திறன் விளையாட்டா?

 சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டரின் வேகத்தை குறைக்கும் பணி  நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்காக கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உத்தரவை திரும்ப பெறகோரி ஆணையத்தில் முறையிட கர்நாடக அரசு திட்டம்.

•சென்னையில் இரவில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. திடீரென கொட்டிய மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஜெயலலிதாநாடகத்திற்காக நீலிக்கண்ணீர் வடித்த நிர்மலா சீதாராமனுக்கு மணிப்பூர் உண்மையைப் பார்த்து ஏன் கண்ணீர் வரவில்லை ?" முதல்வர் ஸ்டாலின் கேள்வி .

•நிழல் இல்லா நாளில், சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும், மேலும் பூமியின் மேற்பரப்பில் எந்த நிழல்களும் உருவாகாது. இதன் பொருள் சூரியன் வானத்தில் அதன் மிக உயர்ந்த புள்ளியை அடைகிறது, இதன் விளைவாக நிழலின் நீளம் அது காண முடியாத அளவிற்கு குறைக்கப்படுகிறது.

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்று முதல் வரும் 20ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

•முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் காரணமாக இன்று ராமநாத புரம் மண்டபம் ஒன்றிய பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய விடுமுறையை ஈடு செய்ய மண்டபம் ஒன்றியத்தில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------


ரம்மி திறன்சார்

 விளையாட்டா?

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக.17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆன்லைனில் விளையாடுபவர்கள் நீதிமன்றத்தை நாடவில்லை எனக் குறிப்பிட்டார்.

ரம்மி திறமைக்கான விளையாட்டாக இருந்தாலும், அதை அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக மாற்றும் சூழ்நிலைகளும் உள்ளதாகவும், பல தற்கொலை நிகழ்வுகளை தொடர்ந்தே இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் வாதிட்டார்.

ஆன்லைன் ரம்மிக்கு மட்டுமல்லாமல், அனைத்து ஆன்லைன் விளையாட்டுக்களுக்கும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், இதற்கு முன் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்த வழக்கில், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்த மாநில அரசு சட்டம் இயற்றும் அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்றார்.

பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என விளக்கினார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் செயல்படுவதால் அவற்றை கண்காணிக்க முடியாது. இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்த இயலாது என்பதால் முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

ஆண்டு மட்டும் இந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ரூ.900 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ரம்மியை திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் சட்டம் ரம்மியை அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், நேரடியாக விளையாடும்போது தான் ரம்மி, திறமைக்கான விளையாட்டு,ஆனால் ஆன்லைனில் நம்முடன் விளையாடுபவர் கணினி மென்பொருள்  எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆன்லைனில் ரம்மியை விளையாடினால், அது அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக மாறிவிடும் என கூறுவதை ஏற்க இயலாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஆன்லைனில் ரம்மி விளையாட எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த ஆன்லைன் விளையாட்டு நிறுவன தரப்பு மூத்த வழக்கறிஞர், ஆன்லைனில் ரம்மி விளையாட பந்தயமாக செலுத்தப்படும் மொத்த தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரை வெற்றி பெற்றவரிடம் இருந்து வசூலிக்கப்படுவதாக குறிப்பிட்டார். 

மற்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?