தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள குட்காவை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அமைச்சருக்கும், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் சென்னையை சேர்ந்த குட்கா நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ரூ. 39 கோடியைலஞ்சமாகக் கொடுத்துள்ளது. இதுகுறித்த ஆதாரங்கள் வருமானவரித்துறை ஆய்வுகளின் போது கைப்பற்றப்பட்டன. மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவின்படி வருமானவரித் துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புப் பிரிவின் விசாரணைக்கு இதுவே போதுமானது.
ஆனால், குட்கா நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட கணினி உள்ளிட்ட கருவிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு பிரிவு வலியுறுத்தும் போதே யாரையோ காப்பாற்ற முயற்சிகள் நடைபெறுவதாக ஐயப்பாடுகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை ஏன் சிபிஐ வசம் ஒப்படைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேட்டவுடன் அத்தகைய விசாரணை தேவையில்லை என்று அதிமுக அரசு பதில் அளித்துள்ளது.வருமானவரித்துறையால் வழங்கப்பட்டுள்ள சான்றளிக்கப்பட்ட நகல்கள் உண்மையான ஆவணத்திற்கு சமமானவை. அவற்றில் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் கையூட்டு அளிக்கப்பட்டதற்கான குறிப்புகள் இருப்பதால்அவற்றையே ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம். அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்ளும். எனவே அந்த ஆதாரங்கள் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை முன்னாள் டிஜிபி, சென்னை மாநகரகாவல்துறை முன்னாள் ஆணையர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நேர்மையாக விசாரணை நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்தவேண்டும்.
ஆனால் இந்தவழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என்ற நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் குதர்க்கமாக பதிலளித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட பின்னரும் சில பொருட்கள் நாட்டில் புழங்கவில்லையா ?
கறுப்புப் பணம் இருக்கத்தானே செய்கிறது என்றெல்லாம் அவர் உளறியிருக்கிறார்.
தொடர்ச்சியாகப் பல ஊழல்களில் சிக்கியுள்ள அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இந்தவழக்கை விசாரித்தால் உண்மை குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும்.
எனவே தான் சிபிஐ விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குட்கா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாககூறப்படும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் வழக்கில் சேர்த்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர லஞ்ச ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல் தாங்கள் உத்தமர்கள் என்றால் சிபிஐ விசாரணையைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். விசாரணை முடியும் வரை விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் தொடரக்கூடாது.
ஒரு வேளை சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் அரசியல் காரணங்களுக்காக இந்தவழக்கைப் பயன்படுத்திக்கொள்ளாமல் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கவேண்டும்.
இந்திய நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் இருந்தார். இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டப் பின், குடியரசு தின அணிவகுப்பு நடந்தது, பெரிய துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் விண்ணில் பாய்ந்தன, அந்த சத்தம் அந்த கோட்டை எங்கும் எதிரொலித்தது.
அங்கு ஜவஹர்லால் நேரு இருந்தார், மெளண்ட் பேட்டன் வகித்த ஆளுநர் பதவியில் அப்போது சி.ராஜகோபலசாரி இருந்தார்.
பிரிட்டிஷ் அரசின் அனைத்து சுவடுகளும் முடிவுக்கு வருவதை அந்த குடியரசு தின நிகழ்வுகள் பறைசாற்றின. இந்திய தேசம், இறையாண்மை உள்ள முழுவதும் சுதந்திரம் பெற்ற நாடாக, உருவாகி உள்ளதை அந்த நிகழ்வுகள் கூறின.
ஆறாம் ஜார்ஜ் அரசர் வாழ்த்து செய்திகளை அனுப்பி இருந்தார். அந்த வாழ்த்து செய்தியில், `இந்தியா காமன்வெல்த் கூட்டமைப்பில் தொடரும்` என்றும் கூறி இருந்தார்.
