தொடர்ந்து மண் விழும்


அகமது பட்டேல்

குஜராத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸின் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலத்திலிருந்து மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடம் காலியாக இருந்ததால், அந்த இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதேபோல், காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர்.

இதனிடையே, அவற்றில் ஒருவரான பல்வந்த்சிங் ராஜ்புட்டுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கும், அகமது பட்டேலுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.  
இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கட்சி மாறுவதை தடுப்பதற்காக, அவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே, நேற்று அங்கு மாநிலங்களவை பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 
இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்ததாக தெரிவித்தனர். 
 குஜராத் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு வாக்களித்ததாக, காங்கிரஸைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் போலா பாய் கோஹில் மற்றும் ராகவ் பாய் பட்டேல் ஆகியோர் அமித் ஷாவிடம் பகிரங்கமாக தெரிவித்தனர். 
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 
இதனிடையே, "அவர்கள் விதிமுறையை மீறி யாருக்கு வாக்களித்தோம் என்று தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களின் வாக்கை செல்லாது" என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு அளித்தது.
ஆனால் பாஜக அவர்கள் வெளியே கூறவில்லை.அப்படி கூறியிருந்தாலும் தவறில்லை.என்று தேர்தல் ஆணையத்திடம் வாதிட்டது.
மேலும் அமித் ஷாவிடம் அவர்கள் கூறியதாக காங்கிரஸ் சொல்லுவது பொய் என பாஜக தலைவர் கூறினார்.
ஆனால் அவர்கள் அப்படி கூறியதற்கான காணொலி சட்டமன்ற காமிராவிலேயே பதிவாகியிருந்ததை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் பார்வையிட வலியுறுத்தியது.


இதையடுத்து அவர்களின் வாக்கு செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
இதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. 
அதில் காங்கிரஸ் அகமது பட்டேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
இவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர்.
அந்த காரணத்துக்காவே பாஜக இவரை தோற்கடிக்க குதிரைப்பாராம்,மிரட்டல்,கடத்தல் என அனைத்து சட்டவிரோதங்களையும் குஜராத்  காவல்துறை அதிகாரிகள் மூலமாகவே செய்தும் மண்ணைக்கவ்வியது .
இது பாஜக அகண்ட பாரதத்தையும் ஆளும் பாஜக எண்ணத்தில் முதல் மண்.
தொடர்ந்து மண் விழும் என்றே அவதானிக்கலாம்.


இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டது, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
‘‘ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்துடன் வெளியாகும் ரூபாய் நோட்டுகள் ஏன் மாறுபட்ட அளவுகளை கொண்டுள்ளன?” என சரத் யாதவ் கேள்வியெழுப்பினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஒ பிரையன் உள்பட சிலஉறுப்பினர்களும் 500 ரூபாய் நோட்டுகளை காட்டினர். 
உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் வெவ்வேறு அளவில் இருப்பதாக உறுப்பினர்கள் காட்டினர்.
இவ்விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அருண் ஜெட்லி விளக்கமளிக்க மறுத்துவிட்டார். 

எந்தவொரு காகிதத்தையும் காட்டுவதற்கு அவை விதிமுறைகளில் இடமில்லை என்றும்; பூஜ்ஜிய நேரத்தை எதிர்க்கட்சிகள் தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆனால், 2 வகையான ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டது தொடர்பாக அவர் பதிலளிக்கவில்லை.


ஒன்று நாட்டுக்கு; மற்றொன்று பாஜக-வுக்கு...

