வறட்சியிலும்,வெட்கையிலும் வெந்து கொண்டிருக்கையில்

தமிழகத்தில் இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தை கண்டித்தது போல் நண்பர் பேசினார்.அவர் பின்புலம் அதிமுக.
இவர்களுக்கு திமுக தலைமையில் நடக்கும் வேலைநிறுத்தம் வெற்றி பெருகிறதே என்ற பொறாமை.
அதேபோல் பாஜக அனுதாபிகளும் பேசினார்கள்.
இவர்களுக்கு ஜெயலலிதா இல்லா அதிமுகவை வளைத்துப்போட்டு பாஜகவை வளர்க்கப்பார்த்தால் திமுக புத்துணர்ச்சியுடன் வளர்ந்ததே என்ற கவலை.
எனக்குள்ள வருத்தம் இவர்கள் யாருமே மனிதன் என்ற அளவில் சிந்திக்காமல் கடசி அளவிலேயே புத்தியை மட்டுப்படுத்திக் கொன்டு சிந்தனையை மேயவிடுவதுதான்.
சுய புத்தி,சிந்தனையே இல்லாமல் ஆகிவிட்டது இவர்களுக்கு.
கலைஞர் ஊழல் செய்தார் என்று சொல்லும் இவர்கள் யாருமே எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோர் செய்த ஊழல்களை கணக்கிலேயே கொள்வதில்லை.இவர்கள் மட்டுமல்ல இதைப்போல் பொது புத்தி பரவலாக உள்ளது.
சர்க்காரியா ஆணையம் விசாரணையின் ஊழல் அளவு வெறும் 14 லட்சம்.அதுவும் கூட ஆணைய முடிவில் நிரூபிக்க முடியாமல் அறிக்கையை கொடுத்தது.
அன்றைய ஆளுங்கட்ச்சிகளை திருப்திப்படுத்த ஊழல் அறிவியல் முறையில் நடந்துள்ளதால் நிரூபிக்க முடியவில்லை என்ற வாசகம் திணிக்கப்பட்டு கீழே விழுந்து மண் ஒட்டா மீசையாக காட்டப்பட்டது.
ஆனால் எம்ஜிஆர் ஊழல் மீது ஏற்ப்படுத்தப்பட்ட ரே ஆணையம் ஊழல் நடந்தது உண்மை என்று கூறி அறிக்கை அனுப்பப்பட்டது.ஆனால் அதற்குள் எம்ஜிஆர் மரணித்து விட்டதால் ஜெயலலிதாவை போல் அவரும் தப்பி விட்டு புனிதராகி விட்டார்.
எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஊழல்கள் நிரூபிக்கப்பட்டவை.இதை ஜெயலலிதா இருமுறை சிறைக்கு கூட சென்று வந்து விட்டார்.
ஆனால் இங்குள்ள சில சிந்தனை சிற்பிகள் கலைஞ்சர் தான் ஊழல் வாதி என்றும் எம்ஜிஆர்,ஜெயலலிதா மனிதப்புனிதர்கள் என்றும் சட்டையை கிழித்துக்கொண்டு அலையும் அளவுக்கு தத்துவ விசாரங்கள் புரிகிறார்கள்.
இதற்கு முக்கிய ஊக்கிகள் பார்ப்பன ஊக்கங்கள்தான்.
அவை கொஞ்சம் கொஞ்சமாக திமுக எதிர்ப்பை மக்கள் மனதில் எதிர்ப்பு செய்திகளை வெளியிட்டு,வெளியிட்டு பதியமிட்டுள்ளன.
அதற்கு நாம் தமிழர்கள்தான் என்று திரியும் தமிழர் ஊடகங்களும் துணைபோகின்றன.அதற்கு தேவை அரசு விளம்பர எச்சில்  காசு.
வேலை நிறுத்தம் நமது அடிப்படை தேவையான விவசாயம் நம் கண்முன்னே அழிந்து போவதை தடுக்கத்தான்.
இதற்கு தேவையான காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக அரசு திமுகவை மட்டுமே குறை சொல்லிக்காலத்தை ஓட்டுகிறது.
அதை வைத்துக்கொண்டு மோடி பாஜக அரசு தமிழத்தின் உரிமையை பெற்றுத்தராமல் மவுனிக்கிறது.
கவுதமி உட்பட்ட நடிகைகளை சந்திக்க கால ஒதுக்கும் பிரதமர் மோடி மக்கள் உயிர்ப்பிரசனை தொடர்பாக , காவிரி பிரசினை தொடர்பாக வருபவர்களை சந்திக்கவே மறுக்கிறார்.
அத்துடன் மட்டுமா.காவிரி நீரையும் தரவழி செய்யாமல், இருக்கும் கொஞ்ச, நஞ்ச விவசாய நிலங்களையும் மீத்தேன்,கார்போ நைட்ரேட் எடுக்கிறேன் என்று அழிக்கும் நடவடிக்கைகளை மோடி அரசு விரைவு படுத்துகிறது.
கேட்டால் மக்கள் நலத்திட்டமாம்.விவசாயம் எதிரி நாட்டுக்கான திட்டமா?
டெல்லியில் மாதக்கணக்கில் தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.அவிழ்த்துப்போட்டு அலையும் போராட்டம்வரை செய்தும் மோடி கண்டு கொள்ளவில்லை.
ஆனால் நிர்வாணப்போராட்டம் நடக்கையில் டெல்லியில் காரில் பவனி வரும் பிரதமர் வழியில் சிறுமியை கண்டாராம்,வண்டியை நிறுத்தி அச்சிறுமியை அழைத்து ஐந்து நிமிடங்கள் நலம் விசாரித்து கனிவாக பேசினாராம்.இதைக்கண்ட மக்கள் ஆரவாரம் செய்து மோடிஜியை பாராட்டினார்களாம்.
என்ன ஒரு அசிங்கமான செயலை பிரதமர் செய்கிறார்.
இந்திய தலை நகரில் மோடியின் ஆடசியில் விவசாயிகள் நிர்வாணமாக போராடுகிறார்கள்.
இந்த நிர்வாணம் யாருக்கு அவமானம்.
காரை நிறுத்தி சிறுமியை கொஞ்சும்  பிரதமர் என்ற நபருக்குத்தானே.உலக அளவில் டெல்லியில் நடக்கு செய்தி பரவாதா?பின் இ வர் எப்படி தனது அகலமார்பை நிமிர்த்தி வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா செல்வார்?
இருக்கும் சில பாஜக அனுதாப மனிதர்களே விவசாயிகள் மட்டுமல்ல வஞ்சிக்கப்படுவது .ஜல்லிக்கட்டு,மீத்தேன்,காவிரி நீர்,முல்லைப்பெரியாறு,போன்றவற்றில் மத்திய அரசு கண்டு கொள்வதே இல்லை.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காத மோடிதான்,விவசாயக்கடன் தள்ளுபடியில் அரசு வங்கிகளுக்கும் விதிவிலக்கில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்னதை கருத்திலே கொள்ளாத மோடிதான்  ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டுகிறார்.
விவசாயிகள் பிரச்னையைத்தீர்க்காத மோடி தமிழ எலலைக்குள் ஆங்கில  எழுத்துக்களை அழித்து விட்டு மைல் கற்களில் இந்தியை தெறிக்கவிடுகிறார்.
மக்களவையில் குடியரசுத்தலைவரும் ,அமைச்சர்களும் இந்தியில்தான் பேச வேண்டு என்று உத்திரவிடுகிறார்.
தமிழகம் வறட்சியிலும்,வெட்கையிலும் வெந்து கொண்டிருக்கையில் டெல்லி மன்னன் மோடி புல்லாங்குழலை இசைக்கிறார்.
அம்பானி,அதானி,டாடா,போன்ற கார்ப்பரேட்களுக்கு 4.50 லட்சம் கோடிகளை வரிச்ச்சலுகைகளாக தந்த மத்திய மோடி அரசு விவாசாயிகள் கடன் 10000 கோடிகளை தள்ளுபடி செய்ய மாட்டடேன் என்று வீம்பு செய்கிறது.
அரசியை அம்பானி தொழிற்சாலையில் உற்பத்தி செய்து தர ஒப்பந்தம் போட்டுள்ளாரா?
மோடியை பற்றி மட்டுமே குறை சொல்லி இங்குள்ள ஆட்ச்சியாளர்களை பற்றி ஒன்றும் சொல்லாமல் போவது போல் தெரியலாம்.
இங்கு தலைமையிழந்த நாற்ப்பது திருடர்கள் கும்பல் நாற்காலிக்கு அடித்துக்கொண்டிருக்கின்றன.
மனிதர்களாக,அமைச்சர்களாக இருந்தால் ஏதாவது கூறலாம்.
இவர்களோ அதிமுகவினர்.
தலைவி சொத்துக்குவிப்பு குற்றவாளி ஜெயலலிதா இறந்த பின்னர் சின்னம்மாவை தொழுதனர்.அவரும் உள்ளே போக இப்போது மாற்றாந்தாயாக மோடியின் பாஜக தான் உள்ளது.
இங்கு நடப்பது அதிமுக ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி.
எனவே நாம் பாஜகவை மட்டும் குற்றம் சாட்டினால்  போதுமானது.
==========================================================================================
ன்று,
ஏப்ரல்-25.
  • உலக  மலேரிய விழிப்புணர்வு நாள் 
  • னொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த தினம்(1874)
  • அமெரிக்கா, ஸ்பெயின் மீது போரை அறிவித்தது(1898)
  • போர்ச்சுகல் விடுதலை தினம்(1974)
=========================================================================================        அத்வானியை ஓரங்கட்டியது போல் மோடியை புறந்தள்ள கவ்டில்யர்கள் வேலைகள் ஆரம்பமாகி விட்டதாம்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?