எச்சையே உனக்கு பச்சை.........

திடீரெனஅரசியலில் புகுந்து  யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரும் உயரத்துக்குச் சென்றவர் சசிகலா புஷ்பா. 
இவர் சில மாதங்களுக்கு முன் திருச்சி சிவாவை விமானநிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தார், இதனால் தனக்கு அ.தி.மு.க-வில் நல்ல பெயர் கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் கிடைத்ததோ கட்சிப் பதவி பறிப்பு.
ஜெயலலிதா, தன்னை அறைந்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே, அனைவர் முன்னிலையிலும் கூறினார். சசிகலா புஷ்பாவுக்கு அ.தி.மு.க-வால் போதாத காலம் ஆரம்பித்தது. சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த இளம்பெண் பானுமதி மற்றும் அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகிய 2 பேரும் சசிகலா புஷ்பா குடும்பத்தினரால் தங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது, பண மோசடி வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் சசிகலா புஷ்பா மீது பாய்ந்தன. அதேசமயம் சசிகலா புஷ்பாவும், 'ஜெயலலிதாவால் எனக்கு பெரிய ஆபத்து இருக்கிறது' என்று போலீஸில் பதிலுக்கு புகார் செய்தார். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
20 நாட்களுக்குப் பின்னரும்  எந்த தகவலும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. 
இதுவரை எந்த அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும், ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை, அவ்வளவு ஏன் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாம் தளத்துக்கே யாரும் செல்ல முடியாத சூழல் உள்ளது.
கடந்த, இரண்டு தினங்களுக்கு முன் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சசிகலா புஷ்பா, "அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்கூட, முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை. 
அப்படியானால் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பது யார்? முதல்வருடன் மருத்துவமனையிலேயே தங்கியுள்ள சசிகலாதான் அதிகாரிகளுக்கு கட்டளை இடுகிறாரா? 
எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு தனி நபர் எப்படி அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முடியும்?. 
இங்கு நடப்பது ஒன்றும் மன்னராட்சி இல்லை. ஜனநாயக நாட்டில், தனி நபர்களால் அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மேலும் ஜெயலலிதாவைச் சுற்றி மிகப்பெரும் சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவை வெளிவராமல் பதுகாக்கப்படுகின்றன. 
இதுகுறித்து பிரதமர் உடனடியாக தலையிட்டு தீவிர விசாரணை நடத்துவதுடன், மக்களுக்கு உண்மை நிலையைச் சொல்லவேண்டும்" எனக் கூறினார்
இதையடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது எம்.ஜி.ஆர்' பத்திரிகையில் "சாக்கடை புஷ்பாவின் 'பூக்கடை' சமாச்சாரங்கள்!" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. 
அதில், "எச்சையே உனக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை பிச்சையிட்டது யார்? 
ஆனால் பகையாளியோடு உறவாடி, கூர் தீட்டிய மரத்துக்குக் குந்தகம் செய்கிறது, நன்றி கெட்ட உன் நடத்தை. போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன்... என்பதுதான் பொழுதெல்லாம் உன்கூலி பிழைப்பு..." என்று, ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரையில் உனது பழைய பூக்கடை சமாச்சாரங்களை நீயாகவே முன்வந்து தோண்டி எடுக்கச் சொல்கிறாய்" என்பது போன்ற ரீதியில் சசிகலா புஷ்பாவின் கடந்த கால வாழ்க்கை குறித்து, கடுமையாக தாக்கி எழுதப்பட்டுள்ளது.
'' 'நமது எம்.ஜி.ஆர்.' பத்திரிகையில் இதுபோன்றதொரு  கட்டுரை வந்திருக்கிறது என்றால், அ.தி.மு.க-வினருக்கு சசிகலா புஷ்பாவின் பழைய பூக்கடை சமாச்சாரங்கள், அதாவது போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன், போன்றவை பற்றியெல்லாம் கண்டிப்பாகத் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். சசிகலா புஷ்பாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும், அவரை ஏன் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்? 
எதற்காக மேயர், கட்சியின் மகளிர் அணிச் செயலாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள்  கொடுக்கப்பட வேண்டும்?
தற்போது சசிகலா புஷ்பா யாரையோ பகைத்துக்கொண்டதால், அவருக்கு எதிராக வழக்குகள் போடுவதும், மிரட்டுவதும், பதிலுக்கு அவர் அறிக்கை விடுவதும், பேட்டி கொடுப்பதும் தேவைதானா? 
பழைய பூக்கடை சமாச்சாரங்கள், அதாவது போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன் " என்று இந்த குழாயடிச்சண்டையிலே ஏகப்பட்ட சமாச்சாரங்கள் வரும் போலிருக்கிறது.
இந்த பூக்கடை வில்லங்கங்கள் தெரிந்துதானே அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார்.?

காபிபோசா கடத்தல் காரர் சரவணபெருமாளுக்கும் இப்படித்தானே பதவி வழங்கப்பட்டது.

விவாகரம் பெரிதாக பத்திரிகைகளில் வந்ததும் பறிக்கப்படது.

சசிகலா புஷ்பா விவகாரங்களை நமது எம்.ஜி.ஆர்.தோண்டினால் அது அவர்கள் தலையில் அவர்களே மண்ணை போட்டுக்கொள்வது போல்தான்.

காரணம் சசிகலா புஷ்பா சாமானியப்பட்டவர் அல்ல.அவரை பின்னிருந்து இயக்குபவர்கள் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள்.அவர்க கை வ்சமும் ஜெயலலிதா,சசிகலா விலலங்க ஆதாரங்கள் அனேகம் இருக்கிறது.

