இந்து(சோமாலி)யாதான்.

இந்தியத் தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் தலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவிருப்பதாகவும் அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 7,000 கோயில்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. 
பிப்ரவரி பத்தாம் தேதியன்று மக்களவையில் பேசிய பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங், இந்தியத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.
தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் 3,691 நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 745 இடங்கள் இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ளன. இந்த நிலையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கிய நினைவுச் சின்னங்களை இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கீழ் கொண்டுவரக் கருதியிருப்பதாகவும் தற்போது ஏஎஸ்ஐயின் கீழ் உள்ள சில நினைவுச் சின்னங்களை மாநிலங்களுக்கு அளித்துவிட முடிவெடுத்திருப்பதாகவும் இது தொடர்பாக மாநிலங்களின் கலாச்சாரத் துறை அமைச்சர்களுடன் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாகவும் பிரஹலாத் சிங் தெரிவித்தார்.
இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை பத்தாயிரமாக உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 7,000க்கும் மேற்பட்ட கோவில்கள் நூறாண்டுகளுக்கு மேல் பழமையானவை என்றும் பிரஹலாத் தெரிவித்தார்.



தமிழகக் கோவில்களை கையகப்படுத்துகிறதா இந்திய தொல்லியல் துறை?

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இது தொடர்பாக கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். 
"தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து - பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை எடுக்க முயன்று  தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக - அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டது. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கூட கைப்பற்ற முயன்று - அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது.  தமிழைப் புறக்கணித்து - இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் "தாலாட்டு"பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து - இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட விரும்புகிறது" என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். 



சித்தரிப்புக்காக
Image captionசித்தரிப்புக்காக

"தமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மைவாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன"என்று மத்திய அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் சுட்டிக்காட்டியிருப்பது - தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டு - தமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம். தமிழ்நாட்டின் "பரம்பரை எதிரிகள்" தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்" எனவும் தெரிவித்திருக்கும் ஸ்டாலின்,  தமிழக மக்களின் உணர்வை மீறி மத்திய அரசு செயல்பட்டால், அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்துமென்றும் கூறியிருக்கிறார். 
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தொல்லியல் துறையின் இந்தச் செயல், கோயில்களை மூடுவதற்கு ஒப்பானது எனக் கூறியிருக்கிறார். 



