வரிசை இத்துடன் முற்று பெறுமா?

கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார், 51, ஏப்., 23ம் தேதி அதிகாலை, இரு வாகனங்களில் வந்த மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

உடனிருந்த மற்றொரு காவலாளி, கிருஷ்ண பகதுாரை தாக்கி, கை, கால்களை கட்டிப் போட்டு, எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல், மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா பயன்படுத்தி வந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஏதோ பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்றது.


முக்கிய ஆவணங்களை தேடியே இக்கும்பல் கொடூர கொலையை நிகழ்த்தியது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

குற்றவாளிகள் தப்பிய வாகனங்களின் விபரங்களை, முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு  கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் திரட்டிய போலீசார், கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்த, சதீஷன், ஷிபு மற்றும் சந்தோஷ் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

யாரும் எளிதில் புகை முடியாத மர்மக்கோட்டையான ஜெயலலிதா கோடநாடு பங்களாவில் அடிக்கொரு 
கண்காணிப்பு  கேமரா பொருத்தப்பட்டு காண்காணிக்கப்பட்டு வந்தது.
ஆனால் கொள்ளை சம்பவம் நடக்கும் வேளையில் எல்லா கண்காணிப்பு  கேமராக்களும் முடங்கிப்போயிருந்தது மர்ம குடிசை மேலும் வலுவாக்கியுள்ளது.

யாரோ பெரும் புள்ளியின் தலையிட்டு இல்லாமல் இருக்காது எனக்கூறும் காவல்துறையினர் அப்போலோ மருத்துவமனை கண்காணிப்பு  கேமராகள்  முடக்கப்பட்டதைப் போல் என்று  முணுமுணுக்கின்றனர்.
 விசாரணையில், கோடநாடு எஸ்டேட் பங்களாவில், ஜெயலலி தாவின் கார் டிரைவராக சில காலம் பணி யாற்றிய சேலம், இடைப்பாடியைச் சேர்ந்த கனகராஜ், 36, என்பவருக்கும், கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில், சேலம், ஆத்துார் அருகே, உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பலத்த காயங்களு டன் சடலமாக அவர் கிடந்தார். இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, கார் மோதி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


அதேநேரத்தில், கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய குற்றவாளி, கோவையிலி ருந்து பாலக்காடு செல்லும் வழியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார். 

இவர், கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள, இரிஞ்ஞாலக்குடா பகுதியைச் சேர்ந்த, சயான், 35; கோவை, குனியமுத்துாரில் உள்ள பேக்கரி யில் பணியாற்றி வருகிறார்.இவர் தன் மனைவி வினுப்பிரியா, 30, மகள் நீலு, 5, ஆகியோருடன், கோவை யில் இருந்து நேற்று காலை, 6:00 மணி அளவில் காரில் கேரளாவுக்குச்சென்றார். 

பாலக்காடு மாவட்டம், கண்ணாடி என்ற இடத்தை கடக்க முயன்ற போது, சரக்கு லாரி மீது மோதி விபத்தில் சிக்கினார். மனைவி வினுப்பிரியா, மகள் நீலு, சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சயான் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 இந்த சம்பவத்திலும் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர்களில், இரு முக்கிய நபர்கள், ஒரே நாளில் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் உயிருக்கு போராடுகிறார். இவரது மனைவி, மகள் பலியாகியுள்ளனர். 

இது, இவ்வழக்கை விசாரிக்கும் நீலகிரி மாவட்ட போலீசாரை அதிர்ச்சியில் தள்ளி யுள்ளது. இக்கொலை வழக்கை விசாரித்தால், இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் அதிகாரிகள்
மறைந்த முதல்வர், ஜெ.,வின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சியாகவே, கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்திருப்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. 

தற்போது, முக்கிய குற்றவாளிகள் என, சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியுள்ளனர். 

மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை யில் இருந்த போது, சென்னையைச் சேர்ந்த கார்டனுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒரு வர், கோடநாடு எஸ்டேட்டிற்கு வந்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்று விட்டதா கவும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது. 

பாலக்காட்டில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்த சயான், கோவை குப்புசாமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நரம்பியல் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வழக்கில் தேடப்பட்ட, கேரளாவைச் சேர்ந்த சயான் என்பவர், பாலக்காடு மாவட்டம், கண்ணாடி என்ற இடத்தில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்து, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
இவரது மனைவி வினுப்பிரியா, ஐந்து வயது மகள் நீலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டு உள்ளன. வினுப் பிரியாவின் கழுத்தில் ஆழமான கத்திக்குத்து போன்ற காயம் உள்ளது. 

விபத்தின்போது, இடிபாடுகளில் சிக்கியதால் இந்த காயம் ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் இறந்தாரா என்பதும், பிரேத பரிசோதனையின் முடிவில்தான் தெரியவரும்.
 சயான் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்பதால், கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, மரண வாக்குமூலம் பெற போலீஸ் உயரதிகாரிகள் முடிவு செய்தனர். 

இதன்படி, கோவை, ஜே.எம்.எண்.5 மாஜிஸ்திரேட் செல்வக்குமார் நேற்று காலை, மருத்துவமனைக்கு நேரில் வந்து, சயானிடம், ரகசிய வாக்குமூலம் பெற்று, பதிவு செய்தார். கோடநாடு கொலை வழக்கில் சயானின் வாக்குமூலம், முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.

அப்போலோ சிகிசசை ,ஜெயலலிதா மரணம் ,சிறுதாவூர் பங்களா தீவிபத்து வரிசையில் கோடநாடு இணைந்துள்ளது.வரிசை இத்துடன் முற்று பெறுமா அல்லது தொடருமா என்பது  கோடி ரூபாய் கேள்வி.

கோடநாடு எஸ்டேட் கொலையைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளன. 
கோடநாடு எஸ்டேட் மர்மங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனில், கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை, கோத்த கிரி போலீசாரிடம் இருந்து, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர். 

 இதனால், கொலையில் தொடர்புடைய புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
சிபிஐக்கு போகாதவரை உண்மை வெளியாகாது எனத்தெரிகிறது.திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு போல்தான் மாமாங்கமாக விசாரணை நடக்கும் .
=============================================================================================
ன்று,
ஏப்ரல்-30.
  • ஜெர்மனி தந்தையர் தினம்
  • இந்திய திரைப்படத் துறையின் முன்னோடியான தாதாசாஹிப் பால்கே பிறந்த தினம்(1870)
  • வியட்நாம் விடுதலை தினம்(1975)
  • திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1982)
  • ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்தது(1999)
==============================================================================================

இந்திய குறிப்பாக தமிழர்களின் அறிவியல் திறனை சீனப்பத்திரிகைகளே அதிர்ந்து வெளியிடுமளவு செய்த அண்ணன்  செல்லூர் ராஜுக்கு "ஜெ"





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?