நச்சுக் கருத்துகள்!

 கன மழை பெய்தும் மேட்டூரில் நீர்வரத்து 15,531 அடியாக குறைந்தது..!








வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் பெரும் மழைக்கு கூடுதலாக பாதிக்கும் பகுதிகளின் ஒன்று சென்னை. அதன் அடிப்படையில், சென்னையின் 15 மண்டலங்களுக்கும் ஒவ்வொரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (IAS) நிலையில் உள்ள ஒரு கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அந்த அதிகாரிகள், அந்ததந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, கண்காணிப்பார்.


தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு அலுவலா்களின் விவரம், செல்போன் எண்கள்:

* ஜி. எஸ். சமீரன் - 9499956201.

திருவொற்றியூா்- கத்திவாக்கம்.

*பி. குமரவேல் பாண்டியன் - 9499956202.

மணலி- வடபெரும்பாக்கம், தியம்பாக்கம், சடையங்குப்பம், எடயன்சாவடி, கடப்பாக்கம்.

*ஜெ. மேகநாத ரெட்டி - 9499956203.

மாதவரம்- புழல், சின்னசேக்காடு, கதிா்வீடு, சூரப்பட்டு, புத்தாகரம்.

*ஆா். கண்ணன் - 9499956204.

தண்டையாா்பேட்டை- கொடுங்கையூா், வியாசா்பாடி, ஆா்.கே.நகா்.

*ஜானி டாம் வா்கீஸ் - 94999 56205.

ராயபுரம்- பழைய வண்ணாரப்பேட்டை, முத்தியால்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சௌகாா்பேட்டை, எழும்பூா்

*பி. கணேசன் - 94999 56206.

திரு.வி.க.நகா்- புளியந்தோப்பு, பெரம்பூா், சூளை, புரசைவாக்கம்.

*எஸ். ஏ. ராமன் - 94999 56207.

அம்பத்தூா் - சிப்கோ தொழிற்பேட்டை, முகப்போ், கொரட்டூா், ஒரகடம், கள்ளிக்குப்பம்.

சென்னை மழை

*ஸ்ரேயா பி. சிங் - 94999 56208.

அண்ணாநகா்- வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, அமைந்தகரை.

*எம். பிரதாப் - 94999 56209.

தேனாம்பேட்டை- நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, ஆழ்வாா்பேட்டை, மயிலாப்பூா், சாந்தோம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம்.

*எஸ். விசாகன் - 94999 56210.

கோடம்பாக்கம்- கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, விருகம்பாக்கம், எம்.ஜி.ஆா்.நகா், அசோக்நகா், தியாகராயநகா், சைதாப்பேட்டை.

*ஏ. சிவஞானம்- 94999 56211.

வளசரவாக்கம்- நொளம்பூா், நெற்குன்றம், மதுரவாயல், காரம்பாக்கம், போரூா், ராமாபுரம்.

*எஸ். பிரபாகா் - 94999 56212.

ஆலந்தூா்- முகலிவாக்கம், நந்தம்பாக்கம், மணப்பாக்கம், மீனம்பாக்கம்.

*கே. செந்தில் ராஜ் - 94999 56213

அடையாறு- கிண்டி, வேளச்சேரி, பெசன்ட்நகா், திருவான்மியூா்.

*மகேஸ்வரி ரவிக்குமாா் -94999 56214.

பெருங்குடி- உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம்.

*பி. உமா மகேஷ்வரி - 94999 56215.

சோழிங்கநல்லூா்- நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஈச்சம்பாக்கம், காரப்பாக்கம்.



நச்சுக் கருத்துகள்!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விஜயதசமி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போது “நாம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம். 

ஆனால் சில சமயங்க ளில் பிரச்சனை இல்லாத இடங்களில் கூட பிளவுகளை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்” என்றெல்லாம் நீட்டி முழக்கியிருக்கிறார்.  

வங்கதேசத்தில் சிறுபான்மை மக்கள் தாக்கப் படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். வங்க தேசத்தில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

ஆனால் ஆர் எஸ்எஸ் அமைப்பினால் வழி நடத்தப்படும் பாஜக ஆளும் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் சிறு பான்மை இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களு க்கு எதிராக எத்தகைய தாக்குதல்கள் புல்டோசர் போல நடத்தப்படுகிறது என்பது குறித்து இவர் என் றைக்காவது பேசியது உண்டா?

விஜயதசமி வந்துவிட்டால் தர்மம், கருணை, சனாதனம் என்றெல்லாம் மூட்டை மூட்டையாக ஆர்எஸ்எஸ்காரர்கள் இறக்கி வைப்பார்கள். 

ஆனால் இவர்களால் முன்வைக்கப்படும் இந்துத் துவா கருத்தியல் எத்தகைய அழிவுச் சிந்தனையை உருவாக்கி வருகிறது என்பதற்கு பல்வேறு உதா ரணங்களைக் கூற முடியும். 

இந்து மதம் என்பது வேறு; இந்துத்துவா என்ற அரசியல், பண்பாட்டு, சமூக சொல்லாக்கம் என்பது வேறு. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்பு கள் முன் வைக்கும் இந்துத்துவா கருத்தியல் முழுக்க முழுக்க வெறுப்பரசியலை வீசியடிப்பது.

இதற்கு உதாரணமாக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானவர்களுக்கு இந்துத்துவா அமைப்புகள் தடபுடலாக வரவேற்பு அளித்துள்ள னர். 

சனாதன தர்மத்தை இவர்கள் பாதுகாத்ததாக புகழாரம் சூட்டியுள்ளனர். ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் இந்துத்துவா கருத்தியல் என்பது இத்தகைய கரு ணையற்ற, கண்ணியமற்ற பேர்வழிகளைத்தான் உருவாக்கி வருகிறது.

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், இடது சாரி சிந்தனையாளர்கள் கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகி யோரை படுகொலை செய்தது இந்துத்துவா சிந்தனை கொண்ட கும்பல்தான் என்பது விசா ரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தங்களை விமர்சிப்பவர்களை படுகொலை செய்வதும், அதை புனிதப்படுத்துவதும், கொலையாளிகளை கொண் டாடுவதும்தான் இவர்கள் கற்றுக்கொண்ட தர்மமா?

 இதுகுறித்து கேட்டால் ‘நான் அவனில்லை’ என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வகையறா நழுவும். ஆனால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதும் அனைத்திற்கும் மூல ஊற்று ஆர்எஸ்எஸ் அமைப்புதான் என்பதும் ஊரறிந்த உண்மை. 

உண்மையில் இந்தியப் பண்பாடு என்பது பன் முகத்தன்மை கொண்டது. 

ஆனால் ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் பண்பாடு என்பது சகிப்புத்தன்மை யற்ற குறுகிய நோக்கம் கொண்டது. இதை நாடு நிராகரிக்கும் என்பது உறுதி. 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

5 ஆண்டில் 351 பலிகள்.