படத்தின் காப்புரிம

"வழிபாட்டில் உள்ள கோயில்களை மத்திய தொல்லியல்துறையிடம் ஒப்படைப்பதென்பது அக்கோயிலை  மூடுவதற்கு ஒப்பானதாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்   பொதுமக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சென்று வழிபாடு நடத்த முடியும்; கோயில்களில் திருப்பணி செய்வது என்றாலும், பக்தர்களின் வசதிக்காக ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றாலும் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக செய்ய முடியும். ஆனால், கோயில் நிர்வாகம் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டது என்றால், தில்லி வரை சென்று அனுமதி வாங்கித்தான் செய்ய முடியும்" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியத் தொல்லியல் துறை தனது 1958 ஆண்டு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தினால், அதில் எதிர்ப்புத் தெரிவிக்க ஏதுமில்லை என்கிறார் அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் வருகைதரு பேராசிரியரான சு. ராஜவேலு. 
"ஏஎஸ்ஐயின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் சிறப்பாக பராமரிக்கப்படும். மேலும், கட்டுமானங்களை மாற்ற முடியாது. சிதைக்க முடியாது. 100 மீட்டருக்குள் எந்தக் கட்டடத்தையும் கட்ட முடியாது. தஞ்சாவூர் பெரிய கோவில் தொல்லியல் துறையின் கீழ்தான் உள்ளது. ஆனால், வழிபாடு, கணக்கு வழக்குகளை இந்து சமய அறநிலையத் துறைதான் பார்த்துக்கொள்கிறது. வழிபாட்டில் பிரச்சனை வரவில்லையே?" என்கிறார் அவர்.
"புதுக்கோட்டையில் 90 சதவீத கோவில்கள் ஏஎஸ்ஐயின் கீழ்தான் உள்ளன. சமஸ்தானத்திடம் பராமரிக்க நிதி இல்லாததால் ஏஎஸ்ஐயிடம் கொடுத்துவிட்டார்கள். மத்திய தொல்லியல் துறையிடம் கொடுப்பது ஒருவகையில் நல்லது என்றுதான் சொல்வேன். காரணம், கோயில்களின் பழமை பாதுகாக்கப்படும்" என்கிறார் அறநிலையத் துறையின் முன்னாள் அதிகாரியான முத்துபழனி உடையவன்.
திருப்பணியின்போது, நாகப்பட்டனம் திருவிடைவாய் கோவிலில் இருந்த ஞானசம்பந்தரின் பாடல்கள் இடம்பெற்றிருந்த கல்வெட்டுகள் முழுமையாக சிதைக்கப்பட்டதை உதாரணமாக அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், இந்திய தொல்லியல் துறை தமிழகம் தொடர்பான விஷயங்களில் காட்டம் சுணக்கத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். 
"தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் 70 சதவீத கல்வெட்டுகளை இந்தியத் தொல்லியல் துறை படியெடுத்துவிட்டது. ஆனால், அவை இன்னும் பதிப்பிக்கப்படவில்லை. இதுபோல பிரச்சனைகள் இருக்கின்றன" என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ்  38,652 திருக்கோயில்கள் உள்ளன. இதில் 7,000 திருக்கோயில்கள் நல்ல வருவாய் உள்ள, பாடல் பெற்ற கோயில்கள்.  மீதமுள்ள கோயில்கள் சிறிய கோயில்கள். இந்த சிறிய கோயில்கள், பிற கோயில்களில் இருந்து கிடைக்கும் வருவாயிலிருந்தும் அரசின் உதவியுடனும் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில், 7,000 பழைய கோவில்களை ஏஎஸ்ஐயின் கீழ் கொண்டுவர நினைப்பதை அறநிலையத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாக பார்க்கின்றனர். 
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களை சிறப்பாகவே புதுப்பித்து பாதுகாத்து வருவதாகச் சொல்லும் அவர்கள்,  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் ஆகியவற்றின் சிறப்பான பராமரிப்பிற்காக மத்திய அரசு, யுனெஸ்கோ விருதுகளைப் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 
இந்தியத் தொல்லியல் துறை கையகப்படுத்திவிட்டாலே, சிறப்பான பராமரிப்பு கிடைக்கும் என்பதில்லை என்கிறார்கள் அவர்கள். உதாரணமாக, மதுரை திருப்பரங்குன்றம் செல்பவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முருகன் கோயிலையும் அருகிலேயே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் சமண கோயிலையும் பார்த்தாலே வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் அவர்கள். 
தவிர, கோவில்களின் பராமரிப்புப் பணியில் வட மாநிலத்தினரே ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கே வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற அச்சமும் இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியத் தொல்லியல் துறை பாராமுகத்துடனேயே நடந்துவருவதாகவும் அதற்கு உதாரணமாக, சென்னையைத் தவிர வேறு எங்குமே இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் இல்லாததையும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கைகளை முறையாக வெளியிடாததையும் சுட்டிக்காட்டுகின்றனர். 
இது தவிர, மத்திய அமைச்சரின் பதிலில் சில பகுதிகள் தெளிவில்லாமல் உள்ளன. ஏற்கனவே இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 3,700 இடங்கள் உள்ள நிலையில், அந்த எண்ணிக்கை 10,000ஆக உயர்த்தப்படும்போது இந்தியா முழுவதிலும் நினைவுச் சின்னங்கள் தேர்வுசெய்யப்பட்டு, ஏஎஸ்ஐயின் கீழ் கொண்டுவரப்படலாம். ஒட்டுமொத்தமாக ஒரு மாநிலத்திலிருந்தே 7,000 நினைவுச் சின்னங்களை கையகப்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வியும் இருக்கிறது.
இது தவிர, ஏஎஸ்ஐயின் கீழ் இந்தக் கோயில்கள் செல்லும்போது பராமரிப்பை மட்டுமல்லாது, கோவிலின் நிர்வாகத்தையும் மத்திய அரசு கையகப்படுத்த முயற்சிக்கலாமோ என்ற அச்சமும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் உள்ளது.
இது தொடர்பாக ஆட்சித் தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரத் துறை, தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜனிடம் கேட்டபோது, "எங்கள் வசம் பராமரிப்பில்லாத, வழிபாடுகள் இல்லாத கோவில்கள்தான் உள்ளன. 7,000 கோவில்கள் எனும்போது அது குறித்து அறநிலையத் துறை அமைச்சர்தான் கூற வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக, அறநிலையத் துறை அமைச்சரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பொருறாதாரம்,சட்ட ஒழுங்கில் அதலபாதாளம் நோக்கி செல்லும் இந்தியாவை மீட்டெடுப்பதை விட்டு,விட்டு அகண்ட இந்திய உருவாக்கும் முயற்சியில் மட்டுமே முழுக்கவனம் செலுத்துகிறது மோ(ச)டி ஆட்சிக் கும்பல்.இவர்கள் சீரகேடு தொடருமானால் உருவாவது புதிய இந்தியா அல்ல.இந்து சோமாலியாதான்.
---------------------+------------------+-------------------+

பனிமனித நட்சத்திரம்

சூரியனைவிடப் பெரிய பனி மனிதன் போன்ற உருவில் உள்ள நட்சத்திரமொன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது அளவில் சூரியனைவிடப் பெரிதாக இருந்தாலும் சுற்றளவில் பூமியின் அளவைவிடக் குறைவு.



