இந்த சென்னைமாநகரிலேயே......!

சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது.

வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை!

இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்!

பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!


கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நா.த.க. நிர்வாகி சிவராமன் எலிமருந்து உண்டு தற்கொலை முயற்சியில்உயிரிழப்பு.



இந்த சென்னைமாநகரிலேயே......!

ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் மெட்ராஸ் வந்தது போல பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே மீனவ கிராமங்களாக சென்னை இருந்திருக்கிறது.


 கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே பெண்ணையாற்று மடத்தில் உள்ள கல்வெட்டுகளில் மாதரசன் பட்டணத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. மாதரசன் பட்டணம், நீலகங்கரையன் பட்டணம், கோவளம் பட்டணம் உள்ளிட்ட பல பெயர்கள் இருந்துள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதரசன் பட்டனம் தான் தற்போது மெட்ராஸ் என்று உள்ளதாகவும், ஆங்கிலேயர்களுக்கு முன்பாகவே மெட்ராஸ் இருக்கிறது.


சென்னை நகரை சிறுகிராமமாக இருந்தபோது 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் நாள் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி  வாங்க ஓப்பந்தம் கையெழுத்தானதாகக் கூறப்படும் நாளையே 2004 ஆம் ஆண்டு முதல் நாம் சென்னை தினமாக( 'மெட்ராஸ் டே') கொண்டாடி வருகிறோம்.

சென்னைக்கென்று பல்வேறு அடையாளங்கள் உள்ளன.

 அதில், முக்கிய அடையாளமாக திகழ்கிறது விக்டோரியா பொது அரங்கம். இங்கிலாந்து ராணி விக்டோரியா பெயரில் சென்னையில் கட்டப்பட்டது தான் விக்டோரியா பொது அரங்கம். இந்த அரங்கம் சென்னை ரிப்பன் கட்டடம் மற்றும் சென்டரல் ரயில் நிலையத்தின் மையத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.


விக்டோரியா அரங்க வரலாறு.

அந்த காலத்தில் சென்னையில் வசித்து வந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஒன்று கூடி கலைகளைப் பார்க்க விரும்பினர். இதையடுத்து 25,883 சதுர அடி பரப்பளவில், கடந்த 1886 ஆம் ஆண்டு விக்டோரியா பொது அரங்கம் கட்டடம் கட்ட துவங்கப்பட்டு 1890 ஆம் ஆண்டு நிறைவுற்றது.


திருவிதாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா, புதுக்கோட்டை அரசர் என முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலரின் நன்கொடை உதவியால் அப்போது ரூ.16,425 செலவில் விக்டோரியா பொது அரங்கம் கட்டப்பட்டது.


 பிரிட்டன் கட்டடக் கலையில், சென்னையில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக விக்டோரியா பொது அரங்கம் திகழ்கிறது.

மூன்று தளங்கள் கொண்ட இந்த அரங்கத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது. 


கீழ் தளத்தில் அருங்காட்சியகமும், நூலகமும் இருந்துள்ளது. முதல் தளத்தில் நாடக அரங்கேற்றமும், பல்வேறு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.


 மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். சர்தார் வல்லபாய் படேல் போன்ற தேசிய தலைவர்கள் விக்டோரியா பொது அரங்கத்தில் கூட்டங்களில் உரையாற்றி உள்ளனர். 


தமிழ் நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர். சென்னையில் முதல் சினிமா காட்சி விக்டோரியா பொது அரங்கத்தில் நடைபெற்றது.

 

 130 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட விக்டோரியா பொது அரங்கம் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 


ரூ.32 கோடி செலவில், 2 ஆண்டுகளில் புனரமைக்கும் பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.(முதலில் அரங்கம் கட்ட செலவானத் தொகை ரூ.16,425மட்டுமே)

விக்டோரியா பொது அரங்கம் அரசாங்கத்தினால் கட்டப்படாமல் மக்களால் பணம் பெற்று கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கிற்காக திரைப்படம், நாடகம் பார்க்க தலைமைச்செயலகத்தினுள் அரங்கம் இருந்தது. 


