15 லட்ச பழைய கதை.

 ஆண்டுக்கான தகவல் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக நான்காவது செட் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியா பெற்றுள்ளது. அதன்படி, சுவிட்சர்லாந்து 101 நாடுகளுடன் கிட்டத்தட்ட 34 லட்சம் நிதிக் கணக்குகளின் விவரங்களைப் பகிர்ந்துள்ளது.

அடுத்த கட்ட பட்டியல், 2023 செப்டம்பர் மாதம் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.




2019 செப்டம்பரில் தான், சுவிஸ் வங்கிகளிடமிருந்து முதல் பட்டியலை இந்தியா பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியா தற்போது பெற்றுள்ள 4-வது கட்ட பட்டியலில், பல அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள், தனிநபர் சார்ந்த நூற்றுக்கணக்கான கணக்குகளும் அடக்கம்.


இந்த தகவல் என்ன, அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அடுத்து என்ன நடக்கும்?

2018 ஜனவரியில் இரு நாடுகளும் தானியங்கி தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தில் (AEOI) கையெழுத்திட்டன. அதிலிருந்து, சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா பெறும் நான்காவது தகவல் இதுவாகும். இந்தியாவுடனான முதல் பரிமாற்றம் 2019 இல் நடந்தது.

இந்த நிலையில், வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்கும், பணமோசடி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கும், சுவிஸ் ஃபெடரல் அலுவலகம் மிகப்பெரிய அளவில் விரிவான கணக்கை அளித்துள்ளது.


இது போன்று இந்தியா உட்பட 101 நாடுகளில் 74 நாடுகளுடன் தகவல் பரிமாற்றம் பரஸ்பரம் நடந்ததாக சுவிஸ் ஃபெடரல் டேக்ஸ் நிர்வாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், இந்தியா தனது முதல் தொகுதி வங்கித் தகவலைப் பெற்றது.

இந்த நேரத்தில், மத்திய வரி நிர்வாகம், நிதித் தகவலின் தன்மையில் பெயர், முகவரி, வசிக்கும் நாடு, வரி அடையாள எண், புகாரளிக்கும் நிதி நிறுவனம் பற்றிய தகவல்கள் மற்றும் கணக்கு இருப்பு மற்றும் மூலதனத் தகவல்கள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்

AEOIக்கான வழிகாட்டுதல்கள் உலக அமைப்பான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பால் (OECD) அமைக்கப்பட்டுள்ளன.

OECD இன் வழிகாட்டுதல்களின் கீழ், நிதியின் அளவு அல்லது கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படக்கூடாது.

2014 ஆம் ஆண்டில், OECD ஆனது பொதுவான அறிக்கையிடல் தரநிலையை (CRS) உருவாக்கியது, இது ஒவ்வொரு நாடும் நிதி நிறுவனங்களிலிருந்து (FIs) தரவைப் பெறவும், ஒவ்வொரு ஆண்டும் AEOI உடன்படிக்கைகள் இருக்கும் நாடுகளுடன் “தானாக” பரிமாறிக்கொள்ளவும் அனுமதிக்கிறது.

101 நாடுகளைச் சேர்ந்த 34 லட்சம் நிதி கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து 4-வது கட்ட பட்டியலில் பகிர்ந்துகொண்டுள்ளது. இந்திய பணமுதலைகள் மற்றும் இந்திய கார்பரேட் நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருந்துதப்பித்து சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணத்தை பதுக்கியுள்ளன.


இந்தியா தற்போது 78 நாடுகளுடன் மொத்த நிதி மற்றும் வங்கித் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது மற்றும் 107 நாடுகளில் இருந்து அதைப் பெறுகிறது, சுவிட்சர்லாந்து மிகப் பெரிய தரவுகளில் சிலவற்றைப் பகிர்வதாக அறியப்படுகிறது.

முதன்மையாக 100 நாடுகளில் இருந்து வரும் பெரிய அளவிலான FI தரவு காரணமாக, CBDT கடந்த ஆண்டு அதன் 14 புலனாய்வு பிரிவுகளில் வெளிநாட்டு சொத்து விசாரணை பிரிவுகளின் (FAIUs) வலையமைப்பை அமைத்தது.

 வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும்  கணக்குகளுக்கு வரிகணக்குகளாக வைத்திருக்கிறார்களா.வரி செலுத்தியுள்ளார்களா இல்லையா என்பதையும் ஆராய்கின்றனர்.

வரி ஒழுங்காக செலுத்துபவர்கள் ஏன் ரகசியமாக சுவிஸ் உட்பட வெளிநாடுகளில் வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருக்க வேண்டும்.

பணக்காரர்கள் அரசை ஏய்த்து சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் பல்லாயிரம் கோடிகள் உள்ளது.அதை பிடுங்கி இந்தியமக்கள் வங்கிக்கணக்கில் ஒவ்வொருவருக்கும்15 லட்சம் போடப்போவதாகவும் கூறி ஆட்சியைப்பிடித்தவர்கள்  சுவிஸ் வங்கி2019 ம்ஆண்டிலேயே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் பட்டியலை மோடியின் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தப் பின்னரும் இதுவரை அந்த கருப்பணக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.? 

எதுவுமே இல்லை!

அந்த கருப்புப் பண முதலைகளின்  பட்டியலைக் கூட பொதுமக்கள் நடுவில் வெளியிடவில்லை.

சுவிஸ் வங்கியில் கருப்புப் பண முதலைகள் பணம் போட்டால் என்ன? எடுத்தால் என்ன மக்களுக்கு ஒருபயனும் இல்லை.பா.ஜ.க வுக்கு நிதி வருவாய் மட்டுமே உயர்ந்து இமயம் தொட்டுள்ளது என்கிற நிலைதான்.

--------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?