பனிமனித நட்சத்திரம்: சூரியனைவிட பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிம

குள்ள மனிதன் போன்ற இரண்டு நட்சத்திரங்களின் இணைப்பினால், பனிமனிதன் போன்ற தோற்றத்தில் இந்த நட்சத்திரம் உருவாகி உள்ளதாகக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். நட்சத்திரம் வெடிக்கும் போது பொதுவாக விரிவடையும், அப்போது இந்த இணைப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்சத்திரத்துக்கு WDJ0551+4135 என்று பெயரிட்டுள்ளனர்.
----------------+-----------------+------------------+
தேசிய மக்கள் தொகை பதிவேடு.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NRC) நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.3000 கோடிக்கு மேல் நடுவண் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் இதை செயல்படுத்தப் போவதில்லை என சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. விரைவில் தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) திட்டம் ஆதாரமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும் நாடு முழுவதற்கும் செல்லத்தக்கது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 256 -இன் படி இதை நடைமுறைப்படுத்த வேண்டியது ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை செயல்படுத்த முடியாது என்று சொல்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. ஆனால் இத்தகைய திட்டங்கள் சட்டத்தின் ஒரு பகுதியா என்பதிலிருந்தே இதற்கான விடையைத் தேட வேண்டும்.
இந்தக் கேள்வி மிக முக்கியமானது. அரசியலமைப்புச் சட்டப்படி பார்த்தால் மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசுகள் மறுக்க முடியாது. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒரு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும். மத்திய அரசின் உத்தரவை மீறும் மாநில அரசுகளை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356 இன்படி கலைப்பதற்கும், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கும் இடமிருக்கிறது.
அத்தகைய சூழல் இன்னும் உருவாகவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பதற்குப் பதிலாக, அதைத் திரும்பப் பெறக்கோரி சில மாநில அரசுகள் வெறுமனே தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றி உள்ளன. முதன் முதலில் கேரளதான் இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானங்களுக்கு சட்டமன்ற விதிகளின்படி எவ்வித அனுமதியும் கிடையாது என்றாலும், ஒரு பிரச்சனையைப் பற்றி விவாதிப்பதற்காக சட்டமன்ற விதிகளைக்கூட நிறுத்தி வைக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
CAA செல்லுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் பரிசீலிக்க உள்ளது. துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள சட்டவிரோதக் குடியேறிகள் குறித்து நீதிமன்றம் எத்தகைய ஒரு தீர்ப்பையும் வழங்கி இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஏதோ வகையில் நீண்ட காலத்துக்கு இந்தியர்களை விரட்டிக் கொண்டே இருக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், தாங்கள் முகாம்களில் அடைக்கடுவோமோ அல்லது நாடு கடத்தப்படுவோமோ என்கிற ஒரு சாராரின் அச்சம் மட்டும் நீங்கப் போவதில்லை.
வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் போதே குடியுரிமைச் சட்ட விதிகள் 2003 இன் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) உருவாக்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளது நடுவண் அரசு. குடியுரிமைச் சட்டம் 1955, விதி 18 இன் கீழ் வரும் துணை விதிகள் 1 மற்றும் 3 இன் படி குடியுரிமைச் சட்ட விதிகள் 2003 உருவாக்கப்பட்டுள்ளன. இதன் பிரிவு 2(l) இன் படி வரையறுக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) என்பது ஒரு கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் நபர்களின் விவரங்களைக் கொண்ட பதிவேடாகும்.
மாநில அரசின் வருவாய் அலுவலரே உள்ளூர் பதிவாளராகவும் செயல்படுவார்.  இவர்தான் தனது ஆளுகைக்கு உட்பட்ட கிராம மட்டம் வரை வசிக்கும் மக்கள் அனைவரையும் பற்றிய விவரங்களை சேகரித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் (NPR) தயாரிப்பார் என துணை விதி 4 சொல்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) உள்ள விவரங்கள்தான் உள்ளூர் பதிவேட்டிலும் இருக்கும் என துணை விதி 5 சொல்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சரிபார்க்கப்பட்ட பிறகு அதன் விவரங்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) சேர்க்கப்படும்.