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கபில் சிபல் பேசுகையில், “நாங்களும் இந்த நாட்டை ஆண்டிருக்கிறோம்; ஆனால்ஒருபோதும் இரண்டு விதமான ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது இல்லை; உண்மை என்னவென்றால், இந்த 2 வடிவங்களில் ஒன்று ஆளும் கட்சிக்காகவும், மற்றொன்று பிறருக்காகவும் அச்சிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது” என்று குற்றம் சாட்டினார். 
மேலும், மத்திய அரசு உயர் மதிப்புடைய ரூபாய்நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது ஏன்? என்பதற்கான காரணத்தையும் எதிர்க்கட்சிகள் தற்போது தெரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அவரது கருத்தை வழிமொழிந்த மற்றொரு காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத், “பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல்” என்று குற்றம் சாட்டினார். 
அதற்கு சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த ரூபாய் நோட்டுக்களை எங்கிருந்து பெற்றீர்கள்? என கபில் சிபலிடம் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார். 
இப்படி அச்சிட்டதை எதிர் கொள்வதை விடுத்து எங்கிருந்து இவை கிடைத்தது என்பது,
தமிழகத்தில் குட்கா பரவலாக கிடைக்கிறது என சட்டமன்றத்தில் திமுகவினர் குட்காவை காண்பிக்க அதை பற்றி விசாரிப்பதாக தடுப்பதாக  சொல்லாமல் ,சட்டமன்றத்தில் காண்பித்தது தவறு என்று சபாநாயகர் தனபால் கூறியது போல் உள்ளது  ரவிசங்கர் பிரசாத் கேள்வி.
இருவேறு 500 பணம் அச்சிடப்பட்டது சில சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
ஒன்று மக்களிடமும் பரப்பவும்,மற்றோன்று கருப்புப்பண முதலைகளுக்கு மாற்றி கொடுக்கவுமே பயன்பட்டுள்ளதாக தெரிகிறது.
500 ரூபாய் தாள்கள் மட்டும்தான் இப்படி அச்சிடப்பட்டதா?
2000 ரூபாய் தாள்களும் அச்சிடப்பட்டதா என்பதே இப்போதைய பெருங்கேள்வி..



மோடியின் முழு தோல்வி

பிரதமர் நரேந்திர மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப்பணம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிடும், தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் பணம் தடுக்கப்படும் என்றெல்லாம் படாடோபமாக அறிவித்தார். 
இந்த நடவடிக்கையால் எந்தப் பயனும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. 
ரூ. 500, 1000 செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்ததைத்தொடர்ந்து சாதாரண ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் கடும் துயருக்கு ஆளானார்கள். 
பணப் புழக்கம் முடங்கியதால் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நசிந்தன. சிறு வர்த்தகம் பெரும் சரிவைச் சந்தித்தது.
ஆனால் கறுப்புப்பண பேர்வழிகள் இதனால் சிறிதளவுகூட பாதிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை பயனற்றது என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டபல்வேறு எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அப்போதே விமர்சித்தன.
 அது உண்மை என்பதை நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை உறுதிசெய்துள்ளது. நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையை தெகல்கா இணைய ஏடு வெளியிட்டுள்ளது. 
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரும்பான்மையான கறுப்புப்பணத்தை வெளியே கொண்டு வரமுடியவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது. 
5 முதல் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குகறுப்புப்பண புழக்கம் இருக்கும் என்று மோடிகூறியிருந்தார். ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்த பணத்தை வெளிக் கொணரவில்லை என்று அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியுதவியை தம்முடைய நடவடிக்கை முற்றாக தடுத்துவிடும் என்று மோடி கூறினார்.

 தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியுதவியின் மீது எந்தவொரு தாக்கத்தையும் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்படுத்த முடியவில்லை என்று நாடாளுமன்றக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமர் மோடியின் நோக்கம் கறுப்புப்பணத்தை ஒழிப்பதோ, தீவிரவாதத்தை ஒழிப்பதோ அல்ல; மாறாக காகிதப்பணத்தை ஒழிப்பதாகக் கூறி கார்ப்பரேட்டுகளுக்கு உதவி செய்வதுதான் என்ற குற்றச்சாட்டு தற்போது தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
 பணமதிப்பு நீக்க நடவடிக்கை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுமட்டுமல்ல, சிறு தொழில் துறை மற்றும் முறைசாராத் தொழில்களை கடுமையாக பாதித்துள்ளது என்பதையும் நாடாளுமன்றக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையால் 4 கோடிப் பேர்வேலை இழந்ததாகவும் 3 லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகவும் பாஜகவின் தொழிற்சங்க அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் கூறியுள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 
அதுமட்டுமின்றி நிதியுதவி நிறுத்தப்பட்டதால் கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் மிகமோசமாக பாதிக்கப்பட்டதும் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டதும்மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதுஎன நாடாளுமன்றஆய்வறிக்கை கூறுகிறது.
தன்னுடைய தோல்வியை மோடி இப்போதாவது ஒப்புக்கொள்வாரா அல்லது வெறும் வாய்ஜாலத்தால் மறைக்க முயல்வாரா என்பதே இப்போது எழுகிற கேள்வி.
====================================================================================

ன்று ,
ஆகஸ்ட்-09

  • பைசா நகர (சாய்ந்த ) கோபுர கட்டிட வேலைகள் ஆரம்பம் . 
  • 200 ஆண்டுகளுக்கு பின்னரே கட்டுமானம் முடிவுற்றது(1173)

  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்(1892)

  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கம்  (1942)

  • சிங்கப்பூர் விடுதலை தினம்(1965)
====================================================================================






































