நோயாளிகளாவதில் இருந்து தப்பிக்க.

இன்றைய தமிழக அரசியலில் ஆளுங்கட்சி அதிமுகவில் தினசரி நடக்கும் கூத்துக்கள் ,
மத்திய ஆளுங்கட்சி பாஜக தினசரி மக்களுக்கு அதாவது தேசத்துரோகர்கள் வாழ்க்கைக்கு விடும் குத்துக்கள் இரண்டுமே அனைவரையும் நோயாளிகளாக்குகிறது.

உண்மையான ஒன்றுதான் இது.

இவர்கள் செய்யும் கொடுமையை பார்த்து ரத்தம் கொதிக்காதவர்கள் அக்கட்சித்தலைவர்கள் மட்டுமே.
இறந்த கொதிப்புதான் நம் உடலை ரத்தக்கொதிப்புக்கு ஆளாக்கி விடுகிறது.

ஏற்கனவே இது போன்றவர்களை நீரழிவு வியாதி அனுமதி கேட்காமலேயே அணுகி கூட்டணி வைத்துக்கொள்ளும்.
இவை போதாதா?


சிலருக்கு இவைகள் மட்டும் காணாது என்று மாரடைப்பையும் நேற்று முன்னாள் இடைக்காலப் புகழ் முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் பேசிய பேச்சு கொணர்ந்து விட்டது.

"என்னைப் போன்று நல்ல அரசியல் வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்"என்ற வெள்ளந்தி பேச்சுதான் இந்த பணியை செய்தது.

இந்நேர முதல்வர் எடப்பாடிபழனிசாமி பேசிய "தமிழக மக்கள் போராட்டமே செய்யாமல் மகிழ்வுடன் இருப்பது எங்கள் ஆட்சி நல்லாட்சி என்பதால்தான்"என்றதை கூட தாங்கிய இதயம் பன்னிர்செல்வம் பேச்சுக்கு ஆடித்தான் போய்விட்டது.

இது போன்ற நம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் செய்திகள்,பேச்சுக்கள் இனி தொடர்ந்து தாக்கலாம்.

இனி அரசியல்வாதிகள் பேச்சுக்களை பிரசுரிக்கும் முன்னர்,ஒளி பரப்பும் முன்னர் உடலநலத்துக்கு தீங்குதரலாம் என்ற எச்சரிக்கையை கொடுக்க வேண்டும்.திரையரங்களுக்களில் படம் ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் பாடுவதில்லையா அது போல் .

அதிலிருந்து உடல் நலத்தை பாதுகாக்க நாம் சில சிறிய உடற்பயிற்சியையாவது செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதுதான் நம்மை அடுத்த தேர்தல்வரையாவது தாக்குப்பிடித்து சரியான ஆட்சியை தேர்வு செய்ய உதவும் .சரி .உடற்பயிற்சி தேவையை உணர்ந்திருப்பீர்கள்.

இனி மெல்லோட்டம் பற்றி பார்க்கலாம்.இதுதான் நாம் தற்போது செய்யக்கூடிய எளிதான பயிற்சி.
மேலும் தினசரி கூடும் பெட்ரோல் தாக்குதலில் இருந்து மேலோட்டமாக அலுவலகம்,கடைகளுக்கு சென்று பாதுகாத்துக்கொள்ளும் வழியாகவும் உள்ளது.

மெல்லோட்டம் (ஜாக்கிங்) யாரெல்லாம் செய்யணும்? 

எப்படி செய்யணும்?

மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக் கொள்ளுங்கள்.


அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா? என்பதை முடிவு செய்யுங்கள்.
15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். 
அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். 

மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. 
ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.

மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும்.

காலைப் பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். 
இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம். 

மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள். 

பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள்.நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லது என நம்பப்பட்டு வந்தது. 
அது சமீபத்தில் ஊர்ஜிதம் ஆனது.

அதேபோல, ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ரத்த அழுத்தம் இருந்தால் தான் இதயப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கபப்டும் என்று தற்போதைய ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஜே.மைக்கல் காஸியானோ தலைமையில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்த 50 வயதுக்கும் மேற்பட்ட, 9300 பேரிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆய்வில், இது தெரியவந்துள்ளது.


