மகான் அஜ்மல் கசாப்?

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றும் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் தரப்பில் அவருக்கென நியமிக்கப்பட்டுள்ள வழக்குரை0ர் ராஜூராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 

நீதிபதி அப்தாப் ஆலம் முன்பு நடந்த விசாரணையின்போது அவரது வக்கீல் வாதிடும்போது" அஜ்மல் கசாப் மீது தேத்திற்கு எதிரான சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் இந்த குற்றத்தில் கசாப்புக்கு பங்கு எதுவும் இல்லை. கசாப் கொலைக்குற்றவாளியாக கருதினாலும் நாட்டுக்கு எதிரான போரில் ஈடுபட்டார் என்பது நிரூபணம் செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் எதிர்த்து வாதிட முழு உரிமை உண்டு" என்று கூறியுள்ளார்.


கசாப்பை பொறுத்தவரை மும்பை ஐகோர்ட் அவருக்கு மரணதண்டனையை கடந்த 2011 பிப்ரவரி மாதம் 21 ல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 5 முறை தூக்கிலிடும்படி கடும் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது.
 2008 நவம்பர்26ம் தேதிய மும்பையில் கசாப்பும் அவன் கூட்டாளிகளும் நடத்தியதாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.பலர் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் தொலைக்காட்சிகளில் கூட காட்டப்பட்டு கசாப் பிடிபட்ட போதும் கூட அவனது வக்கீல் எப்படி இவ்வாறு வாய் கூசாமல் வாதாடுகிறார்?.

இப்படியே போனால் "கசாப் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகி .மும்பை தாக்குதலில் 166 பேர்கள் இறக்கவில்லை.அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டார்கள்.மற்றவர்களை கசாப்பும் அவனது கூட்டாளிகளும் தனது உயிர்களை மதிக்காமல் காப்பாற்றியுள்ளனர்.
கசாப்புக்கு பரவீர் சக்கர விருது கொடுக்க வேண்டும்"
-என்று கூட கூறுவார் போல் இருக்கிறது.வக்கீல்கள் தனது கட்சிக்காரரை காப்பாற்ற வாதாட வேண்டியதுதான்.
ஆனால் தனது மனசாட்சிக்குக் கூட துரோகம் என தெரியுமளவு கதையை அவிழ்த்து விட வேண்டுமா ?

இன்னும் எத்தனை காலம் தான் கசாப்பை வைத்து காமெடி செய்யப்போகிறார்கள்? இப்படியே போனால் அடுத்த தாக்குதல் வந்து விடும்.பின் அவர்களையும் வைத்து வாதாடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
மறுபடியுமா?

______________________________________________________________________
ரோஜா அரசியல்

காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாக்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது.அதில் அதிக அளவில் பயிரிடும் நாட்களாக கொலம்பியாவும் ஈக்குவடாரும் உள்ளது.கிட்டத்தட்ட அமெரிக்காவின் 80%ரோஜா தேவையை இந்த இரு நாடுகளுமே தீர்க்கிறது.
கொலம்பியாவில் மட்டும் இந்த ரோஜா வளர்ப்பில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதாம்.கிட்டத்தட்ட ஒரு லட்சம் பில்லியன் டாலர்கள் இதில் வருமானம் வருகிறதாம்.
கொலம்பியாவின் முக்கிய பயிரிடலான கோகோ,கொக்கோயின் தஒழிலுக்கு இந்த ரோஜா வளர்ப்பு மாற்றுத்தொழிலாக மாறீயுள்ளது.
ஆனால் இப்போது இந்த 2012 காதலர் தினத்துக்காக கட்டுக்கட்டாகா ரோஜாக்கள் கொலம்பியாவில் உருவாகி வரும் வேளையில் அந்த ரோஜா வளர்ப்பில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துக்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவுக்.அதனால் அதை சூடும் இளம் பெண்கள் புற்று நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்க அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
உண்மையில் கொலம்பியா,ஈக்குவெடார் போன்ற நாடுகளில் இடது சாரி கட்சிகள் பலம் பெற்று வருவதுதான் இந்த புற்று நோய் பூச்சாண்டிக்குக் காரணம் என்று அந்நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கமான வேளாண்முறையிலேயே ரோஜாக்களை பயிரிட்டதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளது.
_______________________________________________________________________________
குறைந்துவரும் ஜப்பான் மக்கட் தொகை.
______________________________________________

ஜப்பானின் மக்கள் தொகை வரவர குறைந்து கொண்டு இருப்பதாகஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானின் தற்போதைய மக்கள் தொகை, 12 கோடியே 77 லட்சம். மக்கள் தொகை குறித்து, அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின், தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 2060 ம் ஆண்டில், ஜப்பான் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையை விட, மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும். இதே நிலை நீடித்தால், 2110ல், 4 கோடியே 29 லட்சமாகி விடும்.
தற்போது உலக அளவில், ஜப்பானின் சராசரி மனித ஆயுள்தான் அதிகமாக உள்ளது. 2010 கணக்கெடுப்பின்படி, சராசரி மனித ஆயுள், 86.39 ஆண்டுகளாக உள்ளது.
 2060ல், பெண்களைப் பொறுத்தவரை, 90.93 ஆண்டுகளாக அதிகரித்து விடும். ஆண்களின் சராசரி ஆயுள் தற்போதைய, 79.64 ஆண்டுகளில் இருந்து, 84.19 ஆண்டுகளாக அதிகரிக்கும். இந்த மக்கள் தொகை குறைவுக்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 

 தற்போதைய ஜப்பானிய இளைய சமுதாயம், தங்களின் வாழ்க்கைக்கும், வேலை வாய்ப்புக்கும், குடும்பத்தை ஒரு பாரமாகக் கருதுவதால்,திருமணம் செய்யவதிலும்,குழந்தைகளைப்பெறுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.அதை ஒரு சுமையாகவே கருதுகின்றனர். கடந்தாண்டு ஏற்பட்ட சுனாமியில், 19 ஆயிரம் பேர் பலியாயினர்.

சுனாமியால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால், பெரும்பாலானோரின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் இளைய தலைமுறையினர் குடும்ப வாழ்வை கண்டு ஒது0குகிறார்கள்.என்று ஆய்வு தெரிவித்துள்ளது.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



பனி கண்டத்தில் தனியே நிற்கும் இந்த கட்டிடம் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் உள்ள முக்கிய விதைகள்,தாவர வகைகள் இதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 
காரணம் இந்த உலகம் அணு யுத்தத்தினாலோ,இயற்கை சீற்றத்தினாலோ பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட அழிவை சந்தித்தால் இவ்விதைகளை,தாவர வகைகளை மீண்டும் பயிரிடுவதன் மூலம் உலகை மறு உருவாக்கம் செய்யத்தான்.
அதற்கு பனி படர்ந்த கண்டத்தி இந்த பாதுகாப்பான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.நாம் பார்ப்பது அதன் வாயிற் பகுதியைத்தான்.கட்டிடம் பாதுகாப்பாக பாறைகளைக்குடைந்தது போல் கட்டப்பட்டுள்ளது.
_______________________________________________________________________________
ரூபிக் கியூப் மூலம் உருவாக்கப்பட்ட ஓவிய0கள்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?