நூற்றாண்டை நோக்கி .....!

நூற்றாண்டை நோக்கி சுழலும் சூரியன்.
கலைஞர் வாழ்க்கை சுழன்ற திசைகள்.




93 ஆண்டு வாழ்க்கை உலக அனுபவம் 
75 ஆண்டு பொதுவாழ்க்கை 
72 ஆண்டு பத்திரிகையாளர்
70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்புகடிதங்கள்
1000த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75 திரைப்படங்கள்

68 ஆண்டு கலைத்துறைபங்களிப்பு
65 ஆண்டுகால தேர்தல்களில்  தோல்வி காணா தொடர் வெற்றி
50 ஆண்டு சட்டசபைபணிகள்
18 ஆண்டு தமிழக முதல்வர் 
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசுதலைவர்களை உருவாக்கியதில் முக்கிய பங்களிப்பு.

இதற்கு பெயர்தான் கலைஞர் மு.கருணாநிதி . 

=======================================================================================



பிறந்த நாள் செய்தியாக கலைஞர்  வெளியிட்டுள்ள அறிக்கை.

எனது 93வது பிறந்த நாள்! 92 வயது நிறைவடைந்து, 93வது வயதில் அடியெடுத்து வைக்கும் இனிய வேளையில், எனை ஈன்று புறந்தந்த என் அருமைத் தாய் அஞ்சுகம் அம்மாள், எனைச் சான்றோனாக்கிய அன்புத் தந்தை முத்துவேலர், கொள்கை வேல் வடித்துத் தந்து வழிப்படுத்திய தந்தை பெரியார், அவையத்து முந்தியிருக்கச் செய்த பேரறிஞர் அண்ணா, அரசியல் களத்தில் வெற்றிகள் குவித்திடத் தோள் வலிமை தந்து, துணைபுரிந்து உதவிய கெழுதகை நண்பர்கள், இருக்கிறோம் நாங்கள் எதையும் தாங்கும் இதயத்தோடு; என்றும் உன் அருகில்' என்று எனை எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்ற என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவரையும் எண்ணி மகிழ்கிறேன்; உள்ளத்தால் 

வணங்கு கிறேன்!
தமிழகத்தில் 15வது சட்டமன்றத்திற் கான தேர்தல் முடிந்து - ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை நூலிழையில் தவறவிட்ட போதிலும், திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களைப் பெற்று - தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்து; தளபதி தம்பி மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றும் கொண்டுள்ள வேளையில் வரும் எனது பிறந்த நாளில் எனது அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறுபாடான பல செயல்பாடுகளைக் காண முடிந்தது. தேர்தல் ஆணையம் திட்டமிட்டு நமக்கு எதிராகவே செயல் பட்டுள்ளது. தமிழகக் கட்சிகளோ, 2011-2016 ஐந்தாண்டு கால அ.தி.மு.க. அரசின் அடாவடிகளை, அரசியல் நாகரிகமற்ற அணுகுமுறைகளை, ஜனநாயக விரோதச் செயல்பாடுகளை, செயல்திறனற்ற அரசின் முறைகேடுகளை, ஊரே நாறும் ஊழல் நடவடிக்கைகளை எல்லாம் தொடர்ந்து கண்டித்து வந்தபோதும், 2016 தேர்தலில் அக்கட்சியே வெற்றி பெறுவதற்குக் கொல்லைப்புறத்தில் குறுக்கு வழிவகுத்து, நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை எப்பாடு பட்டேனும் தடுப்பதிலேயே சில கட்சிகள் குறியாய் நின்றன. 
மத்திய அரசும், அதன் அமைச்சர்களும் அ.தி.மு.க. அரசைக் கடுமையாகக் குறை கூறிக் கொண்டே, முதலமைச்சரை மத்திய அமைச்சர்களாலேயே சந்திக்க முடியவில்லை எனக் குற்றம் சுமத்திக் கொண்டே, தேர்தல் நேரத்தில் அக்கட்சியின் தில்லுமுல்லுகளுக் கெல்லாம் வெளிப்படை யாகவே துணைபோன காட்சிகளைத்தான் காண முடிந்தது நம்மால்.

கரூர் அன்புநாதன் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக் கான ரூபாய் பணம், திருப்பூரில் 570 கோடி ரூபாயுடன் பிடிபட்ட கண்டெய்னர் லாரிகள், அங்கிங்கெனாதபடி வாக்காளர்களுக்குப் பல தவணை களில் அ.தி.மு.க. அள்ளி வீசிய பணம், எல்லாம் அரசியல் கட்சியின் தலைவர்களால், செய்தி ஊடகங்களால், செய்தி ஏடுகளால், இன்று மறக்கப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டனவே?

அ.தி.மு.க. 2011-2016 ஆட்சி காலத்தில் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவில்லை; கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட வடசென்னை, மேட்டூர், வல்லூர் அனல் மின் திட்டங்களின் பயன்களை நுகர்ந்ததே அல்லாமல், புதிய ஒரு மின் திட்டத்தைக்கூட, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைக்கூட தொடங்கிட வில்லையே? விலைவாசிகளைக் குறைக்க வில்லையே? 

இளைஞர்களின் வேலைவாய்ப்பு களுக்கு வழிசெய்யப்பட வில்லையே? 
இருந்த தொழில்களை மூடியதுடன், புதிய தொழில் ஒன்றைக்கூடத் தொடங்கிடாமல், தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் கடைசி மாநிலம் என்ற தலைக்குனிவை ஏற்படுத்தியதே? 