இதுவே இத்துறையில் நடத்தப்பட்ட நீண்ட கால ஆய்வாகும். உலகில் பெரும்பாலானோர், மாரடைப்புக்கு உள்ளாகும் நேரத்தில் சர்வே மூலம் கிடைத்துள்ள இந்தத் தகவல் உலகில் பலரின் உயிரை காக்க உதவும்.

அந்த ஆய்வின்படி, ஐம்பது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு 120-க்கும் கீழேயும், அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு 140-150 வரை ரத்த அழுத்தம் இருக்க வேண்டும் என இதன்மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முதியோருக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தால்தான் ரத்தம் முறையாக அவர்களின் மூளைக்கும், உடலின் மற்ற பாகங்களுக்கும் பகிர முடியும். 
அதனால் அது தொடர்பாக கவலை வேண்டாம் என்றும் இந்த மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

பொதுவாக ‘நட்ஸ்’ எனப்படும் கொட்டைப்பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. 
குறிப்பாக, ‘வால்நட்’ எனப்படும் வாதுமைப் பருப்பை அதிகம் பேர் விரும்பிச் சாப்பிடுவதில்லை என்றபோதும் இதில் சத்துகளுக்குக் குறைவில்லை.

சாக்லேட், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும்போது தனி ருசி கொடுக்கும் வாதுமைப் பருப்பில் அதிக அளவு மெலட்டின் சத்து உள்ளது.


வாதுமைப் பருப்பு ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. வாழ்நாளைக் கூட்டும் தன்மை கொண்டிருக்கிறது. 

நல்ல தூக்கத்துக்கு இது அவசியமாகும். 

இயற்கையாகவே அதிக மெலட்டின் இருப்பதால் வாதுமைப் பருப்பு மூளைக்கு ஓய்வு கொடுத்து நல்ல தூக்கத்தைத் தருகிறது.

வாதுமைப் பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதால் ‘டிமென்சியா’ என்ற ஞாபக மறதி நோய் உண்டாகாமல் தடுக்கலாம். 

இதில் உள்ள ஒமேகா 3 அமிலம், இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பைக் கூட்டுகிறது. 
ஒமேகா 3 மூளைக்கும் நல்லது. 

இது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி நினைவாற்றலை மேம்படுத்துகிறது.ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வாதுமைப் பருப்பு உதவுகிறது.

ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கிறது. 

இது எலும்பை பலப்படுத்த உதவுகிறது.
போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் வாதுமைப் பருப்பில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.

வைட்டமின் பி7 என்ற பயோடின் உள்ளதால் முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கும், உறுதித் தன்மைக்கும் உதவுகிறது.

சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைத்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது.
=======================================================================================
ன்று,
செப்டம்பர்-22.
  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது(1893)
  • பாடகர் பி.பி.சீனிவாஸ்  பிறந்த திணம் (1930)
  • மாலி விடுதலை தினம்(1960)
  • இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது(1965)
புகழ் பெற்ற, திரைப்பட பின்னணி பாடகர், பி.பி.சீனிவாஸ், ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில், 1930 செப்., 22ல் பிறந்தார். 
1953ல் வெளிவந்த, ஜாதகம் படத்தில் இடம்பெற்ற, 'சிந்தனை என் செல்வமே...' என்ற தமிழ் பாடலை முதன் முதலாகப் பாடினார். 
பி.பி.சீனிவாஸ்

உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி பாடுவதில், புதிய பாணியை கொண்டு வந்தவர். 
'காலங்களில் அவள் வசந்தம்...' எனும் பாடலை பாடி, பெரும் புகழ் ஈட்டினார். 
தமிழ் படங்களில், நடிகர் ஜெமினிக்கும், கன்னடத்தில், நடிகர் ராஜ்குமாருக்கும் பெரும்பான்மையான பாடல்களை பாடியுள்ளார்.
ஆங்கிலம், உருது உட்பட, எட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்; பல பாடல்களையும் எழுதியுள்ளார்.
 'மதுவண்டு' என்ற புனைப்பெயரில், தமிழ் கவிதைகளை எழுதினார்.
வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள, ஹிந்தி பாடல்களை இவரே இயற்றினார். 
2014 ஏப்., 14ல் காலமானார். 
========================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?