எதிர்க் கட்சியல்ல!

 சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், தரமணி, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறி இடங்களில் நள்ளிரவில் பலத்த மழை. தொடர்ந்து 3 நாளாக நள்ளிரவில் மழை, பகலில் வெயில் என்ற சூழல் நிலவி வருகிறது.

”போதைப்பொருட்களை ஒழிக்க அனைத்துமாநிலங்களும்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளுக்கும் மேலானவர் என தங்களை நினைக்கிறார்கள்: உயர்நீதிமன்றம் கருத்து.



எதிர்க் கட்சியல்ல!

உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக உள்ளதாகவும் அது அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார்

. மக்கள் நீதிமன்றமாக இருப்பதால், நாங்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கை நிறைவேற்றுகிறோம் என்று சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவாவில் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கத்தின் (SCAORA) முதல் மாநாட்டில் உரையாற்றிய தலைமை நீதிபதி சந்திரசூட், “கடந்த 75 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் நீதிக்கான அணுகல், நாம் தவறவிடக் கூடாத ஒன்று. 

சமூகங்கள் வளர்ச்சியடைந்து, செழுமையாகவும், செல்வச் செழிப்பாகவும் பரிணமிக்கும் போது, ​மிக முக்கிய நபர்கள் தொடர்பான வழக்கை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து உள்ளது.

 நமது நீதிமன்றம் அப்படிப்பட்டது அல்ல. நமது நீதிமன்றம் மக்கள் நீதிமன்றம். மக்கள் நீதிமன்றமாக உச்ச நீதிமன்றத்தின் பங்கு எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.

​​மக்கள் நீதிமன்றமாக இருப்பதால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று சொல்ல முடியாது. 

தங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கும்போது உச்ச நீதிமன்றம் ஓர் அற்புதமான நிறுவனம் என்று நினைப்பவர்கள், அதுவே அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது அதனை ஒரு கேவலமான நிறுவனமாகப் பார்க்கிறார்கள். இது ஒரு ஆபத்தான கருத்து.

உச்ச நீதிமன்றத்தின் பணியை விளைவுகளின் கண்ணோட்டத்தில் நீங்கள் பார்க்க முடியாது. தனிப்பட்ட வழக்குகளின் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு எதிராக இருக்கலாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திர உணர்வுடன் நீதிபதிகள் முடிவெடுக்க உரிமை உண்டு.

சட்டத்தின் முரண்பாடு அல்லது பிழைக்காக நீதிமன்றத்தை விமர்சிக்க ஒருவருக்கு உரிமை உண்டு. நீதிபதிகளுக்கு இதில் எந்த சிரமமும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அதன் பங்கை அல்லது அதன் வேலையை விளைவுகளின் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.

உச்ச நீதிமன்றம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மின்னணு முறையில் வழக்குகளை தாக்கல் செய்தல், வழக்கு ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், அரசியலமைப்பு அமர்வு வாதங்களை பேச்சிலிருந்து உரையாக மாற்றுதல், நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு என தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் நிறைய செய்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

தற்போது நீதிமன்ற நடவடிக்கை என்பது 25, 30 அல்லது 50 வழக்கறிஞர்களுடன் குறிப்பிட்ட நீதிமன்ற அறைக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் அது 2 கோடி நபர்களுக்குச் செல்கிறது. 

லைவ் ஸ்ட்ரீமிங் என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் பணியை வீட்டிற்கும் மக்களின் இதயத்திற்கும் எடுத்துச் சென்றுள்ளது என்று நான் நம்புகிறேன்.

பி.எம்.எல்.ஏ-வின் கீழ் இரண்டு ஆண்டுகளாக காவலில் உள்ள ஒருவரின் சிறிய ஜாமீன் விண்ணப்பம், யாரோ ஒருவரின் ஓய்வூதிய நிலுவைத் தொகை, யாரோ ஒருவரின் பணி ஓய்வு நிலுவைத் தொகை, எளிய மனிதர்களின் இந்த சாதாரண பிரச்சினைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தீவிர கவனத்தை ஈர்க்கின்றன.” என்று தெரிவித்துள்ளார்.


காய்,கனிகள்.

அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். அவற்றில் பைட்டோ கெமிக்கல் என்னும் சேர்மம் நிறைந்து உள்ளது.

 அவை ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்து நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தி ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவுகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

பழ வகைகளில் ராஸ்பெர்ரி, புளூபெர்ரி போன்ற அடர் சிவப்பு, நீல நிற பழங்களில் அந்தோசயனிகள் காணப்படுகின்றன. அவை விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கவும், 

இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகின்றன. தக்காளி, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு திராட்சைப்பழம் மற்றும் கீரை போன்ற அடர் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன.

தேயிலை, ஆப்பிள், சிவப்பு நிற முட்டைக்கோஸ், பீன்ஸ் ஆகியவற்றில் பிளேவனாய்டுகள் காணப்படுகின்றன. அவை ஆரோக்கியத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. தக்காளியில் லைக்கோபீன்கள் காணப்படுகின்றன. அவை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படுகின்றன. 

உடலில் அதிக அளவு லைக்கோபின் உள்ளடங்கியிருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் 22 சதவீதம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிரீன் டீ உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மார்பக புற்றுநோய் அபாயத்தை தடுக்கவும் உதவும். கிரீன் டீயை தொடர்ந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். 

உடல் எடை குறைப்புக்கும் துணைபுரியும்.புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தன்மை பிரக்கோலிக்கு உண்டு. மார்பகம், சிறுநீர்ப்பை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

வெங்காயத்தில் அல்லிசின் உள்ளது. அவை பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் உடலில் உருவாகும் சில நச்சுக்களை தடுக்க இது உதவும்.கேரட்டில் அதிக அளவு கரோட்டினாய்டு நிறைந்திருக்கிறது. 

உடலில் கரோட்டினாய்டுகளின் அளவு அதிகம் இருந்தால் மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயம் 28 சதவீதம் குறையும். அதனால் கேரட்டை அடிக்கடி தவறாமல் சாப்பிடுவது நல்லது.

தொகுப்பு: ஸ்ரீ

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

2025ல் தங்கம் விலை

முடிவுக்கு வருகிறதா?