ஆக NPR என்பது குடிமக்களைப் பற்றிய விவரம் மட்டுமன்றி கிராம மட்டம் வரை வசிக்கும் அனைவரின் விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமாகும். NRC -க்கான தரவுகள் இதிலிருந்தே எடுக்கப்படும். எனவே NRC தயாரிப்பதற்கு NPR மிகவும் அவசியமானது. NPR மற்றும் NRC ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை விதிகள் தெளிவுபடுத்துகின்றன. NRC உடன் CAA சட்டபூர்வமாக இணைக்கப்படவில்லை என்றாலும், பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் இவற்றுக்குள்ள இணைப்பை தெளிவு படுத்துகின்றன.
CAA, NRC மற்றும் NPR பற்றிப் பேசும் பொழுது இவை சட்டப்படி செல்லத்தக்கவைதானா? என்கிற முக்கியமான விசயம் மட்டும் விவாதிக்கப்படாமலேயே விடுபட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட குடியுரிமை சட்ட விதிகளில் NPR நடைமுறை பற்றி பேசப்பட்டாலும், இதன் மூலச் சட்டமான குடியுரிமைச் சட்டம் 1955-ல், எந்த ஒரு விதியிலும் NPR நடைமுறைப்படுத்துவதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. இது ஆச்சரியமானது என்றாலும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
குடியுரிமைச் சட்டத்தின் 18-வது பிரிவின் (1) மற்றும் (3) துணைப் பிரிவுகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள NPR குறித்த விதிகள் மிகவும் விசித்திரமானது. குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று பிரிவு (1) தெளிவாகக் கூறுகிறது. ஆனால் NPR தயாரிப்பது பற்றி குடியுரிமைச் சட்டத்தில் எங்குமே பேசப்படவில்லை. மூலச் சட்டமான குடியுரிமைச் சட்டத்தில் சொல்லியிருந்தால் மட்டுமே அது பற்றிய விதிகளை உருவாக்க முடியும். விதிகள் உருவாக்குவதற்கு இது மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும். விதிகள் தனிப்பட்ட முறையில் அதிகாரம் கொண்டவை அல்ல. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை என்றால் எந்த ஒரு முக்கியமான திட்டத்தையும் இந்த விதிகளை மட்டும் கொண்டு  நடைமுறைப்படுத்த முடியாது. அதிகார முறைகேட்டுக்கு வழிவகுக்கும் இத்தகைய விதிகள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல. சட்டக் கோட்பாடுகளும் கொள்கைகளும் போதுமான அளவு வகுக்கப்பட்டிருந்தால் மட்டுமே சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்கப்படுகிறது என டாடா நிறுவனத்திற்கும் அதன் தொழிலாளர்களுக்கும் இடையிலான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தி உள்ளது.
NPR தயாரிப்பதற்கு  குடியுரிமைச் சட்டம் 1955 இல் இடமில்லை என்பதே உண்மை. எனவே அதற்கான விதிகளையும் வகுக்க முடியாது. அதற்கான சட்டக் கொள்கைகளும் கோட்பாடுகளும் முதலில் வகுக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் விதிகளை வகுக்க முடியும். இதுதான் துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படைக் கொள்கையாகும். விதிகள் என்பவை துணைச் சட்டமாகும், அவை மூலச் சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
மூலச்சட்டத்திற்குப் புறம்பாக விதிகள் இருந்தால் அவை முறைகேடானவை எனக்கூறி நீதிமன்றம் அவற்றை இரத்து செய்து விடும். அரசுத் துறைகள் இந்த விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தை மூலச்சட்டத்திலிருந்தே பெறுகின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்து மூலச்சட்டத்தில் இடமில்லை என்றால் அது குறித்த விதிகளை உருவாக்க அரசுத் துறைகளுக்கு அதிகாரமில்லை.
NPR தொடர்பான விதிகள் பாரதூரமான குறைபாடுகளைக் கொண்டதாகவே உள்ளது. விதிகள் வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்தே இக்குறைபாடுகள் நீடிக்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்பட்டதாலேயே இவ்விதிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்துவிட முடியாது. மூலச் சட்டத்தில் வழிவகை செய்தால் மட்டுமே இக்குறைபாடுகளை சரி செய்ய முடியும்.
---------------------+--------+------------------+

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?