வரலாறு காணா வகையில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வுகளால், மக்கள் பாதிக்கப்பட்டபோதும் கவலைப்படவில்லையே? 

ஐந்தாண்டுகளில் பத்தாயிரம் படுகொலைகள், ஏறத்தாழ ஒரு இலட்சம் கொள்ளைச் சம்பவங்கள், வழிப்பறிகள், கற்பழிப்புகள் முதலியவைகளால் சட்டம்-ஒழுங்கு கெட்டுக் குட்டிச்சுவரானதும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையே? 

பால் கொள்முதலில் ஊழல், தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், அரசு ஊழியர்கள் நியமனத்தில் ஊழல், பருப்பு கொள்முதலில் ஊழல், முட்டை கொள்முதலில் ஊழல், தாது மணல் கொள்ளை ஊழல், கிரானைட் ஊழல் என அரசின் துறைகள் அனைத்துமே ஊழலின் ஊற்றுக் கண்களாகவே மாறிவிட்டனவே?

அரியானா மாநிலத்தில் 2010 வரை நடைமுறையில் இருந்த தமிழ் கற்பிக்கும் முறை தொடரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் குட்டு வைக்கும் நிலைக்குத் தமிழ் வளர்ச்சிப் பணிகள் தேங்கி விட்டனவே? 


இவை போல இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்!


இத்தனையையும் புறந்தள்ளி, ஆட்சி அதிகாரம் அவர்களுக்கே தாரை வார்க்கப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது; "ஆடு, கசாப்புக் கடைக்காரனைத் தான் நம்புகிறது".

இருந்தபோதிலும், பல ஆண்டுகாலம் போராடி, தியாகங்கள் புரிந்து, உயிர்ப்பலிகள் தந்து, தமிழும் - தமிழ் மக்களும் - தமிழ்ப் பண்பாடும் - தமிழக முன்னேற்றமும் மட்டுமே நமது குறிக்கோள்கள் என, நாம் அரும்பாடுபட்டு தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம், வேளாண்மை உற்பத்தியில் முன்னணி மாநிலம், பொருளாதார வளர்ச்சியில் முதல் வரிசை மாநிலம், கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலம் என்பன போன்ற நாம் படைத்த சாதனைகள் எல்லாம் சரிவடைந்து கொண்டிருக்கின்ற கொடுமைகளைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க முடியுமா? 


அவற்றால், பாதிக்கப்படுவது நமது தமிழினம் அல்லவா? 

இதை இப்படியே விட்டுவிட்டால் நாளைய தலைமுறை, பழிக்குமே நம்மை. இதை எண்ணி விழிப்புடன் செயல்படுவோம்!

உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டுவோம்! 

உழைப்பை மறந்து ஊழல் சாக்கடையில் புரளும் உன்மத்தர்களைத் திருத்திட ஓய்வின்றி உழைத்திடுவோம்! திராவிடத்தின் துயர் துடைத்துச் செம்மைப்படுத்துவோம்! 
என என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளை அன்புக் கரம் நீட்டி அழைக்கிறேன்!

இவ்வாறு அந்த அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

 'திருவாரூர் தியாகராசர் ஆலயத்தில் கிருபானந்த வாரியாரின் புலால் உண்ணாமை பற்றிய சொற்பொழிவு.
ஆடு மாடு கோழிகளை உண்ண வேண்டுமானால் அவற்றை கொல்லனும். ஆனா கத்திரிக்காய் வெண்டைக்காயை பறித்து உண்பதால் அந்த செடி சாவதில்லை. அதனால. ...
அப்போது கூட்டத்தில் இருந்து உரத்த குரலில் ஒரு கேள்வி எழுந்தது. .

அப்ப முள்ளங்கிய எப்படி சாப்பிடறது சாமீ.?
(முள்ளங்கி செடியை பிடுங்கி இலைகளை பிய்த்து விட்டுத்தானே சமைக்க முடியும்.)
அந்த கேள்வியை எழுப்பிய சிறுவன்தான்  ஏழு வயதே ஆன  கருணாநிதி. ....     '.
கலைஞரின் பிறந்தநாள் வாழ்த்தரங்கில் திருவாரூர் ஆசிரியர் ‪‎சண்முக‬ வடிவேலு.
           நூற்றாண் டை நோக்கி வலம் வரும் சூரியனே உன் ஒளியால் இத் தமிழகம் வளம் பெறட்டும் .







கலைஞரின் பிறந்த நாள் செய்தி!
சட்டமன்றத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத் துறை ஆகிய நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. 
அந்தத் தூண்கள், எத்தகைய தூய்மையான நோக்கங்களைத் தாங்கிப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி, சவால்களை எதிர் நோக்கி உள்ளன. 
சோதனைகளில் வென்று, புடம் போட்ட பொன்னாக மிளிர வேண்டிய அந்தத் தூண்கள், துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டன. அ
வற்றின் பெறுமானமும் (Value) சரியத் தொடங்கி விட்டது. 
அதற்குக் காரணம், மக்களாட்சிக்கு விரோதமான சக்திகள், நமது சமுதாய - அரசியல் கட்டமைப்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி, உருக் குலைத்து வருகின்றன என்பது தான்.

இந்த எதிர்மறைப் பாதிப்பை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்தி, மக்களாட்சியின் நான்கு தூண்களினுடைய நல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், ஜனநாயக - சோஷலிச - சமயச் சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு, ஆழ வேரூன்றிச் செல்வாக்கு பெறவும், நமது நாட்டின் இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய, உறுதி மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
=========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?