ஆனால், பொதுமக்கள் பார்க்க பொது அரங்கம் வேண்டும் என்பதால் விக்டோரியா பொது அரங்கம் கட்டப்பட்டது.

விவேகானந்தர், காந்தி, பெரியார், அண்ணா போன்ற இந்தியாவின் மிக முக்கிய தலைவர்கள் விக்டோரியா பொது அரங்கத்தில் பேசியுள்ளார்கள். 


கடந்த 1895 ஆம் ஆண்டு சினிமா காலுன்ற துவங்கி காலத்தில், முதன்முறையாக விக்டோரியா பொது அரங்கத்தில் சினிமா திரையிடப்பட்டது. பல முக்கிய நாடகங்கள் இல்லாமல் சினிமா பரிசோதனைகளும் விக்டோரியா பொது அரங்கத்தில் நடந்துள்ளது. 


 சென்னையின் அடையாளத்தை நிலை நிறுத்தி வரும் விக்டோரியா பொது அரங்கம் மீண்டும் புதுப்பொலிவை பெறுகிறது.

ஏன் இந்த பொறாமை?


 கலை­ஞர் அவர்­க­ளைச் சிறப்­பிக்­கும் வகை­யில் அவ­ரது நூற்­றாண்டை முன்­னிட்டு 100 ரூபாய் நாண­யத்தை

ஒன்­றிய அரசு வெளி­யிட்­டது. 

வெளி­யிட ஆணை­யிட்­டது ஒன்­றிய அரசு என்­ப­தால் ஒன்­றிய அர­சின் பாது­காப்­புத் துறை அமைச்­சர் மாண்­பு­மிகு ராஜ்­நாத் சிங் அவர்­களை விழா­வுக்கு அழைத்­தி­ருந்­தார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.

ஒன்­றிய பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் அவர்­கள்

அன்­றைய தினம் ஆற்­றிய உரை என்­பது கலை­ஞ­ருக்­கான புக­ழு­ரை­யாக இல்­லா­மல், கலை­ஞ­ரது அர­சி­யல் கொள்­கை­க­ளைப் போற்­றும் உரை­யாக அமைந்­தி­ருந்­தது. ‘சம்­பி­ர­தா­யத்­துக்­காக’ அவர் உரை­யாற்­ற­வில்லை. 

கலை­ஞர் அவர்­கள் எந்­தக் கருத்­தி­யல்­க­ளுக்­காக வாழ்­நாள் முழுக்க பாடு­பட்­டாரோ அந்­தக் கருத்­தி­யலை – ‘எதிர்­மு­கா­மில்’ இருக்­கக் கூடிய ஒரு­வர் ஒப்­புக்­கொண்டு ஆற்­றிய உரை­யாக அமைந்­தது

மாண்­பு­மிகு ராஜ்­நாத் சிங் அவர்­க­ளது உரை.

மாற்­றா­ரை­யும் மன­மாற்ற வைக்­கும் ஆற்­றல் படைத்­த­வர் கலை­ஞர் அவர்­கள் என்­ப­தற்கு எடுத்­துக்­காட்­டாக அந்த விழா அமைந்­தி­ருந்­தது.

இதைப் பார்த்து வயிற்­றெ­ரிச்­சல் அடைந்த எதிர்க்­கட்­சித் தலை­வர்

பழ­னி­சாமி, “எதற்­காக ராஜ்­நாத் சிங்கை அழைத்­தார்­கள்? நாங்­கள் பா.ஜ.க. அணி­யில் இருந்­த­போ­து­கூட பா.ஜ.க. தலை­வர்­களை அழைத்து விழா நடத்­த­வில்லை. பா.ஜ.க.வுக்­கும் தி.மு.க.வுக்­கும் ரக­சிய உறவு இருக்­கி­றது” என்று சொல்லி தனது குணத்தை வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார்.

பழ­னி­சா­மி­யும்­தான் பிர­த­மர் மோடியை அழைத்­தார். அவர் தான்.வர மறுத்­தார். இதை மக்­கள் மறந்­தி­ருப்­பார்­கள் என்று நினைக்­கி­றார்பழ­னி­சாமி.