அந்த சமயத்தில், மீண்டும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வருவார் என்ற வதந்தி உலவியது. இந்தியாவின் கடைசி முகலாய பேரரசரான பகதூர் ஷா ஜாஃபரின் மரபு வழி வந்த பேகம் தைமூர் ஜகான் அந்த சமயத்தில் இவ்வாறாக கூறினார், 'பிரிட்டிஷ் நுகத்தடி அகற்றப்பட்டதால், பகதூர் ஷா தன் கல்லறையில் புரண்டு படுத்திருப்பார்' . இந்தியா இறையாண்மையுள்ள குடியரசாக அமைவதற்கு, இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டுவிட்டார்.
முதல் குடியரசு தின அணிவகுப்புகள் அவ்வளவு ஆடம்பரமாகவெல்லாம் நடக்கவில்லை. ஆனால், அது கொண்டாடப்பட்ட விதம் ஈர்க்ககூடியதாகவே இருந்தது.
இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படையின் பரிவாரங்கள் அனைத்தும் அந்த அணிவகுப்பில் இடம்பெற்று இருந்தன.
இப்போது இந்த அணிவகுப்பு நடைபெறுவது போல, ராஜபாட்டையிலிருந்து புது டெல்லி வழியாகவெல்லாம் அந்த அணிவகுப்பு செல்லவில்லை. அந்த மைதானத்திற்குள் மட்டுமே அணிவகுப்பு நடைபெற்றது.
இப்போது இருப்பதை போல நவீன ஜெட் விமானங்கள் எல்லாம், அந்த அணிவகுப்பில் இடம்பெறவில்லை. சிறிய டகோட்டா விமானங்கள், ஸ்பிட் ஃபயர் விமானங்கள் மட்டுமே அப்போது அணிவகுப்பில் இடம்பெற்றன.
சென்னை மாகாண அலங்கார ஊர்தி .
ஃபீல்ட் மார்ஷல் கரியப்பாதான், அப்போது இந்திய நாட்டின் படைகளுக்கு முதல் தலைவரக இருந்தார். பிரிட்டிஷ் - இந்தியப் படைகளில் பணியாற்றிய அவர், அப்போதே பல கெளரவமான பதக்கங்களை வென்றிருந்தார்.
கூர்க் பகுதியை சேர்ந்த அவர், கொச்சையான அரைகுறை இந்தியில், "நாங்களும் விடுதலை அடைந்துவிட்டோம். நீங்களும் விடுதலை அடைந்துவிட்டீர்கள். நம் குழந்தைகளும் விடுதலை அடைந்துவிட்டன." என்று பேசினார். அந்த உரை பாராட்டுகளைக் குவித்தது.
அப்போது இளைஞராக இருந்த பேராசிரியர் காலிக் அஞ்சிம், அந்தக் குடியரசு தின நிகழ்வு தருணத்தில் நல்லியல்புகளை பற்றி பேசினார். 1901ல் விக்டோரியா அரசி இறந்த போது பள்ளிச் சிறுவனாக இருந்த ஹாஜி ஜகூருதீன், குடியரசு தின நிகழ்வுகளின் போது அனைவருக்கும் இனிப்புகள் விநியோகித்தார். ஜும்மா மசூதி அருகே அப்போது ஜகூருதீனுக்கு ஓர் உணவகம் இருந்தது. அவர் விநியோகித்த இனிப்புகள் மிக சுவையானதாக இருந்தன. அவை, ஹாஜி கல்லன் என்பவருடைய கடையிலிருந்து வாங்கப்பட்டவை.
அந்த முதல் குடியரசு தின நிகழ்வின்போது, சாந்தினி சவுக் பகுதி, லால் மந்திரிலிருந்து ஃபதேபூர் மஸ்ஜித் வரை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியில் திரண்டிருந்த மக்களின் கரங்களில் சாமந்தி மாலைகளும், சிறிய மூவர்ணக் கொடிகளும் இருந்தன.