இதுவே தொடக்கமாக இருக்கட்டும்..
முகநூலில்  சிவசங்கர் எஸ்.எஸ் 
குஜராத் ராஜ்யசபா தேர்தலில் சாம, தான, பேத, தண்ட வழிமுறைகள் அத்தனையையும் பின்பற்றி வெற்றி மட்டுமே நோக்கம் என்று செயல்பட்டது மோடி-அமித்ஷாவின் பா.ஜ.க.
ஏன் மோடி-அமித்ஷா பா.ஜ.க என்றால், மற்ற இந்திய மாநிலங்கள் எப்படியோ, குஜராத்தில் இவர்கள் தான் பா.ஜ.க. இவர்கள் இன்றி ஓரணுவும் அசையாது. ஆட்சிச் சக்கரம் சுழலாது.
எதை எல்லாம் குஜராத்தில் நடைமுறைப் படுத்தி பார்த்தார்களோ, அதை எல்லாம் இந்தியா முழுதும் செயல்படுத்தி வெற்றி கண்டார்கள். குஜராத் அவர்களது சோதனை களம் ஆனது.
மூன்று முறை குஜராத் முதல்வராக கட்சியில் கையாண்ட முறையை தான், பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்படும் போதும் கையாண்டார்கள். பிரதமர் வேட்பாளர் ஆனார் மோடி.
போட்டியாளர்களை தயவு தாட்சண்யமின்றி அடித்து வீழ்த்துதல், இவர்களது அரசியல் பாலபாடம். அடுத்து, கட்சியில் இருக்கும் சீனியர்களை காணாமல் அடிப்பது.
குஜராத்தில் இவரால் வீழத்தப்பட்டு, கட்சியை விட்டே துரத்தப்பட்டவர் வலுவான சங்கர்சிங் வகேலா. இவர் தான் இப்போது காங்கிரஸிலிருந்து வெளியே வந்து பாரதிய ஜனதா கட்சிக்கும், அமித்ஷாவுக்கும் கைகொடுத்தவர். இது தான் காலக் கொடுமை.
ராஜ்யசபாவிற்காக அறிவித்த தேர்தல் தேதியை தள்ளி வைத்தது, காங்கிரசின் ஆறு எம்.எல்.ஏக்களை வெளியே இழுத்து காங்கிரஸ் ஆதரவை சிதறடித்தது என எல்லாம் செய்தும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
அடுத்த கட்டம் தான், முதன்முதலாக ராஜ்யசபா தேர்தலில் 'யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்னும் நோட்டோவை அறிமுகப் படுத்தியது. இதை எதிர்த்து காங்கிரஸ் கோர்ட்டுக்கு போனது. கோர்ட் வழக்கம் போல், நீதி வழங்கியது. தேர்தலுக்கு பிறகு விசாரணையாம்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கர்நாடகா அழைத்து வந்து பாதுகாத்து, திரும்ப குஜராத் அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டிய நிலை காங்கிரஸிற்கு.
கோழி குஞ்சை கவ்வ வான் மேயும் பருந்து போல், பா.ஜ.க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கொத்தித் தூக்க அத்தனை வழிமுறைகளிலும் முயற்சித்தது.
"எங்களுக்கு கோடிக்கணக்கில் பா.ஜ.க பணம் தர முயற்சித்தது", என குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேட்டி கொடுத்தார்கள். வருமான வரித்துறை பேட்டி கொடுத்த இவர்கள் மீதே பாய்ந்தது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த இடத்தை ரெய்டு செய்தது. அவர்களுக்கு பாதுகாப்பளித்த கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமார் வீடுகளை நான்கு நாட்கள் அலசியது வருமானவரித்துறை.
பா.ஜ.கவின் மத்திய அரசு, தன் பிடியில் இருக்கும் நிறுவனங்களைக் கொண்டு, ராஜ்யசபா சீட்டை பிடிக்க முயன்றதற்கு இதெல்லாம் சாட்சி. மோடியின் அதிகாரக் கூத்துகள்.
இரண்டு ராஜ்யசபா இடங்களை வெற்றி பெற எளிதான வாய்ப்பிருந்தாலும், காங்கிரசின் ஒரு இடத்தையும் தட்டி பறித்தால் தான், குஜராத் தங்கள் இரும்புப் பிடிக்குள் இருப்பதை நிரூபிக்க முடியும் என்ற எண்ணம் ஒரு பக்கம்.
இங்கே கையாளும் முறைகளுக்கு எதிர்கட்சிகள் பயந்து விடும், வழக்கம் போல் பத்திரிக்கைகள் வாய்மூடி மௌனித்திருக்கும் என்ற எண்ணம் இன்னொரு பக்கம். இதை அப்படியே பின் வரும் தேர்தல்களில் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் திட்டம்.
ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கும் எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சி பிரதிநிதியிடம் தன் வாக்கை காட்ட அனுமதி உண்டு. அதே போல, கட்சி உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கட்சிக்கு அதிகாரம் உண்டு.