24.5.2017 அன்று அன்­றைய முத­ல­மைச்­சர் எடப்­பாடி பழ­னி­சாமி, ஒரு பேட்டி அளித்­தார். “அம்மா படத்தை சட்­ட­மன்­றத்­தில் திறக்­கப் போகி­றோம். அதை திறந்து வைக்க பார­தப் பிர­த­ம­ருக்கு அழைப்பு விடுத்­துள்­ளேன். வரு­கிற டிசம்­பர் மாதம் சென்­னை­யில் புரட்­சித் தலை­வர் எம்.ஜி.ஆரின் நூற்­றாண்டு விழா பிர­மாண்­ட­மாக நடக்க இருக்­கி­றது. அந்த நிகழ்ச்­சி­யில் மாண்­பு­மிகு பார­தப் பிர­த­மர் அவர்­களை சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொள்ள வேண்­டும் என்று அழைப்பு விடுத்­தி­ருக்­கின் றேன்” என்று பேட்டி அளித்­தார். இன்­றும் அது சமூக வலை­த­ளங்­க­ளில் இருக்­கி­றது.அன்­றைய தினமே பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு பழ­னி­சாமி ஒரு கடி­தம் அனுப்­பி­னார். சட்­ட­மன்­றத்­தில் ஜெய­ல­லி­தா­வின் படத்தை வைக்­கப்போகி­றோம், ஜூலை மாதத்­தில் ஒரு­நாள் நீங்­கள் வந்து திறந்து வைக்க

வேண்­டும் என்று கடி­தம் எழு­தி­னார் பழ­னி­சாமி. அவரை மதிக்­க­வில்லை

பிர­த­மர் மோடி. வர­வில்லை பிர­த­மர் மோடி. ‘ANY DAY’ என்று சொல்­லிக் கூட பார்த்­தார் பழ­னி­சாமி. ம்கூம் வர­வில்லை.

சட்­ட­மன்­றத்­தில் ஜெய­ல­லிதா படத்தை திறந்து வைக்­க­வும், எம்.ஜி.ஆர். நூற்­றாண்டு நிறைவு விழா மாநாட்­டில் கலந்து கொள்­ள­வும்­தான் பிர­த­மர் மோடியை அழைத்­தார் பழ­னி­சாமி. 24.5.2017 ஆம் தேதி­யன்று தேதி கேட்­டார்­கள். 

அவர்­கள் தர­வில்லை. காத்­தி­ருந்து காத்­தி­ருந்து கண்­கள் பூத்­து­விட்­டது. இறு­தி­யாக எட்டு மாதம் கழித்­து­தான் பழ­னி­சாமி விழா நடத்­தி­னார். 13.2.2018 அன்று சட்­ட­ச­பை­யில் ஜெய­ல­லிதா படத்­தி­றப்பு விழா நடந்­தது. அன்­றைய பேர­வைத் தலை­வர் தன­பாலை வைத்து ஜெய­ல­லிதா படத்தை திறந்து விட்­டார் பழ­னி­சாமி. 

இதில் சூடு பட்ட பழ­னி­சாமி, எம்.ஜி.ஆர். நாண­யம் வெளி­யீட்டு விழா­வுக்­கும் யாரை­யா­வது வர­வ­ழைக்­கப் பார்த்­தார். ஆள் கிடைக்­க­வில்லை. அவரே நடத்தி விட்­டார்.

2019 ஜன­வரி 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர்.நாண­யத்தை பழ­னி­சாமி

வெளி­யிட பன்­னீர் செல்­வம் பெற்­றுக் கொண்­டார். அதைக்­கூட பழ­னி­சா­மி­யால் இன்று வெளி­யில் சொல்ல முடி­யாது. இப்­ப­டிப்­பட்­ட­வ­ருக்கு கலை­ஞர் நூற்­றாண்டு விழா­வைப் பார்த்­தால் வயிறு எரி­யத்­தான் செய்­யும்?