அப்படி இல்லாமல் ஜெயலலிதாவை வந்து பார் என்று சவால் விட முடியுமா?

அதற்கு இது வரை ஜெயலலிதா வாயை திறந்து பதிலளிக்காமல்  இருப்பதையும் கவனியுங்கள்.
அதிமுக ரத்ததின் ரத்தங்கள் தங்கள் ரத்தம் கொதிப்பதை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் இவர்கள் பலான சண்டையில் இருவர் அந்தரங்கங்களும் மக்கள் மத்தியில் நாறி விடும்.

இன்றைய அதிமுக கட்சி,ஆட்சி இருக்கிற இக்கட்டான சூழலில் இது தேவையா?

==========================================================================================
தேவையற்ற பழையதுணிமூட்டை

காங்கிரசு திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறது.
ஆனால் இன்றைய சூழலில் திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு போய் என்ன செய்யப் போகிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும்.


ஜெயலலிதாவை ஆதரித்து பேசுவதால்,ராகுல் ஜெயலலிதாவை தனிவிமானத்தில் பறந்து வந்து சந்தித்ததால் அதிமுக தங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்,உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாம் என்று நம்பினால் அவர்களை விட தார்ப்பாயில் வடிகட்டிய ----- யாரும் இருக்கமுடியாது.

இன்றைக்கு மக்கள் நலக் கூட்டணியாக அரசியலில் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பெட்டிக்கடைகாரர்கள் அதிமுக கூட்டணியில் இருந்து பிடறியை பிடித்து விரட்டப்பட்டவர்கள்.அரசியல் தரகர் வைகோ மூலம் திமுகவுக்கு எதிராக கடையை திறந்து வைத்து போனியாகமல் இருப்பவ்ர்கள்.


அவர்களுடன் வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம்.ஆனால் அங்கிருந்து துண்டைக் காணோம்,துணியை காணோம் என்று ஓடியவர்கள்தான் முன்னாள்காங்கிரசு வாசன்கட்சி, நடிகர்விஜய்காந்த் கட்சிகள்.

நீங்கள் தப்பித்தவறி அதிமுகவுடன்கூட்டணி சேர்ந்தாலும் திமுகவிடம் வாதாடி பெற்றது போல் கவுரவமானஇடங்களிப்பெறமுடியாது.திருவோட்டில்போட்ட்டதை வாங்கிக்கொண்டுபோகவேண்டும்.


அத்துடன்உங்கள்கை சின்னத்துக்குஅங்குவேலை இல்லை.எல்லாமே இரட்டை இலை.அவர்கள்சின்னத்தில்கருணாஸ்போன்றுநின்றுசட்டமன்றத்துக்குஒருவேளை தப்பித்தவறிபோனாலும்அம்மா பரணியை பாடுவதும்,மேசையை தட்டுவதும்தான்உங்கள்மககள்தொண்டாகஇருக்கும்.

அங்குபோய் ஜெயலலிதாவுக்கு ஒத்து நாதஸ்வரம் ஊதமுடியாதுஎன்றெல்லாம் அடம்பிடிக்கமுடியாது.
பாடச் சொன்னால் பாடனும்,ஆடச் சொன்னால் ஆடணும், நாதஸ்வரம் ஊதச் சொன்னால் ஊதியே ஆகணும்.
இவை எல்லாம் நாங்கள் காங்கிரசுக்காரர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.தமிழ் நாட்டில் இருக்கும் சிறுகுழந்தைக்கும் தெரிந்த விசயம்.


அதுவும் காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர் அனுபவம் ரொம்ப அதிகம்.


இவைகளை எல்லாம்தெரிந்தே திமுகஎதிர்ப்பை எடுத்துக்கொண்டு அரசியல் செய்ய எண்ணும் காங்கிரசுக்கு ஒரு உண்மையும் தெரிந்திருக்கும் அது திமுகவுக்கு காங்கிரசு தேவையற்ற பழையதுணிமூட்டைதான்.


அதை எப்போது தூக்கிஎறிவதுஎன்றநினைப்பில்தான்திமுகதொண்டன்ஒவ்வொருவரும் காத்திருக்கிறார்கள்.



கலைஞரின் தேவையற்றபெருந்தன்மையால்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

கோபுரகலசத்தில்ஒட்டியிருக்கும் எச்சிலை தன்னால்தான்கோபுரம்அழகாயிருக்கிரதுஎன்றுஎண்ணினால்அதற்குஅடுத்துவரும்காற்றே புத்திபுகட்டிவிடும்.

கோபுரம்திமுகழகம் என்றஉண்மையை காங்கிரசார் மறந்துவிடக்கூடாது.
ராகுலை வைத்து வாக்குகளை குவிக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் துடைத்து எறியுங்கள்.


உங்கள் ராகுல் தமிழகத்துக்கு திமுககூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வந்தால் கிடைக்கிற வாக்குகளும் திமுகவுக்கு கிடைக்காமல்தான் போகும்.இதுதான் வடமாநிலங்கள் காட்டிய உண்மை.


"ராகுலை கட்சியை விட்டு விலகிப் போகச் சொல்லுங்கள்.அவர் இருந்தால் காங்கிரசு காணாமல் போய்விடும்"
இதை சொன்னது உ.பிரதேச காங்கிரசு தலைவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


=====================================================================================
ன்று,
அக்டோபர்-14.
  • உலக தர நிர்ணய தினம்

  • சிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)

  • இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)

  • விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்த மேற்கொள்ளப்பட்டது(1968)

======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?