சார்லி சாப்ளின்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். 
உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். 
அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin). இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.
பல்லாயிரக்கணக்கான திரை ரசிகர்களுக்கு 'நகைச்சுவை' எனும் மருந்து தந்த அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு சோகம் நிறைந்தது தெரியுமா? 
சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞனின் கதையைத் தெரிந்துகொள்வோம்.
1889-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ந்தேதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக்கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 
5 வயதே ஆனபோது சார்லி சாப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் பையனை மேடைக்கு தள்ளினார் தந்தை மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார் 
அதனால அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது.
அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 
7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் 
ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலில் வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14-ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. 
பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. 
அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
1913 ஆம் ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ’ என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது. 
சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். 'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும், கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. 
தனது 25 ஆவது வயதிலேயே '20 minutes of love’ என்ற முதல் படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. 
தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் திருமண வாழ்வில் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது.
1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. 
பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. 
அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின்.
சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான 'தி கிட்' 1921ல் வெளிவந்தது 
தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 
1925ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின்
 பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை மேலும் அவர் கம்யுனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது 
அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.
1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் 
அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார்.
 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.
அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 
1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 

1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88-ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், 
வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"
என்று கூறுகிறார் சாப்ளின். அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார். 

இன்று வாய்விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். 

இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்...
=====================================================================================
இன்று,
ஏப்ரல்-16.
  • செர்பியப் பேரரசு, டுசான் சில்னி என்பவரால் உருவாக்கப்பட்டது(1346)

  • இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை பம்பாயில் 
  • ஆரம்பிக்கப்பட்டது(1853)

  • உலகப் புகழ் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தினம்(1889)

  • சிரியா விடுதலை தினம்(1946)
=====================================================================================

அருப்புக்கோட்டை ஜெயலலிதா கூட்டம் ,
ஒரு நேரலை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளியன்று அருப்புக்கோட்டையில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதியம் 2 மணிக்கு ஜெயலலிதா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் காலை 10 மணி முதலே ஆட்கள் திரட்டிவரப்பட்டனர். 
அவர்கள் கொளுத்தும் வெயிலில் திறந்தவெளியில் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
ரூ. 200 மற்றும் உணவுபொட்டலம், இரண்டு தண்ணீர் பாக்கெட்டுகள், தொப்பியும், விசிறியும் வழங்கப்பட்டது. என  கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து  தெரிந்தது.

மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலை வழியே வந்ததால் அருப்புக்கோட்டை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாகச் செல்லக்கூடிய பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பொதுமக்கள் தவித்தனர்.
மதுரை-சாத்தூர் நான்குவழிச்சாலையில் உள்ள அணுகுசாலைகள் மூடப்பட்டன. 
இதனால் இருசக்கர- நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியவில்லை.
கூட்டத்திற்கு வந்திருந்த அருப்புக்கோட்டையை அடுத்துள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த சண்முகநாதன் மனைவி சுந்தரி (40) தவறி கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் எஸ்தர் பிரேமா, வெயிலின் கொடுமை தாங்காமல் குறைந்த ரத்தம் அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 
இவர் நடமாடும் மருத்துவக்குழு மூலம் கல்லமநாயக்கன்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
பொதுக்கூட்டம் நடந்த பகுதியில் நான்கு பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அங்கேயே குளுக்கோஸ் கொடுத்து உட்காரவைக்கப்பட்டனர்.
இது போல் மயக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீருடன் இந்த கூட்டத்தில் குளுகோசும் கொடுக்கப்பட்டது.
மீண்டும் “கட்-அவுட்” கலாச்சாரம் தலை தூக்கியதை அருப்புக்கோட்டையில் காணமுடிந்தது. 
40 அடி முதல் 50 அடி உயரத்தில் முதல்வர் ஜெயலலிதா கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
எம்.ஜி.ஆர் படங்களை பார்க்க முடியவில்லை. 
பொதுக்கூட்ட மேடையில் மட்டும் அண்ணா, பெரியார் மற்றும் எம்ஜிஆர் படங்கள் பேருக்கு சிறிய அளவில் இடம் பெற்றிருந்தன.
 ஜெயலலிதாவின் பேச்சை குறிப்பெடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். 
 வேட்பாளர்கள் 11 மணிக்குள் மேடை அருகே வந்துவிடவேண்டும். 
கூட்டம் கேட்க வருபவர்களை  12 மணிக்குள் கூட்டம் இடத்தில் உட்கார வைத்து விட  வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிமுகவினர் கூறினர்.
பொதுக்கூட்ட மேடையின் பின்புறம் ஜெயலலிதாவிற்காக குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிகளை பத்திரிகையாளர்கள் யாரும் படமெடுத்துவிடக்கூடாது என்பதற்காக அவை துணியால் மூடி மறைக்கப்பட்டிருந்தன.
 தவிர காவல்துறையினரும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
 மேடை அருகே ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் படமெடுக்க காவல்துறை அனுமதிக்கவில்லை. 
அதுவும் உயரமான பந்தல் போட்டு மறைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு வந்திருந்த ஆண்களில் ஏராளமானோர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கடைகளுக்குச் சென்று தங்களது தாகத்தை தணித்துக்கொண்டனர். 
இதனால் அக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலர் சரக்குகளை வாங்கிக்கொண்டு தண்ணீர் பாக்கெட்டுகளுடன் ஆங்காங்கே மர ஓரங்களில் கூட்டம் கூட்டமாக நின்று தங்களை உற்சாகப்படுத்திக்கொண்டனர்.
 கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, வழக்கமான ‘படிப்படியாக மதுவிலக்கு’ பல்லவியை அவர்களிடமே பாடினார். 
5 வருடங்களில் மேற்படி 14 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றியும், நடைபெற்று வரும் பணிகள் பற்றியும் அடுக்கிக் கொண்டே போனார். 
வந்திருந்தவர்கள் ஏதும் ஜெயலலிதா பேசுவதி கேட்காமல் தங்களுக்குள் பேசிக்கொண்டும் ஜெயலலிதா தனது பேச்சை நிறுத்தி கூட்டத்தை பார்க்கும்போது சொல்லிக்கொடுத்தது போல் கைத்ட்டைக்கொண்டுமிருந்தனர்.
அரசு கலைக் கல்லூரிகள் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூரில் அமைக்கப்பட்டுள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலை அவர் தெரிவித்தார். 

ஆனால், சிவகாசியில் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. வாடகை கட்டிடத்திலேயே கலைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
 விருதுநகர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். 

ஆனால், விருதுநகர் ,கோவில்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் இத்திட்டம் குழாய்களே பதிக்கப்படாத போது  திட்டம் துவங்கி நடைபெற்று வருவதாக ஜெயலலிதா கூறினார.

அதற்கும் கூட்டத்துக்கு வந்திருந்த அப்பகுதி மக்களே கைத்தட்டினர்.அதுபற்றி அவர்களிடம் கேட்டபோது "அதெல்லாம் என்ன பேசினார் என்று தெரியாது.அவர் பேசியதை யார் கேட்டார்கள்.எங்களை கூட்டி வந்தவர் ஜெயலலிதா பேச்சை நிறுத்தி கூட்டத்தை பார்க்கும்போதெல்லாம் விடாமல் கைத்தட்ட வேண்டும் என்று சொல்லித்தான் 200 ரூபாய் தந்தார்.
அதை நாங்கள் சரியாக செய்தோம்"

என்றார்.கூலிக்கு மாரடிப்பது என்பது இதுதானோ?

jaya intro 2016 04 15
====================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?