சிஸ் கான்ஞ் குருத்வாராவில் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. அங்குமட்டுமல்ல, பங்ளா சாஹிப் குருத்வாராவிலும் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. இந்தியத் தலைநகரின் மிக நவீன சந்தையான கன்னாட் பிளேஸ் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது .
அந்தப் பகுதியில் தாழ்வாரத்தில் நடனமாடியவர்களில் ஒருவர் ராம்லால். அவர் பணியாக்ளுக்கும், பிரிட்டிஷ் படை வீரர்களுக்கும் கால் நகத்தை சுத்தம் செய்பவர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், பூட்ஸ் அணிவதால் வலிக்கும் தங்கள் பாதங்களை பிடித்து விடச் சொல்லி ராணுவ வீரர்கள் வருவார்கள்.
அந்த தினங்களை இன்றும் அதே உற்சாகத்துடன் நினைவுகூர்கிறார் ராம் லால். ஒரு முறை ஒரு ராணுவ வீரர் 100 ரூபாய் தாளை, கால்களை பிடித்துவிட்டதற்காக வழங்கி இருக்கிறார். ராம் லால் மீத பணத்தை கொடுக்க அந்த ராணுவ வீரரை துரத்தியபோது, அந்த ராணுவ வீரர், ராம் லால் அதிகப் பணம் கேட்பதாக நினைத்து துப்பாக்கியை நீட்டி இருக்கிறார்.
நூறு ரூபாய் இன்றைய ஆயிரங்களுக்கு சமம் என்கிறார் ராம்லால்.
தங்களது மிக நீண்ட மீசைகளுக்காக அறியப்படும் பங்களா காவலாளிகள் சாந்தினி சவுக்கில் மக்களுடன் மக்களாக நடனமாடினர்.
ஃபதேபூரில் உள்ள இஸ்லாமியர்களுக்கு சொந்தமான உணவகங்கள் சிறந்த உணவினை குடியரசு தின கொண்டாட்டமாக மக்களுக்கு வழங்கின.
மடிய மகால் பகுதியில் உள்ள கரீம், ஜவஹர் மற்றும் சில உணவகங்கள் பிச்சைகாரர்களுக்கு இலவசமாக உணவு வழங்கின. கபாப் மற்றும் பால் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலை அறிவித்து இருந்தனர்.
இரவில் அனைத்து அரசாங்க கட்டடங்கள், சில தனியார் கட்டடங்களில் விளக்கேற்றப்பட்டன. ராஷ்டிரபதி பவனாக மாறிய வைஸ்ராயின் இல்லம், மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணின் தோற்றத்தில் இருந்தது.
நாடாளுமன்றம், இந்தியா கேட் மற்றும் ரெட் ஃபோர்ட் கட்டடங்கள் விளக்கால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
ராஷ்டிரபதிபவனில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. வடக்கு பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணம் ஆகிய பகுதியிலிருந்து வந்த அகதிகள் மற்றும் பாகிஸ்தான் செல்வதற்காக பழைய கோட்டையில் தங்கி இருந்த அகதிகளின் துயர் துடைக்க அதிகம் பங்களிப்பை அளித்த ஜவஹர்லால் நேரு, அவருடைய மகள் இந்திரா காந்தி, ராஜேந்திர பிரசாத், சர்தார் பட்டேல், மவுலானா ஆஸாத், சர்தார் பல்தேவ் சிங் மற்றும் கபூர்தலாவின் இளவரசி ராஜகுமாரி அம்ரித் கவுர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத். வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுபகையால், சிறையில் உள்ள தனதுதந்தையுடன் சேர்ந்து கூலிப்படையினரை கொண்டு கொலை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னைபாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், போலீஸ் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார். சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக துப்பு துலக்கினர் இந்நிலையில், திடீர்திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் (32) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை நாகேந்திரன்விரைவில் கைது செய்யப்பட உள்ளார். கொலையின்...