ஊருக்கு உபதேசம்.

 மாட்டிக் கொண்ட மாமி!

"சீமான் வீட்டில் இருப்பது மொத்தமே மூணு பேர்தான் ஆனால் வீட்டில் ஐந்து கார் இருக்கு வேலைக்காரர்கள் 15 பேர்",,,,கரு.பிரபாகரன்.

இளம் பெண்களை கட்டாயப்படுத்தி துறவறம்.ஈஷா மையத்தில் அதிகாரிகள் விசாரணை.உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.
இதயத்தை காக்க... தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டம்.10,500 பேருக்கு இதய பாதுகாப்பு மருந்துகள் விநியோகம்.
உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு.
சித்தாமூர் அருகே 420 கிலோ குட்கா பறிமுதல்.இருவர் கைது.
ஊருக்கு உபதேசம்.

அதுதான் ஈஷா ஜக்கி.!

இளம்,பணக்காரப் பெண்களை கட்டாயப்படுத்தி துறவறம் ஈஷாவில் நடப்பதாக  புகாரில் ஐகோர்ட் உத்தரவின்படி ஈஷா யோகா மையத்தில் சமூகநலத்துறை அதிகாரிகள், போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். 

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். 

அதில், ‘‘எனது 2 மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்.

எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தெரிய வருகிறது. அவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. 

ஈஷா யோக மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவிற்கும் ஒரு மகள் இருக்கிறார். அவரை பலகோடிகள் செலவிட்டு திருமணம் நடத்தி கணவருக்கு பலகோடிகளைக் கொடுத்து வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்க சாமியார் ஜக்கி வாசுதேவ் ஏற்பாடு செய்துள்ளார்.

. எனது மகள்கள் ஈசா யோகா மையத்திலிருந்து வெளிவந்தால் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்களுக்கென தனி இடத்தை கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும்.

எனவே, இரு மகள்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என கோரி இருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மகள்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். 

அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனை குற்ற வழக்குகள் உள்ளது? என்பன போன்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

விசாரணையை வருகிற 4ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர். ஐகோர்ட் உத்தரவை


தொடர்ந்து கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா தலைமையிலான குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈஷா யோகா மையத்துக்கு நேற்று சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

மையத்தில் உள்ள தன்னார்வலர்கள், வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து தங்கியிருப்பவர்கள், அவர்களுக்கு மையத்தில் வழங்கப்படும் பாதுகாப்பு, விருப்பத்தின் அடிப்படையில் இங்கே தங்கியிருக்கிறார்களா?,

கட்டாயப்படுத்தி துறவறத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்களா? 

போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

மேலும் மையத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களது உறவினர்களை சந்திக்க முறையாக அனுமதி வழங்கப்படுகிறதா?, 

கட்டாயத்தின் பேரில் சட்ட விதிமுறைக்கு மாறாக யோகா மையம் செயல்பட்டு வருகிறதா? என்ற விவரங்களையும் போலீசார், சமூக நலத்துறையினர் சேகரித்தனர். விசாரணை அறிக்கையை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

----------------------------------------

தேர்தல் பத்திரம்.

மாட்டிக் கொண்ட மாமி!


தேர்தல் பத்திரம் என்ற பெயரால் மிரட்டி பணம் வசூலித்ததாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மீது சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் கர்நாடக மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஒருவர் இந்திய நாட்டின் நிதி அமைச்சராக இருக்கிறார்.


இன்னொருவர் இந்திய நாட்டை ஆளும் கட்சியின் தேசியத் தலைவர். பெங்களூருவைச் சேர்ந்த ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆதர்ஷ் அய்யர் என்பவர் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்வளாகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல்மாதம் ஒரு வழக்கை தாக்கல் செய்தார்.


“ஒன்றிய பா.ஜ.க. அரசு தேர்தல் நிதியை பத்திரங்கள் மூலமாகக் கொடுப்பது என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.


இதன் மூலமாக பா.ஜ.க. அதிகமான அளவு நிதியைப் பெற்றுள்ளது. இந்த நிதிகளில் மிரட்டிப் பறிக்கப்பட்டவை அதிகம். எனவே இது பற்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் ஆதர்ஷ் அய்யர். ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி திரட்டப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் ஆதர்ஷ் அய்யர்.


ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. தேசியத் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான நட்டா, கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா, கட்சியின் முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பெங்- களூரு திலக் நகர் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறையும் இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் போய் பா.ஜ.க. முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் தடையாணை பெற்றுள்ளார். அது இடைக்காலத் தடைதான். இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப் பிரிவுகள் 384, 120பி, 34 ஆகிய பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


குற்றநோக்குடன் சதி செய்தல், மிரட்டி பணம் பறித்தல், கூட்டுச் சேர்ந்து குற்றம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.


காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி ஆகியோர் டெல்லியில் அளித்த பேட்டியில்,“கடந்த 11 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு வழக்குகளை மத்திய அமைப்புகள் பதிவு செய்துள்ளன. எனவே நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை எப்படி கையாள வேண்டும் என்று அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டியது இல்லை.


இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். அல்லது உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவால் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கில் ஒன்றிய அரசின் தலையீடு இல்லாததை உச்சநீதிமன்- றமும், உயர்நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புதிதல்ல. அரசியல் களத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்தான். பொது வெளியில் பேசப்பட்ட குற்றச்சாட்டுகள்தான்.

இதற்கு பா.ஜ.க. தலைமையால் மறுப்பு தெரிவிக்கப்படாத குற்றச்சாட்டுகள் தான் இவை. இப்- போது முதன்முதலாக நீதிமன்றத்தின் விசாரணைக்குள் வந்துள்ளன.


தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,“எங்களுக்கு யார் நன்கொடைகள் வழங்கியது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று சொன்னவர் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கறிஞரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.


"நன்கொடையை யார் வழங்கியுள்ளனர் என்பது அதனைப் பெறும் கட்சிக்குமட்டுமே தெரியும். மற்ற கட்சிகளுக்கு தெரியாமல் ரகசியம் காப்பதுதான் இந்த திட்டம்” என்று குறிப்பிட்டார். அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.சந்திரசூட் தலைமையி- லான அமர்வு, ”அப்படியானால் வாக்காளர்களின் உரிமை என்ன? ஏன் நன்கொடை விபரங்களை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினர்.


“பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் நிலை இருக்கக் கூடாது. நியாயமான கட்டுப்பாடுகள் தேவை” என்று சொன்னவரும் சொலிட்டர் ஜெனரல்தான். மக்களைப் பற்றிக் கவலைப்பபடாத எதேச்சதிகாரம் கொண்டவர்கள் அல்லவா பா.ஜ.க.வினர்?


'என்னிடம் பணமில்லை, அதனால் தேர்தலில் நிற்கவில்லை' என்று பஞ்சப்பாட்டு பாடிய நிர்மலா அம்மையார், இப்போது நீதிமன்றத்தின் விசாரணை வளையத்துக்குள்ளே வந்துள்ளார்.

“கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு நாங்கள் ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தோம். அந்த வழிதான் தேர்தல் பத்திரங்கள்.


இது முழுமையான தீர்வு என்று சொல்லவில்லை. எந்த அமைப்பும் 100 சதவிகிதம் சரியானது அல்ல. அதில் இருக்கும் குறைகளை மேம்- படுத்த முடியும். எனது அரசால் தொடங்கப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம், கருப்புப் பணத்தை எதிர்த்துப் போராடியது. ஆனால் எதிர்க்கட்சிகள் பொய்யைப் பரப்புகிறார்கள்” என்று 16.4.2024 அன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொன்னவர் பிரதமர் மோடி அவர்கள்.


'தேர்தல் பத்திரங்களை ரத்து செய்ய வைத்தவர்கள் பின்னர் வருத்தப்படுவார்கள்' என்று வருத்தப்பட்டுச் சொன்னதும் அவர் தான். இப்போது நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கும் நெருக்கடிக்கு பா.ஜ.க. தலைமை வந்துள்ளது.

வாருங்கள், உங்கள் பதிலைச் சொல்லுங்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக