ஆளுநருக்கு

 ஆப்பு

மாநில அரசின் நிர்வா

https://youtu.be/LuxhiKICruA

க விஷயங்களில் தலையிடுவது உட்பட பல்வேறு விதங்களில் ஆளுநர்கள் மூலம் ஒன்றியஅரசு தங்களுக்கு குடைச்சல் கொடுத்து வருவதாக தமிழகம், டெல்லி, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதன் காரணமாகவே

* கடந்த குடியரசு தினத்தின்போது, ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.

* அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர் பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் அறிவிப்பு வழங்கியதும் பரபரப்பானது.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்ததும், சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் மேடையில் அவர் நெருக்கமாக பேசியதும் நடந்தது.

இதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் ஆளுநர் ரவி சற்று அடக்கி வாசித்த நிலையில்,

* கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று, சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையேயான மோதல்கள் சற்று அடங்கி காணப்பட்டன.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் குறிப்பிட்ட சில மூத்த பத்திரிகையாளர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பேட்டி கொடுத்த ஆளுநர் ரவி, கிடப்பில் போடப்பட்டிருக்கும் சில மசோதாக்கள் மீதான தனது எதிர் கருத்துகளை அரசுக்கு தெரியப்படுத்தும் முன்னரே, செய்தியாளர்களிடம் கூறியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என விமர்சனங்கள் எழுந்தன.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள், கடந்த 7 ஆம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய ரவி, "திருக்குறள் ஆன்மிகம், நீதி சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் குறித்துப் பேசுகிறது. திருக்குறளைச் சிலர் அரசியலுக்குப் பயன்படுத்துகின்றனர்" எனத் தேவையே இல்லாமல் திருவள்ளுவரை சனாதனவாதியாகப் பேசியது மீண்டும் சர்ச்சையானது.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திமுக-வின் அதிகாரப்பூர்வ ஏடான 'முரசொலி'-யில் " திருக்குறளை தீர்த்துக் கட்டி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார் போல மேதகு ஆளுநர் அவர்கள். 

தமிழிசையை அசிங்கப்படுத்திய ஆப்.

தினந்தோறும் திருக்குறளை வம்புக்கு இழுத்துக் கொண்டு இருக்கிறார்" என இன்று கவர்னரை மிகக் காட்டமாக விமர்சித்து தலையங்கம் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஆளுநர் மாளிகையில் நேற்று ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் திட்டத்தின் கீழ் 2 நாள் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசிய ஆளுநர் ரவி, " தற்போது திராவிடம் என்றால் தமிழகம் மட்டும் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டும் அல்ல. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது" என கூறியதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

" ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மாணவர்களிடம் விஷக்கருத்தை போதிக்கிறார். இது மிகவும் தவறானது. தமிழ் கலாச்சாரம் இதனை ஏற்றுக்கொள்ளாது" என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையேதான், வருகிற 17 ஆம் தேதியன்று தமிழக சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரில் ஆளுனரை வெளியேற்றக்கோரி தீர்மானம் இயற்ற வேண்டும் என திமுக கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ,

" ஆளுனர் மாளிகை என்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை செயல்படுத்தும் அலுவலகமல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனை,உரிமைகளை பாதுகாக்க தங்கி பணி செய்யும் இடம்.

ஆனால் ஆளுனரான ரவி, அதை தவிர மற்ற சங்கத்துவ பணிகளை செய்வது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகும்.

ஆகவே, வரும் 17 ம்தேதி கூடவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுனரை வெளியேற்றக்கோரி தீர்மானம் இயற்ற வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

எனவே ஆளுநரை அகற்றும் தீர்மானம் அனைத்துக்கட்சிகள் இணைந்து கொண்டுவந்து நிறைவேற்றப்படலாம்.

வழமைப் போல் பா.ஜக,அதிமுக என்ற இரு கட்சிகளும்  எதிர்த்து நிற்கும்.அதிமுக கலந்துகொள்ளாமல்வெளியேறலாம்.

----------------------------------------------------------------

இரட்டை நரபலி


 பயங்கரம்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?