“ஜெய­ல­லி­தா­வுக்கு ஒரு இரங்­கல் கூட்­டம் கூட நடத்த வக்கு இல்­லாத பழ­னி­சா­மிக்கு கலை­ஞர் நூற்­றாண்டு விழா­வைப் பற்றி பேச என்ன

அரு­கதை இருக்­கி­றது?” என்று கேட்­டார் முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின். அதற்கு பழ­னி­சா­மி­யால் பதில் சொல்ல முடி­ய­வில்லை.

தலை­வர் கலை­ஞ­ருக்கு எத்­தனை நிகழ்­வு­கள் நடத்­தப்­பட்­டன? அகில

இந்­திய தலை­வர்­கள் கலந்து கொண்ட புக­ழஞ்­சலி, தமிழ்­நாடு தலை­வர்­கள் பங்­கேற்ற புக­ழஞ்­சலி, திரை­யு­ல­கத்­தி­னர் பங்­கேற்ற புக­ழஞ்­சலி, இலக்­கிய ஆளு­மை­கள் பங்­கேற்ற புக­ழஞ்­சலி, பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் பங்­கேற்ற

புக­ழஞ்­சலி என்று தி.மு.க. தலை­மைக் கழ­கம் நடத்­தி­யது. அதன்­பி­றகு மருத்­து­வர்­கள், நீதி­ய­ர­சர்­கள், மாண­வர்­கள், சமூக செயற்­பாட்­டா­ளர்­கள், பொறி­யா­ளர்­கள், மக­ளிர், விளிம்பு நிலை மக்­கள் -–- என ஒவ்­வொ­ரு­வ­ரும் தனித்­தனி­யாக நடத்­தி­னார்­கள்.

முக்­கிய நக­ரங்­க­ளில் தலை­வர் கலை­ஞ­ரின் சிலை­கள் திறந்து வைக்­கப்­பட்­டன. சென்னை கிண்­டி­யில் மாபெ­ரும் மருத்­து­வ­ம­னை­யும், மது­ரை­யில் நூல­க­மும், கிளாம்­பாக்­கத்­தில் பேருந்து நிலை­ய­மும் அமைக்­கப்­பட்­டது.

இப்­படி எதை­யும் பழ­னி­சா­மி­யால் பட்­டி­யல் போட முடி­யுமா?

ஜெய­ல­லி­தா­வின் மர­ணத்­தில் உள்ள மர்­மத்­தைக் கூட அவிழ்க்­கா­த­வர் பழ­னி­சாமி. ஆறு­மு­கச் சாமி ஆணை­யத்தை முடக்கி வைத்­தி­ருந்­த­வர்­தான் பழ­னி­சாமி. ஜெய­ல­லி­தா­வின் கொட­நாடு பங்­க­ளா­வில் கொள்ளை நடந்­தது. கொலை நடந்­தது. தற்­கொலை நடந்­தது. அதை மூடி மறைக்க முயற்­சித்­த­வர் பழ­னி­சாமி. இது­தான் ஜெய­ல­லி­தா­வுக்கு பழ­னி­சாமி செய்த சிறப்பு ஆகும். சொல்ல வெட்­க­மாக இல்­லையா பழ­னி­சா­மிக்கு?

ஜெய­ல­லி­தா­வின் போயஸ்­கார்­டன் வீட்டை நினை­வ­கம் ஆக்­கி­விட்­ட­தாக பொய் சொல்லி இருக்­கி­றார் பழ­னி­சாமி. ஜெய­ல­லிதா வீட்டை நினை­வ­கம் ஆக்­கு­வ­தற்­கான உத்­த­ரவை சென்னை உயர்­நீ­தி­மன்­றம் 2021 ஆம் ஆண்டே ( நவம்­பர் 24) ரத்து செய்­து­விட்­டது. ஜெய­ல­லி­தா­வின் சட்­ட­பூர்வ வாரி­சு­தா­ரர்­க­ளுக்கு சாவியை ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்­டது நீதி­மன்­றம்.

ஜெய­ல­லி­தாவை துளி கூட மதிக்­க­வில்லை பழ­னி­சாமி என்­ப­தற்கு இப்­படி எத்­த­னையோ சொல்­ல­லாம். ‘அம்மா’ வளர்த்­தது எல்­லாம் என்ன மாதி­ரி­யான ஆட்­கள் என்று தெரி­கி­றதா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக