பட்டினி தேசம்?

 

 இலங்கை,நேபாளம், பாகிஸ்தானை
விட பின்தங்கிய இந்தியா!

உலக அளவிலான பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு பட்டியலில் இந்தியா, தனது அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்காளதேஷை விட பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக 'குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்' ( Global Hunger Index in 2022) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இருக்கும் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றைக் கொண்டு, `உலக பட்டினிக் குறியீடு பட்டியல்' ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவருகிறது.

* அயர்லாந்தைச் சேர்ந்த `கன்சர்ன் வேல்ர்ட்வைட்' அமைப்பும் (Concern Worldwide), ஜெர்மனியைச் சேர்ந்த `வெல்ட் ஹங்கர் ஹில்ஃப்' அமைப்பும் (Welt hunger hilfe) இணைந்து, 'குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்' என்கிற தலைப்பில் உலக நாடுகளின் பட்டினி குறித்த ஓர் அறிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றன.

* 5 வயதுக்குக்கீழ் இருக்கும் குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருப்பது,

* உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் உயிரிழப்பு,

* ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது.


* இந்த நிலையில், 121 நாடுகள் அடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் இந்தியா 107-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

* அதே சமயம் இந்தியாவின் அண்டை நாடுகளான 

நேபாளம் 81 , 

பாகிஸ்தான் 99, 

இலங்கை 64 

பங்காளதேஷ் 84 வது 

இடங்களில் உள்ளது.

* கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது.

இந்த பட்டியலில் 121 வது இடத்தில், அதாவது மிக கடைசி இடத்தில் ஏமன் உள்ளது.

 சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

 இந்த நாடுகளின் பட்டினிக் குறியீடு 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், உலக பட்டினிக் குறியீடு அறிக்கையை சுட்டிக்காட்டி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 " கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் இந்தியா தொடர்ந்து பின் தங்கியே வருகிறது. 22. 4 கோடி இந்திய மக்கள் ஊட்டச்சத்துக்குறைபாட்டுடன் உள்ளதாக கருதப்படுகிறது.

* 19.3 சதவீத குழந்தைகள் வீணாகிறார்கள், 35.5 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இந்துத்துவா, ஹிந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது ஆகியவை பசிக்கு மருந்தல்ல.

* உண்மையான பிரச்னைகளுக்கு பிரதமர் மோடி எப்போது தீர்வு காணப்போகிறார்?" என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சில மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ளப் போகிற பா.ஜ.க வுக்கு  இது ஒரு பின்னடைவுதான்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?