காலையில் வாக்குப்பதிவு ஆரம்பித்தது. எல்லா எம்.எல்.ஏக்களும் வந்து வாக்களித்தனர். காங்கிரஸில் இருந்து விலகிய சங்கர்சிங் வகேலா ஒரு பேட்டியளித்தார். "நான் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேலுக்கு வாக்களிக்கவில்லை". பா.ஜ.கவிற்கு வாக்களித்தேன் என்பதை மறைமுகமாக சொன்னார், என்ன இருந்தாலும் பழுத்த அனுபவஸ்தரல்லவா.
வாக்களிக்கும் இடத்தில் பா.ஜ.கவின் அதிகார திமிர் வெளிப்படுத்தப்பட்டது. அது தான் இப்போது அதன் முகத்தில் சாணி அடித்துள்ளது.
காங்கிரஸில் தாங்கள் விலைக்கு வாங்கிய எம்.எல்.ஏக்களின் வாக்குகளை பதிவு செய்து, அமித்ஷாவிடம் காட்ட சொன்னார்கள் பா.ஜ.கவினர். இரண்டு பேரும் தங்கள் வாக்குகளை முதலாளியிடம் காட்டினார்கள். இது அப்பட்டமான விதிமுறை மீறல்.
தேர்தல் கமிஷனில் முறையிட்டது காங்கிரஸ். பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் பெருமக்கள் தேர்தல் கமிஷனிற்கு படையெடுத்தார்கள். திரும்ப, திரும்ப மனு கொடுத்தார்கள். ஏற்கனவே முன்மாதிரி இருந்ததால், வேற்று நபர்களிடம் காட்டிய வாக்குகள் செல்லாது என இப்போது தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது.
பாரதிய ஜனதாவின் கோர அதிகார வெறியாட்டத்திற்கு விழுந்த அடி இது. இப்போது தான் தேசிய மீடியாக்கள் தூக்கம் கலைத்துள்ளன. மோடி-அமித்ஷா வகையறாவை எதிர்க்க ஆள் இல்லை என்ற மாயை ஒரே நாளில் தகர்ந்துவிட்டது.
பா.ஜ.க செய்வதெல்லாம் அக்மார்க் நியாயம் என சொல்லும் 'நியாயவாதிகளுக்கு' முகத்தில் கரி. பா.ஜ.கவின் அசிங்க ஆட்டம் தேர்தல் கமிஷனால் வெளிப்பட்டு விட்டது.
இதல்லாமல் வாக்கை எண்ண விடாமல் நள்ளிரவில் பா.ஜ.க அடித்த கூத்துகள் அதிகபட்சமானது. மத்திய சட்ட மந்திரியே தேர்தல் கமிஷனுக்கு வந்தது அவர்கள் பயத்தை வெளிப்படுத்தியது.
இரவெல்லாம் தேர்தல் கமிஷன் முன்பே அமித்ஷாவும், குஜராத் முதல்வரும் தேவுடு காத்ததே, இந்தத் தேர்தல் அவர்களுக்கு எத்தகைய மானப் பிரச்சினை என்பதை வெளிக்காட்டியது.
பா.ஜ.க மூன்றாவது வேட்பாளர் போடாமல் இருந்திருந்தால், அகமது பட்டேல் போட்டியின்றி வெற்றி பெற்றிருப்பார். அது ஒரு செய்தியாகவே இருந்திருக்காது. ஆனால் ஒரு பரபரப்பான சூழலை ஏற்படுத்தி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து முகத்தில் குத்து வாங்கியிருக்கிறது பா.ஜ.க.
இரண்டு விதமான ரூபாய் 500 நோட்டுகள் வெளிவந்துள்ளதையும், பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கையும் பெரும் ஊழல் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போர் கோலம் பூண்டது, நீண்ட நாட்களுக்கு பிறகு காங்கிரஸிற்கு உயிர் வந்தது போல் இருந்தது.
இதே நாளில், இந்த வாக்கு மதிப்பிழப்பு நடந்ததும் இரட்டை வெற்றி.
அகமது பட்டேல் தோல்வி அடைந்திருந்தால் கூட, இந்த நிகழ்வு நல்ல தொடக்கமாகவே அமைந்திருக்கும்.
ஆனால் பா.ஜ.க, மோடியின் இவ்வளவு அக்கிரமங்கள், அட்டுழியங்களை மீறி அகமது பட்டேல் வெற்றி பெற்று விட்டார்.
இது போன்ற தேர்தல்களில் அரசியல் கட்சிகள் வழக்கமாக செய்யும் நடவடிக்கைகள் தான் இது. ஆனால் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாத உத்தமர் மோடி என்று கட்டமைத்த பிம்பம் தகர்ந்தது இப்போது. இதற்கு மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.
இந்த வெற்றி, தூங்கிக் கிடந்த காங்கிரஸை போராட்ட களத்திற்கு இழுத்து வரும். காங்கிரஸ் உயிர்பித்துக் கொள்ள பெரும் வாய்ப்பை தங்கத் தட்டில் வைத்து கொடுத்துள்ளனர் மோடி டீம்.
இந்த வெற்றி, சர்வாதிகாரத்திற்கு விழுந்த அடி, அதிகார மமதைக்கு விழுந்த அடி.
அதுவும் மோடியின் குஜராத்தில் விழுந்த அடி, மிக நல்லது நாட்டுக்கு.
# உச்சாணிக்கு உயர்த்திய குஜராத்திலேயே துவங்கியிருக்கிறது, சரிவும் !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?