விமானத்தை தரையிறக்கும் சக்தி?

இது வேடிக்கையான நிகழ்வாக தெரியலாம்.
ஆனால் ஆங்காங்ககே நம்மில் பலர் அனுபவிக்கும் ,அனுபவித்த நம்மை சுருங்க வைத்த நம்மால் தவிர்க்க இயலா நிகழ்வுதான்.
என்ன  கொஞ்சம் இடம் ,பொருள் மாறி பெரிய அளவில் கலவரமாகி விட்டதுதான் உலக செய்தியாகி விட்டது.

ஒருவாரம் முன்பு டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் ஒரு  அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது.
இதனால் அந்த விமானம் அவசரம்,அவசரமாக தரையிறங்கியது .



துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணி ஒருவரின்  இந்த செயல் அல்லது தாக்குதல் முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ளதான்  வைத்தது.
ஆனால் அவரின் தாக்குதல் தொடரவே  நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. 

இப்படி விமானம் தரையிறங்க காரணம்  "Fart Attack'' (குசு தாக்குதல்) என்று ஆவணங்களில் பதிவானது. 
இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது. 
இந்த தாக்குதலின் மய்யமான  அந்த பயணியின் அப்போது என்ன மனநிலை கொண்டிருந்திருப்பார்.
நிசசயம் ஒரு விமானத்தையே தரையிறங்க வைத்த தனது சக்தியைப் பற்றி பெருமையடைந்திருக்கமாட்டார்.?
அவர்  வேண்டுமென்றே அபான காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார்.
இதற்கு காரணம் என்ன? 
காற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறது? 
இது நோயா? இதை கட்டுப்படுத்த முடியுமா? 
இப்படி பல கேள்விகளை இந்த நிகழ்வு நம்மிடம் உருவாக்கி விட்டது.அதற்கு விடை தேடும் அவசியம் கண்டிப்பாக உள்ளது.காரணம் இந்த அபான வாயு வெளியேற்றம் நம் அனைவருக்குமே உள்ளது.பொதுவான உடலியல்  நிகழ்வு.

ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.
பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார்.
பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பது, வேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடு, இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டது. வாயு அதிகமாகும்போது, அது வாய் வழியாக வெளியேறினால் 'ஏப்பம்' என்றும், மலக்குடல் வழியாக வெளியேறினால் 'குசு' என்றும் அழைக்கிறோம்.

நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. 
நாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது.
உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது.
அதன் வடிவம் மாறும்போது, கடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும், மணமாகவும் உருமாறுகிறது.
உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்:
  • கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது.
  • சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு.


  • கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன.
பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்? வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும். ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும், சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும்.
இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும். 
 உடலில் அழுத்தம் கொடுக்கும் இவ்வாயுவை அடக்க முயற்சித்தால்?
பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாது. 
ஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் சபை நாகரிகம் கருதி நீங்கள் அப்போது  கட்டுப்படுத்தினாலும், அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம்.அது வெளியேறித்தான் தீரும்.


நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டு, காற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம், அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது.
பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, குடல் தசைகள் விரிவடைகின்றன. 
அப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.
நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம்.
இதைத் தவிர, சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும், இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும்.
ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது.
வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். சரி, மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி?
மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால், உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும்.
உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோ, பால் ஒவ்வாமை இருந்தாலோ, பால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம். பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால், உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும்.
உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும், பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால், காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால், திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம், அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும்.


நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள்.

  • சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும். ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம், நன்கு மென்று சாப்பிடவும்.
  • உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும். அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறது. எனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாது, ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
  • சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
  • அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை, லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ், குளுக்கோஸ்), இன்சுலின், நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.


  • சோடா, பீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள், உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது. இவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. எனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர், தேநீர், பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம்.
  • நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றன. புரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன.
  • புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதேபோல, மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும், அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது.

உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லை. அது வெளியாகும் போது மற்றவர்களை மூக்கை பொத்தவும்,சுவாசிக்க சிரமம் ஏற்படும்போதும் நாம் கவலை கொள்ள வேண்டும்.காரணம் குடல் பகுதியில் தொற்று,குடல் புண்கள் இருக்கலாம்.
அதற்காக கவலை கொள்ளவும் வேண்டாம். உணவு முறையையையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும், பொதுவான சில மருந்துகளே போதுமானது.
அடிக்கடியும்,அதிகமாகவும் அபான வாயு  வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் .அதை கவனிக்க வேண்டியது அவசியம்.
உங்களுக்கு காற்று அதிகமாக வெளியேறும் போது, அதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால், கண்டிப்பாக  மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
  • வலி
  • தலைசுற்றல்
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ அதை ஆண்டவன் நம்மை இப்படி சோதிக்கிறானே என்று மனக்கவலையுடன் அலையாமல் அதை சரியான உணவு பழக்கம் மூலம் சரி செய்யலாம்.அது உங்கள் கையை மீறி பிறர் மூக்குக்கு அவர்கள் கை போகவைக்கிறது.அதனால் உங்களுக்கு அவமானம் வருகிறது என்றால் நீங்கள் நிச்சயம் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். 
இல்லையெனில் உங்கள் உடலில் இருந்து வெளியேறும்  காற்று உங்கள்  விமானத்தை தரையிறக்கவோ அல்லது பேருந்தில் இருந்து உங்களை இறக்கி விடவோ வைத்து விடும் அபாயம் உண்டாகலாம்.
=====================================================================================
ன்று,
பிப்ரவரி-26.

  • 2வது பிரெஞ்ச் குடியரசு அறிவிக்கப்பட்டது(1848)
  • பெய்ரூட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின(1984)
  • டிம் பெர்னேர்ஸ், லீ நெக்சஸ் ஆகியோர்  இணைய  உலாவியை அறிமுகப்படுத்தினர்(1991)
  • குவைத் விடுதலை தினம்(1991)
======================================================================================
பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி, மேற்கிந்தியத் தீவுகளின் குட்டித் தீவான, செயின்ட் கிட்ஸ் தீவில் குடும்பத்துடன் பதுங்கிஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கடந்த மாத துவக்கத்தில், நிரவ் மோடி, அவரது மனைவி ஆமி, சகோதரர் நீஷால் மோடி, மாமா சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்றனர். பல அமைப்புகளின் விசாரணை நடக்கும் நிலையில், அவர்களது பாஸ்போர்ட்டை, மத்திய அரசு, நேற்று முன்தினம் இரவு முடக்கிவைத்தது. இதற்கிடையே, மேற்கிந்தியத் தீவுகளின் குட்டித் தீவான செயின்ட் கிட்ஸில், நிரவ் மோடி உள்ளிட்டோர் பதுங்கிஇருப்பதாக தெரியவந்து உள்ளது.அந்தத் தீவில், ஒரு சொகுசு பங்களாவை, நிரவ் மோடி ஏற்கனவே வாங்கி வைத்துள்ளார். குற்ற வாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் பல நாடு களுடன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், செயின்ட் கிட்ஸ் நாட்டுடன் அது போன்ற ஒப்பந்தம் செய்யப் படவில்லை.
மேலும், அந்த நாட்டின் குடியுரிமையை நிரவ் பெற்றுள்ளார். அதனால், அவர் அங்கிருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அவரை நாடு கடத்துவது அவ்வளவு சுலபமில்லை என, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், 15 வங்கிகளில் கடன் வங்கி, 6,800 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, மற்றொரு வைர வியாபாரியான, 'வின்சம் டயமன்ட் குரூப்ஸ்' நிறுவனத்தின் உரிமை யாளர், ஜதின் மேத்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.அப்போது, அவரும், செயின்ட் கிட்ஸ் தீவில் அடைக்கலம் புகுந்தார். 


தற்போது அதே பாணியில் நிரவ் மோடியும் செயல்பட்டுள்ளார்.'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' உரிமையாளர் விஜய் மல்லையாவுக்குப் பின், மிகப் பெரிய வங்கி கடன் மோசடியில் ஜதின் மேத்தா இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்போது இந்தப் பட்டியலில், நிரவ் மோடி முதலிடத்தில்உள்ளார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?