகளையும் கீழே இருந்து சந்தித்து அங்குலம் அங்குலமாக நகர்ந்தார்கள். சாலை முழுவதும் குண்டு வீச்சில் சேதம் அடைந்து கிடந்தது. வழி நெடுக கண்ணி வெடிகளும் மிரட்டியது. 

அவற்றை ராணுவத்தினர் அப்புறப்படுத்தினார்கள். 9 ஆயிரம் கண்ணி வெடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டது. சிறு சிறு குழுக்களாக வெறும் 30 ஆயிரம் வீரர்கள் மட்டுமே போர்க்களத்தில் இருந்தார்கள். படை சிறிதாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சுரம் அதிகமாக இருந்தது. 
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் பாகிஸ்தான் படைகளை பல முனைகளில் புகுந்து தாக்கி துவம்சம் செய்து இருப்பார்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடக்க கூடாது என்ற கட்டுப்பாடு ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் நேருக்கு நேராக தாக்கி அவர்களை ஓட வைப்பது மட்டும்தான் சாத்தியமாக இருந்தது. பகல் நேரத்தில் ராணுவம் நகர்ந்ததால் மலை உச்சியில் இருந்து கவனித்து குண்டுகளை வீசினார்கள். இதனால் இரவு நேரத்தையே தாக்குதலுக்கு தேர்வு செய்தார்கள். அடர்ந்த காடு... முகம் தெரியாத கும்மிருட்டு... கண்களில் தெறித்த கோபக் கனலில் ராத்திரி நேரத்தில் வேட்டையாடினார்கள். 


எதிரிகள் பலரை எமலோகத்துக்கு அனுப்பினார்கள். பாகிஸ்தான் வசம் இருந்த ஒவ்வொரு சிகரத்தையும் நமது ராணுவத்தினர் மிகப்பெரிய போராட்டத்துக்கு இடையே கைப்பற்றினார்கள். மலை உச்சியில் இருந்து தாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தினரை மலை பாறைகளுக்கு இடையே ஊர்ந்தபடி சென்று வீழ்த்தினார்கள். முன்னேறிய ராணுவத்துக்கு வலுசேர்க்க விமானப் படை விமானங்களும் குண்டுகளை வீசியது. ஆனால் உயர்ந்த மலை முகடுகளுக்கிடையே பனி மூட்டத்தில் விமானங்களை செலுத்துவது கடினமாக இருந்தது. 

இந்த போரில் இந்தியா 3 விமானங்களை இழந்தது. மிக் 27 மிக்–21 ஆகிய இரு விமானங்களை இந்தியா இழந்தது. விமானப்படை லெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் சிறை பிடித்தது. எம்.ஐ.17 என்ற விமானத்தையும் சுட்டு வீழ்த்தினார்கள். இதில் விமானத்தில் இருந்த 4 வீரர்கள் பலியானார்கள். போர் உக்கிரமானதே தவிர முடிவுக்கு வரவில்லை. 

தரைப்படைக்கு ஆதரவாக பீரங்கிப்படையும் மலை அடி வாரங்களில் இருந்து எதிரிகள் நிலைகள் மீது குண்டு மழை பொழிந்தது. முற்றிலும் மலை மீது நடந்த மாறுபட்ட போர். இளம் வீரர்களுக்கு புது அனுபவம். இதனால் வீரர்கள் பலர் இன்னுயிரை இழக்க நேரிட்டது. ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். நமது கடற்படையினர் போரின் போக்கை மாற்றினர். எதிரிகளை வீழ்த்த புது வியூகம் அமைத்தனர். கராச்சி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது நமது கடற்படை. ஒரு புறம் பெருளாதார சிக்கல். இன்னொரு புறத்தில் போர். நிலைமையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. 

ராணுவத்துக்கு 6 நாட்களுக்குத்தான் எரிபொருள் இருந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் அலறியது. அமெரிக்க அதிபர் பில்கிளிண்டனிடம் போரை நிறுத்த உதவும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் கெஞ்சினார். இந்திய தரப்பு நியாயத்தை உணர்ந்த அமெரிக்கா உடனடியாக கார்கிலில் இருந்து படைகளை வாபஸ் பெறும்படி எச்சரித்தது.  
இந்திய வீரர்களின் ஆவேச தாக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக இழந்து வந்த பாகிஸ்தான் உலக நாடுகளின் எச்சரிக்கையால் படைகளை விலக்கி கொள்ள முன் வந்தது. இதற்கான அறிவிப்பை நவாஸ்ஷெரீப் வெளியிட்டார். இது அப்போது தளபதியாக இருந்த முஷரப்புக்கு பிடிக்கவில்லை. இதுவே பிற்காலத்தில் ராணுவ புரட்சி நடத்தி முஷரப் ஆட்சியை பிடிக்க வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் படைகள் 80 சதவீதம் வெளியேறிய பிறகும் ஊடுருவிய தீவிரவாத குழுக்கள் போரை தொடர்ந்தது. 

அவர்களை ஒரு வாரத்தில் அடித்து விரட்டி கார்கில் பகுதி முழுவதையும் நமது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். போர் முடிவுக்கு வந்ததாக ஜூலை 26–ந் தேதி இந்திய தேசம் உலகுக்கு அறிவித்தது. இந்த போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்துள்ளது. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக எங்கள் தரப்பில் 357 வீரர்களை தான் இழந்தோம் என்று போலி கணக்கு காட்டியது பாகிஸ்தான். 
ஆனால் 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி விட்டனர் என்ற உண்மையை பிற்காலத்தில் நவாஸ்ஷெரீப்பே ஒத்துக் கொண்டார்.
======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?