பொன்விழாக் காலம்

 1972 அக்டோபர் 17, இதே நாளில்தான் அதிமுகவை தொடங்கினார் எம்ஜிஆர்.

 கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர், அதிமுகவை ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 51 ஆம் ஆண்டு துவங்கி உள்ளது.

திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக, , 30 ஆண்டுகளுக்கு மேல் அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. 

எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அக்கட்சியின் சார்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டை ஆட்சி புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் கொடியேற்றி தனியாக கொண்டாடினார் ஓ.பன்னீர்செல்வம்.

 அதேசமயம், இந்த நன்னாளை சென்னை ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் இருக்கும் பள்ளி கலையரங்கில கொண்டாட விரு்ம்பினாராம் சசிகலா. ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாம்.
 இதனால் ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலை அமைந்திருக்கும் வளாகத்தில் விழா நடத்த வேண்டிய நிலை சசிகலாவுக்கு.

ஜெயலலிதாவின் தோழியாக அறியப்படும் சசிகலாவின் நிலைமை இப்படி என்றால், ஜெயலலிதாவின் மறைவுககு பின்னர் அதிமுக ஆட்சியையும், கட்சியையும் முதல்வராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் வழிநடத்திய இபிஎஸ்சின் நிலை அவரின் ஆதரவாளர்களே நொந்து கொள்ளும்படி ஆகிவிட்டது.

அதிமுக 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை.யொட்டி, எம்ஜிஆரின் ராமாவரம் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டிருந்தாராம் இபிஎஸ். 

இந்த நிகழ்ச்சிக்காக, சென்னை புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகம் சார்பில் நந்தம்பாக்கம் போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டதாம்ய

ஆனால், 'எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதால் வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது' என்று அந்த வளாகத்தில் உள்ள பள்ளி நிர்வாகத்தின் சார்பில் காவல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டதாம்.

இதனால் வேறு வழியின்றி, சென்னை ராயப்பேட்டை, அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கட்சிக் கொடியையும் ஏற்றி அதிமுக நிறுவன தினத்தை கொண்டாட வேண்டியதானதாம் இபிஎஸ்ஸுக்கு.

கட்சியின் நிறுவன நாளை நாம் விரும்பியபடி, நிறுவனர் எம்ஜிஆரின் இல்லத்தில் கொண்டாட முடியவில்லையே... இதுவே நம்ம ஆட்சியா இருந்தா இப்படி நேர்ந்திருக்குமா?
 என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கிறதாம் இபிஎஸ் தரப்பு. 

முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த ஆதங்கம் உள்ளதாக கூறுகின்றன அதிமுக வட்டாரங்கள். இதேபோன்ற புலப்பம் சசிகலா ஆதரவாளர்கள் மத்தியிலும் உள்ளதாம்.
------------------------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?